<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6037404</id><updated>2012-01-29T13:12:33.392+05:30</updated><category term='நிழற்படங்கள்'/><category term='ஃபேஸ் புக் குறிப்புகள்'/><category term='தேர்தல் 2011'/><category term='சிறுகதை'/><category term='குறுநாவல்'/><category term='பொது'/><category term='நெய்வேலி புத்தகக் கண்காட்சி'/><category term='அறிவியல் புனைகதை'/><category term='புத்தகப் பார்வை'/><category term='நாடகம்'/><category term='குதலைக் குறிப்புகள்'/><category term='தொலைக்காட்சி'/><category term='Test'/><category term='அறிவிப்பு'/><category term='கிரிக்கெட்'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='கிடங்கு'/><category term='சென்னை புத்தகக் கண்காட்சி 2009'/><category term='சென்னை புத்தகக் கண்காட்சி 2011'/><category term='விழா'/><category term='நையாண்டி'/><category term='திரை'/><category term='நோன்பு'/><category term='அஞ்சலி'/><category term='வீடியோ'/><category term='ஆன்மிகம்'/><category term='கட்டுரை'/><category term='புத்தகக் கண்காட்சி'/><category term='ஆவணப் படம்'/><category term='பார்த்ததில் ஈர்த்தது'/><category term='பத்திரிகை'/><category term='சுற்றுலா'/><category term='அரசியல்'/><category term='கூட்டம்'/><title type='text'>நிழல்கள்</title><subtitle type='html'>தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Haranprasanna</name><uri>http://www.blogger.com/profile/13605662779048519145</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>413</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-5242313718574937748</id><published>2011-08-12T09:05:00.002+05:30</published><updated>2011-08-12T09:05:40.349+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகப் பார்வை'/><title type='text'>வாஸவேச்வரம் - காமம் விளையும் நிலம்</title><content type='html'>&lt;br /&gt;வாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு? தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.&lt;br /&gt;&lt;br /&gt;கிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராமத்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது.  பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள்? கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;புராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏதோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆணிலிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;வாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-5242313718574937748?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/5242313718574937748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=5242313718574937748' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5242313718574937748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5242313718574937748'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/08/blog-post_12.html' title='வாஸவேச்வரம் - காமம் விளையும் நிலம்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-257542281150441902</id><published>2011-08-09T09:08:00.000+05:30</published><updated>2011-08-09T09:08:33.673+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சமச்சீர்க் கல்வி - இன்று தீர்ப்பு</title><content type='html'>சமச்சீர் கல்வி தீர்ப்பு இன்று வருகிறது. ஆகஸ்ட் 2, பின்பு 10ம் தேதிக்குள் புத்தகங்கள் தரப்படவேண்டும் என்று சொல்லி இதுவரை தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கும் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பாடப் புத்தகங்களைத் தரவேண்டும் என்று சொல்லிவிட்டதால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டே வரவேண்டும் என்றுதான் தீர்ப்பு வரும், எதிராக வர வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை எதிராக வந்து, அடுத்த ஆண்டுமுதல் சம்ச்சீர்க் கல்வி, வேறு புதிய பாடங்களுடன் என்று தீர்ப்பு வந்தால், மகிழ்ச்சி! இல்லை என்றால், பசங்களுக்கு படிக்க எதாவது இப்பவாவது கிடைச்சதே என்னும் வகையிலும் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியே… 2 மாதங்கள் படிக்காமல் போய்விட்டதால் பசங்க படிப்பே வீணாகப் போச்சு என்று சொல்வதில் கொஞ்சம் உடன்பாடு உண்டுதான் என்றாலும் முழுக்க உடன்பாடில்லை. நான் 8ம் வகுப்பு படித்தபோது 2 மாதங்கள் ஆசிரியர் ஸ்டிரைக் நடந்தது. +2 படித்த போது 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்தது. எப்படியோ எதையோ படித்துக்கொண்டிருந்தோம்! பெரிய அளவில் நஷ்டம் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் இப்படி 2 மாதங்கள் பள்ளிகள் செயல்படவில்லை என்கிறார்கள்.  நிச்சயம் இது சரியான வழி அல்ல. குடிமூழ்கிப் போகக்கூடியதும் அல்ல. இந்த இரண்டு மாதங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கணத்தை உருப்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கலாம். பாடங்களைப் படிப்பது எப்படி என்றும், அதனை சுவாரயஸ்மாக அணுகுவது எப்படி என்றும் சொல்லித் தந்திருக்கலாம். இதற்கெல்லாம் பொதுவாக ஆசிரியர்களுக்கு நேரமே இருக்காது. கிடைத்த நேரத்தில் இதனைச் செய்திருக்கலாம். முதலில் இதுவெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதே நம் ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு இதே சமச்சீர்ப் பாடங்கள் என்று தீர்ப்பு வந்தாலும், அடுத்த ஆண்டே இந்தப் பாடங்களை ஜெ. அரசு மாற்றவேண்டும். சமச்சீர்க் கல்வியை வைத்துக்கொண்டு சரியான பாடங்களோடு அதனைக் கொண்டு செல்லவேண்டும். பாடத் திட்டங்களை சரியாக்குகிறோம் என்று இன்னும் மோசமாக ஆக்காமல் இருப்பார்களாக என்று நம்புவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்போம் என்று ஜெ சொல்லியிருப்பது நல்லது. வேறு வழியில்லை என்னும்போது இப்படித்தான் பேசவேண்டும். :-) இதனை ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லத் துவங்கி இருக்கவேண்டும். இதனைச் சொல்லிக்கொண்டே, சமச்சீர்க் கல்வியின்படித் தயாரிக்கப்பட்ட பாடங்களுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அரசியலை இன்னும் திறமையாகச் செய்யப் பழகவேண்டும் ஜெ. இரண்டாவது முறை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதே இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை அரசு செயல்படுத்தும் என்று அரசு முடிவெடுத்திருந்தால், மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியைக் கொஞ்சம் தவிர்த்திருந்திருக்கலாம். தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்காடியது நிச்சயம் தவறல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது சரிதான். ஆனால் மக்களின் நிலையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வது நல்லது. இனி இது தேவையில்லை. இன்றுதான் தீர்ப்பு வரப்போகிறதே. இந்த தொடர் வழக்கால் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி ஜெயலலிதாவுக்கு எதிராக மாறும் என்று நான் நம்பவில்லை. பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி எதையாவது சொல்லாமல், தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல், மௌனமாக, அதே சமயம் தெளிவாக நீதிமன்றத்தில் மட்டும் அரசு பேசியது நல்ல விஷயம். இதனையே எல்லா விஷயத்திலும் ஜெ கடைப்பிடிக்கவேண்டும். செயல்பாடே முக்கியம் என்னும் விஷயத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க யோசிக்கவேண்டும். இல்லையென்றால் ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமச்சீர்க் கல்வி வழக்கு தீர்ப்பு வருவதையொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துச் சொல்வதா வருத்தங்கள் சொல்வதா என்று தெரியவில்லை என்பதால் என்னவோ ஒண்ணு என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-257542281150441902?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/257542281150441902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=257542281150441902' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/257542281150441902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/257542281150441902'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/08/blog-post_6064.html' title='சமச்சீர்க் கல்வி - இன்று தீர்ப்பு'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-5907503655641167938</id><published>2011-08-09T09:07:00.000+05:30</published><updated>2011-08-09T09:07:31.039+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>உறுமி திரைப்பார்வை</title><content type='html'>&lt;a href="http://www.tamiloviam.com/site/?p=1723"&gt;http://www.tamiloviam.com/site/?p=1723&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-5907503655641167938?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/5907503655641167938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=5907503655641167938' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5907503655641167938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5907503655641167938'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/08/blog-post_09.html' title='உறுமி திரைப்பார்வை'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-3773436713628062640</id><published>2011-08-08T10:33:00.002+05:30</published><updated>2011-08-08T10:33:24.676+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>தெய்வத் திருமகள் - காப்பி அண்ட் பேஸ்ட்</title><content type='html'>இந்தத் திரைப்படமே ஒரு மோசடி. ஐம் சாம் படத்தை அப்படியே உருவியிருக்கிறார்கள். இப்படி உருவிவிட்டு தனது பெயரை இயக்குநர் என்று போட்டுக்கொள்ள ஒரு மாதிரியான கல்நெஞ்சோடு பிறந்தால்தான் முடியும். விஜய் செய்த முதல் தவறு இது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இன்னும் ஐம் சாம் பார்கக்வில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு வந்த இரவு யூ ட்யூபில் சும்மா அரை மணி நேரம் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, இந்தப் படத்துக்கு ஐம் சாம் இயக்குநர் எத்தகைய ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார் என்பதும், தமிழில் இதனை விஜய் எப்படி சீரழித்திருக்கிறார் என்பதும். அரை மணி நேரம் பார்த்ததுக்கே இத்தனை கோபம் வந்துவிட்டது. எனவேதான் இது. :-)&lt;br /&gt;&lt;br /&gt;யோசனை என்பதே இல்லை. ஐம் சாமின் ஹீரோவின் ஹேர் ஸ்டைலைக்கூடவா காப்பி அடிப்பார்கள்? ஐம் சாம் படத்தின் ஹீரோ மெண்டல்லி ரிடார்ட்டாக இருந்தாலும், அதிலும் அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருந்தது. இந்தக் குணமே அந்தப் படத்தின் பல கேள்விகளுக்கு லாஜிக்காக பதில் சொன்னது. ஆனால் தமிழ்ப்படத்தில் விக்ரமுக்கு கொஞ்சம்கூட மெச்சூரிட்டி இல்லை. இயக்குநருக்கு மெச்சூரிட்டி இருந்தால்தானே நடிகருக்கு வர! ஆனால் இதனை இயக்குநரின் தவறாகவே பார்க்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை நன்றாக உள்ளது என்று சிலர் சொல்லியிருந்தார்கள். திரைக்கதை தமிழில் படு சொதப்பல். படத்தை ஓட்டத் தெரியாமல், விக்ரமுக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதோ என்று பாஸ்கர் அலைகிறார். அதில் கொஞ்ச நேரம் காமெடி காட்சிகள். இதில் எதாவது லாஜிக் உள்ளதா? ஆனால் மக்களை சிரிக்க வைக்க வேண்டுமாம். சாட்சி சொல்லப் போகும் பாஸ்கரைக் கண்டுபிடிக்க இன்னொரு அரை மணி நேர அறுவை. இதுவே ஒரு கிரேஸி மோகன் படத்தில் வந்திருந்தால் அது வேறு. இந்தப் படம் அப்படிப்பட்ட படமா? விக்ரமுக்கு மெண்டல்லி ரிடார்ட். ஆனால் பாடத் தெரியும். குழந்தை பெற்றுக்கொள்ளத் தெரியும். இதற்கு ஒரு வசனமும் உண்டு, ஒரு சம்பவம் நடக்கும்போது அது என்னன்னு ஒருத்தருக்குத் தெரிஞ்சா போதாதான்னு. அவருக்குப் பிறக்கும் குழந்தை தன் அப்பாவை பைத்தியம் இல்லை என்று சொல்லும். ஐம் சாமில் ஒரு காட்சியில், ஒரு சிறுவன் கேட்கிறான், உங்க அப்பா மெண்டல்லி ரிடார்டா என்று. அவள் சொல்கிறாள், ஆமாம். அப்ப நீ என்கிறான் சிறுவன். அவள் இல்லை என்கிறாள். எத்தனை தெளிவான திரைக்கதை பாருங்கள். குழந்தை தன் அப்பா மெண்டல்லி ரிடர்ட் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு பேசுகிறது. இத்தனை தெளிவு தமிழ்ப்படத்தில் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஐம் சாமில் மெண்டல்லி ரிடார்டாக இருப்பவரை வெறும் பைத்தியமாகக் காட்டி நோகடிக்கவில்லை. அவர் தன் குழந்தையுடன் சேர்ந்து வீட்டில் பாடங்களைப் படிக்கப் பார்க்கிறார். ஆனால் தமிழில்? விக்ரம் பைத்தியமேதான். அவருக்குத் தெரிந்ததெல்லாம் கையைத் தூக்கி தூக்கிப் பேசுவதுதான். அதுவும் மிஸ்டர் பீன் மற்றும் சிப்பிக்குள் முத்து கமலின் உடல் மொழியே.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் கோர்ட் காட்சிகள். அனுஷ்காவின் கேரக்ட்ரை இத்தனை கேணத்தனமாக யாரும் உருவாக்க முடியாது. கூடவே வரும் கிறுக்கன் கேரக்டராக சந்தானம். இன்னொரு கிறுக்கனாக வரும், உதவும் வக்கீல். அத்தனை பெரிய வக்கீல் நாசரிடம் இருக்கும் உதவியாளரை தனக்கு வேவு பார்க்கச் சொல்வார்களாம். அப்படியாவது அவன் வேவு பார்த்துச் சொன்னது என்ன என்றால், ஒன்றுமே இல்லை. இதை வைத்துக்கொண்டு அரை மணி நேரம் குட்டிக்கரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நாசர் கேரக்டர். மிகப் பெரிய வக்கீலாம். ஆனால் அவருக்கு விகரமை மனநிலை சரியில்லாதவர் என்று கோர்ட்டில் நிரூபிக்கத் தெரியாதாம். ஏனென்றால் அனுஷ்காதான் ஹீரோயின். இவர் என்ன செய்வார்! தலையெழுத்து. கடைசியில் விக்ரம் மெண்டல்லி ரிடார்ட் இல்லை என்று ஒப்புக்கொண்டு விடுவாராம். விக்ரமும் குழந்தையும் சந்திக்க ஒரு மணி நேர அவகாசமாம். அந்தக் காட்சியில்தான் எத்தனை குழப்படி! அதில் விக்ரம் ஓடி வந்து விழும் காட்சி அப்படியே ஐம் சாமில் உள்ளது. தமிழ்த்தனமாக விழக்கூடவா தமிழனுக்குச் சுயபுத்தி இல்லை?&lt;br /&gt;&lt;br /&gt;கோர்ட்டில் இரண்டு பேர் லூசுத்தனமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் நாமம் போட்டிருக்கிறார், இன்னொருவர் பட்டை அடித்திருக்கிறார். ஏன், அங்கே சைவ வைணவ விவாதமா நடக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;மெண்டல்லி ரிடார்ட் விக்ரம்தான் பாட்டுப் பாடி நம்மைக் கொல்கிறார் என்றால், வக்கீலும் விக்ரமுடன் டூயட் பாடுகிறது. இந்த தமிழ் சினிமா விளங்கவே விளங்காதா? எந்த ’நல்ல பட’ இயக்குநராவது இப்படி ஒரு டூயட் காட்சி வைப்பாரா? கேட்டால் சமரசம் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி காட்சியில் விக்ரமே குழந்தையை ஒப்படைத்துவிடுவாராம். கொடுமை. யார் மெண்ட்டல்லி ரிடார்ட்? நாமா? விக்ரமா?&lt;br /&gt;&lt;br /&gt;விக்ரமுக்கும் குழந்தைக்குமான அன்னியோன்யம் குழந்தையின் பார்வையில் சரியாகப் பதியப்படவே இல்லை. உண்மையில் அதுதான் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றிருக்கும். அது இல்லாததால் கிளைமாக்ஸில் ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது. (இதுதான் நடக்கும் என்று யூகம் செய்துவிடும் என்னைப் போன்றவர்களுக்கு அதுவும் மிஸ்ஸிங்!) மனதில் ஒரு பதற்றம் ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்க ஓவர் ஆக்ட்சிங் செய்தால் மக்களுக்குப் பிடித்துவிடும் என்பது நம் மரபு. அப்படியே செய்திருக்கிறார் விக்ரம். பைத்தியமாக நடிப்பது சும்மா அசட்டுத்தனமாக அலட்டுவது என்று நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், நம்ம ஊர் மெண்டல்லி ரிடார்டுகளெல்லாம் அழகானவர்களாகவும் அப்சரஸ்களாகவும் உலவும் ரகசியமும் புரிபடுவதில்லை. கமல், ஸ்ரீதேவி, ராதிகா, அஞ்சலியில் வரும் குழந்தை - இப்படி மெண்டல்லி ரிடார்டுகள் அழகானவர்களாகவே இருந்துவிடுகிறார்கள். ஆனால் விக்ரமுக்கு நண்பர்களாக வரும் 3 மெண்டல்லி ரிடார்டுகளில் ஒருவர்கூட அழகில்லை. அது எப்படி அப்படி ‘அமைந்துவிடுகிறது’ எனத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைக்கதை படத்தை மனத்தில் வைத்து எழுதப்படவில்லை. மக்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் சுயம் இல்லை. தமிழில் வரும் பெரும்பாலான படங்களில் சுயம் இல்லை. குறைந்தபட்சம் உலகெங்கும் எடுக்கப்படும் கதையை இங்கே எடுக்கிறார்கள் என்றாவது அமைதிகொள்ள முடிந்தது. இப்படத்தில் ஒரு படத்தையே அப்படியே சுட்டிருக்கிறார்கள். இது நிச்சயம் ஏமாற்று வேலை. அத்திரைப்படத்துக்கான கிரெட்டிட்டைக் கொடுக்கவில்லை என்பது இது மோசடியே என்பதை நிரூபிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மோசமான திரைப்படங்களுக்கு மத்தியில் சுமாரான படங்களை வரவேற்பதே நமது தலைவிதி ஆகிவிட்டது. அதனால்தான் அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், மைனா எல்லாம் பெரிய வரவேற்பைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போகிறது. அழகர்சாமியின் குதிரை, மைனாவிலாவது மண் சார்ந்த சுயம் என்பது கதையளவில் இருந்தது. இதில் அதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படத்தின் சில ப்ளஸ்கள்: ஒரு முயற்சி என்ற அளவில் - மனதைக் கல்லாக்கிக்கொண்டு - வரவேற்பது. குழந்தையாக வரும் பெண்ணின் மாசு மருவற்ற முகமும் அதன் நடிப்பும். கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் விக்ரமின் நடிப்பு. ஆரிரோ ஆராரிரோ எனும் நெஞ்சை அள்ளும் பாடல். (இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைச் சுட்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இயக்குநர் ஜாடிக்கேத்த நல்ல ஜிவி பிரகாஷ் மூடி!) நல்ல ஒளிப்பதிவு. நாசர், அனுஷ்கா, அமலா பாலின் நடிப்பு. இவ்வளவுதான். இதை இவர்கள் எந்தப் படத்திலும் செய்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதைக் கல்லாக்கிக் கொண்டேயானாலும், தெய்வத் திருமகள் போன்ற ஓர் அப்பட்டமான காப்பியை நாம் வரவேற்பதுகூட நிச்சயம் தவறுதான். கலைக்கு செய்யும் அவமரியாதை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-3773436713628062640?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/3773436713628062640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=3773436713628062640' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/3773436713628062640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/3773436713628062640'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/08/blog-post.html' title='தெய்வத் திருமகள் - காப்பி அண்ட் பேஸ்ட்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-695421052474506750</id><published>2011-07-23T18:33:00.002+05:30</published><updated>2011-07-23T18:33:39.536+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>காஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்</title><content type='html'>* தமிழில் பேய்ப்படங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கிறது காஞ்சனா. பயமே இல்லாமல் பார்க்கலாம். :-)&lt;br /&gt;&lt;br /&gt;* அதே சரக் சரக் பேய், திடும் திடும் பேய். அதே தமிழ்ப்பேய்.  அதே ஓவர் ஆக்டிங் பேய். எல்லாம் சரி. கதையுமே அதுவேயா? முனி1ஐ அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஃப்ளாஷ் பேக் கதையை மாற்றிவிட்டார்கள். முனி1ன் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்கு முன்னர் வந்த பல பேய்ப்படங்களைப் போலவே அதுவும் எடுக்கப்பட்டிருந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;* கமல்ஹாசன் நடித்து தேசிய விருது பெறுவார் என்று 1990களில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரவாணி கேரக்டரை சரத்குமார் பண்ணியிருக்கிறார். நடிக்கவே வரவில்லை. பிரகாஷ் ராஜ், சரத்குமார் என இவர்கள் நடிக்கவே வராமல் அரவாணி போல் நடிப்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. இவர்களுக்கு இப்படி நடிக்க தைரியமாவது இருக்கிறது. கமலுக்கு எப்போது வருமோ.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரே ஆறுதல் அரவாணிகளை அசிங்கப்படுத்தாமல் உயர்ந்த நோக்கில் காட்டியிருப்பது. அரவாணிகளைப் பற்றிய ஓர் உண்மையான திரைப்படம் வரும்வரையில் இது போன்ற முயற்சிகளைப் பாராட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;* முனி1க்கும் 2க்கும் வித்தியாசம் காட்ட, அரவாணி, இஸ்லாமியப் பேய் ஓட்டும் முறை என்று என்னவோ காட்டிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* அநியாயத்துக்கு படம் நீளம். இடைவேளைக்குப் பிறகுதான் காஞ்சனாவே வருகிறாள். இதுகூட ஓகே. கொலை, ஃப்ளாஷ்பேக் எல்லாமே இடைவேளைக்குப் பிறகு என்றால் ஒரு மனுஷன் தாங்கவேண்டாமா ஐயா?&lt;br /&gt;&lt;br /&gt;* முனி1ல் எப்படி நடித்தாரோ அதையே மீண்டும் நடித்துவிட்டுப் போய்விட்டார்கள் ராகவா லாரன்ஸும், கோவை சரளாவும். நல்லவேளை, வினுச்சக்கரவர்த்தையைக் கொன்றுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* பாடல்கள் இது பேய்ப்படம்தான் என்பதை உறுதி செய்கின்றன. பின்னணி இசையும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;* முனி1 பெரிய ஹிட் இல்லை. ஆனால் இந்தப் படம் ஹிட்டாகும் வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. கொஞ்சம் எடிட் செய்து டிரிம்மாக்கி இருந்தால் நிச்சயம் பெரிய ஹிட் ஆகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* படத்தின் உச்சகட்ட திகில் காட்சி கடைசி ஸ்லைடுதான். முனி3 வருமாம். கிறித்துவப் பேய் ஓட்டும் முறை மீதி உள்ளது என்னும்போது ராகவா லாரன்ஸை என்ன குற்றம் சொல்லமுடியும். 3 முக்கிய மதங்களை  மட்டுமே நமக்குக் கொடுத்த அந்த இறைவன்தான் எவ்வளவு கருணைக்குரியவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-695421052474506750?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/695421052474506750/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=695421052474506750' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/695421052474506750'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/695421052474506750'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/07/blog-post_23.html' title='காஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-64144403456888231</id><published>2011-07-16T07:40:00.000+05:30</published><updated>2011-07-16T07:40:19.261+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>காலில் விழுதல்</title><content type='html'>அரவிந்தன் நீலகண்டனுடன் ஒருமுறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட அரசர் போல பேசிக்கொண்டிருந்த அவர் உள்ளே சென்றதும் ஸ்வாமியைக் கண்டதும் யாதுமற்றோர் ஆண்டியாகப் பொத்தென காலில் விழுந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் காலில் விழுந்தேன். அரவிந்தன் அவர் உடல் முழுக்க மண்ணில் பாவ காலில் விழுந்தார். நான் ஸ்டைலாக வேறு வழியில்லாமல் காலில் விழுவது போல விழுந்தேன். காலில் விழுவது என்றாலே ஒருவித அலர்ஜி. 90களில் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏற்பட்ட எரிச்சலால் இருக்கலாம். யார் காலில் யார் விழுவது என்ற விவஸ்தை இல்லாமல் ஜெயலலிதா காலில் எல்லாரும் விழுவது குறித்து பெரிய எரிச்சல் இருந்தது. அதைத் தொடர்ந்து காலில் விழுவதே கேவலம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது. அரவிந்தன் ஸ்வாமிஜி காலில் விழுந்ததும், எனக்கு அவர் காலில் விழவேண்டும் என்ற ஒரு நெருக்கடி உண்டாகி, அதைத் தவிர்க்க முடியாமல்தான் ஸ்வாமிஜி காலில் விழுந்தேன். ஸ்வாமிஜி காலில்தானே விழுந்தோம் என்று மனதை எவ்வளவு தேற்றிக்கொண்டாலும் இப்படி காலில் விழும்படி ஆகிவிட்டதே என்று மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அரவிந்தனிடம் என்ன இப்படி திடீர்னு விழுந்திட்டீங்க, எனக்கும் வேற வழியில்லாம விழவேண்டியதாப் போச்சு என்றேன். எனக்கு விழணும் விழுந்தேன், உங்களுக்கு வேண்டாம்னா விழவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இன்னும் எதாவது கேட்டால், இங்கன பாத்துக்கிடுங்க என்று ஆரம்பித்துவிடுவார் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;22ம் வயதில் எனக்குப் பூணூல் போட்டார்கள். வயதானவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும். அம்மா சொல்ல சொல்ல நானும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருந்தேன். என் அக்காவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் 4 வயதுதான் வித்தியாசம் இருக்கும். ரொம்ப அழகா இருக்காங்கள்ல என்று மரியாதையுடன் அந்த அக்காவை நண்பர்களுடன் சைட் அடித்திருக்கிறேன். எதிர்பாராத ஒரு நொடியில் என் அம்மா அவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்லிவிட்டார். இந்த அம்மாவைக் கொலை செய்தால்தான் என்ற என்று தோன்றிவிட்டது. அந்த அக்கா சென்றதும் என் அம்மாவை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன். என் திருமணத்துக்கு முன்பாக என் அம்மாவிடம் நானே யார் கால்ல விழணுமோ அவங்க கால்ல விழுவேன், நீ சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையக் குழுமம் ஒன்றில் இப்படி காலில் விழுவது பற்றிப் பேச்சு வந்தபோது, காலில் விழுவது தேவையற்ற செயல் என்று சொன்னபோது, அடித்துத் துவைத்துக் காயப் போட்டுவிட்டார்கள். சொந்தக்காரர்கள் காலில் திருமணத்தில் விழுவது வேறு, கண்ட கண்ட மேடைகளில் இப்படி அரசியல்வாதிகள் காலில், குரு என்று சொல்லி மாஸ்டர்கள் காலில் விழுவதையெல்லாம் என்னால் சகிக்கமுடியவில்லை என்று சொன்ன நினைவு. ஆனால் காலில் விழுவதே இந்திய மரபு என்று தீர்ப்படித்துவிட்டார்கள். என்ன இந்திய மரபோ! இந்த இந்திய மரபில் ஏதோ ஒரு வகையில் அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே தோன்றுகிறது. முதலிரவில் கணவன் காலில் மனைவி விழவேண்டும். மனைவி கணவன் காலில் விழவா முதலிரவில் காத்துக்கொண்டிருப்பார்கள்? ஆனால், அத்தை மாமா சொல்லி அனுப்பினாங்க என்று சொல்லி, நான் எத்தனையோ மறுத்தும், 19 வயதுப் பெண் அப்படித்தான் காலில் விழுந்தாள். இந்தச் சடங்கும் நல்லதுக்குத்தான். அதற்குப்பின் நான் எத்தனையோ தடவை கெஞ்சியும் அவள் சொன்ன பதில், நான் என்ன லூஸா உங்க கால்ல விழுறதுக்கு என்பதுதான். வரலக்ஷ்மி விரதத்தில் மட்டும் வேறு வழியில்லை, மனைவி கணவன் காலில் விழுந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்தப் பண்டிகை வருடத்துக்கு ஒருமுறைதான் வந்து தொலைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் மனைவி கணவன் காலில் விழுந்தால் குடும்பத்துக்கு நல்லது என்று எனக்குத் தூரத்து உறவான ஒரு அக்காவின் மாமியார் சொல்லிவிட்டார். அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கும்போது அந்த அக்கா தன் கணவனின் காலில் விழுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்பலேர்ந்து இதெல்லாம் என்றேன். மாமியார் சொல்லியிருக்காங்க, குடும்பத்துக்கு நல்லதாம் என்றார். ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தேன். இரவு நெடுநேரம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்படியே தூங்கப் போய்விட்டோம். திடீரென்று அந்த அக்கா ஏன்றீ ஏன்றீ என்று தன் கணவனை பதட்டத்துடன் அழைத்தார். அந்த அண்ணன் ரெண்டு ரூம் தள்ளி ஓரிடத்தில் படுத்திருந்தார். தூங்க ஆரம்பித்திருந்தார். தூக்க கலக்கத்துடன் என்ன என்றார். ஒரு நிமிஷம் இங்க வாங்க, கால்ல விழ மறந்துட்டேன், காலை காமிச்சுட்டுப் போங்க என்றார். அவர் புலம்பிக்கொண்டே எழுந்து வந்து காலைக் காண்பித்தார். அக்கா உடலை கொஞ்சம் கூட நகட்டாமல் படுத்தமேனிக்கு தன் கணவனின் காலை லேசாகத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு தேங்க்ஸ்றீ என்றார். நான் தலையில் அடித்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை காலில் விழுதலும் வேறு மாதிரியானது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நாதஸ்வரம் நாடகத்தில் வேறு ஒரு மாதிரியாகக் காலில் விழுந்தார்கள். 4 வாரங்களாக செம அறுவையாகப் போய்க்கொண்டிருந்த நாடகத்தில், இனிமே இந்த எழவைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று புதுக்கதையை நுழைத்து கொன்றெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராமல் உணர்ச்சி மயமான கட்டம் நீண்ட நாள்களுக்குப் பிறகு. நான் முதலிலேயே இந்தக் காட்சியை எதிர்பார்த்தேன். ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு சின்ன பெண்ணின் காலில் விழுகிறது, அவள் வீட்டை விட்டு ஓடிப் போய்விடக்கூடாது என்பதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;18 வயதில் பாலகுமாரன் நாவல்களை ஒன்றுவிடாமல் படித்துத் தீர்த்துக்கொண்டிருந்தேன். மொட்டைமாடியில் அவள் தலை வழியாக நைட்டியைக் கழற்றினாள் போன்ற வரிகள் எல்லாம் வாழ்நாளுக்கும் துரத்தி அடிக்கும். பதின்ம வயதுகளில் பாலகுமாரனைப் படிக்காமல் விட்டவர்கள் நிச்சயம் எதையோ இழந்தவர்கள்தான். அவரது நாவல் ஒன்றிலும் பழுத்த பிராமணர் ஒருவர் இப்படித்தான் தடால் என்று யார் காலிலோ விழுவார். நாவல் பெயர் நினைவில்லை. அந்த வரியைப் படித்தபோது உடலெங்கும் அதிர்வு பரவியது நினைவுக்கு வந்தது. வேர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அத்தைக்கு 16 வயதில் திருமணம். என் தாத்தாவுக்கு அப்போது 60 வயது. கல்யாணத்தில் காப்பி வர லேட்டாகிவிட்டது. என் மாமாவின் அக்கா காப்பிக்காக பிரச்சினை செய்து, தன் தம்பியை தாலி கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பெரிய களேபரம் ஆகிவிட்டது. என் தாத்தா தன் கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு கடும் கோபத்தோடு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என் மாமாவின் அக்கா காலில் விழுந்துவிட்டார். எப்படியோ கல்யாணம் ஆகவேண்டும் என்பதற்காக. நான் இதனைப் பார்த்த நினைவில்லை. ஆனால் என் அம்மா உணர்ச்சி வேகத்தோடு தன் மாமனார் காலில் விழுந்ததை விவரித்தது, நான் கூடவே நின்று பார்த்த உணர்வை உண்டாக்கிவிட்டது. ’அத்தனை பேரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. உங்க தாத்தா, நல்ல கனமான உடம்பு. அங்காரக்ஷதை நெத்தில தீர்க்கமா இருக்கும். கோஜன (கோபிக்கட்டி) முத்திரை எல்லாம் பார்த்தாலே பெரிய மனுஷன்னு கும்பிடத் தோணும். ஹெ எம்மா வேற இருந்திருக்காரா ஊர்ல நல்ல மரியாதை. நல்ல படிப்பு. ஆனா முன்கோபி. கோபம் வந்துட்டா என்ன செய்யறோம்னே இல்லை. உங்க பாட்டிக்கு கோவில்தான் கட்டணும். இப்படி ஒரு மனுஷன் கூட் வாழறதே தவம் மாதிரிதான். ஊர் மொத்தமும் கல்யாணத்துக்கு காத்துக்கிட்டு இருக்கு. இவளானா காப்பி வல்லைன்னு குதிக்கிறா. அப்பல்லாம் ஏது ஃபோன்? பால் லேட்டுன்னா என்ன பண்றது? இவ காப்பி இல்லைன்னா கல்யாணம் இல்லைங்கிறா. எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. உங்கப்பா நான் காப்பி வாங்கிட்டு வரேன்னு ஓடறார். இவ பால் வந்து எனக்கு இங்க காப்பி போட்டாகணும்ன்றா. பார்த்தார் உங்க தாத்தா. சபைல அவ முன்னாடி வந்து நின்னார். தோள்ல இருந்த துண்டை எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டார். எப்படியோ கல்யாணத்தை பண்ணுங்கன்னு சொல்லி கை கூப்பிக்கிட்டு பொத்துன்னு சபை முன்னாடி அவ கால்ல விழுந்துட்டார். பஞ்சகச்சை கட்டிக்கிட்டு ஒரு பிராமணன் இப்படி கால்ல விழுறதைப் பாத்துட்டு எல்லாரும் பதறிட்டாங்க. எனக்கானா அழுகை ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம். அவ அருகதை என்ன இவர் தகுதி என்ன. அவ வயசு என்ன இவர் வயசு என்ன. ஆனா கல்யாணம் ஒழுங்கா நடக்கணுமே. அப்புறம் அவ தன் தம்பியை தாலி கட்ட விட்டா. அந்த பிராமணர் கால்ல விழுந்த சாபம் சும்மா விடுமான்னு ஊரே பேசிக்கிட்டு இருந்தது.’