tag:blogger.com,1999:blog-6037404.post8680299291501672556..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: சுப்ரமண்ய ராஜு கதைகள் - சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6037404.post-13749539611812245812007-12-05T21:44:00.000+05:302007-12-05T21:44:00.000+05:30(இன்று காலை பிரசன்னாவிடம் தொலைபேசியில் பேசும்போது ...(இன்று காலை பிரசன்னாவிடம் தொலைபேசியில் பேசும்போது சொன்னதை இங்கேயும் <BR/>பதிந்து வைக்கலாம் என்று.) <BR/><BR/>1. ஜெயமோகன் எழுத்துகளைப் புரிந்து கொள்ள முடியாமல், "அவர் எழுத்துகளே <BR/>புரியவில்லை" என்று ஒற்றை வரியில் நிராகரிப்பவர்களுக்கும், தலைப்பிலேயே <BR/>சுப்ரமணிய ராஜுவின் எழுத்தைப் பற்றி நீங்கள் "சுழலில் சிக்கித் தவிக்கும் <BR/>கதைகள்" என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் எனக்கிருப்பதாகத் <BR/>தோன்றவில்லை. அதுதான் அவர் கதைகளைப் பற்றிய உங்கள் எண்ணம் என்றால், அதைக் <BR/>கட்டுரையில் விலாவரியாகச் சொல்லுங்கள். (சொல்லியிருக்க்கிறீர்கள்.!) ஓர் <BR/>எழுத்தாளனின் மொத்தச் சிறுகதைகளையும் அறிமுகப்படுத்துகிற ஒரு கட்டுரையின் <BR/>தலைப்பு ஒருவரியில் அந்த எழுத்தாளனை நிராகரிப்பதாக இருக்கக் கூடாது. அது <BR/>புதியதாய்ப் படிக்கிற வாசகர் மத்தியிலும், ஏன் இலக்கிய நுகர்வு உடைய <BR/>வாசகர் மத்தியிலும்கூட முன்னனுமானங்களை உண்டாக்கிவிட வழிவகுக்கும். <BR/>அதற்காக, தலைப்பைப் பாராட்டும்படி வைக்க நான் சொல்லவில்லை. கதையிலிருந்து <BR/>எடுக்கப்பட்ட வரிகளோ, அல்லது நியூட்ரலான தலைப்பாகவோ இருக்கலாம். <BR/>உதாரணமாக, இங்கே அவர் கதைகளின் மொத்தமும் இவ்வளவுதான் என்று இரண்டு <BR/>வரிகள் சொல்லியிருக்கிறீர்கள். அதைச் சுருக்கித் தலைப்பாக வைக்கலாம். <BR/>உதாரணமாக, சோதனைக்குட்படுத்தப்படும் ஆண்கள், தோலுரிக்கப்படும் ஆண்கள் <BR/>ஹிப்போகிரஸி என்று உங்கள் கட்டுரையிலிருந்தே தலைப்புகளை நீங்கள் <BR/>தேர்ந்தெடுத்திருக்கலாம். உங்கள் விமர்சனத்தைப் படித்துவிட்டு, சுப்ரமணிய <BR/>ராஜுவின் கதைகளையும் படித்துவிட்டுச், "சுழலில் சிக்கித் தவிக்கும் <BR/>கதைகள்" என்ற முடிவை வாசகர் எடுக்க உங்கள் விமர்சனம் உதவ வேண்டுமே தவிர, <BR/>தலைப்பிலேயே எந்த எழுத்தாளரையும் இப்படி நிராகரிப்பது எழுத்துக்கு <BR/>நியாயம் செய்வதில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். <BR/><BR/>2. மற்றபடிக்கு, சுஜாதாவின் சிறுகதையாளர்கள் வரிசையில் புதுமைப்பித்தன் <BR/>இல்லை, சுப்ரமணிய ராஜு இருந்தார் என்பதற்குச் சுஜாதாவுக்கு அப்போது <BR/>இலக்கியம் தெரியாமல் இருந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்கிறமாதிரியான <BR/>விமர்சனங்களில் எனக்கு உடன்பாடே. <BR/><BR/>3. சுப்ரமணிய ராஜுவுக்கே உங்கள் மனதில் இந்த இடம் என்றால் மாலன் <BR/>சிறுகதைகளைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை ஆவலுடன் <BR/>எதிர்பார்க்கிறேன். ஏமாற்றிவிடாமல் விரைவில் எழுதவும். :-) <BR/><BR/>அன்புடன், பி.கே. சிவகுமார்PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-19954990318826184502007-12-05T15:24:00.000+05:302007-12-05T15:24:00.000+05:30பிரசன்னா,சுப்ரமண்யராஜூ கதைகளைப் பற்றி என்னுடைய பதி...பிரசன்னா,<BR/><BR/>சுப்ரமண்யராஜூ கதைகளைப் பற்றி என்னுடைய பதிவில் முன்னர் எழுதியவற்றை இங்கே மீள்பிரசுரம் செய்கிறேன்.<BR/><BR/><A HREF="http://pitchaipathiram.blogspot.com/2006/06/blog-post_115114878785476656.html<br/>" REL="nofollow">http://pitchaipathiram.blogspot.com/2006/06/blog-post_115114878785476656.html</A><BR/><BR/>()<BR/><BR/>சுப்ரமணிய ராஜூ என்கிற எழுத்தாளரின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக<BR/>'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ளதை நினைத்து உள்ளபடியே எனக்கு<BR/>மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய இளம் வாசகர்களில் எத்தனை பேருக்கு இந்த<BR/>எழுத்தாளரின் பெயர் அறிமுகமாயிருக்கும் என்று தெரியவில்லை.<BR/><BR/>சுப்ரமண்ய ராஜூவின் நினைவாக பாலகுமாரனும் மாலனும் இணைந்து 'அன்புடன்'<BR/>என்கிற பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதியை<BR/>வெளியிட்டனர். அதில் ராஜூவின் நண்பரான தேவக்கோட்டை வா.மூர்த்தியின் நெடிய<BR/>முன்னுரையில் ராஜூவைப் பற்றின பல்வேறு நினைவுகள், சம்பவங்கள் பதிவு<BR/>செய்யப்பட்டிருக்கிறது. அசோகமித்திரனும் இவரை சில கட்டுரைகளில் நினைவு<BR/>கூர்ந்துள்ளார். இதன் மூலம் ராஜூவைப் பற்றிய அறிய வருகிற அவர் நட்பைப்<BR/>பேணுவதில் மிகவும் கரிசனத்துடனும் கவனத்துடனும் இருந்துள்ளார்.<BR/>இலக்கியத்தை விட நட்பே அவருக்கு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.<BR/><BR/>ராஜூவின் படைப்புகள் எனக்கு அதிகம் படிக்கக்கிடைக்கவில்லையெனினும் படித்த<BR/>சிறுகதைகள் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. (மறைந்து போன படைப்பாளி<BR/>என்பதவற்காக அவரை புகழந்தே ஆக வேண்டும் என்கிற சம்பிரதாயத்தில் எனக்கு<BR/>உடன்பாடு இல்லை)<BR/><BR/>வெகு காலத்திற்கு முன்பு கணையாழியில் சுஜாதா "காலத்தை வென்று<BR/>நிற்கக்கூடிய சிறுகதைகள்" அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டார்.<BR/>புதுமைப்பித்தனையே வெகு தயக்கத்திற்குப் பின் மட்டுமே சேர்த்துக் கொண்ட்<BR/>அந்தப்பட்டியல் அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராஜூவின்<BR/>பெயரை பார்த்த பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. "நாட்டாமை தீர்ப்ப மாத்தி<BR/>சொல்லு" என்னுமளவிற்கு பலத்த குரல்கள் இலக்கியவாதிகளின் மத்தியில்<BR/>ஏற்பட்ட ஒரு பிரமை.