&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு எங்கள் தூரத்து சொந்தத்தில் இன்னொரு கல்யாணம் நடந்தது. அங்கேயும் எதோ பிரச்சினை. வீட்டு மாப்பிள்ளையை புது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வீட்டு மாப்பிள்ளை ஆட ஆரம்பித்துவிட்டார். சண்டை பெரிதாகி பெரிதாகி ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையின் தாய் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த புது மாப்பிள்ளை சட்டென முன்னே வந்து, என்னவோ அம்மா தப்பு பண்ணிட்டாங்க, மன்னிச்சுக்கோங்க என்று சொல்லி, கல்யாண வேஷ்டி சட்டையுடன் சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிட்டார். அந்தக் கல்யாணத்துக்கு என் அண்ணாவும் சென்றிந்தார். காலில் விழுந்த கூத்து முடிந்ததும், அந்த மாப்பிள்ளையின் தாய்மாமா என் அண்ணாவைக் காண்பித்துச் சொன்னாராம். இதோ நிக்கிறானே இவன் தாத்தா ஊரே மெச்சின பெரிய மனுஷன். அவரே தன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணுமேன்னு கால்ல விழுந்திருக்கார். நாமல்லாம் எம்மாத்திரம் என்றாராம். 30 வருடங்கள் கழித்து என் தாத்தாவின் செயல் ஒரு மண்டபத்தில் பேசப்பட்டதில் என் அண்ணாவுக்கு இனம் புரியாத சந்தோஷம், பெருமை. எனக்கும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;என் தாத்தா காலில் விழுந்து 35 வருடம் கழித்து, என் மாமாவின் அக்கா மகனுக்கு கல்யாணம் நடக்க இருந்தது. கல்யாணத்துக்கு 1 மாதம் முன்பு என் மாமாவின் அக்காவின் கணவர் இறந்துவிட்டார். துக்க்கத்துக்கு வந்த என் மாமா எங்களிடம் தன் அக்காவைப் பற்றிச் சொன்னது, ஒரு பெரிய மனுஷனை காலில் விழ வெச்சா இப்படித்தான் ஆகும் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-64144403456888231?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/64144403456888231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=64144403456888231' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/64144403456888231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/64144403456888231'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/07/blog-post_16.html' title='காலில் விழுதல்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-5916081909146563798</id><published>2011-07-13T07:46:00.002+05:30</published><updated>2011-07-13T07:46:44.243+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபேஸ் புக் குறிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>நித்யானந்தா - அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி</title><content type='html'>ரஞ்சிதாவுக்கும் நித்யானந்தாவுக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்பது தேவையற்ற ஒன்று. பிரமச்சரியத்தை வலியுறுத்திய ஒருவர், தனியறையில் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்பது அவரது நேர்மையின்மையைப் பறைசாற்றுமே ஒழிய, அவர் சட்டப்படி தவறு செய்கிறார் என்றாகாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒருவரின் படுக்கை அறையில் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டது முதல் தவறு. அந்த ஆபாச சிடியை சன் டிவி மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்பி, குழந்தைகள் பெண்களை அருவருப்படையச் செய்தது இரண்டாவது தவறு. நித்யானந்தா செய்த நேர்மையற்ற செயலைவிட இந்த இரண்டுமே பெரிய தவறுகள். இந்த இரண்டு தவறுகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் அக்காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்கிறார்கள். நான் அதனை நம்பவில்லை. ஆனால் அப்படி சொல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வயதுக்கு வந்த இரண்டு பேர் மனமொத்து தனியறையில் உறவு கொள்வதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஏற்கெனவே மணமானவர்கள்  வேறு (கள்ள) உறவை வைத்திருந்தாலும் அதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். உறவுக்கு அழைத்தல் என்பதுதான் தவறு என்று நினைக்கிறேன். சட்டம் தெரிந்தவர்கள் மேற்கொண்டு சொல்லட்டும். (முன்பு மரத்தடி குழுவில் பிரபு ராஜதுரை இது பற்றி விரிவாக எழுதியிருந்தார்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஊரெங்கும் தலைவன் என்றும் தலைவி என்று சொல்லிக்கொண்டு திரியும் பெரிய தலைகளின் படுக்கை அறைக் காட்சிகள் எல்லாம் இப்படி வீடியோவாகி முன்பே வெளியாகியிருந்தால், நித்யானந்தா இன்னும் பிரம்மசாரியாகத்தான் நமக்குத் தோன்றுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-5916081909146563798?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/5916081909146563798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=5916081909146563798' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5916081909146563798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5916081909146563798'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/07/blog-post_13.html' title='நித்யானந்தா - அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-5330782595281827672</id><published>2011-07-03T12:20:00.002+05:30</published><updated>2011-07-03T12:20:32.748+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபேஸ் புக் குறிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>Facebook Notes - 2</title><content type='html'>புவியிலோரிடம் - பாதி (1-ஜூலை-2011)&lt;br /&gt;&lt;br /&gt;பாராவின் புவியிலோரிடம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இது போன்ற ஒரு கதையை (நாவல் என்று சொல்ல இயலவில்லை) நான் வாசித்ததில்லை. முதல் பாகம் வரை படித்திருக்கிறேன். பாராவின் வழக்கமான வரிகள் தந்த தடையை மீறி நாவலுக்குள் நுழைவது ஒரு சவாலாகவே இருந்தது. மேலும் வாசுவாக பாராவையே நினைக்கத் தோன்றுவதையும் மீற முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மீறியதும் நாவல் சட்டெனத் திறந்துகொண்டது. வெளிப்படையான ஒரு அரசியல் பிராமணக் கதையை  இதுவரை யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன். ஒரு இடத்தில் மணிரத்னத்தை நினைவுபடுத்தும் காதல் காட்சிகள். இந்த பாரா எனக்கு புதுசு. ஆயிரம் அபுனைவுகள் எழுதியிருந்தாலும் ஒரு எழுத்தாளன் ஒரு தடமாகப் பதிவு செய்யப்படுவது புனைவில்தான் என்ற எண்ணம் ஒரு அனுபவமாக எழுகிறது. முதல் பாகத்தில் பாரா ராக்ஸ். குறிப்பாக ஆசாரியார் வரும் காட்சிகளில் அவரது மனைவி பேசும் வசனங்கள். ஒரு நாவலுக்குண்டான அழகை சில இடங்களில் பார்க்கமுடிகிறது என்றாலும், அரசியலை சொல்ல நினைக்கும் அவசரமும் கதை சொல்ல நினைக்கும் வேகமும் அதனை உடைக்கின்றன. இரண்டாம் பாகம் நாளை படிக்கப் போகிறேன். சிறிய புத்தகம்தான். வசதி கருதி இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பாதி இன்று, மீதி நாளை.&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரன்-லு (30-ஜூன்-2011)&lt;br /&gt;&lt;br /&gt;தெலுகு டப்பிங் மாவீரன் படம் பார்த்தேன். எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் ஒரு படம் வந்தால் தமிழ்நாட்டைப் போலவே அதனை தெலுகு சகோதரர்களும் விழுந்து விழுந்து வரவேற்பது கண்டு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை மொக்கையாக இருந்தாலும் ஹைப் கூட்டப்பட்ட ஃப்ளாஷ் பேக்குக்க்கு தெலுகு சகோதரர்கள் அடிமையாகிவிடுவது கண்டு ‘ஆஹா நம் ரத்தமல்லவா’ என்ற மகிழ்ச்சி ஓங்கியது. 50 ஆண்டுகளாக ஒரே காதல் காட்சியை திரும்ப திரும்ப எடுத்தும் அதை விடாமல் ரசிக்கும் தெலுகு மக்களை நினைக்கும்போது நெக்குருகி நிற்கவேண்டியிருக்கிறது. விறுவிறுப்பு என்னும் பேரில் அடுத்தடுத்த காட்சிகளிலேயே அடுத்தடுத்த சம்பவங்கள் தடால் தடால் என நடப்பது கண்டு, நம் உற்ற தோழன் தெலுகு திரைப்படமே என்ற நினைப்பு வந்து நம் நெஞ்சை மயிலிறகால் வருடுகிறது. மறக்காமல் பாருங்கள் மாவீரன். இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை டப்பிங் திரைப்படம். வசனம் படு பிரமாதம். ப்ராணன் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னால் மாவீரன் படத்துக்கே 10 டிக்கெட் இலவசம். இதுபோக சென்னைத் தமிழும் உண்டு. ஆஹா. அட்டகாசம். அதிலும் ஹீரோ போட்டிருக்கும் செயின் பல இடங்களில் பூணூலை ஞாபகப்படுத்துகிறது. சிரஞ்சீவிகாருவின் மகன்காரு நடித்து படம்காரு வந்திருக்கிறது. தெலுகுகாருகள் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்களாம். தமிழ்காருகளை நம்பி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நாமும் தமிழ்காருகள் ஆவோம். ஆல் தெலுகு வணிக சினிமா ரசிகர்காருகளுக்கு நம் வந்தனமுலு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் 26, 2011&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இருந்தபோதுகூட இலங்கையில் உள்ள தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து வருத்தம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர் ஆதரவு என்பதே புலிகள் ஆதரவுதான் என்னும் ஒரு மாயை நிலவியதால், அதிலிருந்து விலகி நிற்க விரும்பிய தமிழகத்தமிழர்களே அதிகம். இன்று புலிகள் தோற்கடிப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பற்றிப் பேசவும் அவர்களுக்காக குற்றவுணர்ச்சியுடன் வருந்தவும் ஆயத்தமாகும்போது, மீண்டும் புலி ஆதரவு கோஷம் தலை தூக்குகிறது. இது நிச்சயம் தமிழகத் தமிழர்களை பின்னடைவு கொள்ள வைக்கும். தமிழகத் தமிழர்களின் ஆதரவே தேவையில்லை என்று எண்ணுபவர்கள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழக தமிழர்களின் ஆதரவும் முக்கியம் என்று எண்ணுபவர்கள், இந்த புலி ஆதரவு இல்லாமல், தமிழகத் தமிழர்களின், இந்தியர்களின் ஆதரவைக் கோரும் வகையில் செயல்படுவது நல்லது. புலி ஆதரவு என்பது இன்று வரையில் தமிழகத் தமிழர்களுக்கு ஆகாத ஒன்று. இதனை மனத்தில் கொண்டு ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செயல்படுவதே புத்திசாலித்தனம். புலி ஆதரவு இல்லாமல், அதே சமயம் ஈழத் தமிழர்களுக்காக, அவர்களின் இன்னல்களுக்காக மெழுகுவத்தி ஏற்றிய அனைவருக்கும் நன்றிகள். இனி தமிழுணர்வாளர்கள் முன்னெடுக்கப் போவது புலி ஆதரவையா அல்லது ஈழத் தமிழருக்கான ஒருமித்த ஆதரவையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி பத்தி நெண்டே நெண்டு வரி (17-ஜூன்-2011)&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி டிஸ்சார்ஜ் ஆனதும் முதன்முதலாக ஜெயலலிதாவிடம் பேசியதைத் தொடர்ந்து நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் கடும் மனநெருக்கடி அடைந்து ரஜினியின் மனநிலை தொடங்கி நம்பகத்தன்மை வரை அலசி எதற்குமே ரஜினி லாயக்கில்லை என்ற உண்மையை உடைத்துப் போட்டு வடிவேலு போன்ற மன உறுதி கூட இல்லாதவர் என்றெல்லாம் பேசி தங்கள் கறாரான பார்வையையும் அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி எங்கே நாம் பேசியது ரஜினி ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து முடிந்த அளவு அவர்களுக்குத் தெரியுமாறு தனது மீது வெளிச்சம் அடித்து குட்டிக்கரணம் அடித்து முடித்து ஏன் கருணாநிதி கூடவே இருந்து ஜால்ரா அடிக்கும்போதே உனக்கு தெரியலையா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அட அப்பவே ஏன்யா நீ கேக்கலை என்ற பதில் கேள்வியையெல்லாம் மறந்துவிட்டு ரஜினியை முடிந்த அளவு திட்டி ஓய்ந்த ஒரு காலையில் பார்த்தால்&lt;br /&gt;&lt;br /&gt; இந்த ’மூளைகெட்ட பிஸினஸ்மேன்’ ரஜினிப்பய இன்று காலை கருணாநிதியையும் அழைத்து பேசியிருக்கிறார். இப்போதே அதே நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் மீண்டும் முதல் இடத்தில் தொடங்கப் போகிறார்கள் என்ற செய்தி கேட்டு நான் கலவரப்பட்டு நிற்கும் வேளையில் சொல்வதெல்லாம், உங்க மேல டார்ச் அடிச்சுக்குங்க, அது உங்க உரிமை, ஆனா என் முன்னாடி ஆடாதீங்க என்பதுதான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-5330782595281827672?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/5330782595281827672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=5330782595281827672' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5330782595281827672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5330782595281827672'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/07/facebook-notes-2.html' title='Facebook Notes - 2'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-8668453882108028027</id><published>2011-07-03T11:50:00.000+05:30</published><updated>2011-07-03T11:50:14.182+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இடஒதுக்கீடு மற்றும் மேற்படுத்தப்பட்ட ஜாதிகள்</title><content type='html'>புவியிலோரிடம் நாவலை படித்தேன். நீண்ட நாள்களாகவே நண்பர்கள் இதனைப் படிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாவலில் தொடப்பட்டிருக்கும் கருவைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான நாவல்தான். பாராவின் வாழ்நாள் பெஸ்ட் இந்த நாவல் என்பதே என் கருத்து. பிராமணர்களில் மிக மோசமாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை, பிற ஜாதிகளுக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டைச் சார்ந்து இந்நாவல் பேசுகிறது. அதிலும் நன்றாகப் படிப்பு வராத பிராமணர்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை இந்த நாவல் முக்கிய பேசுபொருளாக வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நாவலை விட்டுவிடலாம். :-)&lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு உள்ள சில கருத்துகளைச் சொல்லிவிடுகிறேன். இடஒதுக்கீடு என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் நிச்சயம் அவசியமானதே. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில்தான் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீடு சமூகநீதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது - என்கிறார்கள். இங்கே சமூக நீதி என்பதை நம் எளிமைக்காக ஜாதி என்று எடுத்துக்கொள்வோம். ஜாதியை ஒட்டியே இடஒதுக்கீடு அமைந்துள்ளது. ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிறக்கும் ஒருவர் அவர் பெறவேண்டிய சமூக நீதிக்காகவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. கச்சிதம். அதில் உள்ள பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் இச்சலுகையைப் பெறலாம். இதில் எனக்குள்ள தார்மிகக் கேள்விகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, நான் இதையும் ஏற்கிறேன். ஆண்டாண்டுகாலமாக அமுக்கப்பட்ட, அநீதி செய்யப்பட்ட ஒரு சமூகம் முன்னேறவேண்டும் என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு ஜாதியினருக்கும் (பிறப்பால் என்றே கொள்ளவும்) பொறுப்பு உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதைச் செயல்படுத்தும்போது ஏன் பிராமணர்களில் (எனவே மேற்படுத்தப்பட்ட சாதிகளில்) உள்ள படிப்பறிவற்ற, அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைப் பலிகொடுக்கவேண்டும்? இதைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசாமலேயே இருக்கிறார்கள். பார்ப்பனீய முத்திரை என்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கே பிராமணர் என்று மட்டும் சொல்வது ஒரு வசதி கருதி மட்டுமே. இதனை ஒட்டுமொத்தமாக மேற்படுத்தப்பட்ட சாதி (ஃபார்வேர்ட் கிளாஸ்) என்றே கொள்ளலாம். எல்லா மேற்படுத்தப்பட்ட சாதிகளும், தங்கள் ஜாதி அடையாளத்தைக் கூடவே வைத்துக்கொண்டு, எப்படியோ ஒருவகையில் இடஒதுக்கீட்டை அனுபவித்துவிடமுடியும் என்கிறார்கள். இது உண்மை என்றாலும், இதைப் பற்றியும் எனக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. என்னுடையே ஒரே கேள்வி, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெறமுடியாத மேற்படுத்தப்பட்ட ஜாதியினரில் உள்ள, மோசமான கல்வி அறிவும் மோசமான பொருளாதாரப் பின்னணியையும் கொண்டவர்கள் பற்றி மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இங்கே சமூக நீதியை அடியொற்றி இடஒதுக்கீடு ஏற்படுத்தப்படவில்லை. இங்கே இடஒதுக்கீடு அடிப்படையாகக் கொண்டிருப்பது சமூக வெறுப்பை. அதனால்தான் பிராமணர்களில் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள்கூடப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்களின் கடந்த காலம் தரும் எரிச்சல். கடந்த காலம் என்பதை ஏதோ ஒரு கட்டத்தில் விட்டுத்தான் ஆகவேண்டும். அதனைக் காரணம் காட்டி இன்றைய நிலையில் பிராமணர்களைப் (அல்லது மேற்படுத்தப்பட்ட ஜாதியினரை) போட்டு வாங்கவேண்டும் என்று நினைத்தால், அது அந்தக் காலத்தில் பிராமணர்கள் செய்துகொண்டிருந்த கேவலமான உயர்ஜாதி மனோபாவத்துக்கு ஈடான ஒன்றேதான் அன்றி வேறில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஒரு அறிஞர் சொன்னாராம், ஒரு பிராமணர் உயர்ந்தால் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார். இப்படியே பிராமண இனமே முன்னேறிவிடும், எனவே அவர்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களே இருக்கமுடியாது என்று. நல்ல அறிஞராகத்தான் இருக்கவேண்டும். சிற்றிதழ்களில் எழுதவேண்டிய கட்டாயம் உள்ள அறிஞராகவும் அவர் இருக்கக்கூடும். இதனையே மற்ற மேற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு அவர் சொல்லமாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். உண்மையில் ஒரு பிராமணர் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார் என்பதெல்லாம் கற்பனை. எத்தனையோ கஞ்சிக்கு இல்லாத, கல்வி அறிவும் இல்லாத பிராமணர்களை எனக்குத் தெரியும். இதே நிலையில் உள்ள பல மேற்படுத்தப்பட்ட சாதியினரையும் எனக்குத் தெரியும். எனவே இதெல்லாம் ஒரு எஸ்கேபிஸம் அன்றி வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;40% வாங்கியவர் டாக்டராவார், 90% வாங்கியவர் டீ ஆத்தணும் போன்ற வரிகளில், முதலில் உள்ளதைக் கூட விட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒரு இந்தியக் கடமை. பின்னது? அது எப்பேற்பட்ட அநியாயம்? உண்மையில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதையும், இதில் உண்மையிலேயே பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி மறுக்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள கல்வியறிவால் பின் தங்கியவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன சமூக அநீதி நிகழ்ந்துவிடும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதனைப் பற்றி எந்த ஊடகமும் பேசாது. ஏனென்றால் பார்ப்பனீய முத்திரை என்பது பின் தொடரும் நிழலின் குரல் போன்றது. என்றும் உங்களை விடாது. உண்மையில் பிராமணர்கள் உள்ளிட்ட, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெற இயலாத ஜாதிகளில் உள்ள, கல்வி அறிவு குறைந்த பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தரப்படக்கூடாது என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். I am happy to be convinced.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிராமணன் என்பதால் இதனைப் பேசுகிறேன் என எடுத்துக்கொள்ளவேண்டாம். அப்படி எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. நான் என்னை பிராமணனாக நினைக்கவில்லை. நான் பிராமணனாக இருக்கவும் இல்லை. மேலும், நான் பிராமணனாக இல்லாமல் இருப்பதற்கும், பிராமணர்கள் பற்றிப் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவேண்டியதில்லை என்றும் நம்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-8668453882108028027?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/8668453882108028027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=8668453882108028027' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8668453882108028027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8668453882108028027'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/07/blog-post.html' title='இடஒதுக்கீடு மற்றும் மேற்படுத்தப்பட்ட ஜாதிகள்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-7772148649318838322</id><published>2011-06-14T11:07:00.000+05:30</published><updated>2011-06-14T11:07:46.873+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபேஸ் புக் குறிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகப் பார்வை'/><title type='text'>வேதபுரத்து வியாபாரிகள் - வியாபாரக் கூவல்</title><content type='html'>வேதபுரத்து வியாபாரிகள் - இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை மீண்டும் வாசித்தேன். முதன்முதலில் வாசித்தபோது இத்தனை மொக்கையாக இருந்ததாக நினைவில்லை. தமிழக நடப்பு அரசியலை விமர்சிக்கிறேன் என்று அதன் அங்கதத்தின் சகல சுதந்திரங்களையும் பயன்படுத்தியதின் விளைவு, சோ எழுதிய முகமது பின் துக்ளக்கிற்கு இணையான வெற்று எழுத்தாக தேங்கிவிட்டது நாவல்.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு நாவல் தரவேண்டிய அனுபவத்தை எல்லாம் மறந்துவிட்டு, திராவிட அரசியல் என்பதே வெறும் கோமாளிக் கூத்துதான் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நாவலை நிச்சயம் கொண்டாடுவார்கள். திராவிட நடைமுறை அரசியலைப் பற்றிய எனது எண்ணமும் இதுதான். ஆனால் திராவிட அரசியலை அதன் கோட்பாடு சார்ந்து (அப்படி ஒன்று இருப்பதாக நம்புகிறவர்கள் அவர்கள் :&gt;) அணுகுபவர்கள், குறிப்பாக 60, 70களில் தங்கள் இளம் வயதைக் கழித்தவர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை திராவிட அரசியல் என்பது ஒரு விடுதலைக்கீற்று; பார்ப்பனியத்தின் நெருக்கடிக்கான பதிலடி. இதைத் தொடரும் ஒரு தலைமுறைக்கான இன்றைய இளைஞர்களும் இதனை இப்படியே பார்ப்பார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;எல்லா தத்துவமும் நீர்த்துப் போகும்போது, உணர்ச்சிகளின் பீடத்தில் நிறுவப்பட்டிருந்த (அப்படி நான் நினைக்கும்!) திராவிடம் மிக நீர்த்துப் போனதொரு தருணத்தில் இந்த நாவலை வாசிக்கும்போது வெறும் கேளிக்கையாகவும், அந்த கேளிக்கையே பெரியதொரு நடைமுறை உண்மையாகவும் தோற்றமளிக்கும் முரணைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;முக்கியமான விஷயம் - நான் நாவலை இன்னும் படித்துமுடிக்கவில்லை. ஒண்ணத்துக்கும் உதவாத ஒரு திரைப்படத்துக்கு 4 பதிவுகள் போடும் திருநாட்டில் ஒரு நாவலுக்கு ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் (யாரையும் மறைமுகமாகக் குறிப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை!) உந்தித்தள்ளவே இந்த முதல்பதிவு! (இன்னும் 3 பதிவுகள் வரலாம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.)&lt;br /&gt; &lt;br /&gt;&lt;blockquote&gt;(1994ல்) தொடர்கதையாக வெளிவந்த காரணத்தினாலாயே நாவலின் கட்டுமானத்தை இழந்து தவிக்கும் படைப்புகளின் பெருவரிசையில் இதனையும் சேர்க்கலாம். அப்போது எழுதப்பட்ட படைப்பில் இருந்து சிலவரிகள். இது எப்படி 2009ல் பலித்திருக்கிறது பாருங்கள்! இந்திரா பார்த்தசாரதிதான் எல்லாவற்றுக்கும் காரணம். கருணாநிதி பாவம். (கருணாநிதியை தொட்டுக்கலைன்னா உங்களுக்கெல்லாம் நேரமே போகாதே!)&lt;br /&gt; &lt;br /&gt; “எங்கள் நாட்டைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் நூல் நிலையத்தில் உள்ளன. வரலாறு? புராணம், என்ன வேண்டும் உங்களுக்கு? எங்கள் தலைவரைப் பற்றியும் வந்திருக்கக்கூடிய நூல்கள் அளவிட முடியாது. வரலாறு? புராணம்...”&lt;br /&gt;  &lt;br /&gt; “தலைவரைப் பற்றியுமா புராணம்?”&lt;br /&gt;  &lt;br /&gt; “புராணமில்லாமல் எப்படித் தலைவராக இருக்க முடியும்?”&lt;br /&gt;  &lt;br /&gt; “உதாரணம்?”&lt;br /&gt;  &lt;br /&gt; நஞ்சுண்டன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு கேட்டான்: “இன்று உங்களால் குளிக்க முடிந்ததே எப்படி?”&lt;br /&gt;  &lt;br /&gt; “குழாயில் தண்ணீர் வந்தது, குளித்தேன்.”&lt;br /&gt;  &lt;br /&gt; “எப்படி வந்தது?”&lt;br /&gt;  &lt;br /&gt; “புரியவில்லை.”&lt;br /&gt;  &lt;br /&gt; “பக்கத்து நாட்டுப் பகைவர்கள், எங்கள் ஆற்றைத் திருடிக் கொண்டு போய் மலையருகே ஒளித்து வைத்து விட்டார்கள். போர் தொடுக்க வேண்டுமென்று கொதித்தெழுந்தது எங்கள் மறவர் கூட்டம். ஆனால் எங்கள் தலைவர், நிதானத்தை இழக்காமல், 8,640 விநாடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். எங்கள் மக்கள் கூட்டம் கண்ணீர் விட்டு அரற்றியது. அவர்கள் கண்களினின்றும் பெருக்கெடுத்தோடிய நீரே இன்று இந்நாட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றான் நஞ்சுண்டன்.&lt;/blockquote&gt; &lt;br /&gt;அப்புறம் வேறென்ன? நாவலை வாங்க என்று ஒரு லிங்க்கை இன்னும் நீட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா? புத்தகம் அவுட் ஆப் ஸ்டாக். :-) ஸ்டாக் வந்த்தும் சொல்கிறேன். இ புக்காக வாங்க விரும்புகிறவர்களும் ஒன்றிரண்டு வாரங்கள் காத்திருக்கவும். NHM eBook Reader is on the way!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-7772148649318838322?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/7772148649318838322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=7772148649318838322' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/7772148649318838322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/7772148649318838322'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/06/blog-post_14.html' title='வேதபுரத்து வியாபாரிகள் - வியாபாரக் கூவல்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-8726236556937489103</id><published>2011-06-12T09:42:00.001+05:30</published><updated>2011-06-12T09:42:42.724+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபேஸ் புக் குறிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி கண்ணில் நீர்வரப் பிரி</title><content type='html'>சேரன்மகாதேவி நான் சிறு வயதில் வளர்ந்த நாடு. காலார நடந்தால் ஊரை முழுக்கச் சுற்றிவர நான்கு மணி நேரம் ஆகும். கொழுந்தனா மலைக்கு அடிவாரத்தில் ஆடு மேய்ப்பார்கள். சன் பேப்பர் மில்லில் வேலை பார்த்துவிட்டு ஆற்றில் குளித்துவிட்டு நடந்தே வீடு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும், பஞ்சாயத்து ஸ்கூலும் உண்டு. நான் 6 வயதில் அங்கே இருந்தபோது சித்ரா மெட்ரிகுலேஷன் என்ற ஒரே ஒரு மெட்ரிக் ஸ்கூல் இருந்தது. இப்போது 2 அல்லது 3 இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;முன்பு ஒரு டூரிங் தியேட்டர் கூனியூர் நாட்டில் இருந்தது. கூனியூர் என்பது சேரன்மகாதேவி நாட்டுக்குப் பக்கத்து நாடு. ஒரே ஒரு சௌகரியம், கூனியூர் நாட்டுக்குப் போகவோ, கூனியூர் நாட்டு மக்கள் சேர்மாதேவி நாட்டுக்கு வரவோ விசா தேவையில்லை. யூ டோண்ட் பிலீவ் இட், பாஸ்போர்ட்டும் தேவையில்லை யூ நோ. இன்னொரு அதிர்ச்சி, இரண்டு நாட்டுக்கும் நடந்தே போய்விடலாம். கூனியூர் நாட்டுக்குப் பக்கத்து நாடு வீரவநல்லூர் நாடு. Funny countries, isn't it?&lt;br /&gt;&lt;br /&gt;கூனியூர் நாட்டுக்கு இப்படி நம்ம நாட்டுப் பணமெல்லாம் போகுதே என்று யோசித்தவர்கள் சேர்மாதேவியிலேயே தியேட்டர் கட்டிவிட்டார்கள். என் அப்பா சேர்மாதேவியில் பெரிய பிஸினஸ் மேனாக இருந்தவர். பிள்ளையார் கோவில் பின்புறத்தில் நின்றுகொண்டு சுண்டலும் சுக்கு வெண்ணீரும் விற்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேத பாடசாலை உண்டு. யச்சு பாகவதர் தனியாக வேதம் பாடுவார். இந்நேரம் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். முட்டை ஊதி வைக்க வைத்தீஸ்வரன் கோவிலும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கோரிக்கை எல்லாம் இந்த பெரிய நாட்டை நிர்வாக வசதி கருதி இரண்டாகப் பிரிக்கவேண்டும் யுவர் ஹானர்!&lt;br /&gt;&lt;br /&gt;சோர்ஸ்: &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2011/06/11/bifurcate-tirunelveli-district-says-sarath-kumar-aid0090.html"&gt;http://thatstamil.oneindia.in/news/2011/06/11/bifurcate-tirunelveli-district-says-sarath-kumar-aid0090.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-8726236556937489103?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/8726236556937489103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=8726236556937489103' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8726236556937489103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8726236556937489103'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/06/blog-post_12.html' title='பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி கண்ணில் நீர்வரப் பிரி'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-1980409316087930830</id><published>2011-06-12T09:17:00.000+05:30</published><updated>2011-06-12T09:17:50.727+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபேஸ் புக் குறிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>Facebook Notes - 1</title><content type='html'>&lt;i&gt;நாள்: 12-ஜூன்-2011&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Choose the best answer - கருணாநிதிக்கு உதவுவோம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் இந்த பேட்டியைப் (&lt;a href="http://dailythanthi.com/article.asp?NewsID=652219&amp;disdate=6%2F11%2F2011&amp;advt=1"&gt;http://dailythanthi.com/article.asp?NewsID=652219&amp;disdate=6%2F11%2F2011&amp;advt=1&lt;/a&gt;) படித்தால், கலங்காத மனமும் கலங்கிவிடும். திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகாருக்கு அடுத்த உருகார் இதுதான். பல கேள்விகளுக்கு அதிரடி பதில்தான். என்ன பொண்ண கையைப் பிடிச்சி இழுத்தியா (&lt;a href="http://www.youtube.com/watch?v=rgANpyU48cw"&gt;http://www.youtube.com/watch?v=rgANpyU48cw&lt;/a&gt;) ரக பதில்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இந்த பத்திரிகையாளர்களும் விடாமல் கேள்வியைக் கேட்கிறார்கள் என்பதுவும் பாவமாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை மறைத்துப் பேசாமல் திரித்துப் பேசாமல் என்று என்னவெல்லாமோ சொல்கிறார். எனது மகள் கனிமொழி என்று சொல்லிவிட்டு, இரண்டு நிமிடங்கள் கண் கலங்கி, உடன்பிறப்புகள் தலைவா கோஷமிட அவர் அன்று மத்திய அரசுதான் காரணம் என்ற வகையில்தான் பேசியதை டிவியில் நானே பார்த்தேன். ஆனால் அவரது பேட்டியோ சத்தியமாகக் கேளுங்கள் என்று வருகிறது. கடவுள் சத்தியமா கேளுங்கள் என்று இன்னொருமுறை நாக்கு தவறாததற்கு அவர் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் கேள்விகளுக்கும் அவர் நிருபர்களையே பதில் சொல்லச் சொல்கிறார். தமிழ் ரத்தம் ஓடுகிறதா என்கிறார். டெல்லியில் நிருபர்கள் கேள்வி கேட்டால் ஹிந்தி ரத்தம் ஓடுகிறதா என்று கேட்காமல் இந்திய ரத்தம் ஓடுகிறதா என்றாவது கேட்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கு நிருபர்கள் கொஞ்சம் கருணை காட்டி, சூஸ் தி பெஸ்ட் ஆன்சர் அடிப்படையில் கேள்விகளைக் கொடுத்துவிட்டால், அவரும் டிக் போட்டுக் கொடுத்துவிடுவார். மறக்காமல் ‘இவற்றில் எதுவும் இல்லை’ ஆப்ஷனை வைத்துவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Link: &lt;a href="http://www.facebook.com/note.php?note_id=207186185991642"&gt;http://www.facebook.com/note.php?note_id=207186185991642&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;--------------&lt;/center&gt;&lt;br /&gt;&lt;i&gt;நாள்: 10-ஜூன்-2011&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பகடியா உண்மையா ரொம்பக் கண்ண கட்டுது!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாரு எழுதுவதில் எதை சீரியஸாக எடுத்துக்கொள்வது எதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது என்பதே குழப்பமாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சாரு வாசகர் வட்டம் பற்றி அவர் எழுதியபோது, சிலர் பஸ்ஸில் அதனை நகைச்சுவைப் பதிவு என்றார்கள்.  ஆனால், நான் படித்தபோது அது பகடியான பதிவாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, எப்படி இவர்கள் அதனை பகடி என்று கண்டுபிடிக்கிறார்கள் என. சாரு இணையக் குழுமம் அல்லது ஃபேஸ்புக்கில் தொடரியாக இருந்தால்மட்டுமே இதெல்லாம் புரியும் என்றார்கள். ஆனால் தொடர்ந்து சாரு வாசகர் வட்டம் பற்றிய பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் அது தொடர் பகடியா அல்லது உண்மையா என்பது குழப்பமாகவே உள்ளது. பகடிதான் என்றால், அக்கவுண்ட் நம்பரெல்லாம் கொடுத்து உண்மை போலவே பகடி செய்ய தில் வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உயிர்மையில் சாருவின் புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி, மோதிரம் பரிசு என்று தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் சாரு. (இப்படி சாரு தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் என்று சொல்வது கூட கொஞ்சம் ரிஸ்க்காக உள்ளது! திடீரென்று அந்தப் பதிவு தூக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துவிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது!) இது மனுஷ்யபுத்திரனுக்கும் சாருவுக்கும் இடையேயான பகடியா அல்லது உண்மையா என்பது இன்னொரு குழப்பமாக உள்ளது. உண்மை என்றால், வாழ்த்துகள். பகடி என்றாலும் வாழ்த்துகள்தான்! கண்டனமா செய்யமுடியும்? :&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Link: &lt;a href="http://www.facebook.com/note.php?note_id=206725746037686"&gt;http://www.facebook.com/note.php?note_id=206725746037686&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;--------------&lt;/center&gt;&lt;br /&gt;&lt;i&gt;நாள்: 5-ஜூன்-2011&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ராம்தேவ் கைது அராஜகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராம்தேவின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், இந்த காங்கிரஸ் அரசு செய்திருப்பது அராஜகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலுக்கெதிராக உண்ணாவிரதம் இருப்பதை ஏன் லத்தி சார்ஜாலும் கண்ணீர்ப் புகையாலும் கலைக்கவேண்டும்? வினேச காலே விபரீத புத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக ராம்தேவின் ஊழல்களை - அப்படி ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் - உடனே வெளியிட்டு அவரை கேரக்டர் அஸாஸிநேஷன் செய்யும் அரசு. &lt;br /&gt;&lt;br /&gt;1300 கோடி சொத்து என்கிறார்கள். அவ்வளவு வரும் வரை என்ன செய்துகொண்டிருந்தன அரசுகள்?&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமான சொத்து உள்ள சாமியார்களை எல்லாம் என்ன செய்யப் போகிறது இவ்வரசு? சாய்பாபா உடலுக்கு முன் சோனியாவும் மன்மோகனும் தேவுடு காத்தது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் ஒரு கேவலமான ஆட்சியை நடத்துகிறது, மன்மோகன் மிக மோசமான பிரதமர். இதில் இவர்களுக்கு பாபா ராம்தேவைச் சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராம்தேவின் பின்னால் இதுவரை ஆர் எஸ் எஸ் இருந்ததோ இல்லையோ, இனி இருக்கவேண்டும் - ராம்தேவ் தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியாக இல்லாதிருந்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;Link: &lt;a href="http://www.facebook.com/note.php?note_id=207186185991642"&gt;http://www.facebook.com/note.php?note_id=207186185991642&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-1980409316087930830?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/1980409316087930830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=1980409316087930830' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/1980409316087930830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/1980409316087930830'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/06/facebook-notes-1.html' title='Facebook Notes - 1'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-2541898742011714047</id><published>2011-06-11T08:05:00.000+05:30</published><updated>2011-06-11T08:05:50.078+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகக் கண்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>தள்ளுபடி அதிரடி</title><content type='html'>இந்தப் பதிவை நான் சீரியஸாகத்தான் எழுதுகிறேன் என்றாலும் கடைசியில் இது மார்க்கெட்டிங் பதிவாகவும் எஞ்சும் அபாயம் உள்ளது என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிரடித் தள்ளுபடி என்று கிழக்கு பதிப்பகம் சில புத்தகங்களை கிட்டத்தட்ட 80% தள்ளுபடியில் விற்பனை செய்தது, செய்துவருகிறது. இது முதலில் அறிவிக்கப்பட்டபோது சந்தோஷத்துடன் வாங்கிச் சென்ற வாசகர்கள் ஒருபுறம், இது எழுத்தாளர்களை அவமானப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டவர்கள் ஒருபுறம். வாசகர்கள் இப்படிப் பழகிவிட்டால் புதிய புத்தகங்கள் வரும்போது இனி அதனை வாங்கமாட்டார்கள் என்று கருத்துச் சொன்னவர்கள் ஒருபுறம். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஒரு புத்தகத்தை 1200 அச்சடிப்பது என்பது மரபு. (இப்படி இல்லாமல் குறைத்து, மிகக்குறைத்து, அல்லது நன்றாக விற்பனையாகும் புத்தகங்களை மிக அதிகரித்தும் அச்சடிக்கப்படுகின்றன. அவை பிரச்சினையற்றவை. எனவே, அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேசவில்லை.) அப்படி அச்சடிக்கும் புத்தகங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி விற்பனை ஆகவில்லை என்றால் அவை தேங்கத் தொடங்கும். 3 வருடங்களில் விற்கவில்லை என்றால் அதுவே சுமையாகவும் ஆகலாம். பொதுவாக 100 புத்தகங்கள் அச்சிட்டால், அதில் சூப்பர் ஹிட் புத்தகங்கள் அதிகபட்சம் 5 வரலாம். ஹிட் புத்தகங்கள் 10 வரலாம். மோசமில்லை என்னும் ரகத்தில் இன்னொரு 20 வரலாம். மீதி 65 புத்தகங்கள் இப்படித் தேங்கிப் போகும் அபாயம் கொண்டவைதான். (இந்த எண்ணிக்கைக்கும் புத்தகங்களின் தரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகங்களை என்ன செய்வது? அதிலும் 1500 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் வரை அச்சிட்ட பதிப்பகங்கள் என்ன செய்ய இயலும்? இவற்றை பத்திரமாக வைத்திருக்க புத்தகக் கிடங்குக்கு ஆகும் செலவு, அவற்றைக் கையாளும் பாதுகாக்கும் பணியாளார்களின் சமபங்களங்கள் எல்லாவற்றையும் எப்படி நிர்வகிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சினை புத்தகத் தொழிலில் மட்டும் இருப்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு. ஆனால் அவ்வப்போது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்ற ஒன்றைப் போட்டு காலி பண்ணிவிடுவார்கள். புத்தகம் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் இப்பழக்கம் இல்லை என்பதால், அதனை கிழக்கு செய்தபோது நிறைய கேள்விகள் எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் கிழக்கு பதிப்பகம் இது போன்ற புத்தகங்களை இந்த விலையில் மகிழ்ச்சியோடு விற்கவில்லை. இதனை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு புத்தகத்தை 1200 கூட விற்கமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான சரியான வழிமுறைகளை எந்தப் பதிப்பகமும் இன்னும் எட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. இதுபோக, ப்ரைடுக்காகவும், மன மகிழ்ச்சிக்காவும் கொண்டு வரப்படும் புத்தகங்கள். அவையும் விற்கவில்லை என்றால் புத்தகக் கிடங்கில் தேங்கவே தொடங்கும். வேறு வழியின்றித்தான் இதனைச் செய்யவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளாகச் சொல்லப்படுபவை, உண்மையில் கிழக்கை மற்றும் இதுபோன்று இனி வேறு பதிப்பகங்கள் செய்ய முன்வந்தால் அவற்றையும் பாதிக்காது என்றே நான் நம்புகிறேன். இப்படி குறைந்த விலையில் புத்தகம் வாங்கிப் பழகியவர்கள் இனிமேல் புதிய புத்தகங்களை வாங்கமாட்டார்கள் என்று நான் நம்பவில்லை. உண்மையான புத்தக விற்பனை புத்தக விரும்பிகளிடமே முதலில் ஏற்படுகிறது. அவர்கள் இதற்கெல்லாம் காத்திராமல் உடனே வாங்கிவிடுவார்கள் என்பது முதல் பாயிண்ட். இரண்டாவதாக, நாம் எல்லா புத்தகப் படிப்பாளர்களையும் ஏற்கெனவே அடைந்துவிட்டோம் என்னும்போதுதான் இந்த ‘புத்தகம் இனி விற்காது’ என்ற எண்ணமே ஏற்படும். ஆனால் உண்மையில் நாம் பெரும்பாலான புத்தக வாசிபபாளர்களைச் சென்று அடையவே இல்லை. எனவே இந்தத் தள்ளுபடி விற்பனையில் பயன் அடையப்போவது, நாம் ஏற்கெனவே சென்றடைந்திருக்கும் ஒரு சிறிய விகிதத்தில் ஒரு மிகச் சிறிய விகிதம் மட்டுமே. ஏனென்றால்,ஒரு தமிழ்ப் பதிப்பகத்தைத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்டதமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக எழுத்தாளர்களின் வருத்தம். முதலில் இது நியாயமானது என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இது மனம் சார்ந்த வருத்தம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பதிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை என்பது புரியலாம். புத்தகத்தை எடைக்கு எடை போட்டோ, ரிபிராசஸஸ் செய்ய விலைக்குப் போட்டோ கொன்றுவிடலாம் என்று ஒரு வாதம் வருகிறது. நான் இதனை நிச்சயம் ஏற்கவில்லை. குறைந்த விலையில் கொடுத்தால் வாங்க ஆளிருக்கும்போது ஏன் இதனைச் செய்யவேண்டும்? புத்தகத்தின் விலை தங்கள் பர்ஸைவிட அதிகம் என்னும்போது மட்டும் ஒரு புத்தகத்தை வாங்காமல் செல்பவர் இதனைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கிக்கொண்டால் அது ஓர் எழுத்தாளருக்கு நிச்சயம் மகிழ்ச்சியே ஏற்படுத்தவேண்டும். ஓர் எழுத்தாளர் எழுதுவதே தனது புத்தகம் பரவலாக வாசிக்கப்படத்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இப்படி வாசித்துப் பழகியவர்கள், சில வருடங்களில் ஒரு புத்தக வாசிப்பாளராகவே மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதோடு, இப்படி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் பதிப்பகங்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் கிடைக்கிறது. இதனையெல்லாம் சரியாக விற்காத புத்தகங்களின் மூலம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புத்தகத்தை ஏன் 1200 கூட விற்கமுடியவில்லை? புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு என்பது நிச்சயம் உண்மையே. ஆனால் ஒரு புத்தகத்தின் 1200 படிகளை வாங்கும் வாசிப்பாளர்கள்கூடவா இல்லை? இருக்கிறார்கள். தமிழ்நாடெங்கும் பரவலாக இருக்கிறார்கள். (வெளிநாட்டிலும்தான்!) அவர்களை அடையும் வழி காஸ்ட்லியானதாக இருக்கிறது. டிவியில் விளம்பரங்கள் வரத் தொடங்கினால் மிக எளிதில் ஒரு பதிப்பகம் பிரபலமாகலாம். நிச்சயம் புத்தகங்களும் விற்கும். ஆனால் அந்த டிவி விளம்பரத்துக்குத் தரும் காசுக்கு இணையான லாபத்தை புத்தகங்களில் பார்க்க முடியாது அல்லது வருடங்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி விளம்பரம் என்றில்லை, முன்னணி நாளிதழ்கள், முன்னணி வெகுஜன இதழ்கள் எல்லாவற்றின் விளம்பர ரேட்டும் இதேபோலவே இருக்கின்றன. ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் ஒரு பக்க விளம்பரம் கிட்டத்தட்ட 1.5 லட்சம். இந்த 1.5 லட்ச விளம்பரத் தொகையை ஈடுகட்ட, 100 மதிப்புள்ள புத்தகம் எத்தனை விற்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் விற்றால் பதிப்பகத்துக்கு நிகர வருமானம் (நிகர லாபம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்) 30 ரூபாய்தான் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரே விளம்பரத்தில் அத்தனை புத்தகம் விற்குமா? விற்காது. இதுதான் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;தள்ளுபடி விற்பனையின் ஒரே மகிழ்ச்சி, தான் வாங்க நினைத்திருக்காத புத்தகங்களையும் கூட வாசகர்கள் வாங்கிச் செல்வது. நெடுநாளாக வாங்க விரும்பி, பணம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வாங்காமல் இருந்த ஒரு புத்தகத்தை வாசகர் கிட்டத்தட்ட நெக்குருகி வாங்கிச் செல்வது. இன்று கிழக்கு முன்னெடுத்திருக்கும் இந்த தள்ளுபடி விற்பனையை நிச்சயம் எல்லாப் பதிப்பகங்களும் முன்னெடுத்தே ஆகவேண்டும். சில வருடங்கள் ஆகலாம். ஆனால் வேறு வழியில்லை. இப்படிச் செய்யாமல், 10 அல்லது 12 வருடங்கள் விற்காமல் ஒரு புத்தகத்தை வைத்துப் பலனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ரீ ப்ரிண்ட், டேமேஜ் பற்றியெல்லாம் நான் சொல்லவில்லை. கிழக்கு பதிப்பக விற்பனையில் கிளியரன்ஸும், டேமேஜ் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டேமேஜ் புத்தகங்கள் என்பது - அழுக்கடைந்த புத்தகங்கள், ஒரே ஒரு பக்கம் மட்டும் அல்லது அட்டை குறைபாடுடைய புத்தகங்கள். இவற்றையும் விலைக்குப் போடுவதற்குப் பதிலாக மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இந்த டேமேஜ் புத்தகங்களில் மிக நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்களும் வரலாம். இதைப் பார்த்துவிட்டுத்தான் சில எழுத்தாளர்கள் நமது புத்தகம் சரியாக விற்கவில்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். டேமேஜ் புத்தகங்கள் தனியாகவும், கிளியரன்ஸ் புத்தகங்கள் தனியாகவும்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒன்று, ஏற்கெனவே சொன்னதுதான், நல்ல விற்பனை என்பதற்கும் புத்தகத்தின் தரத்துக்கும் தொடர்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு 1: கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல்ஸ் இப்போது திநகர் எல் ஆர் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திநகர் பஸ் நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோவில் எதிரில்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு 2: இணையத்திலும் தள்ளுபடி விற்பனை கிடைக்கிறது. பார்க்க: &lt;a href="https://www.nhm.in/shop/discount/"&gt;https://www.nhm.in/shop/discount/&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பின்குறிப்பு 3:  என் கவிதைத் தொகுப்பான நிழல்கள் புத்தகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் க்ளியரன்ஸ் சேல்ஸில் கிடைக்காது. எனவே இப்போதே வாங்கிவிடவும். :&gt; வாங்க: &lt;a href="https://www.nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html"&gt;https://www.nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-2541898742011714047?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/2541898742011714047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=2541898742011714047' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2541898742011714047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2541898742011714047'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/06/blog-post_11.html' title='தள்ளுபடி அதிரடி'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-9206513146735285326</id><published>2011-06-01T10:46:00.001+05:30</published><updated>2011-06-01T10:54:57.186+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ரவிக்குமார் - இந்த எழுத்தாளர்களே இப்படித்தான்!</title><content type='html'>ரவிக்குமார் ரஜினி தொடர்பான இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். வழக்கம்போல ரஜினி ரசிகர்கள் அப்பதிவுகள் மோசமாக இருந்ததாகவே எடுத்துக்கொண்டார்கள். அப்படி அவர்கள் எடுத்துக்கொள்ளாவிட்டால்தான் அது செய்தி. உண்மையில் ரவிக்குமாரின் அந்த இடுகைகளில் மோசமாக எதுவுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், அந்த இரண்டு இடுகைகளில் ஒன்றுமே இல்லை! பொருட்படுத்தத்தக்க எதுவுமே அந்த இரண்டு இடுகைகளில் இல்லை. (கூறியது கூறல்!)  ரஜினி குறித்தோ ரஜினியின் அரசியல் குறித்தோ திண்ணைப் பேச்சுகளில் பரிமாறப்படும் ‘என் கருத்து’ வடிவிலான இரண்டு கருத்துகளையே இரண்டு இடுகைகளாக இட்டிருந்தார் ரவிக்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6uj6jaKaArs/TeXLBRd7u3I/AAAAAAAAGOo/ecajMLtE17s/s1600/ravikumar%2Bvadivelu.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="266" width="400" src="http://4.bp.blogspot.com/-6uj6jaKaArs/TeXLBRd7u3I/AAAAAAAAGOo/ecajMLtE17s/s400/ravikumar%2Bvadivelu.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று 3வதாக ஒரு இடுகை. அதில் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவை வாசிக்கும் வாசகர்கள் ரஜினி, வடிவேலு, குஷ்பூ குறித்து மட்டும்தான் வாசிக்கிறார்கள் என்று. இன்றுதான் இவர் இதைக் கண்டுபிடித்தார் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. நடிகர்களைப் பற்றி எழுதினால் அதிகம் பேர் படிப்பார்கள் என்று தெரியாமல்தான் எழுதினார் என்று நம்புவது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி குறித்த முதல் இரண்டு இடுகைகளில் ரஜினி குறித்த தீவிரமான அலசல்கள் எவையுமே இல்லை. ஆனால் மூன்றாவது இடுகையில் ரவிக்குமார் தான் ஏற்கெனவே இந்தியா டுடேவில் ரஜினி பற்றி எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் பேசுகிறார். இந்தியா டுடேவில் ரஜினி பற்றிய தீவிரமான மதிப்பீட்டை நிச்சயம் ரவிக்குமார் முன்வைத்திருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ரவிக்குமார் மிக முக்கியமான எழுத்தாளரே. ஆனால் அக்கட்டுரையை மையமாக வைத்து, ஒன்றுக்கும் உதவாக இந்த இரண்டு இடுகைகளை அவர் அளக்க முனைவது சரியல்ல. இந்தியா டுடேவுக்கு எழுதியது போல எழுதாமல், கைக்கு வந்த நான்கு வரிகளை எழுதிவிட்டு இவர் வலைப்பதிவு வாசகர்களை நொந்து கொள்வது முரண். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் so called இந்த வலைப்பதிவு/ஃபேஸ்புக் வாசகர்கள் ரவிக்குமார் போன்ற எழுத்தாளர்களைத்தான் நொந்துகொள்ளவேண்டும். இதே எழுத்தாளர்கள் இந்தியா டுடே, காலச்சுவடு போன்றவற்றில் எழுதும்போது தீவிரமாக உழைத்து எழுதுகிறார்கள். ஆனால் வலைப்பதிவு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதும்போது ஏனோ தானோ என்று எழுதிவிடுகிறார்கள். அதே சமயம், சிற்றிதழ்களில் தாங்கள் எழுதும்போது எழுந்த விவாதமோ கருத்துரைகளோ இவற்றுக்கும் எழு வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால், ஃபேஸ்புக், வலைப்பதிவு வாசகர்கள் சரியல்ல என்றும் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். மறந்தும், எழுத்தாளர்கள் ஃபேஸ்புக், வலைப்பதிவுகளில் சரியாக எழுதுவதில்லை என்று பேசுவதே இல்லை. எழுத்தாளர்களின் எழுத்து உழைப்பில் வேறுபாடு உள்ளதுபோலவே வாசகர்களின் வாசிப்பு உழைப்பிலும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு சரிசம உண்மைகளில் ஒன்றை மட்டும் வெட்டிப் பேசினால் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி குறித்த இரண்டு இடுகைகளில் (மீண்டும் மீண்டும் நான் இவற்றை இடுகை என்றே அழைப்பதன் நோக்கம், இதனைக் கட்டுரை என்று அழைக்க எவ்வித ஞாயமும் இல்லை என்பதே!) பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டுகளின் நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும் என்கிறார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஞானம் வந்துவிட்டதாக ரஜினியைச் சொல்லும் ரவிக்குமார்,  நன்றாக ஐந்து வருடம் எம்.எல்.ஏவாக இருந்த வேளையில் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட் குறித்து நினைத்துப் பார்த்திருக்கவேண்டும். ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கு டிக்கெட் பிளாக்கில் விற்றது குறித்து இவர் கடும் போராட்டங்களை நடத்தியிருக்கலாம். சன் பிக்சர்ஸ் கையில் சிக்கிக்கொள்ளும் தியேட்டர்களில் என்ன என்ன நடக்கிறது, பிளாக்கில் டிக்கெட் விற்பது அத்தியேட்டர்களுடன் தொடர்புடையதா ரஜினியுடன் தொடர்புடையதா என்றெல்லாம் அவர் யோசித்திருக்கலாம். பிளாக்கில் டிக்கெட் விற்பது ரஜினி படத்துக்கு மட்டும்தான் நடக்கிறது என்று நான்கைந்து நாளாக முயன்று தன்னைத்தானே நம்பவைத்துக் கொண்டிருக்கலாம். பதவி போகும்போதுதான் எம் எல் ஏக்களுக்கும் ஞானம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மகளையே தயாரிபபாளராக்கி பணம் அள்ளுவது பெரிய குற்றமே. ஐயமே இல்லை. ஒரு படத்துக்கு வசனம் எழுதி 50 லட்சம் சன்மானம் பெறும் முதலமைச்சரின் கவிதைகள் பிடிக்கலாம், தவறில்லை. படங்களை அந்த முதலமைச்சரின் குடும்பங்களே வெளியிட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி கூட்டணியில் இல்லாவிட்டால்தான் பேசலாம், அதுவும் தவறில்லைதான். ரஜினியின் மகள் பணத்தை அள்ளுவதுதான் பெரும் தவறு. ’மரணத் தறுவாயிலாவது’ ரஜினி இதனை யோசிக்கவேண்டும். வடிவேலுவின் பக்கத்தில் கைக்கூப்பி நின்று ஓட்டுக் கேட்டபோது, வடிவேலுவும் அவரது குடும்பத்தினரும் பணத்தை அள்ள எதுவுமே செய்வதில்லை என்று ரவிக்குமார் நம்பியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் அது அத்தனை முக்கியமல்ல. ஆனால் ரஜினி மட்டும் ‘மரணத் தறுவாயிலாவது’ இதனை யோசிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு ஒரு டிவி ஷோவில் தங்களுக்கு பிடித்த படம் என்ன என்ற கேள்விக்கு, மாபெரும் இலக்கியவாதியான ரவிக்குமார் சொன்ன பதில் ‘சிவாஜி.’  ரஜினியைப் பிடித்திருக்கிறது என்பது தவிர வேறு பெரிய காரணங்கள் இருந்துவிட முடியாது சிவாஜி திரைப்படத்தைப் பிடிக்க. இதில் தவறில்லை. ரவிக்குமாரே தனது 3வது இடுகையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், ரஜினி படங்களை மட்டும் முதல் காட்சியில் பார்ப்பேன் என்று. இப்படிச் சொல்லும் ஒருவர், ஏன் ராணா நல்லவிதமாகச் சுருண்டு விட்டது என்று சொல்லவேண்டும்? ரஜினியின் மகளே பணத்தை அள்ளப் போவதினாலா? கருணாநிதியின் மகன்கள், பேரன்கள் பணத்தை அள்ளுவது பற்றி ரவிக்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதற்கு முன்னர் அவர் பேசியிருக்கலாம்!) பேசியிருக்கிறாரா? இலக்கியவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கான அதே அரசியல் சூத்திரம்தானா? இத்தனை ரஜினியைப் பிடிக்கும் என்று சொல்பவர், ஏன் திவ்யா நடிக்காமல் போனது நல்லது என்று சந்தோஷப்படவேண்டும்? தேவையற்ற கேள்விகள். ஏனெனில், ரவிக்குமார் பதில் சொன்னால், அவரது வலைப்பதிவில் அதிகம் பேர் படித்துவிடுவார்கள். ஃபுல் டைம் இலக்கியவாதி மற்றும் பார்ட் டைம் அரசியல்வாதி ஒருவரின் வலைப்பதிவில் நடிகர்கள் பற்றிய பதிவு அதிகம் படிக்கப்படுவது அவருக்கு இழுக்கு. அவருக்கு ஏன் அந்த இழுக்கு இன்னொருமுறை வரவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவுக்குக் கூட, ரஜினி ரசிகர்கள் இப்படித்தான் ரஜினியைப் பற்றிப் பேசினால் பொறுத்துக்கொள்ளாமல் எதையாவது சொல்வார்கள் என்றோ உளறுவார்கள் என்றோ அவரோ மற்றவர்களோ சொல்லக்கூடும். ரவிக்குமாரைப் போலவே நானும் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. (வந்தால் அவருக்கே நிச்சயம் ஓட்டு என்பது வேறு விஷயம்!) ரஜினிக்கு அரசியலுக்கு வருவதை விரும்பால பல ரஜினி ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர் அரசியலுக்கு வருவதற்குக் காரணம் விஜய்காந்தின் வெற்றி என்றெல்லாம் காமெடி பண்ணாதிருக்கவேண்டும். ரஜினி மீண்டும் வந்து நன்றாக வாழ்ந்தாலே போதும். நடிக்கவே தேவை இல்லை. ஒருவேளை அவர் நடிக்கவும் செய்தால் அது போனஸ் மகிழ்ச்சி. இதைத்தான் ரவிக்குமாரும் சொல்ல நினைக்கிறார். ஆனால் அவருக்கு உள்ளேயிருந்து சில குரல்கள் அவரறியாமல் சில வரிகளை எழுதிவிடுகின்றன. இப்போது எனக்கு நடந்துவிட்டதைப் போலவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;வாசகர்கள் வசதிக்காக...&lt;br /&gt;&lt;br /&gt;ரவிக்குமாரின் முதல் இடுகை: (இது அவரால் நீக்கப்பட்டுவிட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர் சிங்கப்பூருக்குப் போவதற்கு முன்பு பேசியதாக ஒரு ஒலிப்பதிவு தற்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் அவருடைய குரல் மிகவும் ஆயாசத்தோடு ஒலிப்பதைக் கேட்கும்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என நம்புவது கடினமாக இருக்கிறது.&lt;br /&gt;தான் பணம் வாங்கிக்கொண்டுதான் நடிப்பதாகவும் அதற்கே இவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களே என்றும் தமது ரசிகர்களைப் பார்த்து அவர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது தனது ரசிகர்கள் தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்ளும்படி தான் நடந்துகொள்வேன் என்றும் அவர் அதில் வாக்குறுதி அளித்திருக்கிறார். நடிகர் விஜயகாந்த் தற்போது பெற்றிருக்கும் அரசியல் வெற்றி ரஜினியை சிந்திக்கவைத்துவிட்டதுபோல்தெரிகிறது. தானும் அரசியலில் ஈடுபட அவர் முடிவெடுத்துவிட்டார், தான் குணமடைந்து தமிழகம் திரும்பும்போது கடவுள் தன்னை இதற்காகத்தான் பிழைக்க வைத்தார் என்பதுபோல ஒரு வசனத்தைப் பேசிவிட்டு ரஜினி புதிய கட்சி ஒன்றைத் தொடங்கக் கூடும் என்பது என் அனுமானம்.&lt;br /&gt;ரஜினி அரசியல் கட்சி துவக்கினால் அவருக்கான ஆதரவு எப்படி இருக்கும்? விஜய், அஜித் ரசிகர்கள் அவருக்குப் பின்னால் போய்விடுவார்களா? ஓரிரு வாரங்களில் இதற்கான விடை கிடைக்கும் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் இடுகை: (இதுவும் நீக்கப்பட்டுவிட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ராணா - இன்னொரு ஜக்குபாயா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராணா படத்தின் துவக்கம் இப்படி சோகமாக முடியும் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். ஏற்கனவே இப்படி அறிவிக்கப்பட்டு நின்றுபோன ஜக்குபாயின் நிலைதான் ராணாவுக்கும் என்பது என் அனுமானம்.’ ஆண்டவன் சொல்றான் அண்ணாமலை செய்யிறான்’ என்று வசனம் பேசிய ரஜினி இனிமேல் சினிமா வேண்டாம் என்று ஆண்டவன் சொல்லிவிட்டான் என அறிவிக்கக்கூடும்.&lt;br /&gt;ராணா ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் தயாரிக்கப்படுவதாக இருந்தது. தெலுங்கில் டப்பிங் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. தனது மகளையே தயாரிப்பாளராக்கி லாபத்தை அள்ளலாம் என நினைத்திருந்த வேளையில் இப்படி சோதனை வந்துவிட்டதே என்று ரஜினி வேதனைப்பட்டிருக்கலாம். ஆனால் எனக்குக் கொஞ்சம் ஆறுதல். நான் ரசிக்கும் மிகவும் திறமைமிக்க நடிகைகளில் தீபிகா ஒருவர். அவர் ராணா படத்தில் நடிக்கிறார் எனத் தெரியவந்ததும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். ஐஸ்வர்யா ராய்க்கு எந்திரனில் நேர்ந்த கதி தான் தீபிகாவுக்கும் நேரும் என்று தெரிந்ததால் வந்த வேதனை அது. எந்திரனில் ரஜினியின் கேரக்டர்தான் ரோபோ என்றாலும் உண்மையில் ஐஸ்வர்யாவின் பாத்திரம்தான் ரோப்போவாக்கப்பட்டிருந்தது. தீபிகாவை அப்படியொரு நிலையில் எண்ணிப்பார்க்க கஷ்டமாக இருந்தது. எப்படியோ நல்லவிதமாக ராணா சுருண்டுவிட்டது.&lt;br /&gt;மரணம் நெருங்கிவிட்டதாகத் தெரியும்போது எந்தவொரு மனிதனுக்கும் ஞானக்கண் திறந்துகொள்ளும். ரஜினிக்கும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. தனது ரசிகர்களின் அன்பை நினைத்து அவர் உருகியிருக்கிறார்.அல்லது அப்படி பாவனை செய்திருக்கிறார். வாக்களித்துவிட்டு விலைவாசி ஏறிவிட்டது எனச் சொல்லி எந்த அணிக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை தனது ரசிகர்களுக்கு சமிக்ஞை காட்டினார் ரஜினி. அந்த நேரத்தில் அவர் தான் வாங்கும் சம்பளத்தையும் தான் நடித்து வெளியாகும் படங்களுக்கு ப்ளாக்கில் விற்கப்படும் டிக்கட்டுகளின் விலையையும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும்.&lt;br /&gt;எப்படியோ சிங்கப்பூருக்குப் போகும் முன்னால் ரசிகர்களுக்கு வெளியிட்ட ஆடியோ பதிவில் தனது ரசிகர்கள் தலை நிமிர்ந்து பெருமைப்படும் விதமாக நடந்துகொள்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். மரண பயம் வரும்போது பேசிய பேச்சாக அல்லாமல் அதை ஒரு வாக்குறுதியாக அவர் கருதுவாரேயானால் நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே கருதுகிறேன். அவருக்குக் ‘ க்ருபா’ தரும் கடவுளும் , குருவும் என்ன செய்தியை அவருக்குக் கூறியிருக்கிறார்களோ! பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் இடுகை: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரஜினி குறித்த பதிவுகளுக்கு முடிவு:&lt;/b&gt; (விரைவில் நீக்கப்படும்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nirappirikai.blogspot.com/2011/05/blog-post_31.html"&gt;http://nirappirikai.blogspot.com/2011/05/blog-post_31.html&lt;/a&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-9206513146735285326?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/9206513146735285326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=9206513146735285326' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/9206513146735285326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/9206513146735285326'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/06/blog-post.html' title='ரவிக்குமார் - இந்த எழுத்தாளர்களே இப்படித்தான்!'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6uj6jaKaArs/TeXLBRd7u3I/AAAAAAAAGOo/ecajMLtE17s/s72-c/ravikumar%2Bvadivelu.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-6928569507164938535</id><published>2011-04-10T17:03:00.004+05:30</published><updated>2011-04-10T17:06:46.164+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>ஆப்புக்கு ஆப்பு</title><content type='html'>திடீரென்று ஞாநி என்னிடம் நடிக்க வர்றீங்களா என்றார். வழக்கம்போன்ற உரையாடல்கள் நடந்தேறின. நடிக்கத் தெரியாதே, அதெல்லாம் நடிச்சிடலாம், நம்பிக்கை இருந்தா போதும் போன்றவை. ரிகர்சலுக்கு குத்தம்பாக்கம் சமத்துவபுரத்துக்குப் போனோம். கிட்டத்தட்ட 24 பேர் பங்கேற்றார்கள். நல்லவேளை எனக்கு வசனம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-hbG7fDjSpww/TaGU1CwprFI/AAAAAAAAGL0/DDtPr1p4Txw/s1600/aappukku%2Baappu2.