<BR/><BR/>()<BR/><BR/>இது போல் திறமையான தமிழ் எழுத்துக்காரர்கள் அவ்வப்போது தோன்றி consistent-<BR/>ஆக எழுதாமல் தனிப்பட்ட பிரச்சினைகளினாலோ அல்லது இறந்து போயோ பெரும்பாலான<BR/>வாசகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட<BR/>பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ், சம்பத் என்கிறவரைப் பற்றி<BR/>குறிப்பிட்டிருக்கிறார். ஏதொவொரு<BR/>'விருட்சம்' சிற்றிதழில் சம்பத்தின் 'இடைவெளி' என்கிற<BR/>சிறுகதையைபடித்தவுடன் எனக்குத் தோன்றியது. "WOW".<BR/><BR/>இதே போல ஐராவதம் என்கிற எழுத்தாளரைப் பற்றி என்னுடைய பழைய பதிவுகளில்<BR/>எழுதியிருக்கிறேன். என்னளவில், அஸ்வகோஷ், சுப்ரமணியன் ரவிச்சந்திரன்,<BR/>எஸ்ஸார்சி என்று பல திறமையான எழுத்தாளர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்<BR/>மட்டுமே கவனம் பெற்று நின்று விடுகிறார்கள். இந்த வகையில் இன்றைய இளைய<BR/>வாசகர்களிடம் நான் அறிமுகப்படுத்த விரும்புவது, இரவிச்சந்திரன் என்கிற<BR/>துள்ளலான எழுத்தாளரைப் பற்றி.<BR/><BR/>என் சிறுவயதில் "சுஜாதா"வைப் பற்றி யாரிடமோ சிலாகித்துக் கொண்டிருந்த<BR/>போது "இரவிச்சந்திரனைப் படித்திருக்கிறீர்களா?" என்றார். "யார் அவர்?"<BR/>என்றதற்கு 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' என்கிற படைப்பை வாசிக்கக் கொடுத்தார்.<BR/>எனக்கு உடனே உடனே இரவிச்சந்திரனைப் பிடித்துப் போனதோடு, 'இந்த மாதிரியாக<BR/>நம்மால் என்றாவது எழுத முடியுமா?" என்கிற தாழ்வு மனப்பான்மையும்<BR/>பொறாமையும் கலவையாக தோன்றியது.<BR/><BR/>()<BR/><BR/>இரவிச்சந்திரன் பெங்களூர், மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர். சுஜாதா<BR/>பணிபுரிந்த அதே BHEL-ல் இவரும் பணிபுரிந்திருக்கிறார். சுஜாதாவின்<BR/>எழுத்துக்களைப் பிடித்துப் போய் அவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம்<BR/>சிறுகதை பயின்று பின்னர் தன்னுடைய வழுக்கிச் செல்லும் நடையில்<BR/>சுஜாதாவிற்கு இணையாகவும் சில சமயங்களில் தாண்டியும் செல்லும் வகையில்<BR/>உரைநடையின் சாத்தியங்களை பயன்படுத்திக் கொண்டார். இவ்வளவு சிறப்பாக தமிழை<BR/>கையாண்ட இவரின் தாய்மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்கது.<BR/><BR/>"இந்தப் படைப்பு மட்டுமல்ல, இனிவரும் எல்லாம் படைப்புகளை சுஜாதாவிற்கு<BR/>சமர்ப்பணம்' என்றவர் தற்கொலை செய்து இறந்து கொண்டார் என்ற போது<BR/>அதிர்ச்சியாக இருந்தது. தேசிகனின் மூலம் சுஜாதாவிடம் உரையாடும் வாய்ப்பு<BR/>கிடைத்த போது, இந்தச் செய்தியை வருத்தமுடன் அவரும் நிச்சயித்த போது<BR/>வருத்தமாக இருந்தது. 'இனி ஒரு விதி செய்வோம்' 'ஒரு இந்திய பாஸ்போர்ட்'<BR/>'இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்' போன்ற சிறந்த தொகுதிகளை எந்த<BR/>பதிப்பகமாவது மீள்பதிப்பு வெளியிட்டால் மகிழ்வேன்.<BR/><BR/>()<BR/><BR/>Marathadi இணையக் குழுமத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் போதுஒவ்வொரு<BR/>உறுப்பினரும் முறை வைத்து தினம்தினம் பல்வேறு விதமாக பதிய, என் முறை வந்த<BR/>போது இரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தி ஒரு பதிவும் அவரின் சிறுகதையை ஒரு<BR/>பதிவுமாக இட்டேன். அந்த பதிவுகளின் சுட்டிகள் கிடைக்காததால், எனது இந்த<BR/>வலைப்பதிவில் அடுத்தடுத்த இடுகைகளாக இட்டுள்ளேன்.<BR/><BR/>அற்பாயுளில் இறந்து போன இன்னொரு சிறந்த எழுத்தாளரை அறிந்து கொள்ளுங்கள்.<BR/><BR/>--சுரேஷ் கண்ணன்.<BR/><BR/>(சுரேஷ், நீங்கள் அனுப்பிய கமெண்ட்டை அவசரத்தில் ரிஜெக்ட் செய்துவிட்டேன்! ஸாரி. நான் காப்பி & பேஸ்ட் செய்திருக்கிறேன். நன்றி பல.)ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-10109034822386737042007-12-05T08:42:00.000+05:302007-12-05T08:42:00.000+05:30சிவா நன்றி.பாஸ்டன் பாலாஜி, தேர்ந்தெடுத்த சிறுகதைகள...சிவா நன்றி.<BR/><BR/>பாஸ்டன் பாலாஜி, தேர்ந்தெடுத்த சிறுகதைகள் சுஜாதா, ஆ.மாதவன் கதைகள், புதுமைப்பித்தன் கதைகள் இவற்றையெல்லாம் ஒரே மூச்சில்தான் (அதாவது தொடர்ந்து) படித்தேன். அவை இப்படி ஏமாற்றவில்லை. நாமாக ஒரு காரணம் தேடிக்கொள்ளவேண்டுமானால் அப்படி நினைத்துக்கொள்ளலாம்.<BR/><BR/>ரவிஷங்கர், மதிப்பெண் ஒரு ஒப்பிடுதலுக்காக. மிகவும் பிடித்த் படங்களைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன், எழுதுவேன். சில படங்களை நிறைய பேர் இணையத்தில் எழுதியிருந்தால் நான் எழுதுவதில்லை. அனைத்து உலகப்பட டிவிடிக்களூம் சென்னையில் கிடைக்கின்றன.இந்தியப் படங்களை லோக்சபா சானில் பார்க்கிறேன். நன்றி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-61206328125551461472007-12-05T07:59:00.000+05:302007-12-05T07:59:00.000+05:30உங்க பக்கப்பட்டையைப் பார்த்தா ஏகப்பட்ட படம் பார்க்...உங்க பக்கப்பட்டையைப் பார்த்தா ஏகப்பட்ட படம் பார்க்கிறீங்கன்னு தெரியுது. இரண்டு கேள்விகள்:<BR/><BR/>1. இந்த டிவிடிகள் எங்க கிடைக்குது?<BR/><BR/>2. நீங்க அதிகம் மதிப்பெண் போட்ட படம் எது? எவ்வளவு? அதைப் பற்றி விமர்சனம் எழுதினால் நல்லா இருக்கும்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-5567779961705293422007-12-05T06:18:00.000+05:302007-12-05T06:18:00.000+05:30ஒரே எழுத்தாளரை ஒரே மூச்சில் படித்தால் இந்த வித சலி...ஒரே எழுத்தாளரை ஒரே மூச்சில் படித்தால் இந்த வித சலிப்பு ஏற்படுமோ?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-81789258939593877632007-12-04T22:09:00.000+05:302007-12-04T22:09:00.000+05:30சுப்ரமணிய ராஜு, ஞானரதத்தில் எழுதிய புலி என்ற கவிதை...சுப்ரமணிய ராஜு, ஞானரதத்தில் எழுதிய புலி என்ற கவிதை எனக்கும் பிடித்தமானதே. தனிப்பட்ட உரையாடலில் நான் அதைப்பற்றி நண்பர்களிடமும் தோழிகளிடமும் சொல்லியிருக்கிறேன். - பி.கே. சிவகுமார்PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com