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="263" width="400" src="http://1.bp.blogspot.com/-hbG7fDjSpww/TaGU1CwprFI/AAAAAAAAGL0/DDtPr1p4Txw/s400/aappukku%2Baappu2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--B_1-BxlqfE/TaGU0toCr3I/AAAAAAAAGLs/HWJeiFLj3zg/s1600/aappukku%2Baappu.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="260" width="400" src="http://4.bp.blogspot.com/--B_1-BxlqfE/TaGU0toCr3I/AAAAAAAAGLs/HWJeiFLj3zg/s400/aappukku%2Baappu.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா ஐயா ஆதரவாளர்களாக நீங்களே பிரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் உடனே அம்மா பக்கம் வந்து நின்றுகொண்டேன். ஞாநி இங்கயுமா என்றார். நடிப்பில் கூட கருணாநிதியைப் புகழமுடியாது என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;முக்கியக் கதாபாத்திரம் அஞ்சலைதான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. அஞ்சலையாக நடிப்பது கிறிஸ்டினா என்னும் பெண். அன்றைக்குத்தான் எல்லாரையுமே நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கிறிஸ்டினா ஸ்கிரிப்டைக் கையில் எடுத்து, எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தார். திக்கித் திக்கி வாசித்தார். இதில் நுனி நாக்கு ஆங்கிலம் வேறு. ஸ்கிரிப்ட்டில் பக்கா சென்னைத் தமிழ்! கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தடவை வசனம் சொல்லிக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் வசன வெளிப்பாடு என்னை அசரடித்துவிட்டது. இந்தப் பெண் இந்த நாடகத்தையே எங்கோ கொண்டு போய்விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நாடக அரங்கேற்றத்திலும் அதுவே நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஞாநி, சாய் கிருபா (ஆப்பம்மா), அஞ்சலை - இந்த மூவரை ஒட்டியே ஒட்டுமொத்த நாடகமும். நாங்களெல்லாம் இவர்களின் பாத்திரங்களை மெருகேற்ற மட்டுமே. அதனைச் செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீல்சன் கட்டியக்காரனாக நடித்தார். பக்கம் பக்கமாக வசனம். அநாயசமாகப் பேசினார். எனக்கு வசனங்கள் தராத ஞாநிக்கு மானசீகமாக நன்றி சொல்லவேண்டிய தருணம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாநி முதல்தடவை பேசும்போது, ரிகர்சலுக்கு வாங்க, நீங்க வருத்தபடற மாதிரி இருக்காது என்றார். எனக்கு என்ன வருத்தம்? அப்படியே இருந்தாலும் பரீக்ஷாவை நினைத்துத்தான் இருந்திருக்கும். எப்படியோ தப்பித்தது பரீக்ஷா குழு.&lt;br /&gt;&lt;br /&gt;நாடகத்தை யூ டியூபில் பார்க்க: (நல்ல பிரதி வந்ததும் மீண்டும் வலையேற்றி, நல்ல லிங்க் தருகிறேன்!) இதனை பதிவு செய்து வலையேற்றிய பத்ரிக்கு நன்றி. இப்படி ஒரு பொம்பளை கால்ல விழுந்து நடிக்கிறீங்களே, சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் எங்க வீட்டு ஜெயலலிதா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;iframe title="YouTube video player" width="480" height="390" src="http://www.youtube.com/embed/zknT5gBcRD0" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-6928569507164938535?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/6928569507164938535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=6928569507164938535' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/6928569507164938535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/6928569507164938535'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/04/blog-post_10.html' title='ஆப்புக்கு ஆப்பு'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-hbG7fDjSpww/TaGU1CwprFI/AAAAAAAAGL0/DDtPr1p4Txw/s72-c/aappukku%2Baappu2.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-2408792097252849822</id><published>2011-04-01T07:32:00.000+05:30</published><updated>2011-04-01T07:32:40.078+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்ததில் ஈர்த்தது'/><title type='text'>வைரமுத்துவை மிஞ்சும் பத்ரி சேஷாத்ரி</title><content type='html'>&lt;a href="http://www.dinamalar.com/E-malar.asp?ncat=391&amp;showfrom=04/01/11"&gt;http://www.dinamalar.com/E-malar.asp?ncat=391&amp;showfrom=04/01/11&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள லிங்கில் 4ம் பக்கம் போகவும்!&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு எடிட்டோரியல் மக்களுக்கு: இந்த வருடம் 2011ல் மட்டும் 1500 புத்தகங்களாம்! தமிழ்நாடு தாங்குமா? யோசிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-2408792097252849822?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/2408792097252849822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=2408792097252849822' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2408792097252849822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2408792097252849822'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/04/blog-post.html' title='வைரமுத்துவை மிஞ்சும் பத்ரி சேஷாத்ரி'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-7799149473898028549</id><published>2011-03-20T17:05:00.000+05:30</published><updated>2011-03-20T17:05:51.671+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>பிச்சைக்காரர்களை உருவாக்குவோம்</title><content type='html'>...லாப்டாப் எல்லா ஜாதி மாணவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்வதுகூட இவர்களுக்கு ஸ்டாம்ப்பை வரவழைத்துவிடும் என்பதால் இதைப் பற்றிப் பேசுவதையே தவிர்ப்பார்கள். ஆழங்களுக்குள் செல்லாமல், மேம்போக்காக இலவசங்களையே எதிர்க்கிறோம் என்றோ...&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வாசிக்க&lt;a href="http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_8892.html"&gt; http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_8892.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-7799149473898028549?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/7799149473898028549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=7799149473898028549' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/7799149473898028549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/7799149473898028549'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/03/blog-post_20.html' title='பிச்சைக்காரர்களை உருவாக்குவோம்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-8573108064790624696</id><published>2011-03-19T16:59:00.000+05:30</published><updated>2011-03-19T16:59:52.386+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>பாலுமகேந்திரா - நிசப்தத்தில் மிதந்துவந்த குரல்</title><content type='html'>நேற்றைய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் பாலுமகேந்திரா கலந்துகொண்டார். மிக மின்பு ஞாநி கலந்துகொண்ட மொட்டைமாடிக் கூட்டத்தில் அனல் பறந்தது. அன்று எல்லோருமே ஞாநி என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு, நேற்று நடந்த மொட்டைமாடிக் கூட்டத்தில்தான் மீண்டும் அது நடந்தது என நினைக்கிறேன். வந்திருந்த அனைவரும் அத்தனை பெரிய நிசப்தத்தில் மிதந்துவரும் பாலுமகேந்திராவின் குரலை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கேயிருந்தும் அனாவசிய சத்தங்கள் இல்லை. பாலுமேந்திராவின், அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும், ஹார்ஷ்நெஸ்ஸும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-koLffGkDvSU/TYSTH9d8lQI/AAAAAAAAGK4/0rDief3WRWM/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://2.bp.blogspot.com/-koLffGkDvSU/TYSTH9d8lQI/AAAAAAAAGK4/0rDief3WRWM/s400/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்திலிருந்து திரைக்கு என்பதுதான் பாலுமகேந்திரா பேச எடுத்துக்கொண்ட தலைப்பு. அந்தத் தலைப்பிலிருந்து சிறிதும் விலகாமல் பேசினார். எழுத்து திரைக்கு மாறும்போது ஒரு கலைஞன் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான சவால்கள் குறித்து விளக்கினார். உருவமும் உள்ளடக்கமும்தான் ஒரு படைப்பின் சாராசம்ங்கள். அதைத் திரைக்கு மாற்றும்போது அதன் உள்ளடக்கம்தான் முக்கியமே ஒழிய, அதன் உருவம் இரண்டாம்பட்சம்தான் என்று சொன்னார். ஒரு படைப்பிலிருந்து எதனைத் திரைக்கு மாற்றவேண்டும் என்று அவர் கருதுவதாக நினைக்கிறாரோ அதுவே திரையில் மையப்படுத்தப்படுகிறது என்றார். இதன் அர்த்தமாக நான் புரிந்துகொண்டது, எழுத்தாளரின் கவனம் இரண்டாம் இடம் பெற்றுவிடுகிறது என்பதுதான். இதனை சில எழுத்தாளர்கள் முற்றிலுமாக மறுக்கக்கூடும். ஆனால் பாலுமகேந்திரா ஒரு திரைப்படம் எடுக்க முயலும்போது அதில் தனது பங்கை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுவிட்டே தொடங்குகிறார். ஓர் எழுத்தாளரின் படைப்பில் அவர் விட்டுவிட்ட பகுதிக்கு, அவருக்கான காரணங்கள் அவரளவில் தெளிவாகவே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கேதான் எழுத்தாளர்கள் கடுமையாக முரண்படும் புள்ளியும் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகளில், படைப்பாளியின் பெயர் என்பது எழுத்தாளர்தான் என்பதால், அதில் தங்கள் உரிமைதான் என்ன என்று அதனை எழுதிய எழுத்தாளர்கள் கேட்கக்கூடும். பாலுமகேந்திராவின் பதில் ஒன்றும் இல்லை என்பதுதான். நீங்கள் எழுதிய ஒரு கதையின் படைப்பாற்றலுக்கு என் படைப்போடு யாதொரு தொடர்பும் இல்லை என்கிறார். படைப்பாற்றலும் படைப்பும் இந்த இடத்தில் அடைந்த விலக்கம் என்ன அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். பாலுமகேந்திரா எழுத்தாளரின் படைப்பிலிருந்து எடுப்பது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே அன்றி அதன் படைப்பாற்றலை அல்ல. அவரளவில் இது தெளிவான பார்வையே. மட்டுமன்றி, ஒரு திரைமொழிக் கலைஞனுக்குத் தேவையானதும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் எழுத்தாளர் ஒரு வரியில் எழுதிச் செல்லும் ஒரு காட்சிக்கு நான்கைந்து காட்சிகள் வைக்கவேண்டியிருக்கும் என்று சொல்லி, அதற்கு எடுத்துக்காட்டாக மாலனின் தப்புக்கணக்கு கதையை படமாக்கியவிதத்தை விளக்கினார். ஓர் எழுத்தாளர் ஆயிரம் பக்கங்கள் எழுதிச் செல்லும் ஒரு விஷயத்தை ஒரு திரைக்கலைஞன் ஒரு சட்டகத்தில் காண்பிக்கமுடியும் என்றார். உண்மைதான். ஆனால் அதேபோல் இதன் மறுபக்கமான, ஓர் எழுத்தாளன் உருவாக்கும் உன்னதத் தருணங்களை அதற்கு இணையான ஒரு தருணமாக எல்லா சமயங்களில் திரைக்கலைஞன் மாற்றிவிடமுடியாது என்பதும் உண்மையே. இதனால்தான் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க பாலுமகேந்திரா ஐம்பது கதைகளைப் படிக்கவேண்டியிருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்திலிருந்து திரைக்கு படைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால்தான் திரைமொழியின் அடிப்படை பலமாகவும் தீவிரமாகவும் அமையும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா போன்றவர்கள் இலக்கியத்துக்கும் திரைக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதில் காட்டிவரும் அக்கறை மிகவும் முக்கியமானது. கதை நேரம் போன்ற வரவேற்கப்படவேண்டிய முயற்சிகளை எழுத்தாளர்கள் எந்த ஓர் ஊடகத்திலும் பதிவு செய்யவில்லை என்கிற பாலுமகேந்திராவின் வருத்தமும் கோபமும் இங்கே இருந்துதான் தொடங்குகிறது. தொடர்ந்து அலுத்துக்கொள்ளும் எழுத்தாளர்கள், அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு அரங்கேறும்போது ஏன் அதனைப் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்கிறார். அதோடு மட்டுமின்றி எழுத்தாளர்கள், திரைத்துறையைப் பற்றி வானளாவ பேசவும் செய்கிறார்கள் என்பது அவரது கோபம். தங்கள் நல்ல முயற்சிகளை அங்கீகரிக்காத எழுத்தாளர்கள் எவருக்கும் தங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்பது பாலுமகேந்திராவின் கோபம். எழுத்தாளர் சுஜாதா கதை நேரம் பற்றி எங்கேயோ குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். கற்றதும் பெற்றதும் பத்திகளிலா, எங்கே என்று தெரியவில்லை. ஒருவேளை இது பாலுமகேந்திராவுக்குத் தெரியாதா அல்லது அதெல்லாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுத்தானே ஒழிய, அதை மட்டும் வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் அங்கீகரித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாது என நினைக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டாம் வகையாக பாலுமகேந்திரா எடுத்துக்கொண்டாலும் அதில் நியாயம் இருக்கவே செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் பாலுமகேந்திரா சிறப்பாகப் பேசினார். உரையாடல் தொடங்கியது. பின்னர் அவரது தப்புக் கணக்கு திரையிடப்பட்டது. மீண்டும் பாலுமகேந்திரா பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விமலாதித்த மாமல்லன் சார்பாகச் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பாலுமகேந்திரா அவரது பதிலைச் சொன்னார். கேள்வியின் சாரம், விமலாதித்த மாமல்லனின் கதையை பாலுமகேந்திரா மோசமாகப் படம் எடுத்தார் என்பதுதான் என நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா ஏற்கெனவே தான் சொன்ன பதில்களிலிருந்தே மேற்கோள் காட்டிப் பதிலளித்தார். ஓர் எழுத்தாளரின் கதை என்பது, அதன் படைப்பாற்றலைத் துறந்துவிட்டால், தினத்தந்தியில் வரும் ஒரு சிறிய செய்தித் துணுக்கைப் போன்றதுதான் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தப்புக் கணக்கு திரையாக்கலில் உள்ள சில குறைகளைப் பற்றி விமலாதித்த மாமல்லன் கேள்வி கேட்ட நேரத்தில் லேசான வெப்பம் பரவியது. மாமல்லன் சொன்ன காட்சிக் குற்றங்கள் எனக்கு ஏற்க இயலாதவை. ஆனால், தப்புக் கணக்கு திரைக்கதையில் ஒரு குழந்தையை அசாதாரணக் குழந்தையாகக் காட்ட அக்குழந்தை கேட்பதாகக் காட்டப்படும் கேள்விகளின் தொடர்வரிசை குறித்த மாமல்லின் குற்றச்சாட்டான செயற்கைத்தன்மையில் உண்மை உள்ளது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால், பள்ளி வெட்டவெளியில் செயல்பட்டால் இப்படி கேள்வி கேட்பார்களா, ஒரு குழந்தை வவுத்துலிங்கம் என்று தினமும் பார்க்கும் தன் தாத்தாவையே சொல்லுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. இதை ஒருவேளை மாமல்லன் படித்தால் அவருடைய தரப்பைச் சொல்லக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் ஒரு நல்ல மாலை.இதனை சாத்தியப்படுத்திய தோழர்கள் மருதன், பாலு சத்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும். நேற்று பாலுமகேந்திரா ஒருவித தத்துவ மூடில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய தத்துவ நெறி இது. இது இங்கே தேவையில்லைதான். ஆனால் பாலுமகேந்திராவின் அவரது படைப்பு போல, இது எனது படைப்பு. என்னவேண்டுமானாலும் எழுதலாமே! எனவே... தோழர்கள் என்பதே தோளர்கள் என்பதன் மரூஉ. பிற்காலத்தில் மரபு, பாரம்பரியம் இத்யாதி என்கிற தத்துவங்கள் தங்கள் மீது ஏறிக்கொள்ள வசதியாக முற்போக்குக் காலத்தில் தோள் வளர்ப்பவர்களே தோளர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்னும் கண்டடைதல்தான் அது. மீண்டும் தோளர்களுக்கு நன்றி.&lt;br&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-8573108064790624696?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/8573108064790624696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=8573108064790624696' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8573108064790624696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8573108064790624696'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/03/blog-post_6152.html' title='பாலுமகேந்திரா - நிசப்தத்தில் மிதந்துவந்த குரல்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-koLffGkDvSU/TYSTH9d8lQI/AAAAAAAAGK4/0rDief3WRWM/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-4272274810556221843</id><published>2011-03-19T11:33:00.000+05:30</published><updated>2011-03-19T11:33:18.261+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>போயஸ்கார்டனில் முடியும் சாலைகள் - கடுங்கூர்நோக்கு</title><content type='html'>ஜெயலலிதாவின் நம்பிக்கைத் துரோகத்தைத் தொடர்ந்து கடும் கோபத்தோடு விஜய்காந்த், இடதுசாரிகள், ஓடினார்கள். அதைப் பார்த்து மகிழ்ச்சியில் உறைந்திருந்த திமுக கூட்டணி வகையறாக்கள், அவர்கள் ஓடிய இடம் போயஸ்கார்டன் என்பது தெரிந்ததும்...&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வாசிக்க...&lt;a href="http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_3418.html"&gt;http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_3418.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-4272274810556221843?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/4272274810556221843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=4272274810556221843' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/4272274810556221843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/4272274810556221843'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/03/blog-post_19.html' title='போயஸ்கார்டனில் முடியும் சாலைகள் - கடுங்கூர்நோக்கு'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-6728686208114892670</id><published>2011-03-18T07:24:00.001+05:30</published><updated>2011-03-18T07:25:37.538+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைக்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>நாதஸ்வரம் - மெகா தொடர்</title><content type='html'>தேர்தலில் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இந்த மெகா தொடர் பற்றி எழுதுவது ஒருவித சந்தோஷத்தைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-U75WmoIYN3s/TYK7MzyWW9I/AAAAAAAAGKg/VVTbIRAdRL0/s1600/nadaswaram.png" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="275" width="400" src="http://2.bp.blogspot.com/-U75WmoIYN3s/TYK7MzyWW9I/AAAAAAAAGKg/VVTbIRAdRL0/s400/nadaswaram.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவியில் வரும் ஒரு உருப்படியான நாடகங்களுள் ஒன்று நாதஸ்வரம். இந்த ஒரு வரி போதும் இந்தப் பதிவில் இதனைப் பாராட்ட. இந்தப் பதிவில் எழுதப் போவது நாதஸ்வரம் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஒரு நாள் அறிவிப்பார்கள், விளம்பர இடைவெளியில்லாமல் நாதஸ்வரம் என்று. வீட்டின் அத்தனை பெண்களும் டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது? இந்த எழவை விளம்பரத்தோடேயே போட்டுவிட்டுப் போய்விடலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் செய்து எரிச்சல் ஏற்படுத்திக்கொண்டிருந்த நாதஸ்வரம் நேற்று திடீரென்று உக்கிரம் கொண்டுவிட்டது. வசனமே இல்லாமல் இசையில் மட்டுமே நாடகம் என்றார்கள். அப்போதே எனக்குக் கொஞ்சம் ஜெர்க் அடித்தது. நாதஸ்வரத்தில் மிக முக்கியமான பங்களிப்பே பாஸ்கர் சக்தியுடனதுதான். அது இல்லாமல் ஒரு நாள் நாடகமா என நினைத்தேன். நேற்று வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் உடலின் எல்லாப் பாகங்களையும் நடிக்க வைத்தே தீரவேண்டும் என்ற பதைபதைப்பில் நடித்துக்கொண்டிக்கும் பூவிலங்கு மோகன் இன்னும் அதிகமாக நடித்தார். அதிலும் மௌலி இசையின் பின்னணியில் கடவுள் முன் கோபம் கொள்ளும் காட்சி அசல் கொடுமை. ஒட்டுமொத்த குடும்பமும் மாறி மாறி ஒப்பாரி வைக்க, அவர்களை மிஞ்சி இசை ஒப்பாரி வைத்தது.   இப்படியே போய்க்கொண்டிருந்தால், முழுக்க முழுக்க அழுது தீர்க்கும் நாடக வரிசையில் இந்த நாடகமும் போய்ச் சேர்ந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை மட்டுமே என்று சொல்லிவிட்டதால் பின்னணி இசையமைப்பாளர் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டார். நாதஸ்வரம் என்ற பெயர் வேறு நாடகத்துக்கு. கேட்கவேண்டுமா, ஊதித் தள்ளிவிட்டார். வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. வீணை தப்பித்தது என நினைக்கிறேன். ஏன் நாடகங்களில் வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. இவர்கள் பேசாவிட்டால் அதைவிடக் கொடுமையாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;திருமுருகனும் மலர் என்ற வேடத்தில் வரும் பெண்ணுக்கும் காதல் காட்சியில் ஒரு பாடல் ஒன்று வந்தது. அவ்வளவு மொக்கையான பாடல், மொக்கையான காட்சி அமைப்புகள். சேரனுக்குப் போட்டியாக முகத்தை வைத்துக்கொண்டு படுத்தி எடுக்கும் திருமுருகனுக்குக் காதல் காட்சி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலின் டியூனை இசையமைப்பாளர் திடீரென்று பின்னணிக் காட்சிகளில் கோத்து விடும்போது பகீர் என்றிருக்கிறது. நேற்று முழுவதும் அந்தப் பாடலின் இசையைப் போட்டு போட்டு நடுங்க வைத்துவிட்டார். தேவையா இந்தக் கொடுமை எல்லாம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மெகா தொடருக்கு ஏன் இத்தனை மெனக்கெட்டு எழுதவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இது ஓர் உருப்படியான நாடகம். கொஞ்சமாவது யதார்த்தம் இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் நாடகம். (இதன் அர்த்தம் இந்த நாடகம் முழுக்க முழுக்க யதார்த்தமானது என்பதல்ல!) நடிகர்கள் தேர்வு உட்பட பலவற்றில் புதுமை. இதையெல்லாம் இந்த நாதஸ்வரம் டீம் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் எழுதி வைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இனியும் இந்தக் கொடுமை தொடர்ந்தால் டாட்டா பைபை சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.&lt;br&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-6728686208114892670?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/6728686208114892670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=6728686208114892670' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/6728686208114892670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/6728686208114892670'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/03/blog-post_18.html' title='நாதஸ்வரம் - மெகா தொடர்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-U75WmoIYN3s/TYK7MzyWW9I/AAAAAAAAGKg/VVTbIRAdRL0/s72-c/nadaswaram.png' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-3944892673180004079</id><published>2011-03-17T15:09:00.001+05:30</published><updated>2011-03-17T15:10:01.990+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஜெயலலிதா - திமிரென்னும் பீடத்தில்</title><content type='html'>&lt;blockquote&gt;ஆனால், கருணாநிதியோ வேறு எந்த அரசியல்வாதியோ இந்த ஒரு நிலையில் இருந்தால் இப்படி செய்வார்களா என்று யோசித்துப் பாருங்கள். இப்படி யோசிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் ஜெயலலிதா 160 இடங்களுக்கான அறிவிப்பையும் வெளியிட்டு, தனது முதல் கூட்டத்துக்கான நாளையும் இடத்தையும் வெளியிடுகிறார். &lt;/blockquote&gt;&lt;br /&gt;தொடர்ந்து வாசிக்க: &lt;a href="http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_7815.html"&gt;http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_7815.html&lt;/a&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-3944892673180004079?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/3944892673180004079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=3944892673180004079' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/3944892673180004079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/3944892673180004079'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/03/blog-post_17.html' title='ஜெயலலிதா - திமிரென்னும் பீடத்தில்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-7111564335776284933</id><published>2011-03-17T09:58:00.000+05:30</published><updated>2011-03-17T09:58:07.508+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஓட்டம் - கவிதை</title><content type='html'>மனத்தின் கீழே&lt;br /&gt;மெல்லிய கசப்புப் போர்வைகளை அடுக்கி&lt;br /&gt;மேலே படுக்க வைத்திருந்தான்&lt;br /&gt;இன்சொல் என்னும் கடவுளை&lt;br /&gt;&lt;br /&gt;அவளது கவனம்&lt;br /&gt;எப்போதும் அந்தப் போர்வையில்தான்&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை விரட்டிவிட்டு&lt;br /&gt;போர்வைகளுக்குள் திக்கின்றி அலையும்&lt;br /&gt;பூனைக்குட்டிகளை&lt;br /&gt;காதைப் பிடித்துத் தூக்கி வருவதில்&lt;br /&gt;அவள் மிடுக்கி&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளிலும் கசப்பிலும்&lt;br /&gt;தன்னைக் காணும்தோறும்&lt;br /&gt;நிர்வாணம் கூசி ஓடுவான் அவன்&lt;br /&gt;வேட்டை நாயின் மூச்சிரைப்போடு&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்க்க அஞ்சி&lt;br /&gt;நிற்காது ஓடுகிறான்&lt;br /&gt;யுகம் யுகமாக&lt;br /&gt;கையில் ஒரு கல்லுடனும்&lt;br /&gt;ஒரு முயலின் கலவரத்தோடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-7111564335776284933?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/7111564335776284933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=7111564335776284933' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/7111564335776284933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/7111564335776284933'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/03/blog-post.html' title='ஓட்டம் - கவிதை'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-2535511787290390635</id><published>2011-02-12T07:22:00.000+05:30</published><updated>2011-02-12T07:22:59.480+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>பயணம் - மீட்பரின் புதிய சீடர் வருகை</title><content type='html'>&lt;a href="http://www.tamilpaper.net/?p=2565"&gt;தமிழ் பேப்பரில் பயணம் திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான படம் என்றாலே அது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று நினைக்க வைப்பதில் முற்போக்காளர்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இப்படம் அதற்கு இன்னுமொரு உதாரணமாக அமையும்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-2535511787290390635?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/2535511787290390635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=2535511787290390635' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2535511787290390635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2535511787290390635'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/02/blog-post_8192.html' title='பயணம் - மீட்பரின் புதிய சீடர் வருகை'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-4219798673725536734</id><published>2011-02-12T07:19:00.002+05:30</published><updated>2011-02-12T07:19:45.502+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>ஆடுகளம் - கதையின்மை என்னும் பொய்</title><content type='html'>நன்றி: &lt;a href="http://www.tamilpaper.net/?p=2389"&gt;தமிழ் பேப்பர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிமாறனின் ஆடுகளம். அப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. கதையில்லை என்னும் புலம்பல்களுக்கு மத்தியில், எல்லாக் கதைகளுமே எடுக்கப்பட்டுவிட்டன என்னும் தப்பித்தல்களுக்கு மத்தியில் ‘ஆடுகளம்’ மிகச்சிறப்பான கதையைக் கொண்டிருக்கிறது. இப்படத்துக்குச் சரியான பெயர் ‘சண்டைக்கோழி’ என்பதாகவோ ‘ஆடுகளம்’ என்பதாகவோதான் இருக்கமுடியும். அந்த வகையில் ஆடுகளம் என்ற பெயரை இதுவரை யாரும் வைக்காததற்கு வெற்றிமாறன் ஒட்டுமொத்த திரைப்பட இயக்குநர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். :-)&lt;br /&gt;&lt;br /&gt;முதலிலேயே ‘சேவற்சண்டை’ மனிதர்களைக் கொல்லும் வரை செல்லும் என்று சொல்லி, படம் பார்ப்பவர்களைத் தயார் செய்துவிடுகிறார். மேலும் படம் முழுக்க அதுவே கதை என்பதையும் தெளிவாக உணர்த்திவிடுவதால், தேவையற்ற எதிர்பார்ப்புகள் குறைந்து, நேரடியான கதைக்களம் ஒன்றுக்குத் தயாராகிவிடுகிறோம். இடைவேளை வரை படத்தின் வேகம் சண்டைச்சேவல் வேகம்தான். ஒன்றிணைந்து கிடக்கும் துருவங்கள், மெல்ல மெல்ல எதிரெதிராக விலகிப் போவதையும், அதனுள்ளே மனிதனின் ஆதிகுணமான பொறாமையும் வன்மமும் குடிபுகுவதையும், பார்ப்பவர்கள் நம்பிக்கை கொள்ளும்வண்ணம் காட்டியிருப்பது முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளை வரை நேரடியாகப் பங்குபெறும் சேவற்சண்டை, இடைவேளைக்குப் பிறகு, திரைக்கதையின் பின்புலமாகிப் போகிறது. ஓர் உன்னதத் திரைப்படத்துக்கு, சுவாரஸ்யத்தைவிட அனுபவம்தான் முக்கியம் என்றாலும், இடைவேளைக்குப் பிறகு வராத சேவற்சண்டையை நினைத்து ஏங்க வைத்துவிடுகிறார் வெற்றிமாறன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதனால் படம் இடைவேளை வரை படுவேகமாகவும், இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் மெல்லச் செல்வதாகவும் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதிருக்கும் நடிகர்களில் மட்டுமல்லாது, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களுள் தனுஷும் ஒருவர் என்பதை இப்படம் நிரூபிக்கிறது. எந்த ஒரு இடத்திலும் இம்மி பிசகாத மதுரை சண்டியர் தோரணை. திறமைத் திமிர். சோகம் வரும்போது அடையும் முகக்கலக்கம். தனுஷ் கலக்குகிறார். பேட்டைக்காரராக வரும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் – வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு முதிர்ச்சி, நடிப்பில் யதார்த்தம். அவரே பின்னணிக் குரலும் என்றால், அதற்கும் ஒரு பாராட்டு. தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. சிறந்த புதுமுக நடிகர் என்று சொல்லி, வ.ஐ.ச.ஜெயபாலனைக் குறைக்காமல், சிறந்த குணச்சித்திர நடிகராக அவரும் தேர்ந்தெடுக்கப்படுவாரானால் மகிழ்ச்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோயினுக்கு அதிக வேலை இல்லை. அழகாக வந்து போகிறார். ஒளிப்பதிவு அட்டகாசம். இசையில் பாட்டுகள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன. இதுபோன்ற வித்தியாசமான படங்களுக்கு இசையமைக்க இளையராஜா உச்சத்தில் இல்லையே என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. ஜி வி பிரகாஷ் திணறுகிறார். இளையராஜா உச்சத்தில் இருந்தபோது இசையமைத்த படங்களில் பெரும்பாலானவை குப்பை. ஆதாரக் கதையோ திரைக்கதையோ இல்லாதவை.  பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் ஒட்டாத உயரத்தில் நிற்கும். இன்று பல புதிய இயக்குநர்கள் பல புதிய கனவுகளோடு வருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள், இளையராஜாவின் பின்னணி இசையில் பெறவேண்டிய அடுத்தகட்ட நகர்வைப் பெறாமலேயே போயிவிடுகின்றன. இது மிகப்பெரிய துரதிஷ்டம். எப்படியோ பாலா மட்டும் தப்பித்துக்கொண்டு விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் ஒரே ஒரு சின்ன குறையாகச் சொல்லவேண்டியது – இதைக் குறை என்ற வார்த்தையால் குறுக்கமுடியாது என்றாலும் – இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள், முக்கியமாக நம்பிக்கைத் துரோகம் என்பது குருதிப்புனலை நினைவுபடுத்துகிறது. இது குருதிப்புனலின் அளவுக்கதிகமான தாக்கத்தால் இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பேட்டைக்காரரைப் பார்க்க தனுஷ் வரும் இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்தின் முடிவு என்பதில் கட்டிப் போடப்பட்டிருக்கும் பொதுப்புத்தி இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதில் நிச்சயம் சிக்கல் இருக்கும். அதுவே இப்படத்தின் கமர்ஷியல் பலவீனமாகவும் அமையலாம். ஆனால், நல்ல படங்களைச் சிந்திக்கும்போதே, கமர்ஷியலாகவும் வெற்றி பெற நினைக்கும் புதிய இயக்குநர்களின் வரவும், அவர்களின் ஆக்கங்களின் தரமும் தமிழ்த்திரைப்படங்கள் மீது பெரும் நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. அந்தவகையில் வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குநராக உருவெடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த்திரைப்படங்கள் தமிழ் வாழ்வைப் பேசாமல், எதையோ ஒன்றை, உலகத்தரம் என்னும் முலாமில் முக்கிப் பேசிவிட்டுத் தப்பிவிடுகின்றன. அக்குறையை நீக்க வந்திருக்கும் இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-4219798673725536734?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/4219798673725536734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=4219798673725536734' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/4219798673725536734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/4219798673725536734'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/02/blog-post_8590.html' title='ஆடுகளம் - கதையின்மை என்னும் பொய்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-2498650433856171496</id><published>2011-02-12T07:17:00.000+05:30</published><updated>2011-02-12T07:17:55.556+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>காவலன் - கொலையரங்கம்</title><content type='html'>நன்றி: &lt;a href="http://www.tamilpaper.net/?p=2352"&gt;தமிழ் பேப்பர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சன் பிக்சர்ஸ் தயாரிக்காத, வினியோகிக்காத திரைப்படம் என்பதால், காவலன் திரைப்படத்தைத் திரையிட தியேட்டர்களே கிடைக்கவில்லை. பெரிய பாடுபட்டுத்தான் இப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் அதிமுக பினாமிகள்தான் படத்தை ரிலீஸ் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வேறு வழியில்லாமல் இப்போது விஜய் அதிமுக ஆதரவாளராகவே தன்னைக் காண்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே அரசியலில் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த விஜய், இனிமேல் அந்த ஆட்டத்தைக் குறைத்துக்கொண்டு அதிமுகவின் நன்றி விசுவாசியாகக் கொஞ்சம் காலத்தையாவது ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம். இப்படிப்பட்ட முன்னாள் விசுவாசிகளெல்லாம் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று அவர் யோசித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படத்தின்போது தான் அனுபவித்த தேன்நிலவுக் காலத்தின் இன்னொரு முகம் இப்போது விஜய்க்குப் புரிந்திருக்கும். இது மெல்ல ரஜினிக்கும், கமலுக்கும் நேர்வதைத் தவிர்க்கமுடியாது. அன்றுதான் சன் பிக்சர்ஸின் மாயவலையைப் புரிந்துகொள்வார்கள் அவர்கள். இது எத்தனை சீக்கிரம் நடக்கிறதோ அத்தனை சீக்கிரம் நடப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சன் பிக்சர்ஸ் இந்தத் திரைப்படத்தை வெளியிட தியேட்டர்கள் தராததற்கு நன்றிதான் சொல்லவேண்டும் எனத் தோன்றிவிட்டது. (கலையரங்கம் தியேட்டர் ஒரு தனிக்கொடுமை!) சன் டிவியில் வரும் மெகா சீரியல்கள் இதைவிடக் கொஞ்சம் தரமானதாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாள கமர்ஷியல் இயக்குநர்கள் மலையாளத் திரைப்படங்களை சீரியல்கள் போலவே வைத்திருக்கப் படும்பாடு நாம் அறிந்ததே. அவர்களே தமிழில் படமெடுக்கும்போது, அதே பாணியில் எடுத்து நம்மைப் படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள பெரிய மனோபலம் வேண்டும். முதலில் ஒரு ப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்து, பின்னர் படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்னர் அதனை முடித்து, திடீரென ஒரு டிவிஸ்ட் கிளைமாக்ஸ் கொடுத்து, நம்மைப் படுத்தி எடுக்கும் அதே ஃபார்முலா கதை. குறைந்த பட்ஜெட், நிறைய செண்டிமெண்ட், யூகிக்கக்கூடிய காட்சிகள், வளவள வசனம், மினிமம் கேரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளாக பெரிய ஹிட் இல்லாத விஜய், விக்ரமனும் இப்போதெல்லாம் படம் எடுப்பதில்லை என்னும் தைரியத்தில், மினிமம் கேரண்டியான செண்ட்டிமெண்ட் + காமெடியில் இறங்கிவிட்டார். சோகம் என்னவென்றால், லோ கிளாஸ் செண்டிமெண்ட், லோ கிளாஸ் காமெடி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லோ கிளாஸ் காமெடி பழகிப்போய், சில இடங்களில் வடிவேலு நம்மைச் சிரிக்க வைத்துவிடுவதும் உண்மைதான். பின்னர் ஏன் சிரித்தோம் என்று வழக்கம்போல யோசிக்கதத் தொடங்கிவிடுகிறோம். ஆனால், சாமானிய மனிதர்களும், பெண்களும் விடாமல் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் என் மனைவி கண் கலங்கி தியேட்டரை விட்டு வெளியேறியதைக் குறிப்பிடவேண்டியது என் கொடுப்பினையா தலையெழுத்தா என்பது தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அசின், ஐஸ்வர்யா ராய்க்குப் போட்டியாகப் பாட்டியாகிவிட்டார். பாடல்களில் ‘யாரது’ பாடல் மட்டும் காதில் ரீங்கரிக்கிறது. இரண்டு விஜய் வரும் பாடல் பார்க்க சுவாரஸ்யம். மற்றபடி பெரிய நடிகர் பட்டாளத்தின் இம்சை இலவச இணைப்பு. லாஜிக்கே கிடையாது என்பது பம்பர் பிரைஸ். நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் எண்ட்ரி கொடுத்து, இது மலையாள இயக்குநர் ஒருவரின் படம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திவிட்டுப் போகிறார்கள். இப்போதெல்லாம் படம் எடுக்காத பாஸில்தான் எவ்வளவு நல்லவர் என்று நம்மை நினைக்க வைத்துவிடுகிறார் சித்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஒருவர் பாடிகார்டாக இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏன் அவர் யூனிஃபார்ம் போட்டுத் தொலைக்கவேண்டும், ஏன் அவரை கல்யாணம் செய்துகொள்ளும் இரண்டாம் கதாநாயகியின் அப்பா மௌனமாக இருக்கவேண்டும், ஏன் போலிஸுக்குப் பதில் சாதாரண ஒருவர் பாடிகார்டாக போகவேண்டும் என இப்படிப் பல ஏன்கள்? அதில் இன்னொன்று, ஏன் ரோஜா என்பதும் அடங்கும். இத்தனை கொடுமைகளையும் ஒரே ஆளாகச் சுமக்கிறார் விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாமலே, காதல்கோட்டை, ‘ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ (காலமெல்லாம் காதல் வாழ்க) போல இன்னொரு ஃபோன் காதல். நினைத்தேன் வந்தாய், லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் போல விஜய். சுறா, எறா என்றெல்லாம் பார்த்துவிட்டு, இப்படி விஜய்யைப் பார்க்கவே கொஞ்சம் ஆச்சரியமாக (நிறைய பரிதாபமாகவும்!) இருந்தது உண்மைதான். அத்தனையையும் மெல்ல மெல்ல மறக்கடித்துவிடுகிறார். அதிலும் தனது காதலியைப் பார்க்கப் போகிறோம் என்ற காட்சிகளில் அவரது பரிதவிப்பு அருமை. பல கொடுமைகளுக்கு இடையில் கொஞ்சமாவது நம்மை சந்தோஷமாக வைத்திருந்தது விஜய்யும் வடிவேலுவும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை பெரிய செண்டிமெண்ட் மொக்கை என்று இந்தப் படத்தைக் குறிப்பிடும் வேளையில், இன்னொன்றையும் சொல்லவேண்டும். விஜய்க்கு தொடர் ஃப்ளாப்பாக இருந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், பெண்கள் கூட்டத்தால் இந்தப் படம் ஒரு வெற்றிப்படமாக அமையும். சன் பிக்சர்ஸ் தவிர வேறு யார் படம் தயாரித்தாலும் அப்படத்தைச் சுதந்தரமாகத் திரையிடக்கூட முடியாது என்ற நிலையில் இந்தப் படம் வெற்றி பெறவேண்டியது முக்கியத் தேவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-2498650433856171496?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/2498650433856171496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=2498650433856171496' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2498650433856171496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2498650433856171496'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/02/blog-post_12.html' title='காவலன் - கொலையரங்கம்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-67283910655286935</id><published>2011-02-12T07:15:00.001+05:30</published><updated>2011-02-12T07:15:49.962+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகக் கண்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை புத்தகக் கண்காட்சி 2011'/><title type='text'>சென்னை புத்தகக் கண்காட்சி 2011</title><content type='html'>சேமிப்புக்காகவும் வசதிக்காகவும் இங்கே பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: இட்லிவடை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_05.html"&gt;நாள் 01&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_06.html"&gt;நாள் 02&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_07.html"&gt;நாள் 03&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_08.html"&gt;நாள் 04&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_09.html"&gt;நாள் 05&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_10.html"&gt;நாள் 06&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_11.html"&gt;நாள் 07&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_12.html"&gt;நாள் 08&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_3988.html"&gt;நாள் 09&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_14.html"&gt;நாள் 10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_15.html"&gt;நாள் 11&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_16.html"&gt;நாள் 12&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2011/01/13.html"&gt;நாள் 13&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-67283910655286935?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/67283910655286935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=67283910655286935' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/67283910655286935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/67283910655286935'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/02/2011.html' title='சென்னை புத்தகக் கண்காட்சி 2011'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-2515530826940266668</id><published>2011-02-12T06:57:00.000+05:30</published><updated>2011-02-12T06:57:01.387+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நான்கு கவிதைகள்</title><content type='html'>நன்றி: &lt;a href="http://solvanam.com/?p=11643"&gt;சொல்வனம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காத்திருப்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலையில் சிக்கி நெளியும்&lt;br /&gt;மனதை விடுவிக்க நேரம் பார்த்து&lt;br /&gt;காத்திருந்தாள் வேலையில்லாத பெண்ணொருத்தி&lt;br /&gt;சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்&lt;br /&gt;நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்&lt;br /&gt;சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்&lt;br /&gt;கடந்துவிடுகிறது ஓர் யுகம்&lt;br /&gt;காற்றடிக்கத் தொடங்குகிறது&lt;br /&gt;இருவரும் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அன்றொருவன் வந்திருந்தான்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனைக் கடவுள் என்றேன்&lt;br /&gt;அன்று தெருவழியே ஒரு பிணம் சென்றது&lt;br /&gt;சில மனிதர்கள் சென்றிருந்தார்கள்&lt;br /&gt;நசுக்கப்பட்டுக் கிடந்தன சில மலர்கள்&lt;br /&gt;மீன் கொண்டு வந்தவனை&lt;br /&gt;கத்திக்கொண்டிருந்தது பூனை&lt;br /&gt;மழையை எதிர்த்தன குடைகள்&lt;br /&gt;அன்றுதான் அவன் வந்திருந்தான்&lt;br /&gt;இத்தனையையும் அவன் கவனிக்கவில்லை&lt;br /&gt;எல்லோருக்கும் ஒரே புன்னகை&lt;br /&gt;மழையின் நீர்&lt;br /&gt;எதிர்ப்பற்ற ஒரு மனிதன்&lt;br /&gt;கிடைத்துவிட்ட வெறியில்&lt;br /&gt;கலந்து தீர்த்தது மிக வேகமாய்&lt;br /&gt;யாருமில்லாத தோரணையில்&lt;br /&gt;அவனருகே கிடந்து&lt;br /&gt;மீனைத் தின்றது பூனை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சட்டகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதின்ம வயதிலிருந்து&lt;br /&gt;சட்டகம் செய்துகொண்டிருக்கிறேன்&lt;br /&gt;அளவு கச்சிதம் தப்பியதே இல்லை&lt;br /&gt;அதன் உள்முனைகளில்&lt;br /&gt;சிக்கிக் கொண்டுவிடும் மனிதர்கள்&lt;br /&gt;பின் மீறி வெளியே சென்றதே இல்லை&lt;br /&gt;அதை எப்படிச் சிறிதாக்கினாலும்&lt;br /&gt;விரும்பி வந்து புன்னகையுடன்&lt;br /&gt;தன்னை அடைத்துக்கொண்டார்கள் அவர்கள்&lt;br /&gt;சுற்றித் திரியும் மனிதர்கள்&lt;br /&gt;கழுத்தெல்லாம் என் தயாரிப்புப் பொருள்&lt;br /&gt;அலுத்துப் போகிறது எனக்கு.&lt;br /&gt;இதோ இப்போது சொல்கிறேன்,&lt;br /&gt;நான் இனி சட்டகம் செய்யப்போவதில்லை&lt;br /&gt;உங்களுக்கான ஒன்றை&lt;br /&gt;நீங்களே கொண்டு வந்துவிடுங்கள் ப்ளீஸ்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;தேடல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாமல் ஒரு பாம்புக்குட்டியை&lt;br /&gt;விழுங்கிவிட்டால் எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ சொன்னதாகத்தான் நினைவு&lt;br /&gt;யார் சொன்னதென நினைவில்லை&lt;br /&gt;எப்போது என்பதும் நினைவில்லை&lt;br /&gt;ஆனால் சொல்லின் காலத்தெளிவும்&lt;br /&gt;சொல்லியின் தொனியும்&lt;br /&gt;இன்னும் பசுமையாக&lt;br /&gt;நானேதான் நினைத்தேனா&lt;br /&gt;என் மனசுக்குள் இருந்துகொண்டு&lt;br /&gt;நானேதான் பேசிக்கொண்டேனா&lt;br /&gt;தெரியாமல் விழுங்கமுடியுமா&lt;br /&gt;குழப்பமே எஞ்சுகிறது&lt;br /&gt;தெளிவாக வரிசையாக&lt;br /&gt;யோசிக்கலாம் என்றால் எங்கிருந்து?&lt;br /&gt;நிச்சயம் கனவில்லை&lt;br /&gt;யார் சொல்லியிருந்தாலும்&lt;br /&gt;இப்போது யாரிடமிருந்தாலும்&lt;br /&gt;அச்சொல் என்சொல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-2515530826940266668?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/2515530826940266668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=2515530826940266668' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2515530826940266668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/2515530826940266668'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/02/blog-post.html' title='நான்கு கவிதைகள்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-9158203223282426465</id><published>2011-01-02T07:32:00.000+05:30</published><updated>2011-01-02T07:32:35.657+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை புத்தகக் கண்காட்சி 2011'/><title type='text'>சென்னை புத்தகக் கண்காட்சி 2011</title><content type='html'>சென்னை புத்தகக் கண்காட்சியின் பரபரப்பு தொற்றிக்கொண்டு இன்றோடு கிட்டத்தட்ட 20 நாளிருக்கும். திருநெல்வேலியின் தேரோட்டம் போன்றது சென்னை புத்தகக் கண்காட்சி. இதைவிட என்னால் எளிமையாக விளக்கிவிடமுடியும் என்று தோன்றவில்லை. அந்த நிகழ்ச்சியைவிட அது தரும் பரபரப்புதான் போதை. அவ்வித போதையின் அடிமை நான். 20 நாள்களாக எதிலும் ஒரு கவனமின்மை, எல்லாவற்றிலும் ஒரு சிரிப்பு, எல்லாவற்றிலும் ஒரு சிறிய பதட்டம், ஆனால் உள்ளுக்குள்ளே இன்னொரு மனம் அதையே பார்த்து அமைதி என்று சிரிக்கும் இரட்டைநிலை - இதுதான் சென்னை புத்தகக் கண்காட்சி. ஏன் இப்படி? நீங்கள் ஒரு பதிப்பகத்தின், அதுவும் புத்தகக் கண்காட்சியின் பேசுபொருளாக இருக்கப்போகும் ஒரு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சியை நடத்திப் பார்த்தால்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வேலையும் நாம் திட்டமிட்டபடி கட்டுக்குள் இருந்தாலும், எங்கேயோ ஏதோ கட்டுக்குள் இல்லை என்று தோன்றிக்கொண்டிருப்பது மடத்தனமா உள்ளுணர்வா எனத் தெரியவில்லை. மடத்தனமோ, உள்ளுணர்வோ - இதுதான் இலக்கை நோக்கி விடாமல் விரட்டிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. எனவே அதற்கு ஒரு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களையும், அதாவது கிழக்கு, நலம், வரம், ப்ராடிஜி உள்ளிட்ட அனைத்து பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இதில் வசதி உள்ளது என்பதோடு எங்களது பொறுப்பும் கூடுகிறது. நிச்சயம் இந்தமுறை கிழக்கு வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்போவது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சுஜாதாவின் புத்தகங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறது. 60க்கும் மேற்பட்ட சுஜாதாவின் புத்தகங்கள். சுஜாதாவின் வாசகர்கள் கிழக்கு புத்தகங்களையும் பார்க்கப் போகிறார்கள். சுஜாதா தனது புத்தகங்களின் விற்பனையாளர் என்பதோடு, மற்ற புத்தகங்களின் விற்பனையையும் அதிகமாக்குபவர் என்று நான் நம்புகிறேன். இம்முறை அது நிரூபிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்த எழுத்தாளர்களும் ஒருவரான ஜெயமோகனின் இரண்டு புத்தகங்கள் - உலோகம், விசும்பு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். விசும்பு - எததனை முறை படித்தாலும் எனக்குச் சலிக்காத புத்தகம். 2011 மார்ச்சுக்குள், ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பு, ஜெயமோகன் குறுநாவல்கள் தொகுப்பு, ஆழ்நதியைத் தேடி, தமிழிலக்கிய அறிமுகம் போன்ற புத்தகங்கள் வெளிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோக, கிழக்கு வாசகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான பல்வேறு புத்தகங்கள் வெளியாகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இவைபோக, மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் முக்கியமான புத்தகங்களை உடனடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இந்த முறை, சென்னை புத்தகக் கண்காட்சியின் முதல் நாளிலிருந்து தினமும் பத்து வரி புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். அனானி ஆப்தர் இட்லிவடை வலைப்பதிவில் அது வெளிவரும். எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதாமல் போவது எனக்கு ஒன்றும் புதியதல்ல. எனவே ஒருவேளை நான் எழுதாமல் போனாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் இதனை தைரியமாகச் சொல்லிவிடமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பதிப்பகங்களும் வெளியிடப் போகும் பல்வேறு புத்தகங்கள் பற்றி எழுதி ஏன் அவற்றைப் பிரபலப்படுத்தக்கூடாது என்று கேட்டார் பாரா. அதற்கு முதலில் என் வலைப்பதிவை பிரபலப்படுத்தவேண்டும் என்றேன்! நான் கடைசியாகப் படித்த இரண்டு புத்தகங்கள் தேகம், சரசம் சல்லாபம் சாமியார் - இதைப் பற்றி நான் என்ன எழுதிவிடமுடியும்? :-)&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சென்னை புத்தகக் கண்காட்சி 2011&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 4 (செவ்வாய்) முதல் ஜனவரி 17 (திங்கள்) வரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இடம்:&lt;/b&gt;&lt;br /&gt;புனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி, பச்சையப்பா கல்லூரி எதிரில், பூந்தமல்லி ரோடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நேரம்:&lt;/b&gt;&lt;br /&gt;விடுமுறை நாள்களில்: காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை.&lt;br /&gt;வேலை நாள்களில்: மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எங்கள் ஸ்டால் எண்:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;கிழக்கு - F 13&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களை நிதானமாகப் படித்துப் பார்த்து வாங்க வேலைநாள்களில் வருவது நல்லது. விடுமுறை நாள்களில் கடும் கூட்டம் இருக்கும் என்பதால், உங்களால் புத்தகங்களை நிதானமாகப் பார்க்க முடியாமல் போகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-9158203223282426465?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/9158203223282426465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=9158203223282426465' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/9158203223282426465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/9158203223282426465'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2011/01/2011.html' title='சென்னை புத்தகக் கண்காட்சி 2011'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-93167885577110105</id><published>2010-11-17T04:50:00.006+05:30</published><updated>2010-11-19T08:14:12.134+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகப் பார்வை'/><title type='text'>ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்</title><content type='html'>எந்த ஒரு கோட்பாட்டுக்கும் ‘இதுதான் அந்தக் கோட்பாடு’ என்று தெளிவாகச் சொல்லும் புத்தகம் வேண்டும் என்றபடிதான் பேச்சுத் தொடங்கியது. உலகத்தில் இரண்டு வகையான ஹிந்துத்துவவாதிகள் உண்டு. உண்மையில் பசிக்கான ஹிந்துத்துவவாதிகள். இவர்கள் கோட்பாட்டுவாதிகள். இன்னொன்று பஞ்சத்துக்கு ஹிந்துத்துவவாதிகள். அதாவது கோட்பாட்டுவாந்திகள். நான் இரண்டாவது வகை. அதாவது ஹிந்துத்துவவாதி என்றாக்கப்பட்டவன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="https://www.nhm.in/img/978-81-8493-536-3_B.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துத்துவவாதி என்பதும், பிராமணர் என்பதும் ஒருவகைத் தண்டனை என்று அறியப்படுகிற நிலையில், ஆமாம் இப்போ அதுக்கென்ன என்றது மட்டுமே என்னை ஹிந்துத்துவவாதி ஆக்கியது என்று சுருங்கச் சொல்லலாம். மற்றபடி ஹிந்துத்துவ சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு இருந்தது/இருப்பது உண்மைதான். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று வேண்டுமானால் எங்களைச் சொல்லலாம். உண்மையான ஹிந்துத்துவவாதிகளிடம் திட்டு வாங்கவேண்டுமானால், நீங்கள் ஹிந்துத்துவ ஆதரவாளராக இருந்தால்தான் முடியும். அப்போதுதான் அதன் வலி புரியும்! இந்த ஆதரவாளர் அவ்வப்போது சில உண்மைகளை அல்லது உண்மை என்று நம்புவற்றைப் பேசிவிடுவார். அது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை உண்மை என்று நம்பிவிட்டார் பாவம். ஆனால் கோட்பாட்டுவாதிகளுக்கு இந்தப் பிரச்சினை வராது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இப்படித்தான் ‘ஹிந்துத்துவம் என்றால் என்ன’ என்ற ஒரு புத்தகம் வேண்டும் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்த ஹிந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டன் எழுதினால் சரியாக இருக்கும் என்று சொன்னேன். அவர் எழுதினால் யாருக்கும் புரியாது என்பது பெரிய ப்ளஸ் பாய்ண்ட். இனிமேல் ’இந்தக் கோட்பாட்டை இப்படி வரையறுக்கவேண்டும்’ என்னும் புத்தகச் சிந்தனைகளுக்கு ஒட்டுமொத்த முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்தானே! &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற கோட்பாடுகளை வரையறுப்பது போல ஹிந்துத்துவத்தை வரையறுக்க முடியாது என்று சொல்லிப் பார்த்தேன். அப்படியானால் ’இதெல்லாம் ஹிந்துத்துவம், இதெல்லாம் ஹிந்துத்துவம் இல்லை’ என்று சொல்லிப் புத்தகம் வரலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. விதி வலிது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸுக்கு ஆள்பிடிக்கும் கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில்தான் இருக்கிறது என்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்புத்தகம் என்ன செய்துவிடும் என்றும் என்னை தைரியப்படுத்திக்கொண்டேன். இந்தச் சூழ்நிலையில் பெரிய அதிர்ச்சியாக அரவிந்தன் நீலகண்டன் தெளிவாகப் புரியும்படி எழுதிவிட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிது காலம் தேவைப்பட்டது. பாராவின் எடிட்டிங் அதனை இன்னும் சிறப்பாக்கியது. ஒரு வழியாகப் புத்தகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துத்துவம் என்னும் கோட்பாட்டை இந்தப் புத்தகம் எப்படி வரையறுக்கிறது? உண்மையில் ஹிந்துத்துவத்தை சரியாக வரையறுப்பது கடினம் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஹிந்துத்துவத்தை அரசியல் சுதந்திரம் என்றுதான் நான் வரையறுக்க விரும்புவேன். சுதந்திரத்தை எப்படி வரையறுப்பது? ஹிந்துத்துவம் பன்மைக்கு முக்கியத்துவம் தருவது. பன்மையை எப்படி வரையறுப்பது? எனவே நிகழ்ச்சிகள் சார்ந்து வரையறுப்பது என்னும் வரையறையை ஏற்படுத்திக்கொண்டார் அரவிந்தன் நீலகண்டன். நல்ல தேர்வுதான். இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சி சார்ந்தும் மெல்ல மெல்ல ஹிந்துத்துவத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். பாரா இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னது, &lt;strike&gt;ப்ரில்லியண்ட்&lt;/strike&gt; க்ளெவர் புத்தகம்.(இந்தப் பதிலில் எனக்கு ஏற்பில்லை என்பது ஒருபுறம். ஆனால் மிகச்சிறந்த பதில் அது!) எனக்கு இந்தக் கோட்பாட்டின்பால் சாய்வு இருப்பதால், இதனை நல்ல புத்தகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. எதிர்த்தரப்புக்காரர்கள் காயத் துவைத்துப் போட்டால், நல்ல விவாதங்கள் வரலாம். வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனை நல்லவனா கெட்டவனா என்று எப்படிச் சொல்வது? அப்படி வேறு வழியில்லாமல் ஒரு பதில் சொல்லவேண்டுமென்றால், அவனுள் இருக்கும் பல நுண்மைகளை மறுத்துவிட்டுத்தான் சொல்லவேண்டியிருக்கும்.  எந்த ஒரு கோட்பாட்டையும், எந்த ஒரு மனிதனையும், எந்த ஒரு நிகழ்வையும் வரையறுக்கும்போது இந்த அபாயத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எனவே, ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் புத்தகம், பன்மைகளை அதனதன் தளத்தில் இருந்து வரையறுக்கத் தொடங்கியது. இதில் ஏற்பட்ட பிரச்சினை (வாசகர்களுக்கு) அல்லது பிளஸ் பாயிண்ட் (எழுத்தாளருக்கு) என்ன என்றால், இப்புத்தகத்தைப் படிக்கும் யாரும் ஏதோ ஒரு கட்டத்தில் தானும் ஹிந்துத்துவவாதிதானோ என்று எண்ணிக்கொண்டு விடலாம் என்பதுதான். இப்புத்தகத்தைப் படிக்கும் எதிர்த்தரப்புவாதிகள் கோட்பாட்டை விமர்சிக்காமல், நிகழ்வுகள் சார்ந்து கோட்பாட்டை விமர்சிப்பதும் எளிதாகிவிடும் என்பது இன்னொரு பலவீனம். ஆனால் ஹிந்துத்துவத்தை இப்படி அல்லாமல் வரையறுக்கமுடியாது என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்த்தரப்புவாதிகள் அரவிந்தனிடம் பல கேள்விகளை முன்வைக்கலாம். அவர் அதனையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை உண்டு. விரிவான முறை. ஹிந்துத்துவத்தின் ஒட்டுமொத்த வரலாற்றை, அதன் காலத்தை வைத்து முன்னிறுத்திப் பேசுவது. காலம் தோறும் எப்படி ஹிந்துத்துவம் மாறி வந்திருக்கிறது என்பதைப் பேசுவது. இதிலும் நிகழ்வுகள், செயல்பாடுகள் சார்ந்துதான் ஹிந்துத்துவத்தைப் பேசவேண்டியிருக்கும் என்றாலும், ஒரு விரிவான விவரிப்பு சாத்தியமாகும். அதனையும் அரவிந்தன் நீலகண்டன் செய்யவேண்டும். புரியும்படியாகத்தான். இதில் எழுத்தாளருக்கு உள்ள பிரச்சினை, அவர் ஏதோ ஓர் அமைப்பின் உறுப்பினராக இருந்தால், இந்தக் கோட்பாட்டை அந்த அமைப்பின் மீது வைத்துப் பரிசீலிப்பதில் ஏற்படும். ஆனால் அரவிந்தன் இதனை எளிதாக எதிர்கொள்பவர் என்பது எனக்குத் தெரிந்ததுதான். அரவிந்தன் போன்ற நிஜமான அறிவுஜீவிகள் இல்லாமல் இதைப் போன்ற ஒரு பணியைச் செய்வது நிச்சயம் கடினமே.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோன்று, கம்யூனிஸம் உள்ளிட்ட கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் புத்தகங்கள் வரவேண்டும் என்ற கருத்து வலுப்பட்டிருக்கிறது. கிழக்கு இதைப் போன்ற புத்தகங்களை நிச்சயம் கொண்டு வரும். ஏற்கெனவே கிழக்கு என்பது ஒரு தளம், அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று பத்ரி வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மொட்டை மாடியில் ஆர் எஸ் எஸுக்கு இடம் பிடிக்கும் கூட்டத்துக்குப் பக்கத்திலேயே கம்யூனிஸ்டுகளும் ஓர் இடம் பிடித்துக்கொள்ளலாம். தோழர்களே, வாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: மினிமேக்ஸ் | விலை: ரூ 25/- | &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-536-3.html"&gt;ஆன்லைனில் வாங்க&lt;/a&gt; |&lt;br&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-93167885577110105?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/93167885577110105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=93167885577110105' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/93167885577110105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/93167885577110105'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/11/blog-post_17.html' title='ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-3467863881796325157</id><published>2010-11-16T17:47:00.000+05:30</published><updated>2010-11-16T17:47:31.507+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கிவிஞர்களை விரட்டுவோம் - 1</title><content type='html'>தினம் ஒரு கவிதை என்று எழுதிவிடலாம் என்றுதான் நினைத்தேன். கொஞ்சம் ‘செட்’ ஆகவில்லை. கவிதை என்று எழுதுவார்களாம். அதுவே கிவிதை போலத்தான் உள்ளது. மீண்டும் அதனைக் கிவிதை என்று வேறு ஒரு மாதிரி எழுதுவார்களாம். அதுவும் கிவிதை போலவே இருக்குமாம். நாங்களெல்லாம் சுணுக்குடனேயே போரிட்டு வளர்ந்தவர்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கவிதைகளில் பல கவிதைகள் சொற்கூட்டாகவும், வார்த்தைகளின் வளைப்பாகவும் உள்ளன என்பது உண்மையே. பொருட்படுத்தத்தக்க விமர்சனமே. ஆனால் எந்த ஒரு படைப்பிலக்கியத்திலும் இந்தப் பிரச்சினை என்பது இருந்தே தீரும். கட்டுரைகளிலும், கதைகளிலும் நாம் இன்று காண்பது என்ன? விவாதங்கள் என்பதில் நாம் காண்பது என்ன? சிறுகதை என்பது இன்று எதில் வேண்டுமானாலும் எழுதலாம் என்று தொடங்கி, எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று தொடங்கி, அதில் எல்லாமே இருக்கிறது. ஆனால் நாம் கவிதையை மட்டும் பிடித்துக்கொண்டு கிவிதை என்கிறோம். ஏனென்றால், நாம் கவிதை மட்டுமே எழுதுவதில்லை என்பதால் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கிவிதை ஒன்றைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வக்கற்றவர்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் செய்துகொண்டு வாழ வக்கில்லை&lt;br /&gt;திருமணம் சமூகத் தேவையல்ல என்றிடவேண்டும்&lt;br /&gt;குழந்தையை கண்டித்து வளர்க்க வக்கில்லை&lt;br /&gt;குழந்தைச் சுதந்திரம் தேவை என்றிடவேண்டும்&lt;br /&gt;கணினி பயன்படுத்த வக்கில்லை&lt;br /&gt;பேப்பர் பேனா போல வருமா என்றிடவேண்டும்&lt;br /&gt;புத்தகம் படிக்க வக்கில்லை&lt;br /&gt;நேரமே இல்லை என்றிடவேண்டும்&lt;br /&gt;கருத்தை மறுக்க வக்கில்லை&lt;br /&gt;அதில் ஒன்றுமே இலலை மறுக்க என்றிடவேண்டும்&lt;br /&gt;மிக்ஸி கிரைண்டர் வாங்க வக்கில்லை&lt;br /&gt;அம்மி, ஆட்டுக்கல் உடற்பயிற்சி என்றிடவேண்டும்&lt;br /&gt;கடைசி இரண்டுவரிகள்&lt;br /&gt;சரிதான், அதேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் எனது 3 கவிதைகளை வாசிக்க &lt;a href="http://solvanam.com/?p=11451"&gt;சொல்வனம்&lt;/a&gt; செல்லுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முக்கியமான பின்குறிப்பு: உங்கள் கவிதையைவிட கிவிதை நன்றாக உள்ளது என்பது போன்ற கமெண்ட்டுகள் பிரசுரிக்கப்படமாட்டாது.&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-3467863881796325157?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/3467863881796325157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=3467863881796325157' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/3467863881796325157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/3467863881796325157'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/11/1.html' title='கிவிஞர்களை விரட்டுவோம் - 1'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-5294998218970705017</id><published>2010-11-15T05:00:00.003+05:30</published><updated>2010-11-15T07:26:19.961+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகப் பார்வை'/><title type='text'>ஒரே ஒரு துரோகம் (சிறிய குறிப்பு!)</title><content type='html'>TACல் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கே வேலை செய்பவர்களுக்கென ஒரு தனி நூலகம் வைத்திருந்தார்கள். அதில் சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்கள் அதிகம் இருக்கும். +2 முடிக்கும்வரை எங்கள் வீட்டுக் கெடுபிடியின் காரணமாக சுதந்திரமாக நிறையப் புத்தகங்கள் வாசிக்க முடிந்ததில்லை. வீட்டுக்குத் தெரியாமலும், கொஞ்சம் தெரிந்தும் வாசித்தவற்றில், பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களே அதிகம். கல்லூரியில் சேர்ந்ததும் எனக்கான தளைகள் அத்தனையும் அறுந்துவிட்டது போன்ற உணர்வு. வீட்டிலும் தண்ணீர் தெளித்துவிட்டார்கள். தொடர்ச்சியாகத் திரைப்படங்கள், தொடர்ச்சியாகப் புத்தகங்கள், இது போக கிரிக்கெட். இவைதான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த காலம் அது. டாக்-கில் வேலை கிடைத்ததும், அங்கே லைப்ரரி இருந்ததும் பெரிய வரம் போல ஆகிவிட்டது. ஒவ்வொரு எழுத்தாளராகக் குறித்துவைத்துப் படித்தேன். வரிசையாக சுஜாதா புத்தகங்கள். பல புத்தகங்கள் பிடித்திருந்தன. முக்கியமாக மனசில் நின்றது ஒரே ஒரு துரோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="https://www.nhm.in/img/978-81-8493-452-6_b.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை மீள்பதிப்பு செய்திருக்கிறது. ஐபோன் வந்தவுடன், அதில் பிடிஎஃப் பைலைப் படிக்கமுடிகிறதா என்று சோதித்தேன். நன்றாகவே வேலை செய்தது. முதலில் அதில் படிக்க எடுத்தது ஒரே ஒரு துரோகம். ஒருவகையில் ஐபோனில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்து அதைப் பற்றி எழுதும் முதல் பதிவு இது. :)) (தமிழக அளவில், இந்திய அளவில்? உலக அளவில் இல்லை என்பதை மட்டும் பெருந்தன்மையுடனும் நேர்மையுடனும் ஒப்புக்கொள்கிறேன். இதனை மறுத்து வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. :&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு படித்தபோது அடைந்த அதே அனுபவங்களை மீண்டும் அடைவது போன்ற ஒரு பிரமை. அந்த நினைவுகள் என் ஆழ்மனத்தில் உறைந்து கிடந்திருக்கின்றன என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில் மனத்தில் அப்படியே பதிந்துபோன பெண் சார்ந்த விஷயங்கள் ஒரே ஒரு துரோகத்தின் வழியாக மீண்டு வருவதைப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நானே என் சலனப் படத்தைப் பார்ப்பது போல.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவைப் பற்றிய விமர்சனமாகச் சொல்பவர்கள் சொல்வது - கொஞ்சம் கதை, கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் பெண், கொஞ்சம் டெக்னிகல் சமாசாரங்கள் என்பார்கள். இந்தக் கதையும் அப்படியே. கொஞ்சம் கதை கொஞ்சம் செக்ஸ்தான். இதனால்தான் அவர் இளைஞர்களின் எழுத்தாளராக மாறிப் போனாரோ என்னவோ. ஆனால் அதைச் சொல்லும் நடையிலும், அந்த எழுத்தின் சில வரிகளில் சுஜாதா தொட்டுவிடும் அகமன ஆழங்களும் வேறு யாருக்கும் எளிதில் கைகூடாதவை. குறிப்பாக, இந்த நாவலில் ராஜியின் தன்பார்வையில் வரும் பகுதிகளைப் படிக்கும் எந்த ஒரு பெண்ணும் சுஜாதாவின் ரசிகையாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜி என்ற பெண்ணின் பார்வையில் விவரிக்கப்படும் அத்தியாங்களில் சுஜாதாவின் வீச்சு அபாரமானதாக இருக்கிறது. இளமையைத் தொலைத்த பிறகு முதிர் இளமையில் திருமணம் நடக்கும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக அவர் எழுதியிருக்கும் வரிகள் அசலானவை. திருமணம் என்ற ஒன்று நிச்சயமானதும் ஒரு பக்கம் அவள் மனத்தளவில் இளமையான பெண்ணாவதும், மறுபக்கம் அவரது முதிர்மனம் அதனை எச்சரிப்பதும் என சுஜாதாவின் ஆட்டம் அசரடிக்கிறது. முதலிரவு அறையில் சிறுவர்கள் ஓடி விளையாடுவதேகூட கூச்சமாக உள்ளது என்னும் வரி யதார்த்தத்தை சுஜாதா எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தங்க சொம்பை விழுங்கிவிட்டாற் போல என்னும் வரியில் நான் அசந்தே போய்விட்டேன். ஒட்டுமொத்த கதையில் ராஜியின் பெருமையை, ஏக்கத்தை, தவிப்பை இந்த ஒரு வரி விளக்கிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்பலத்தில் சுஜாதா அரட்டையின்போது இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்லியிருந்தேன். அடுத்த கற்றதும் பெற்றதும் பகுதியில், தான் மறந்த புத்தகங்களை எல்லாம் என் வாசகர்கள் நினைவு வைத்துச் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அவர் யாரைச் சொன்னார் என்று தெரியாது, ஆனால் என்னைத்தான் சொன்னார் என்று நினைத்துக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது அந்த நினைவு உறுதிப்பட்டிருக்கிறது. சம்பத்தின் நினைவுகளாக விரியும் பத்திகளில், ரஜினி வில்லனாக நடிக்கும்போது அவருக்குக் கிடைத்துவிடும் சுதந்திரம்போல, சுஜாதாவுக்கு ஒருவித சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பத் தொடர்ந்து ராஜியையும் சுந்தரியையும் மையமாக வைத்து பெண்களை ஒரு போகப் பொருள் என்னும் அளவுக்குச் சித்திரிக்கும் பகுதிகள் ஓர் உதாரணம். பதின்ம வயது ஆண்களுக்கு இளைஞர் ஒருவர் எழுதியது போலத்தான் இருக்கும். இதையேதான் சுஜாதா விமர்சனமாகவும் எதிர்கொள்ள நேர்ந்தது. பெண்களைப் பற்றி அவர் மிகவும் மலிவாக சித்திரிக்கிறார் என. சம்பத்தின் எண்ணங்களை சுஜாதாவின் எண்ணமாக எடுத்துக்கொண்டால், சுஜாதாவை பிற்போக்காளராக்க இந்த நாவலிலும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. தேவைப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் நாவல்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே தொடர் கதைகள். இதனால் வாரா வாரம் ஏற்படும் நிர்ப்பந்தம் காரணமாக, சூழல் காரணமாக அந்த நாவலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கமுடியாதவை. உண்மையில் இவை நாவலின் தோல்விகளே. இதனைப் பெரும்பாலான சுஜாதா கதைகளின் உச்சக்கட்ட காட்சிகளில் காணமுடியும். பெரும்பாலும் ஒரு நாடகத்தன்மையுடன் முடியும். இந்த நாவலை முதலில் படித்தபோது இந்த நாவலை எப்படி முடிக்கப்போகிறார் என்பதுதான் என் கவனமாக இருந்தது. இப்போது மீண்டும் வாசிக்கும்போது, முடிவு முதலிலேயே தெரியும் என்பதால், அவசரம் எதிர்பார்ப்பு இன்றிப் படிக்க முடிந்தது. இதிலும் அந்த நாடகத்தன்மை சிறிய அளவில் எட்டிப் பார்ப்பதை இப்போதும் உணரமுடிந்தது. ஆனாலும் கடைசி அத்தியாயம் சிறப்பானதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஈ ரீடரில் படித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் ஃபாண்ட் இருந்திருக்குமானால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். ஆனால், இதுவே படிக்கும்படியாகத்தான் இருக்கிறது. என்ன ஒரு குறை என்றால், தட்டுப் பிழைகளைக் குறித்து வைக்க இயலவில்லை. இன்னொரு மொபைலில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து பிழைகளைக் குறித்து வைத்தேன். கையடக்க ஈபுக் ரீடரில் என்று விஷ்ணுபுரத்தை எளிதாகப் படிக்கமுடிகிறதோ அன்றுதான் ஈ ரீடர் அச்சுப் புத்தகங்களை வென்றுவிட்டதாக அர்த்தம் என்று ஒரு விதியை உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் விஷ்ணுபுரம் எழுதிய ஜெயமோகன்தான் எவ்வளவு நன்றிக்குரியவர்!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-452-6.html"&gt;https://www.nhm.in/shop/978-81-8493-452-6.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-5294998218970705017?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/5294998218970705017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=5294998218970705017' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5294998218970705017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/5294998218970705017'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/11/blog-post_15.html' title='ஒரே ஒரு துரோகம் (சிறிய குறிப்பு!)'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-8473865762357494876</id><published>2010-11-06T16:05:00.002+05:30</published><updated>2010-11-06T16:05:37.490+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>வம்சம்</title><content type='html'>உலகத் திரைப்படங்கள் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்யும்போது தமிழ்ப்படங்கள் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு வந்த தமிழ்த் திரைப்படங்கள் சொற்பமே. ஹே ராம், விருமாண்டி படங்களைப் பார்த்தபோது, கதைகளுக்குப் பஞ்சம் என்னும் அபத்த வாதத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. கதைக்கென யோசிக்க, மெனக்கெட யாரும் தயாரில்லை. குறைந்த யோசிப்பில் அதிக லாபம் அல்லது கைக்கடிக்காத படம் என்பதில்தான் அனைவருமே கவனம் செலுத்துகிறார்கள். தமிழில் வாழ்க்கையைப் பேசவேண்டுமானால், அரசியல், மத, ஜாதி வராத மாதிரி யோசிக்கவேண்டும் என்னும் ஒருவித நிர்ப்பந்தத்துக்குள் இயக்குநர்கள் உழல்வது புரிகிறது. எதற்குத் தேவையில்லாத பிரச்சினை என்னும் எண்ணம் காரணமாக இருக்கலாம். கமல் இதனை எளிதாக எதிர்கொண்டுவிடுவதால் அவரால் சிறந்த கதைகளைக் கொண்ட படங்களைக் கொடுத்துவிடமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதியை வெளியே வெளிப்படையாகப் பேசும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை எடுப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாரதிராஜா அதனை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவார். கமல் தேவர் மகனில் நேரடியாகச் சாதியைப் பற்றிப் பேசினாலும், அதிலிருந்த ரொமாண்டிசைசேனும், ஹீரோயிஸமும் அதனை ஜனரஞ்சகப் படமாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். விருமாண்டியில் கமல் ஹீரோயிஸத்தையும் ஜாதி பற்றிய விவரணைகளையும் மிக அறிவுபூர்வமாகக் கலந்திருந்தார். அதிலும் கமல் என்னும் நடிகருக்குள்ளான இமேஜ் தந்த எல்லையைக் காணமுடிந்தது. கமல் அவரது நிலையில் கவனமாக இருப்பதும் நல்லதுதான். அமீரின் பருத்திவீரன் தெளிவாக வெளிப்படையாக ஜாதியை முன் வைத்திருந்தால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கக்கூட வாய்ப்புள்ளது. ஆனால் அந்தப் படத்தின் அடிநாதமே அதுதான். அமீர் எந்த எண்ணத்துடன் அதனை எடுத்தார் என்பது தெரியாது. ஆனால் மிக முக்கியமான விஷயம்தான் அவர் தொட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் வம்சம் படம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஓர் அருமையான திரைப்படம் அல்ல. ஒரு தமிழ்த் திரைப்படத்துக்கே உரிய எல்லைகள், பிரச்சினைகள் இப்படத்துக்கும் உள்ளன. ஹீரோயிஸ அடிப்படையில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ், ஃப்ளாஷ் பேக் காட்சிகளின் இழுவை போன்றவை. அதனையும் மீறி, மறவர் சமூகத்தின் கதை என்ற அளவில், அதனை மிகவும் வெளிப்படையாகவே சொல்லி வம்சம் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இப்படமும் மற்றப் படங்கள் போலவே ஜாதிய மேன்மையை முன்வைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனையும்கூட இப்படம் மிகத் தெளிவாக வெளிப்படையாகவே முன்வைக்கிறது. கருத்தியல் அடிப்படையில் இந்த ஜாதி மேன்மை, அதிலும் மேல்ஜாதி மேன்மையை பறைசாற்றும் படங்கள் தரும் எதிர்மறை விளைவுகள் யோசிக்கத் தகுந்தவையே. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒரு திரைப்படம் என்ற அளவில், இதனையும் பதிவு செய்வது மிக மிக அவசியமே. மறவர்களின் பல வம்சங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை, ஈகோக்களை முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அவர்களின் ஈகோவும் பிரச்சினையும் எப்போதும் வெட்டுக் குத்தோடு தொடர்புடையதுதான் என்பதனைச் சொல்லவும் கொஞ்சம் தைரியம் வேண்டும். அது இயக்குநருக்கு இருக்கிறது. ஒருவேளை இது வெளியில் அப்பட்டமாகத் தெரியாமல் இருப்பதற்காகத்தான் ஜாதி மேன்மை என்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டாரோ எனத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் புத்தகக் கண்காட்சியின்போது ஒரு மறவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மறவர்கள் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் பல விஷயங்கள் இந்தப் படத்தில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கள்ளச் சாராயமும் பன்றிக் கறியும் இப்படத்தின் வெற்றிக்கான குறியீடாகவே மாறியுள்ளன. இவர்கள் பெண்களைக் கேவலப்படுத்துவதில்லை என்பதையும் இப்படத்தில் சொல்லிவிடுகிறார் இயக்குநர். இதனால் பெண்களைக் கேவலப்படுத்தும் சம்பிரதாயமான தமிழ்ப்படக் காட்சிகளில் இருந்து எளிதாக வெளிவந்துவிடுகிறார். அதேசமயம், கதாநாயகி நடுத்தெருவில் வில்லன் மீது சாணியைக் கரைத்து ஊற்றும் காட்சிக்கும் அதனைப் பயன்படுத்திக்கொண்டுவிட முடிகிறது. இப்படத்தின் சிறப்பான காட்சி இதுவே. அதேபோல் அந்த கதாநாயகியைக் கேவலப்படுத்த, இன்னும் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு வில்லன் கும்பல் சுற்றுவதும் நல்ல யோசனைதான். &lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் நடித்திருந்தும், படத்தை இப்படி எடுத்திருப்பது ஆச்சரியம்தான். அவருக்கான காட்சிகள் பிற்பகுதிகளில் வந்து படத்தையே புரட்டிப் போட்டுவிட்டாலும்கூட, ஒரு பேண்ட் கூட இல்லாமல், படம் முழுக்க வேட்டி, லுங்கிகளில் வலம் வரவும் இன்றைய கதாநாயகர்களும் தில் வேண்டியிருக்கிறது. ஒரு மறவருக்கான திமிர் அருள்நிதியின் தோற்றத்துக்கு இல்லை. ஆனால் இதையே இன்றைய நிலையிலான ஒரு மறவப் பொதுப் பிம்பமாக வைப்பதில் பாண்டிராஜ் சொல்ல வரும் சேதியும் அடங்கிவிடுகிறது. அந்த உருவம் மக்களின் பொதுப்புத்தியில் எப்படிப் பதிந்திருக்கிறது என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, சரியான கல்வியே இவர்களைப் பண்படுத்த வல்லது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். கிராமத்தில் இருந்துகொண்டு கிராம வாழ்க்கை வாழாமல் இருப்பதும்கூட இதிலிருந்து வெளிவர உதவும் என்று இயக்குநர் நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. கடைசிக் காட்சியில் கதாநாயகன் பேண்ட் ஷர்ட் வண்ணம் இறங்கிச் செல்லும்போது, அவரது மகன் எதிரியாக இருந்தவனின் மகனைத் திருவிழாவுக்கு அழைக்கிறான். பேண்ட் போட்டுக்கொண்டு, காரின் அருகில் நடந்தால் சகிப்புத்தன்மை வந்துவிடுகிறதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எப்பாடு கொண்டாவது பிற்பாடு கொடாதவர் உள்ளிட்ட பல்வேறு வம்சங்களின் பெயர்களைச் சொல்வதே கூட தமிழில் அரிது. ஒருவகையில் இது ஆழமாகப் பேசப்படுவதால், பொதுவான ஒரு படம் என்பதிலிருந்து விலகி, அப்பகுதியைச் சேர்ந்த அந்த மக்களுக்கான படம் என்று காணப்படக்கூடிய ஆபத்தும் உள்ளது. இதுவே இப்படத்துக்கு நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். படம் முழுக்க, கிராமத் திருவிழாவின்போது நடக்கும் கொண்டாட்டங்களைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இது கொஞ்சம் அலுப்பதைத் தருகிறது. என்றாலும், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இன்று இப்படி நடப்பதெல்லாம் அருகி வருகிறது என்னும் நிலையில், பெரிய மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. நடிகர்கள் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயப்ராகாஷின் அமுல்பேபி முகம் வில்லனுக்கு ஒப்பவில்லை. கதாநாயகனின் அம்மாவாக வருபவரும் ஒட்டவில்லை. பாண்டிராஜ் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி என்பதைப் பொத்திப் பொத்திப் பேசுவதும், அல்லது மேம்போக்காக அணுகி அதனை ஒட்டுமொத்தமாக ஒரு சாதி என்றாக்கி, அதற்குண்டான நுண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டுப் பேசுவதும்தான் தமிழ்ப் படங்களின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. பிராமணர்கள் மட்டும் விதிவிலக்கு. பிராமணர்கள் பற்றிய படங்களை மட்டும் வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள். வேற்று ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றால், மிகக் கவனமாகவே பேசுவார்கள். எல்லா மேல்சாதிகளையுமாவது ஒன்றாக வைத்துப் பேசவேண்டும் என்ற உணர்வுகூட இவர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது. அந்த வகையில் இந்தப் படம் ஒரு முதற்படி. இனியும் அடுத்தடுத்த, பிராமணர்களோடு சேர்த்து மற்ற மேல்சாதிகளின் குணங்களையும் தோலுரிக்கும் படங்கள் வரட்டும். இதனை எதிர்பார்ப்பதே அதிகம்தான் என்றாலும், இந்தப் படம் அது நடக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படம் மறவர் வம்சத்த்தின் மேன்மையோடு தேங்கிவிட்டாலும், பருத்திவீரன் போன்ற கதையில், அதைவிட ஆழமாக அடுத்த படிக்குச் செல்லும் படைப்புகள் வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-8473865762357494876?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/8473865762357494876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=8473865762357494876' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8473865762357494876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8473865762357494876'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/11/blog-post_06.html' title='வம்சம்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-7962253636814340125</id><published>2010-11-04T07:33:00.000+05:30</published><updated>2010-11-04T07:33:24.464+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நான் - கவிதை</title><content type='html'>பிரிந்திருந்த ஐந்தாம் நாளில்&lt;br /&gt;மெல்ல முளைத்தது சோகம்&lt;br /&gt;முதன் முதலில் கண்ட காலங்கள்&lt;br /&gt;புன்னகை மட்டும் பரிமாறிக்கொண்ட நிமிடங்கள்&lt;br /&gt;மெல்ல தொடங்கி&lt;br /&gt;தீவிரமாகத் தொட்டுக்கொண்ட நேரங்கள்&lt;br /&gt;இரண்டு நாள் செல்ல&lt;br /&gt;சோகம் நிறம் மாறி&lt;br /&gt;மூர்க்கத்துடன் காமம்&lt;br /&gt;எங்கோ நின்று அலைக்கும்&lt;br /&gt;வீடு நோக்கித் திறந்து கிடந்தன கண்கள்&lt;br /&gt;கதவு திறந்து உள்ளே நுழையவும்&lt;br /&gt;என்னைப் பிடித்துக் கொள்கிறது&lt;br /&gt;சுயமுனைப்புடன்&lt;br /&gt;நான் போகும்போது விட்டுப்போன&lt;br /&gt;நானென்னும் சுயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-7962253636814340125?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/7962253636814340125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=7962253636814340125' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/7962253636814340125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/7962253636814340125'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/11/blog-post.html' title='நான் - கவிதை'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-6249708721059407390</id><published>2010-10-06T07:32:00.001+05:30</published><updated>2010-11-16T18:55:57.083+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வழி - கவிதை</title><content type='html'>வழி என்னும் கவிதை சொல்வனத்தில் பிரசுரமாகியுள்ளது. வாசிக்க இங்கே சொடுக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://solvanam.com/?p=10807"&gt;http://solvanam.com/?p=10807&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வழி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கடக்கவியலாத&lt;br /&gt;ஆற்றின் பாதையில் செல்கிறேன்&lt;br /&gt;கணம்தோறும் நடந்துவிடும்&lt;br /&gt;செயல்களைத் திருத்திக்கொள்ளும்&lt;br /&gt;வாய்ப்பு மறுக்கப்படும்&lt;br /&gt;வழியென்றறிந்து&lt;br /&gt;கவனமாக அடி வைக்கிறேன்&lt;br /&gt;கண்கூசும் ஒளியில்&lt;br /&gt;நடைபிறளும் நேரமும்&lt;br /&gt;வரலாறென்றாகிவிடும்&lt;br /&gt;சோகத்தைக் கொண்டு&lt;br /&gt;நீண்டு செல்கிறது அச்சாலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-6249708721059407390?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/6249708721059407390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=6249708721059407390' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/6249708721059407390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/6249708721059407390'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/10/blog-post_06.html' title='வழி - கவிதை'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-6427041052793085455</id><published>2010-10-03T11:05:00.003+05:30</published><updated>2010-11-16T18:58:36.975+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>எந்திரன் - சன் டிவி - தொடரும் குமட்டல்</title><content type='html'>இந்தக் கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2010/10/suntv-n-enthiran-the-abominable-nexus/"&gt;http://www.tamilhindu.com/2010/10/suntv-n-enthiran-the-abominable-nexus/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘யார் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவெங்கும் இருந்து மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 88% பேர் ரஜினிதான் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருந்தார்கள். 3% பேர் அமிதாப், 3% பேர் ஷாருக், 3% பேர் சல்மான் - ஏறக்குறைய இப்படி இருந்தது மக்களின் தீர்ப்பு. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஏன் இந்த பிரபல்யம் என்று அலசத் தொடங்கினார்கள். அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களிலிருந்து ரஜினி எப்படி மேலேறிச் செல்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 1970களில் அமிதாப் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது கிடையாதாம். தனது படங்கள் வெளியானபோதுகூட அதைப் பற்றிப் பேசமாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம் தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வருவதும், ஏதேனும் தொலைக்காட்சித் தொடரில் (டாக் ஷோ) தோன்றினால் அதற்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இயல்பாகிவிட்டது. தங்களது படங்கள் வெளியாகும்போது ஷாருக்கும் சல்மானும் பெரிய பெரிய பிரமோக்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ரஜினி ஈடுபடுவதில்லை என்று சொன்னது அந்தத் தனியார்த் தொலைக்காட்சி சானல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருநாள் முழுக்க சன் டிவியில் ரஜினி தோன்றி கிளிமாஞ்சாரோ பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி வாக்கு கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதனை ரஜினியே மேடையில் சொன்னார். எந்திரன் திரைப்படம் சன் பிக்சர்ஸின் கையில் வந்தபோது, இதற்கான பிரமோக்களில் தான் பங்கேற்பதாக ரஜினி வாக்குக் கொடுத்திருந்தாராம். ஆனால் படம் முடிந்ததும், அந்த பிரமோ என்பது தன் குணத்துக்குச் சற்றும் பொருந்துவல்ல என்பது ரஜினிக்கு உறைத்திருக்கிறது போல. அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அதனையும் கலாநிதி மாறன் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டாராம். ரஜினி ஒரு மேடையில் ஏறிவிட்டால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்பது நாம் அறிந்ததே. எந்திரன் வெளியீட்டு மேடைகளில் அவர் கலாநிதிமாறனைப் புகழ்ந்த விதமும் அப்படியே. அதற்கான வணிகக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணிகக் காரணங்கள் மட்டுமே எப்போதுமே ரஜினியை நிர்ணயித்துவிடுவது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்னும் ஒற்றை கம்பெனியின் ராட்சதப் பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் சிக்கிக் கொண்டுவிட்டது. அதிலிருந்து வெளியேறும் வழி என்னவென்று பார்த்தால், அங்கே வரவேற்கக் காத்துக்கொண்டிருப்பவர்கள் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள். வங்குவத்தி வங்குவத்தின்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு வங்குவத்தி திங்கு திங்குன்னு ஆடிச்சாம் கதைதான் இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்கள் கையில் ரஜினி சிக்காமல் சன் பிக்சர்ஸில் அவர் மாட்டிக்கொண்டது ஒரு வகையில் அவருக்கு நல்லதுதான். ஆனால், மணிரத்னத்தின் வீட்டில் குண்டு விழுந்த பின்பு, தமிழ்நாட்டிலேயே குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்பது சட்டென நினைவுக்கு வந்து, ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?&lt;br /&gt;&lt;br /&gt;இதில் போதாக் குறைக்கு சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளை தனது கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், அதற்குப் போட்டியாக கருணாநிதியின் பேரன்களே களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. உழைப்பு, தொழில், முன்னேற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், பதவியும் ஊடகமும் தரும் செல்வாக்கில்லாமல் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதை எந்த ஒரு பாமரனும் உணரமுடியும். ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் இப்படி சிக்கிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இதுபோக, சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமம் கொடுப்பதில் நடக்கும் கூத்துகள் தனி. இன்றைய கருணாநிதியின் அரசியல் புலத்துக்கு முன்னால், சன் பிக்சர்ஸின் ஊடகப் புலத்துக்கு முன்னால் எந்த இயக்குநரால், எந்த நடிகரால் எதிர்த்து நின்றுவிட முடியும் என நினைத்துப் பாருங்கள். ரஜினி போன்ற உச்ச நடிகரே இப்படி வீழ்ந்து கிடந்தால், மற்றவர்களின் பரிதாப நிலை நமக்குப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;suntv-endhiran&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகிறது என்றாலே சில படங்கள் அந்த சமயத்தில் வெளிவராது. இதன் காரணம் ரஜினி என்னும் உச்ச நடிகரின் படத்தோடு போட்டி போடுவது அவசியமற்ற வேலை என்பதுதான். இது தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தாங்களாக எடுக்கும் ஒரு முடிவு. இன்று அப்படியல்ல. நீங்கள் போட்டி போட நினைத்தாலும், உங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதை மீறி வெளியிட்டால் உங்கள் திரைப்படம் சன் டிவியின் திரை விமர்சனம் (இப்போது இந்தப் பகுதி பெரும் நகைச்சுவைப் பகுதியாகிவிட்டது வேறு விஷயம். நேற்று வரை சன் பிக்சர்ஸ் தயாரித்த தில்லாலங்கடி திரைப்படம்தான் திரை விமர்சனம் பகுதியில் முதல் இடம் என்று கேள்விப்பட்டேன். நான் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்பதால், ஒரு நண்பர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியவந்தது) பகுதியில் குதறப்படலாம். தனது ஒரு படம் குதறப்பட்டதை எதிர்த்து பேசிய சத்யராஜ் இன்றெல்லாம் வாய் திறப்பாரா என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அன்று சன் டிவி ஒரு சானல் மட்டுமே. இன்று திரையுலகில் அது ஒரு சக்ரவர்த்தி. டிவி, திரைப்படம் என்பது போதாதென்று, தினமும் 10 லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகை, இது போக வார இதழ்கள், இந்தியாவெங்கும் பண்பலை - இவர்களை எதிர்த்துப் பேச உண்மையான தைரியம் இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும். இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எந்திரன் வெளியீடு என்று சொல்லி சன் டிவி அடிக்கும் கும்மாளம் குமட்டலை வரவழைக்கிறது. முன்பும் எத்தனையோ ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் அங்கங்கே நடந்த ஒரு விஷயமாக அமுங்கிவிடும். ஆனால், இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நடிகருக்கு இப்படி நடப்பதெல்லாம் பெரிய எரிச்சல் தரும் விஷயங்கள். இது ஒரு ரசிகரின் அல்லது சில ரசிகர்களின் தனிப்பட்ட விஷயமல்ல. சமூகம் எப்படி திரைப்படத்தினால் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. முன்பே இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். இந்த முறை இதனையும் சன் டிவி மார்க்கெட்டிங் உத்தியாக்கிவிட்டது. ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் - என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை சன் பிகசர்ஸ். அதன் இலக்கு தான் போட்ட 150 கோடிக்கு நிகராக எத்தனை மடங்கு லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;suntv-endhiran&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி போன்ற நடிகர்கள் இந்த குமட்டல்களையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இன்னொரு குமட்டல். படம் வெளி வந்த பின்பாவது ரஜினி இது குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தான் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதில்லை என்னும் சாக்கு போக்கெல்லாம் எடுபடாது. ஜெயலலிதா ரஃபி பெர்னாட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படித்தான் சொன்னார். தான் எத்தனை முறை சொல்லியும் தன் காலில் அமைச்சர்களும் தொண்டர்களும் விழுகிறார்கள் என. காலில் விழுந்த இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், அடுத்த எந்த அமைச்சர் காலில் விழுந்திருப்பார்? ரஜினியும் தனக்கு பாலாபிஷேகம் செய்யும், தேர் இழுக்கும் ரசிகர்களை எல்லாம் சரியாகக் கண்டித்திருந்தால் அவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மகள் கல்யாணத்துக்கு நிச்சயம் வரக்கூடாது எனச் சொல்லி, அதனைச் செய்துகாட்டவும் தெரிந்த ரஜினிக்கு இது ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ரஜினிக்கு இப்படி நடக்கும்போது, ரஜினியாக வரத் துடித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும் இதனையே நகலெடுக்கவே விரும்புவார்கள். அப்படி ரஜினி செய்யாவிட்டால், இன்றைக்கு ரஜினிக்கு அவர் ரசிகர்கள் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டின் திரை கலாசாரமாக மாறும். எனவே ரஜினியே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். அஜித் தனது பேருக்கு முன்பாக இனிமேல் அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் போடக்கூடாது என்று சொன்னார் சமீபத்தில். கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதேபோன்ற ஒரு சுய பரிசோதனையை ரஜினி செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர் மன்றங்களால் சில நற்பணிகள் அங்கங்கே நடக்கிறது என்றாலும், பெரிய அளவில் இந்த ரசிகர் மன்றங்கள் என்ன சாதித்தன என்பது தெரியவில்லை. எந்த ஒரு நடிகரும் ரசிகர் மன்றத்தை நம்பி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் வெளியில் எந்த ஒரு நடிகரும் இதனைச் சொன்னதில்லை. ரஜினி தனது எல்லா ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அதில்கூட முன்மாதிரியாக இருக்கலாம் ரஜினி. நடிப்பு என்பது ஒரு தொழில். திரைப்படமும், நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதனைப் பாருங்கள், பாராட்டிவிட்டுச் செல்லுங்கள், அது போதும் என்று ரஜினி அறிவித்தால்தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரன் வெளியீட்டை ஒட்டி மேடையில் பேசிய அத்தனை நடிகர்களும் தங்கள் ரசிகர்களையே நகலெடுத்தார்கள். ஒவ்வொரு நடிகரும் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக வந்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்கெல்லாம் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. நடிகர்களின் வழியேதான் ரசிகர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்மானமுள்ள நடிகர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு முன்பு குரல் கொடுத்த நடிகர்கள் எல்லாம் ஓடிப் போன சுவடே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;suntv-endhiran&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி முன்பெல்லாம் புகை பிடிப்பவராகப் பல படங்களில் தோன்றுவார். ஸ்டைல் என்பதே தன் அடையாளம் என்று ரசிகர்களை அவர் அடைந்த விதமே இந்த புகையின் வழியாகத்தான் எனலாம். திடீரென்று பாமக குரல் கொடுத்தது. ரஜினியால் பல இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று. ஒரு படி மேலே போய் ரஜினியை அக்கட்சி மிரட்டியது என்றே சொல்லவேண்டும். ரஜினி புகை பிடிப்பது போன்ற படங்கள் வந்தால் அதனை வெளியிட விடமாட்டோம் என்றார்கள். உண்மையில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினி புகை பிடிக்கும் படங்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்யலாம். அமைதி வழியில் அதனை எதிர்த்துப் போராடலாம். தொடர்ந்து ரஜினியுடன் பேசலாம். ஆனால் அப்படி வரும் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்பது அராஜகம். ரஜினி இதற்குப் பணிந்து போனார். வணிகக் காரணங்கள். அடுத்த படத்தில் சுயிங்கம் மென்று கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புகை பிடிப்பதால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று போராட்டம் நடத்திய பாமக இன்று ஏன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது? ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன்? எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா? ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன்? நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா? இப்படி ரசிகர்கள் என்னும் போர்வையில் ஒரு சமுதாயத்தின் மக்களைக் கீழ்மைப்படுத்துவது தவறு என்று ரஜினிக்கு எதிராகப் பாமக இன்று எதுவும் பேசாமல் கள்ள மௌனத்துடன் இருப்பது, அது சன் பிக்சர்ஸைப் பாதித்து, அரசியலில் தன்னையும் பாதித்துவிடும் என்பதற்காகவா?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ரஜினி ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். படத்துக்கான மார்க்கெடிங் போர்வையில் சன் டிவி நிகழ்த்திக்கொண்டிருப்பது ரஜினியின் சுயமரியாதையின் மீதான தாக்குதலே அன்றி வேறல்ல. தனது ரசிகர்களின் சர்க்கஸ்களைக் காட்டிக்கொண்டிருப்பதன் மூலம் தன்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினி உணரவில்லை என்றால், பொதுமக்களின் மத்தியில் ரஜினியின் இமேஜ் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். அது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதும் ஓரளவு உண்மையே. ரஜினி என்னும் தனிமனிதரின் மனித இருப்புக்கும், இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது பலருக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தெரிந்ததாக ஆக்க ரஜினி முயல்வது அவருக்கு நல்லது. இல்லை என்றால் ஒரு தன்மானமற்ற கும்பலை நாளைய சந்ததியாக உருவாக்கி வைத்துவிட்டுப் போவதில், என்னதான் சன் டிவியின் எரிச்சலூட்டும் அதீத பரப்புரை காரணமாக இருந்தாலும், ரஜினிக்கு பெரும் பங்கு உண்டாகியிருக்கும். பின்பு அதனை நீக்குவது என்பது பெரும்பாடாகிவிடும். சன் டிவியின் கேவலப்படுத்தும் ப்ரமோக்களுக்கு ரஜினி உடனே ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. 60 வயதுக்குப் பிறகு, ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-6427041052793085455?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/6427041052793085455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=6427041052793085455' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/6427041052793085455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/6427041052793085455'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/10/blog-post_03.html' title='எந்திரன் - சன் டிவி - தொடரும் குமட்டல்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-8571390350833702427</id><published>2010-10-02T09:02:00.001+05:30</published><updated>2010-11-16T18:57:54.005+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>எந்திரன் - பெரிதினும் பெரிது கேள்</title><content type='html'>எனது எந்திரன் விமர்சனம் தமிழ்பேப்பர் இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும். &lt;a href="http://www.tamilpaper.net/?p=258"&gt;http://www.tamilpaper.net/?p=258&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி எருமை என்று திட்டினால் கோபம் வரும், அதையே கொஞ்சம் மாற்றி பசு போல என்று சொன்னால் பெருமையாக நினைத்துக்கொள்வார்கள் என்பார்கள். அதேபோல, காதில் பூ சுற்றிப் படம் பார்க்கச் சொன்னால் கோபப்படுவார்கள். அதையே அறிவியல் புனைகதை என்று சொல்லிப் பார்க்கச் சொன்னால், அந்தப் படம் நன்றாகவும்  இருந்துவிட்டால், பெருமையாகப் பார்த்துவிட்டுப் போவார்கள். எந்திரன் – அறிவியல் புனைகதையின் வழியே நம் காதில் பூ சுற்றுகிறது. இதுவரை ஆங்கிலப் படங்கள் சுற்றி வந்த அதே பூவை ஒரு தமிழ்ப்படம் சுற்றுகிறது. அது நமக்குத் தெந்திருந்தும், வியப்பு ஏற்படாமலில்லை. ஏனென்றால் 150 கோடி பெறுமானமுள்ள பூ இது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே ரஜினியின் திரைப்படங்களில் அவர் தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்டாகவும் சூப்பர்மேனாகவும்தான் வலம் வருவார். ஒரு அடி அடித்தால் பத்து பேர் எப்படி எகிறி விழுவார்கள் என்று சீரிய திரை விமர்சகர்களும் ஆய்வாளர்களும் ரஜினியை மட்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அறிவியல் புனைகதை என்று சொல்லி அதற்கு சாமர்த்தியமான ஓர் அடித்தளத்தைக் கொடுத்து அவர்கள் வாயையும் அடைத்துவிட்டார் ஷங்கர். ஆனாலும் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை. இப்படத்தில் இருக்கும் அறிவியல் ஓட்டைகளையும், கலாசாரப் பழமைவாதத்தையும், சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் காட்சிகளையும் எப்படியாவது கண்டுபிடித்து எழுதுவார்கள். நாம் ரோஜாவை ரோஜாவாக அணுகுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் புனைகதை என்னும் அடித்தளத்தை அமைத்துக்கொண்டு, தனது ஆதர்ச சூப்பர் ஹீரோவான ரஜினியை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்க்க ஆசை கொண்ட ஷங்கர், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் அந்த ஆசை கொஞ்சம் மீறிப்போய், விட்டலாச்சாரியா படங்களுக்கு அருகில் சென்றாலும்கூட, தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அதனைச் சமன் செய்கிறார். பொதுவாக இதைப் போன்ற படங்களையெல்லாம் கமலை வைத்து மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பில்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே பல நேர்காணல்களில் ரஜினி சொன்னது போல எதிர்பாத்திரம் அவரை அதிகம் ஈர்க்கிறது என்பதை இப்படத்திலும் காணமுடிகிறது. கடைசி 45 நிமிடங்கள் ரஜினி எடுக்கும் விஸ்வரூபம் அசரச் செய்கிறது. ரஜினிக்கு இணையாக அக்காட்சிகளில் தொழில்நுட்பமும் இசையும் கொள்ளும் எழுச்சி, நாம் ஓர் இந்தியப் படத்தை, அதுவும் தமிழ்ப்படத்தைப் பார்க்கிறோமா அல்லது அமெரிக்கத் தரத்திலான ஹாலிவுட் படத்தைப் பார்க்கிறோமா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களது படங்களில் வரும் பாடல் காட்சிகளில் கிராபிக்ஸை ஊறுகாய் போல மட்டுமே தமிழ் இயக்குநர்களுக்குப் பயன்படுத்தத் தெரியும் என்ற வசைச்சொல் பல காலமாக இருந்தது வந்தது. அதனை ஓரளவு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போக்கியது. இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில், கிராபிக்ஸில் பெரிய சாதனையையே நிகழ்த்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிதினும் பெரிது கேள் என்பதை ஷங்கர் தன் வழியில் புரிந்துகொண்டிருக்கிறார். இரண்டு ரஜினி போதாது என்று நினைத்தாரோ என்னவோ, கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குத் திரையெங்கும் ரஜினியின் உருவங்கள். ஒரு ரஜினி ரசிகனுக்கு இது வாழ்நாள் ட்ரீட்டாக இருக்கும். அத்தனை ரஜினியைப் பார்த்து ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கிப் போன நான் இன்னும் அதே நினைப்பிலேயே இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதையின் வேகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஷங்கர் இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நிர்வாணமான பெண்ணை ரோபோ தூக்கி வரும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு. ரோபோவின் நம்பகத்தன்மை நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காட்சி அது. அதேபோல் இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் சில காட்சிகள் தேவையில்லாமல் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கொசு வரும் காட்சி, ஐஸ்வர்யா ராயை ரோபோ கடத்தும்போது வரும் கார் சேஸிங் காட்சி, கிளிமாஞ்சாரோ பாடலுக்கு முன்னால் கலாபவன் மணி வரும் காட்சி போன்றவை. அதேபோல் நம்மை அசர வைக்கும் காட்சிகளும் உண்டு. திரையெங்கும் ரஜினி உருவங்கள் ஆக்கிரமிக்கும் காட்சி, நல்ல ரோபோவாக ரஜினி விகல்பமில்லாமல் நடிக்கும் காட்சிகள் போன்றவை. அதிலும் மறக்கமுடியாத ஓரிடம், ரஜினியின் உடலைச் சுற்றி அம்மன் போல வேல் கத்தி சூலம் போன்றவை நிற்கும் காட்சி. ஷங்கரின் கற்பனை உச்சத்தைத் தொட்ட இடம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மாஸ் ஓப்பனிங் இல்லாமல், ஓப்பனிங் பாடல் இல்லாமல், பஞ்ச் டயலாகுகள் இல்லாமல் இந்நாட்களில் ஒரு ரஜினி படம் வரமுடியும் என நிரூபித்திருக்கிறது இப்படம். வில்லனை எதிர்த்து சண்டை போடாமல் ரஜினி ஓடும் காட்சியும் கூட இதே ரகம்தான். எல்லாவற்றையும் ரஜினி ரசிகர்களுக்காக வட்டியும் முதலுமாகச் செய்து தீர்க்கிறார் ரோபோ ரஜினி.&lt;br /&gt;&lt;br /&gt;ரோபோ கெட்டவனாக மாறும்போது, மாறும் ரஜினியின் நிறமும் அவரது உடல்மொழியும் மிரட்டுகின்றன. ரஜினியை சூப்பர் மேனாகப் பார்க்கும் சிறுவர்கள் இந்தப் படத்தை தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்காமல் வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கங்கே தனித்துத் தெரியும் பளிச் வசனங்கள் சுஜாதாவை நினைவூட்டுகின்றன. ரோபோஸெப்பியன்ஸ், நக்கல்-நிக்கல் போன்றவை சில உதாரணங்கள். ரோபோவை அறிமுகப்படுத்தும் காட்சியில் சட்டென ஒரு ராகத்தைப் பாடும் ஒரு முதியவரும், கடவுள் இருக்காரா இல்லையா என ஒலிக்கும் குரலும் சந்தேகமேயின்றி சுஜாதாவேதான்.  ஏ.ஆர். ரகுமானின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஓர் உலகத்தரமுள்ள திரைப்படத்துக்கு எப்படி ஒத்துழைக்கவேண்டுமோ அப்படி அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதே படத்தில் கமல் நடித்திருந்தால் அது வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். கூடவே கமலின் சில தன்முனைப்பு எரிச்சல்களும் சேர்ந்திருக்கும். இயக்குநரின் நடிகரான ரஜினி நடித்ததில், இப்படம் வேறொரு பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. கூடவே ரஜினியின் மாஸும் சேர்ந்துகொண்டதில், இப்படம் மிகப் பெரிய பிரம்மாண்டத்தைக் கண்முன் நிறுத்திவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் எந்திரன் – தி மாஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-8571390350833702427?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/8571390350833702427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=8571390350833702427' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8571390350833702427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/8571390350833702427'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/10/blog-post_02.html' title='எந்திரன் - பெரிதினும் பெரிது கேள்'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-1438437717146056323</id><published>2010-10-01T10:10:00.001+05:30</published><updated>2010-10-01T10:12:28.853+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>எந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!</title><content type='html'>சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சுரேஷ்கண்ணன் ரஜினி படம் வருவதற்கு முன்பு ஒரு தடவைதான் திட்டுவார். இந்த முறை இரண்டு மூன்று முறை திட்டியதாலோ என்னவோ படம் எக்கசக்கமாக நன்றாக இருந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் சுரேஷ் கண்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வணிக சினிமாவுக்கு எதிராக அவரது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த ரஜினி படத்துக்கும் இப்படி அவர் திட்டி பதிவெழுதி, எஸ்பிபி முதல் பாட்டு பாடினால் எப்படி ரஜினி படம் ஹிட்டாகிவிடுமோ அதுபோல, இவர் திட்டினாலே ஹிட்டாகிவிடும் என்னும் உண்மையை நிலைநிறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் - சான்ஸே இல்லை. ரஜினியின் தீவிர ரசிகர் ஷங்கரைப் பார்க்க நேர்ந்தால் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவிடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;படம் பற்றிய எனது உணர்வு ரீதியான ரஜினி ரசிகனின் விமர்சனம் தமிழ் பேப்பரில் நாளை வெளிவரும். கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை சுரேஷ்கண்ணன்கள் எழுதுவார்கள். இப்படியாக விமர்சகர் சுரேஷ்கண்ணன் ஒரு குறியீடாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilpaper.net/"&gt;தமிழ் பேப்பரில் நாளை பார்க்கலாம்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6037404-1438437717146056323?l=nizhalkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalkal.blogspot.com/feeds/1438437717146056323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6037404&amp;postID=1438437717146056323' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/1438437717146056323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6037404/posts/default/1438437717146056323'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalkal.blogspot.com/2010/10/blog-post.html' title='எந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!'/><author><name>ஹரன்பிரசன்னா</name><uri>http://www.blogger.com/profile/04242083653701472314</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://2.bp.blogspot.com/_u2bIXlrUejM/S4iFfloFlXI/AAAAAAAAFw8/p3RDUWsIzqY/S220/habi.jpeg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6037404.post-3035175935089342069</id><published>2010-09-30T07:25:00.001+05:30</published><updated>2010-11-16T19:01:05.629+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகக் கண்காட்சி'/><title type='text'>இலங்கைப் பயணம் - முழுமையாக</title><content type='html'>இலங்கைப் பயணத்தின் நிறைவுப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/2010/09/3.html"&gt;http://idlyvadai.blogspot.com/2010/09/3.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டே கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்க வேண்டியது. எனது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருக்காததால் என்னால் செல்ல இயலவில்லை. இந்த முறை இலங்கைக்குச் சென்றேன். கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே தினத்தில், யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியும் நடைபெற்றது. அதிலும் பங்குபெற எண்ணி, இந்தமுறை கொழும்போடு யாழ்ப்பாணமும் (ஜாஃப்னா) சேர்ந்துகொண்டது எங்கள் திட்டத்தில். நான், பத்ரி, சத்ய நாராயண், மணிவண்ணன் (விற்பனை மேலாளர்), மணிகண்டன் (மார்க்கெடிங் டிசைனர்), சிவகுமார் (மண்டல விற்பனை பிரதிநிதி) என ஆறு பேர் மூன்று குழுக்களாக வேறு வேறு தினங்களில் இலங்கை சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்புவன் என்ற பதாகைகளோடு வரவேற்றது கொழும்பு பன்னாட்டு விமான முனையம். எல்லா முக்கியமான இடங்களிலும் தமிழிலும் அறிவிப்பு வைத்திருந்தார்கள். சில அழகான தமிழ்ப் பயன்பாடுகளோடு, சமிஸ்கிருத பயன்பாடும் கலந்த தமிழாக இருந்தது அது. இது தரிப்பிடம் அல்ல (இது நிற்குமிடமல்ல) எனத் தொடங்கியது எங்களுக்கான இலங்கைத் தமிழ். டியூக் மோகன் எங்களை வந்து அழைத்துக்கொண்டு சென்றார். போன் பேசுவது, குறிப்பு எழுதுவது, சாலையைத் தவிர மற்ற இடங்களைப் பார்ப்பது, எங்களுடன் பேசுவது என்ற வேலைகளுக்கு இடையே, சாலையையும் பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுவார். முதல் விமானப் பயணம் என்பதால் லேசாகப் பயந்தோம் என்று சொல்லிக்கொண்டு வந்த மணிகண்டன் முகத்தில் டியூக் வேன் ஓட்டுவதைக் கண்டு லேசான கலவரம் தெரிந்ததைப் பார்த்தேன். என் கண்ணிலும் அவர் அதைக் கண்டிருக்கக்கூடும்!&lt;br /&gt;&lt;br /&gt;டியூக்குடன் பேசுவது மிக எளிது. காரணம் நீங்கள் எதுவுமே பேசவேண்டியிருக்காது. நமக்கான விஷயங்களையும் சேர்த்து அவரே பேசிவிடுவார். அவரது தமிழ் மெல்ல விளங்கத் தொடங்கியதும், இலங்கைத் தமிழில் ஒரு மணி நேரத்தில் கரை கண்டுவிட்டோமே என நினைத்துக்கொண்டேன் - யாழ்ப்பாணத்து நாதனைச் சந்திக்கும் வரை. நாதன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவருக்கு எப்படியும் 34 வயது இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தபோது, தனக்கு 44 வயது எனச் சொல்லி அதிர வைத்தார். நாங்கள் நாதனைச் சந்தித்தது யாழ்ப்பாணத்தில். கொழும்பிலிருந்து ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் சென்றோம். இதனை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லவேண்டும். 15 பேர் மட்டுமே அமரமுடியும் ஓர் சிறிய விமானம். ஒப்பீட்டளவில் ஸ்டார் சிட்டி பைக்கைவிடக் கொஞ்சம் பெரியது என்று சொல்லலாம்! இரண்டாம் விமானப் பயணமே இப்படி உயிரைப் பிடித்துக்கொண்டு போகக்கூடியதாக இருக்கும் என மணிகண்டன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே துபாயிலிருந்து கிஷ் தீவுக்கு இதுபோன்ற ஒரு விமானத்தில் சென்றிருந்ததால் எனக்கு அதிகப் பயம் ஏற்படவில்லை. ஆனால் இதற்கும் சேர்த்து வரும்போது கலங்கிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரப் பயணம். பெரும்பாலும் கடல் மீது. அங்கங்கே சிறிது சிறிதாகத் தீவுகள். புங்குடுத் தீவு, நயினாதீவு எனப் பல தீவுகள். மரத்தடி இணையக் குழுமத்தில் மதி கந்தசாமி அவரது சொந்த ஊரான புங்குடுத் தீவு குறித்து எழுதிய மிகச் சிறந்த கட்டுரை நினைவுக்கு வந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்து ராஜா தியேட்டர் பற்றி கானா பிரபா எழுதிய இடுகையும் நினைவுக்கு வந்தது. இரண்டையுமே பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாண ராணுவ மையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் வந்தோம். வழியில் திருநெல்வேலி எல்லாம் வந்தது. பாதையெங்கும் பெரிய பெரிய வீடுகள், தோட்டங்கள், ராணுவ பதுங்கு குழிகள், செல்லால் கடுமையாகத் தாக்கப்பட்டு இடிந்து கிடந்த வீடுகள் என, எங்களுக்கு, புதிய தோற்றங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாதன் யாழ்ப்பாணத்துத் தமிழில் பேசினார். திடீரென்று ஓ என்றும் ஓய் என்றும் சத்தங்கள் எழுப்பினார். அது ஆமாம் என்பதற்கு இணையான வார்த்தைப் புழக்கம் என்பது எங்களுக்கு மெல்லப் புரிந்தது. டியூக்கின் தமிழ் புரிந்தது பெரிய காரியமில்லை, யாழ்ப்பாணத்துத் தமிழ்தான் உண்மையான சவால் என்றும் புரிந்தது. அவர் பேசிய பல வார்த்தைகள் விளங்கவில்லை, ஓ, ஓய் தவிர. நன்கு பழகிய பின்பு, நாங்கள் அவரை ஓ என்று கிண்டல் செய்ய, அவர் ஆமாம் ஆமாம் என்று கிண்டல் செய்து பழி தீர்த்துக்கொண்டார். யாழ்ப்பாணத்து பேருந்து நிலையத்திலிருந்து நாங்கள் தங்குமிடத்துக்கு வேனில் சென்றோம். இனி அனுபவங்களை சில பகுப்புகளாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன். சென்றதன் முதன்மை நோக்கம் புத்தகக் கண்காட்சி என்பதால் அதிலிருந்தே தொடங்குவதான் நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை!&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் நடந்தது கல்வியியல் புத்தகக் கண்காட்சி. பள்ளி, கல்லூரி முடித்த மாணவர்களை ஈர்த்து, அடுத்து என்ன படிக்கலாம் எனச் சொல்லும் நோக்கத்துடன் (பெரும்பாலும் வெளிநாட்டில் படிக்க அழைத்துச் செல்லும் நோக்கத்துடன்) நடக்கும் கண்காட்சி. அதில் புத்தகம் விற்கும் நோக்கத்துடன் கடை பரப்பிய ஒரே அரங்கு எங்களது மட்டுமே. முதல் நாள் நாங்கள் கிட்டத்தட்ட 40 பெட்டிகள் புத்தகங்களுடன் அங்கே புத்தகங்களை அடுக்கத் தொடங்கினோம். மற்ற அரங்குகள் எல்லாம் அரை மணி நேரத்தில் ஃபிளக்ஸ், பிட் நோட்டிஸ் என தயாராகிவிட்டன. நாங்கள் புத்தகங்களை அடுக்கி முடிக்க 5 மணி நேரம் பிடித்தது. எல்லா அரங்கு நிர்வாகிகளும் எங்களைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். எங்களுக்கே கூட இங்கே வந்தது பிழையோ என்னும் எண்ணம் தோன்றிவிட்டது. மறுநாள் கண்காட்சி நடந்தபோது, மற்ற எந்த அரங்கிலும் கூட்டமில்லை, கிழக்கு அரங்கைத் தவிர. எல்லா அரங்குகளின் பிரதிநிதிகளும் எங்கள் அரங்கைப் பார்வையிட்டார்கள். மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்கள். அனைவரும் புத்தகங்களும் வாங்கினார்கள். இது ஒரு புதுமையான அனுபவம். உதயன் பத்திரிகையில் ஒரு விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தோம். அதனுடன் பத்ரியின் சிறிய நேர்காணலும் வந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு புத்தகம் வாங்க வந்தவர்கள் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள் அங்கிருக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாக விளங்குகின்றன. இதனால் நாங்கள் தந்த விளம்பரம் பலரைச் சென்றடைந்தது. தமிழ்நாட்டு தனியார் சானல்களால் இப்போதுதான் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் இனி வரும் காலங்களில் இந்த பத்திரிகை ஒருங்கிணைப்பில் இருந்து விலகும் என்பதை நினைக்கவே வருத்தமாக இருந்தது. இலங்கையின் எழுத்தறிவு 96% முதல் 99% சதம் வரை என்று சொன்னார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் புத்தகம் வாசிப்பதை ஒரு முக்கியமான பழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. இன்னும் நல்ல விளம்பரம் செய்து புத்தகக் கண்காட்சி நடத்தினால் பெரிய அளவில் புத்தக விற்பனை நடைபெறும் என்பதில் ஐயமில்லை. முதல் முறை என்பதால் எங்களால் சிறப்பான முறையில் புத்தகங்களை டிஸ்பிளே செய்ய இயலவில்லை. எந்த புத்தகங்கள் விற்பனை ஆகும், ஆகாது என்பதில் குழப்பம் இருந்தது. அப்படி இருந்தும் நல்ல விற்பனை நடந்தது. எல்லாம் சரியாகச் செய்திருந்தால் இன்னும் 3 மடங்காவது விற்பனை கூடியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கடைகள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து, பூபாளசிங்கம் புத்தகக் கடையும், அன்னை புத்தக நிலையமும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. பூபாளசிங்கம் புத்தகக் கடை இன்னொன்றும் யாழ்ப்பாணத்திலேயே உள்ளது.இரண்டுமே யாழ்ப்பாணத்து பேருந்துநிலையத்துக்கு அருகில் உள்ளன. இரண்டு கடைகளிலும் புத்தக விற்பனை நன்றாகவே நடைபெறுவதாக அறிந்தேன். இந்த இரண்டு புத்தகக் கடைகளிலும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் மரியாதையாகவே பார்த்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது வருத்தம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது பேச்சில் வெளிப்பட்டாலும், நடவடிக்கையில் வெளிப்படவே இல்லை. யாழ்ப்பாணமும் தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தில் இருந்த உணர்வையே தந்தது. யாழ் நூலகத்துக்குச் சென்றோம். பார்வையாளர்கள் நேரத்தில் வரச் சொன்னார்கள். இரண்டாம் நாள் மீண்டும் சென்றோம். அப்போதும் பார்வையாளர்கள் நேரத்திலேயே வரச் சொன்னார்கள். அந்த நேரத்தில் புத்தகக் கண்காட்சியில் பிஸியாக இருப்போம் என்று சொல்லி, இப்போதே அனுமதிக்கக் கேட்டோம். இந்தியர்கள் இருவர் வந்திருக்கிறார்கள் என்று வெளியில் இருந்த பாதுகாவலர் அனுமதி கேட்டபோது, உள்ளிருந்து அனுமதி உடனே தரப்பட்டது. அங்கிருந்த முதன்மை நூலகரையும் சந்தித்திப் பேசினோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. அதில் 40,000 நூல்களை மட்டுமே பட்டியலில் அச்சடித்து வைத்திருக்கிறார்களாம். மீதி புத்தகங்களையும் பட்டியலில் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்றார் நூலகர். அந்தப் பட்டியல் கிடைக்குமா என்று கேட்டேன். அது நூலகங்களுக்கான தனிப்பட்ட சாஃப்ட்வேர் ஃபைலாக இருப்பதாகச் சொன்னார். அதனை வாங்கிப் பயனில்லை என்பதால் விட்டுவிட்டேன். தமிழகத்தில் ஓர் அரசு அலுவலகத்தில் இது போன்று ஒரு பட்டியலையோ வேறு ஏதேனும் ஒன்றையோ கேட்டால் கொஞ்சம் பயந்துவிடுவார்கள். கொழும்பு புத்தகக் கண்காட்சியிலும், பள்ளியிலிருந்து புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வந்த தமிழ் வாத்தியார்கள் நாங்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் உடனே எங்கள் பார்வைக்குத் தந்தார்கள். அவரிடம் கேட்கவேண்டும், இவரிடம் கேட்கவேண்டும் என்று சொல்லிப் பின்வாங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடங்கி வைத்தார். பத்ரியும் குத்துவிளக்கு ஏற்றினார். (நல்லூரு முருகனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. பிற திருவிளையாடல்கள் பின்னர் வரும்!) கனிமொழி ராஜபக்‌ஷேவைப் பார்த்துச் சிரித்ததைக் கண்டு வெகுண்டவர்கள், பத்ரி டக்ளஸ் தேவானந்தாவுடன் சிரித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்து என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் என்பதைப் பார்த்துவிட்டு, கிழக்கு என்றால் என்ன என்று டக்ளஸ் தேவானந்தா கேட்டதாகச் சொன்னார்கள். பின்னர்தான் புரிந்தது, அங்கே கிழக்கு என்றால் மட்டக்கிளப்பு மாகாணம் என்னும் ஒரு பொருள் உண்டு என. புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் பலரும் இதனைக் கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சி நடந்த ஜாஃப்னா செண்ட்ரல் காலேஜ் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது. ஆறுமுக நாவலர் இந்தக் கல்லூரியில்தான் பயின்றார் (அல்லது பயிற்றுவித்தார்) என நினைக்கிறேன். யாழ்ப்பாணம் வலுவான, முதன்மையான கல்வியியல் மையமாக இருந்தது என்று பத்ரி குறிப்பிட்டார். யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் யேசுராசாவைச் சந்தித்தித்தோம். அவரது வழக்கமான பாணியில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகளை மறைக்காமல் பகிர்ந்து கொண்டார். சிறீதரணின் ‘ராமாயணக் கலகம்’ குறுநாவல் பற்றி ராயர் காப்பி க்ளப்பில் படித்திருக்கிறேன். அக்கதை உள்ள புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, சிறீதரணின் கதைகளின் தொகுப்பு விரைவில் வெளிவரும் என்றும், பத்மநாப ஐயர் அதற்கான முனைப்பில் உள்ளார் என்றும் குறிப்பிட்டார். சிறீதரணின் அக்கதை, ‘கண்ணில் தெரியுது வானம்’ என்னும் தொகுப்பில் உள்ளது என்றும் சொன்னார். ‘கண்ணில் தெரியுது வானம்’ புத்தகத்தை முன்னர் எனக்கு அனுப்பியிருந்தார் பத்மநாப ஐயர். மீண்டும் படிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். யேசு ராசா பல்வேறு எழுத்தாளர்கள், இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு வேலை இருந்ததால் அவருடன் நிறைய பேசமுடியவில்லை. சிறிது நேரம் பத்ரி அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் விடைபெற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோவிலுக்குப் போயே திரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. புத்தகக் கண்காட்சி 6 மணிக்கு முடியவும் முருகன் கோவில் செல்லலாம் என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் 7 மணிக்கே யாழ்ப்பாணமே கிட்டத்தட்ட உறங்கிவிடுவதால், கோவில் திறந்திருக்குமா என்ற ஐயமும், அப்படியே திறந்திருந்தாலும், அங்கிருந்து திரும்ப வர ஆட்டோ கிடைக்குமா என்ற எண்ணமும் எழுந்ததால், மறுநாள் காலை செல்லலாம் என முடிவெடுத்தோம். பத்ரியும், சத்யாவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களும் வருவதாகச் சொன்னதும், நல்லூர் முருகனின் சக்தி எனக்குப் புரிந்துபோனது. ‘நீ பாட்டுக்கு ஒரு பக்கம் சாமி கும்பிடு, நான் இன்னொரு பக்கம் நாத்திகம் பேசறேன்’ என்றார் பத்ரி. நாத்திகம் பேசாத இடத்தில் ஆத்திகம் மனப்பதில்லை என்பதால், அதுவும் முருகனின் திருவிளையாடலில் ஒன்றே என நினைத்துக்கொண்டேன். :&gt; கோவிலில் பத்ரி விபூதி தரித்து காட்சியளித்தார். முருகனைக் கும்பிடுவதா இவரைக் கும்பிடுவதா எனக் குழம்பிய நிலையில், இதுவும் முருகனின் திருவிளையாடல் என்னும் தெளிவு வந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;நல்லூர் முருகன் கோவிலில் ஓரளவு கூட்டம் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளியில் கடை போட்டு, டோக்கன் போட்டு, வரிசையில் விடும் அளவுக்குக் கூட்டம் வரும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கோவிலில் யாருமே இருக்கமாட்டார்களாம். இப்போது யுத்தம் ஓய்ந்த பிறகு கோவிலின் புனரமைப்பு வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அக்கோவிலின் திருவிழா நடந்து முடிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது என்றார் அன்னை புத்தக நிலையத்தின் நிறுவனர். அந்தத் திருவிழாவை ஒட்டி அங்கே புத்தகக் கண்காட்சி நடத்தியதாகவும் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் இன்னொரு கல்லூரியில் வேறு ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அடுத்த முறை அதிலும் பங்கேற்கவேண்டும் என நினைத்துக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் மலாயன்&lt;br /&gt;என்னும் கடையில் சைவ உணவு சாப்பிட்டோம். அசைவ உணவுக் கடைக்குள் சென்றாலே மீனின் வாடை (வாசம்?!) மூக்கைத் திணறடிக்க, அக்கடையில் சைவ உணவைச் சாப்பிட என்னால் இயலவில்லை. நல்ல சைவக் கடை எது என விசாரித்து மலாயன் கடைக்குச் சென்றோம். மரக்கறி உணவு என்றார்கள். மரக்கறி என்றால் சைவம்தான் என உள்ளூரத் தோன்றினாலும், கறி என்னும் வார்த்தை கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. இலங்கையில் வெள்ளிக் கிழமைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. அன்று, குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பலரும் மரக்கறி உணவையே சாப்பிடுகிறார்கள். அதனால் மலாயன்&lt;br /&gt;கடையில் கடுமையான கூட்டம். உருண்டை உருண்டையாக சம்பா அரிசி பரிமாறி, அதன் மேலேயே ஒரு ஓரத்தில் சாம்பார், இன்னொரு ஓரத்தில் பொரியல், இன்னொரு ஓரத்தில் கூட்டு, இன்னொரு ஓரத்தில் சென்னா என எல்லாவற்றையும் பரிமாறிவிட்டார்கள். இங்கே எல்லாவற்றையும் தனித்தனியாக உண்ட எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதன் சுவை அசர வைத்துவிட்டது. இரண்டாவது முறையும் அதே போல் வாங்கி உண்டேன். மறுநாளும் அதே கடைக்கு வந்து அதே போல் சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. மலாயன் கடை மட்டும் அங்கே இல்லாவிட்டால் நான் மிகவும் ஆடிப் போயிருப்பேன். நாதனுக்கு அசைவம் இல்லாவிட்டால் உணவே உள்ளே இறங்காதாம். ஆனால் நாங்கள் அங்கிருந்த 3 நாளும் நாங்கள் சைவக் கடையில் சாப்பிட்டபோதெல்லாம் அவரும் சைவமே சாப்பிட்டார். சாப்பாடு என்றில்லாமல் டிஃபன் என்று பார்த்தால், எல்லாக் கடைகளிலும் இடியாப்பமே கிடைக்கிறது. அதுவும் சம்பா அரிசியில் செய்தது. தொட்டுக்கொள்ள எல்லா நாளும் சொதி தருகிறார்கள். நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு தட்டில் 40 இடியாப்பம், 5 வடை, 5 தோசை என வைத்து விடுகிறார்கள். நமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டும். மீதியை எடுத்துக்கொண்டு போய், எவ்வளவு மீதி உள்ளதோ அதிலிருந்து நாம் உண்டதைக் கண்டுபிடித்து பில் போடுகிறார்கள். நாங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனையான புத்தகங்களை இப்படித்தான் கண்டுபிடிப்போம். இங்கே வந்தும் ரிகன்சிலேஷனா எனப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;புங்குடுத் தீவு, நைனாத்தீவுக்கு செல்ல நினைத்தோம். நேரமின்மையால் செல்ல இயலவில்லை. யாழ்ப்பாணத்து இளநீரைக் குடிக்க முடியவில்லை என்று நாதனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலை, நாங்கள் கொழும்பு செல்லும் முன்பு, இரண்டு இளநீரைக் கொண்டுவந்தார். நானும் பத்ரியும் குடித்தோம். இலங்கையில் நான் குடித்த இள நீரைப் போன்ற சுவையில் தமிழ்நாட்டில் எங்கேயும் குடித்ததில்லை. நாதனின் அன்புக்கு நன்றி சொல்லிவிட்டு, ஜாஃபனா ராணுவத் தளத்திலிருந்து கொழும்புக்கு எங்களைத் தூக்கிச் செல்லும் ராணுவ விமானத்தை நினைத்து பயந்தபடியே எங்கள் பயணத்தை கொழும்பு நோக்கித் தொடர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் மறக்கமுடியாத ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்வோம்....&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, பெங்களூரு, டெல்லி புத்தகக் கண்காட்சிகளுடன் இப்புத்தகக் கண்காட்சியை என் மனம் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது. அது எப்படி சென்னை புத்தகக் கண்காட்சியையும் கொழும்பு புத்தகக் கண்காட்சியையும் ஒப்பிடலாம் என்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளவும். மிகப் பெரிய அளவுகோல்கள் இல்லாமல், நாம் இதனைச் செய்யவில்லையே என்னும் பெரிய ஆதங்கமே என் ஒப்பிடுதலின் மையப்புள்ளி.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிட்டால், இந்தக் கொழும்பு புத்தகக் கண்காட்சி கொஞ்சம் சிறியது. ஆனால் உள்ளரங்க அமைப்புகளின் சுத்தம், டெல்லியில் காண இயலாதது. பெங்களூரு புத்தகக் கண்காட்சி நல்ல சுத்தத்துடன் நடைபெற்றாலும், கொழும்பு புத்தகக் கண்காட்சியில் பன்னாட்டுத் தரம் அதில் இல்லை. இவற்றோடு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒப்பிடுவதே நாம் இவற்றுக்குச் செய்யும் அவமரியாதை என்றாலும், இப்படி ஒப்பிடாமல் நம்மால் வளர இயலாது என்பதால்... எனக்கே முடியலை. சென்னையில் 33 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். நமக்குத் தெரிந்ததெல்லாம் வெற்று பரப்பு அரசியல் மட்டுமே. ஒரு பதிப்பகத்துக்கு இதுக்கு மேல இடம் கொடுக்காத, அங்க அதை வைக்காத, இது யார் ஏன் உன் புத்தகத்தை விக்கிறாங்க என்பது போன்ற மிகவும் மட்டமான அரசியல் மட்டுமே நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் நாம் பல புத்தகக் காட்சிகளைச் சென்று பார்ப்பதில்லை. எப்படியெல்லாம் மிக மோசமாகப் பின் தங்கியிருக்கிறோம் என்று ஆராய்வதில்லை. புத்தகக் கண்காட்சியைத் திறக்க ஜெயலலிதாவோ கருணாநிதியோ வருவார்களா என்பதில் குறி வைத்துத்தான் கண்காட்சியையே தொடங்குகிறோம். புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகம் விற்பது மட்டும்தான் என்னும் ஒற்றைக் குறிக்கோளில் ஊறிப் போய் இருக்கிறோம். என்றாவது கருணாநிதியாவது ஜெயலலிதாவாவது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள கழிப்பறைக்குப் போக நேர்ந்தால் அப்போது தெரியும் அதன் அவமானம் புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு புத்தகக் கண்காட்சி முழுக்க முழுக்க மையப்படுத்தப்பட்ட குளிர் சாதன அறையில் நடந்தது. விளக்குகளால் அந்த இடமே பகல் போலப் பளபளத்தது. வழியெங்கும் புத்தகக் கண்காட்சியைப் பறை சாற்றும் பதாகைகள். கண்ணில் காணும் இடமெல்லாம் விளம்பரங்கள். புத்தகக் கண்காட்சி நடக்கும் சாலையின் இரு மருங்கும் புத்தகக் கண்காட்சியைச் சொல்லும் விளம்பரங்கள். கொஞ்சம் மிகையாகச் சொல்வதென்றால், அதைப் பார்வையற்ற ஒருவரால் கூட உணர்ந்துவிடமுடியும். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை, முக்கிய இடங்களுக்கு இரண்டு இலவசப் பேருந்துகள். தொடர்ந்து உயர்தர மொழியில் அறிவிப்புகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பாளர்களுக்கு விசாரணையின்றி மரண தண்டனை தரலாம். யாரோ ஒரு நிர்வாகி பேசுவார். வணக்கம். ஹலோ, கொஞ்சம் பேசாம இருங்க. வணக்கம். புத்தகக் கண்காட்சிக்கு... புத்தகக் காட்சிக்கு வந்திருப்பவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.. வரவேற்கிறோம். புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளது. புத்தகங்களை தொலையாமல் பார்த்துக்கொள்ளப் படுவீர்கள் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இப்படி என்னவெல்லாமோ பேசுவார்கள். பேசிக்கொண்டிருக்கும்போதே அங்க என்னப்பா என்றெல்லாம் பக்கத்தில் பேசிக்கொள்வார்கள். அதுவும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பாகும். நீண்ட அரங்கில் பின்னால் உள்ளவர்களுக்கு அவர்கள் பேசுவதே கேட்காது. அந்த அழகில் இருக்கும் ஒலிபெருக்கிகள். கொழும்பு பன்னாட்டுப் புத்தக நிலையத்தில் இந்த ஒலிபரப்புக்க்கென்றே தனியான தனித்துவம் பெற்ற குழு. கூட்டம் உள்ள நேரத்தில் அதிக ஒலி வைத்துப் பேசினார்கள். இதெல்லாம் சின்ன விஷயம் என்னும் மனப்பான்மைதான் நம்மை நசிந்து போகச் செய்கிறது. இத்தனைக்கும் கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடப்பது இது 12ம் வருடம். 33 வருடங்கள் அனுபவம் உள்ள நாம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின் தங்கியிருக்கிறோம். குறைந்தபட்சம் இதெல்லாம் தேவை என்னும் மனப்பான்மையாவது நமது புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு வருமா எனத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் போயா நாள் (பௌர்ணம் தினம், இலங்கைத் தமிழில் பூரண தினம் என்று அறிவித்தார்கள்) விடுமுறை நாள். பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை. மது விற்கக்கூடாது, மாமிசம் விற்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டார்கள். (உண்மையா எனத் தெரியவில்லை.) தனிப்பயிற்சியும் வைக்கக்கூடாதாம். அனைவரும் புத்த விகார்களுக்குச் செல்வதற்காக இந்த ஏற்பாடாம். என்ன ஒரு அதிகாரம்! தமிழ்நாட்டில் அமாவாசை அன்று விடுமுறை விட்டு, மது விற்கக்கூடாது, கோவிலுக்குச் செல்லுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும்? அப்படி செய்யாமல் இருக்கும்வரை மட்டுமே நம் நாடு இந்தியா. விடுமுறை நாளில் கூட்டம் குவிந்துவிட்டது. ஒரு கட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலவில்லை. நாங்களே வெறும் பார்வையாளராக மாறிப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல கடைகளில் வரிசையில் நின்று உள்ளே போனார்கள். சார்சவி, எக்ஸ்போ கிராபிக்ஸ் போன்ற அரங்குகள் எல்லாம், உள்ளே நுழையும் வழியை அடைத்துவிட்டன. கடைக்குள்ளே இருப்பவர்கள் புத்தகங்களை வாங்கிவிட்டு வெளியில் வந்த பின்புதான், வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். வெளியில் இருப்பவர்கள் பொறுமையாக வரிசையில் நின்றார்கள். சொர்க்க வாசல் திறந்ததும் பக்தர்கள் திமுதிமுவென்று உள்ளே ஓடுவது போல, அரங்கின் கதவு திறந்ததும் வெளியில் காத்திருந்தவர்கள் உள்ளே ஓடினார்கள். நம் ஊரில் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் அரங்கை மூடி வைத்து, கொஞ்சம் காத்திருங்க என்றால், யார் காத்திருப்பார்கள் என நினைத்துப் பார்த்தேன். அப்படி காத்திருக்கும் நாள்தான் பதிப்பாளர்களுக்கான பொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அமைப்பாளர்கள் செய்த பிழை என்றால், அரங்க நடைபாதையைச் சிறியதாக அமைத்ததுதான். இதனால் கொஞ்சம் பேர் போனாலே அங்கே ஜாம் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலும் விடுமுறை நாள்களில் யாராவது இது குளிரூட்டப்பட்ட அறை என்று சொன்னால் சிரிப்பார்கள். அந்த அளவுக்குக் கூட்டம், வெக்கை. மற்ற நாள்களில் அதே அரங்கத்தில் குளிரில் நின்றுகொண்டிருந்தோம். தேடித் தேடி ஏசியை அணைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு புத்தகக் கண்காட்சியின் இன்னொரு பிரச்சினை, அரசு பள்ளி கல்லூரிகளுக்குத் தரும் பண ஒதுக்கீடு. இதிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது.&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியை ஒட்டி, இலங்கை முழுவதுமுள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என எல்லாவற்றுக்கும் அரசால் பண ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ், சிங்களப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 65 ஆயிரம் இலங்கை ரூபாய்! ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கல்லூரிகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். பல்கலைக்கழகங்கள் எவ்வளவு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாமாம்.&lt;br /&gt;இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்பது விதி. எனவே இந்தத் தொகையைச் செலவிட, எல்லாப் பள்ளிகளும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகின்றன. கிட்டத்தட்ட 30 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். திரிகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து என எல்லாப் பகுதியிலிருந்தும் வந்து புத்தகங்கள் வாங்கினார்கள். இதன் தோல்வி என்று நான் பார்ப்பது, இங்கே வருபவர்கள் பள்ளிக்கு என பள்ளிப் பாடங்கள் தொடர்பான புத்தகங்களை மட்டுமே வாங்குவதைத்தான். இதனால் பள்ளிகளுக்கு விற்பதற்கென்றே ஒரு சந்தை உருவாகி, அது தொடர்பான புத்தகங்களையே பதிப்பிக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியும் இந்த அரசு கல்லூரிகளையும் பள்ளிகளையும் சார்ந்திருப்பது போன்ற தோற்றம், குறிப்பாக பதிப்பாளர்கள் மத்தியில், ஏற்பட்டுவிடுகிறது. அரசு ஒதுக்கும் பணத்தை, பள்ளிப் பாடங்கள் அல்லாத, பொதுப் புத்தகங்களை வாங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்குமானால் அது நல்லது. இல்லையென்றால், இந்த விற்பனையை மையப்படுத்தி மட்டுமே புத்தகங்கள் தயாரிக்கும் வழக்கம் நிலைப்பெற்றுவிடும். இதில் இன்னொரு விஷயம், பில்லில் உள்ள தொகையைவிடக் குறைவாகப் பணம் கொடுத்து, பில்லில் உள்ள பணத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்வது. இதை எல்லாருமே அங்கே ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லை என்றால், பள்ளிகள் வேறு பதிப்பாளரிடம் இருந்து வாங்கிடுவார்கள் என்று அச்சம் கொள்கிறார்கள். எல்லா பதிப்பாளர்களும் சேர்ந்து இதனை எதிர்த்தால், பள்ளிகள் செல்ல வேறு இடமில்லை என்பது இவர்களுக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டு அரசும் புத்தகக் கண்காட்சியை ஒட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுப் பள்ளிகளுக்கும், அரசு மானியம் பெறும் பள்ளிகளுக்கும் ஒதுக்கலாம். அதனை அந்த அந்தப் பகுதியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்று கட்டாயப் படுத்தலாம். இதனால் பள்ளிகளுக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் ஏற்படுவதோடு, நாமே அறியாமல் ஒரு பெரிய நூலகம் பள்ளிகள் தோறும் உருவாகும். அதுமட்டுமின்றி, எங்கெல்லாம் புத்தகக் கண்காட்சி இல்லையோ அங்கெல்லாம் நடத்தியே தீர வேண்டிய வியாபார நிர்ப்பந்தமும் ஏற்படும். இது அந்த அந்தப் பகுதி மக்களுக்கும் நல்லது. கருணாநிதியின் கால்ஷீட் வாங்குபவர்கள் இதனையும் பேசி வாங்குவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொழும்பில் இருந்த மூன்று நாள்களில், முதல்நாள் மிதமான மழை. மற்ற இரண்டு நாள்கள் முழுவதும் நல்ல மழை. ஆனால் மழையோடு வாழப் பழகிவிட்டவர்கள் போல, மழை நாள்களிலும் குடையோடு புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் பெரிய சாதனை அதற்குக் கூடும் மக்கள் கூட்டம். விடுமுறை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு இணையான கூட்டத்தை நாம் சென்னையிலும் பார்க்கமுடியும். ஆனால் வேலை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் அதிகம். இன்னொரு ஆச்சரியம், காலை கடும் கூட்டம் தொடங்கி மாலையில் கூட்டம் ஓய்ந்துவிடுவது. சென்னையில், பெங்களூரில் எல்லாம் மாலைதான் கடும் கூட்டமே வரத் தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியைப் போல கொழும்பிலும் பல்வேறு ஹால்களில் புத்தக அரங்கங்கள் அமைக்கப்படுவதால், சென்னை, பெங்களூருவைப் போல, இந்த வழியில் செல்லவேண்டும், நாளை அந்த வழியில் செல்லவேண்டும் என்னும் குழப்பங்கள் இல்லை. அதேபோல் ஒரு பதிப்பாளருக்கு ஓரிடம்தான் என்னும் பிரச்சினையும் இல்லை. ஒரு பதிப்பாளர் விரும்பினால் ஒவ்வொரு ஹாலிலும் அரங்கங்கள் அமைத்துக்கொள்ள முடியும். சென்னை புத்தகக் கண்காட்சியை பன்னாட்டுத் தரத்தில் டிரேட் செண்டரில் நடத்தினால், நாமும் இப்படிச் செய்யமுடியும். இல்லை என்றால், அரங்கம் எங்கே கிடைக்கிறதோ அதைப் பொருத்தே விற்பனை என்னும் நிலையை நம்மால் கடக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு அரங்கில் 5 பெண்கள் வேலை பார்த்தார்கள். சென்னையில் பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்வது பெரிய தொந்தரவு. (பெண்ணியவாதிகள் மன்னிக்க - இது யதார்த்தம் சார்ந்தது!) அவர்களுக்கு சரியான கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி சென்னையில் கிடையாது. மேலும் இரவு 8 மணிக்கே வீட்டுக்கு வந்து பழக்கப்பட்டுவிட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கே இரவு 9 மணிக்கு புத்தகக் கண்காட்சி முடிந்து, பெண்கள் இரவு 11.30க்குத்தான் வீட்டுக்குப் போனார்கள். மறுநாள் காலை புத்தகக் கண்காட்சிக்கு வர 6.30 மணிக்கே தயாராகிவிடுகிறார்கள். நம் அரங்கில் ஏதேனும் பெண்களை வேலைக்கு வைத்தால், அங்கே ஓர் இளைஞன் வந்து ஏதேனும் கேள்வி கேட்டால், அந்தப் பெண் பதில் சொல்லாமல் மெல்ல விலகி விடும் ஆபத்து அதிகம். கொழும்புவில் பெண்கள் மிக சகஜமாக ஆண்களுடன் பேசுகிறார்கள். பெரிய அளவில் சங்கோஜமெல்லாம் இருக்கவில்லை. இத்தலைமுறையைச் சேர்ந்த கொழும்பு வாழ்த் தமிழ்ப் பெண்களுக்கு பெரும்பாலும் சிங்களம் தெரிந்திருக்கிறது. இதுவும் பெரிய பலம். அவர்கள் பொட்டு வைத்திருந்தால் தமிழர்கள் என்று கண்டுகொள்ளலாம் எனச் சொன்னார் ஒருவர். இது போக பொட்டு வைத்துக்கொள்ளாத கிறித்துவ, இஸ்லாமியப் பெண்களைக் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்துக்கொண்டேன். ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தமிழர்களே என்றும் சொன்னார் அவர். (இதையெல்லாம் நான் ஆராய்ந்து சரியா தவறா எனப் பார்க்கவில்லை. கேட்டதைப் பகிர்ந்துகொள்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதால், எங்களால் அதிகம் வெளியில் சுற்றிப் பார்க்க இயலவில்லை. கொச்சுக்கடை சிவன் கோவிலுக்குச் சென்றோம். சூர்யாஸ் ஹோட்டலுக்குச் சென்று சைவ உணவு சாப்பிட்டோம். மதுராஸ் கடைக்குச் சென்றோம். இலங்கைக்காரர் ஒருவர் நடத்தும் ஹோட்டல், தமிழ்நாட்டு வுட்லாண்ட்ஸுடன் தொடர்புடையது என்று அங்கிருப்பவர் சொன்னார். உணவின் தரம் உயர்தரம்.கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு மயூரன் வந்திருந்தார். அவர் பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பின் 50 வருடப் பாரம்பரியமுள்ள ஒரு புத்தக விற்பனையாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்த பத்து நாள்களில் 10 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என்றார். 60% ஆங்கிலப் புத்தகங்கள், 40% சிங்களப் புத்தகங்கள் என்றார். அப்படியானால் 4 மில்லியன் இலங்கை ரூபாய் சிங்களப் புத்தகங்கள் விற்பனை. அதாவது கிட்டத்தட்ட 16 லட்சம் இந்திய ரூபாய்க்கு சிங்களப் புத்தகங்கள் விற்பனை மட்டும். அப்படியானால் இதைவிட மிகப் பெரிய பதிப்பகங்கள் எப்படியும் இதைப் போல 5 மடங்கு விற்பனை செய்திருக்கலாம். இதில் சோகம் என்னவென்றால், இதில் பெரிய விழுக்காடு விற்பனை பள்ளி கல்லூரிகளை நம்பி மட்டுமே என்பதுதான். பல பதிப்பகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கென தனி பில்லிங் பிரிவே வைத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மொழியில் நிறைய தேவையான ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன என்றும், இது தமிழில் இன்னும் நிகழவில்லை என்றும் பத்ரி சொன்னார். அதன் சாதக பாதக விஷயங்கள் குறித்தும் பேசினார். இது பற்றி பத்ரி எழுதுவார் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அங்கிருக்கும் கடைகளைச் சுற்றிப் பார்த்தேன். புத்தகங்களின் விலை ஒப்பீட்டளவில் இந்திய விலையைவிட அதிகமாகவே இருந்தன. அங்கே புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவே அதற்குக் காரணம் என்று ஒரு பதிப்பாளர் தெரிவித்தார். அதிலும் தமிழ்ப்புத்தகங்களை 500 என்றளவில் மட்டுமே அச்சிடுகிறார்கள் என்பதால் விலையேற்றத்தைத் தவிர்க்கமுடியவில்லை என்றார் அவர். தமிழில் நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு என்பன வெகு சொற்ப அளவிலேயே இருந்தன. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் எல்லாமே ஆய்வு நோக்கிலேயே எழுதப்பட்டிருந்தன. அதனால் நான் பலவற்றை வாங்கவில்லை. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் வெகு சொற்பமே. பெருமளவில் இங்கே இருந்து அங்கே சென்று விற்கப்படும் புத்தகங்களே. அவற்றை அங்கே வாங்குவதில் பொருளில்லை என்பதால் வாங்கவில்லை. இலங்கை அரசாங்கமே பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அனைத்தும் முக்கியமான நூல்கள். கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்ட இப்புத்தகங்கள், பழைய புத்தகக் கடைகளில் நிறையக் கிடைத்தன. அந்தப் பழம் தமிழில் என்னால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களையும் படித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வராததால் நான் நிறைய வாங்கவில்லை. நான் வாங்கிய புத்தகங்கள்: வியத்தகு இந்தியா (கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியீடு, The wonder that was India என்னும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு, 1951ல் மொழிபெயர்க்கப்பட்டது!), அசன்பே சரித்திரம் (ஈழத்து முதல் தமிழ்நாவல் என்று அறியப்படுவது), இணைபிரியாத் தோழர் (அம்பயஹலுவோ என்னும் நன்கு அறியப்பட்ட சிங்கள சிறுவர் நாவலின் தமிழ்வடிவம்), சூள வம்சம் கூறும் இலங்கை வரலாறு (மகா வம்சம் போல, இலங்கையின் பின் வரலாற்றைச் சொல்லும் நூல் என நினைக்கிறேன், அந்த நூலில் தரப்பட்டுள்ள விவரத்தைப் பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்), இலங்கை நாட்டார் கதைகள் போன்றவை மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களை வாங்க நினைத்தேன். யாரிடம் கேட்டு எங்கே வாங்குவது எனத் தெரியவில்லை. நான் கேட்ட நண்பர்கள் எல்லாம் திரைப்படம் பார்க்காதவர்களாகவே இருந்தார்கள். அப்படியே பார்த்திருந்தாலும் விஜய், அஜித், ரஜினி, கமல் என்றுதான் சொன்னார்கள். அடுத்தமுறை வாங்கவேண்டும். யேசுராசாவின் கட்டுரை வழி, 1993 வரை 28 தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக அறிகிறேன். குத்துவிளக்கு ஒரு முக்கியமான படம் என்று எழுதியிருந்தார். சில படங்கள் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். கிடைக்கவில்லை. அல்லது நான் சரியாகத் தேடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நான் சந்தித்த சில நண்பர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிப் பலர் கேட்கிறார்கள். உண்மையில் அங்கிருந்த 9 நாளில், பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, இலங்கையின் பெரும்பாலான, பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பார்க்காமல் இதைப் பற்றி எழுதுவது சரியல்ல. நான் கண்ட பகுதிகள் யாழ்ப்பாணமும், கொழும்பும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டிலுமே பாதுகாப்பு மிக முக்கியமான விஷயமாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதைவிட மிகக் கடுமையான பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது மெல்ல மெல்ல பாதுகாப்பைக் குறைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள ராணுவ வீரர்களும் காவல்துறை வீரர்களும் ஒருவித அமைதியான மனநிலையில் இருப்பதாகத்தான் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர் பற்றிய பயம் குறைந்துவிட்டதால், யாழ்ப்பாணத்தில் இரவுகளில் 9 மணி வரை எல்லாம் கடைகள் திறந்திருக்க ஆரம்பித்திருக்கின்றன. முன்பெல்லாம் கடைகளை மாலை 4 அல்லது 5 மணிக்கே பூட்டிக்கொண்டு போய்விடுவார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் மிக இயல்பான வாழ்க்கையைப் பார்க்கமுடிந்தது. நாங்கள் வேனில் சென்றபோது கிட்டத்தட்ட 4 முறை நிறுத்தப்பட்டு, வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை என்றால், வேன் டிரைவரிடம் மட்டும் பேசி, ஆவணங்களைச் சரி பார்த்து அனுப்பிவிடுகிறார்கள். டிராக் மாறி வந்தால், அதிக வேகத்தில் வந்தால் உடனே அங்கே ஃபைன் கட்டச் சொல்லிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தின் விளையாட்டு மைதானங்களில் நிறைய சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. முன்பெல்லாம் விளையாடுவார்களா என்று உடனிருந்த இலங்கைத் தமிழர்களிடம் கேட்டபோது, விளையாடுவார்கள் ஆனால் எப்போது செல் வெடிக்கும் என்ற பயத்துடனேயே விளையாடுவார்கள் என்று சொன்னார்கள். இப்போது அந்தப் பயம் முற்றிலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு இலங்கையின் முக்கியக் கவலை, அங்கிருக்கும் அண்டர் வேர்ல்ட் தாதாக்கள்தான் என்றார் ஒரு நண்பர். இவர்களை ஒழிப்பதையே இப்போதைக்கு முக்கிய லட்சியமாக அரசு வைத்திருக்கிறது என்றார் அவர். நிறையப் பேர் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். இதைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து தினசரிகளில் காணமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அங்கிருந்த சமயத்தில் எதிர்பாராத விபத்தொன்றில் டேங்கர் ஒன்று வெடித்து இரண்டு சீனர்கள் உட்பட சிலர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் இது சாதாரண விபத்தா அல்லது புலிகளின் எழுச்சியா என்னும் ஆசை தோய்ந்த சந்தேகம் இருப்பதை உணர முடிந்தது. ஒருவகையில் நிம்மதியுடனும் இன்னொரு நிலையில் இனி என்னாகும் என்னும் கவலையோடும் அவர்கள் இருப்பதாகத்தான் தோன்றியது. நான் பார்க்காத மற்ற இடங்களில் என்ன நிலை என்று தெரியவில்லை. மேலும், நான் பார்த்த இடங்களிலும் நான் சொன்னதுதான் சரியான நிலை என்று அறுதியிட்டும் கூற இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* - * -&lt;br /&gt;&lt;br /&gt;இனி இங்கே எழுதப்போவது நாங்கள் கண்ட மனிதர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டவை மட்டுமே. பெரும்பாலும் நானே நேரடியாகக் கேட்டவை, சில நான் நேரடியாகக் கேட்காமல், என்னுடன் வந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டவை. இதை நான் அப்படியே பகிர்ந்துகொள்கிறேனே ஒழிய, இதன் அரசியல் சரி தவறுகளுக்குள் நான் நுழையவில்லை. இதில் உண்மை பொய் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவில்லை. மேலும், தமிழர்கள் அவதிப்படும் இடங்களுக்குச் சென்று பார்த்தெல்லாம் எழுதவில்லை. அங்கிருந்த தமிழர்கள் ஓரிருவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் ஆண்டுக் கணக்கோடு, நிலவியல் விவரணையோடு தெளிவாகச் சொன்னார்கள். என்னால் அதனை சரியாகச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. மேலும் அவர்களது யாழ்ப்பாண தமிழ் வழக்கு மொழி அதி வசீகரமுடையது. சோதனை என்னும் பெயரில் அதனை எழுதி அழகிய தமிழைக் கொடுமைப்படுத்த விரும்பவில்லை. எனவே அப்படியே எனக்குத் தெரிந்த தமிழில் எழுதுகிறேன். நம்மிடம் பகிர்ந்துகொண்ட நண்பர்களிடம் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்து அதனையே வலையேற்றிவிடலாம் என்று எண்ணியபோது அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள். தங்கள் கருத்து உலகெங்கும் பரவவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது, (ஒருவர் ஆவேசமாக பிபிசி வரைக்கும் இதெல்லாம் தெரியணும் என்றார்) அதே சமயம் தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்பதிலும் கவனம் உள்ளது. இனி நீங்களே படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நண்பருக்கு ஒரு மனைவி, மூன்று குழந்தைகள். முல்லைத்தீவில் பிறந்தவர். மட்டக்களப்பில் வாழ்பவர். வேலை நிமித்தம் சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்திருக்கிறார். தற்போது யாழ்ப்பாணத்தில், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் வீட்டு மராமத்து வேலைகள். கலவையாக அவர்கள் தங்களது வாழ்க்கையில் இருந்து சொன்ன விஷயங்கள் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது தம்பி இயக்கத்தைச் சேர்ந்தவர், அதாவது சேர்க்கப்பட்டவர். இயக்கத்தில் 4 மாதங்கள் மட்டுமே இருந்திருக்கிறார். காலில் ஒரு குண்டு பாய்ந்து, இன்னும் அக்குண்டு எடுக்கப்படாமலேயே உள்ளது. இப்போது அவருக்கு 29 வயது இருக்கலாம். திருமணம் ஆகிவிட்டது இப்போது. இயக்கத்தில் தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை குறைந்தபோது, இயக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வந்து தமிழர் பகுதியில் இருக்கும் இளைஞர்களைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். இதனை அறிந்த நம் நண்பரும் அவரது குடும்பமும், அந்த நண்பரின் தம்பியை மறைத்து வைத்துவிட்டது. இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்தபோது அவரது தம்பி இல்லாததால், அவருக்குப் பதிலாக நம்மோடு பேசிய நண்பரையே கூட்டிக்கொண்டு போய்விட்டார்களாம். தம்பியைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, இவரைக் கூட்டிச் செல்லலாம் என்று சொல்லிவிட்டார்களாம். வேறு வழியின்றி, தம்பியை விட்டுவிட்டு, இவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி அங்கு சேர்ந்த அந்தத் தம்பி 4 மாதங்கள் அங்கே இருந்திருக்கிறார். பின்னர் கடைசி கட்டப் போரில் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். இயக்கத்திலுள்ளவர்களை சரணடையச் சொல்லியபோது இவரும் சரணடைந்துவிட்டார். இவர் இருந்தது 4 மாதங்கள் மட்டுமே என்பதாலும், இவர் மிக அடிப்படை நிலையில் மட்டுமே பணி புரிந்திருந்ததாலும் அவருக்கு ஒரு வருடம் 7 நாள்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் நண்பர். இன்னும் பலர் வீட்டில் சிறார்களை அழைத்துச் சென்று, மறுநாளே ஒரு பெட்டியில் கொண்டு வந்து தருவார்களாம், அவன் இறந்துவிட்டான் என்று. இப்படி இறந்ததாக நினைத்துவிட்ட இரண்டு பையன்களை இப்போது உயிருடன் பார்த்துக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியானால் புதைக்கப்பட்டது யார் என்று தெரியவில்லை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் (1985?) இலங்கை அரசு வசம் இருந்த நேரம். புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத்துவிட்டது. புலிகளின் கட்டளை, யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்லவேண்டும் என்பது. அங்குள்ள தமிழ் மக்கள் புலிகளின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததால், கையில் கிடைத்த பொருள்களுடன் வன்னி நோக்கிச் சென்றது. கிட்டத்தட்டட் 5 லட்சம் பேர் என்றார் அவர். இரண்டு நாளாக கிட்டத்தட்ட 40 கிமீ நடந்ததாகச் சொன்னார். யார் உணவு தருவார்கள் என்றபோது, பல தமிழர்கள் அங்கங்கே உணவு உண்டாக்கிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் என்றும், வன்னியிலும் உணவெல்லாம் தயாராகவே இருந்ததாகவும் சொன்னார். ஆனால் அத்தனை எளிதில் அவர்களை வன்னிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை ராணுவம். இவர்கள் செல்லும் வழியெங்கும் குண்டுகள் வீசி, பல பொதுமக்களைக் கொன்றிருக்கிறார்கள். எப்போது என்ன நடக்கும் என்ற பதைபதைப்பில்தான் வன்னி சென்றதாகச் சொன்னார். இவர்கள் வன்னி சென்றதும், பின்னாலேயே இயக்கமும் வன்னி வந்துவிட்டது என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது எங்கே எதற்காக செல் வெடிக்கிறது என்பதே தெரியாது. வீடெங்கும் பங்கர் அமைத்து வைத்துக்கொள்வோம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் பங்கரை நன்றாகவே வடிவமைத்துக்கொள்வார்கள். பலர் உடைந்துபோன பலகையின் மீது தென்னம்பாளையைப் போட்டு (இன்னும் நிறைய சொன்னார், ஞாபகமில்லை) பங்கர் உருவாக்கிக்கொள்வார்கள். செல் விழவும் குழந்தைகள் பழக்கப்படுத்தியதைப் போல அங்கே சென்று ஒளிந்துகொள்ளும். கடும் மழையில் பங்கரில் நீர் சேர்ந்திருக்கும். பாம்புகளும்கூட குடிவந்திருக்கும். அது தெரியாமல் அங்கே ஒளிந்துகொண்டு, பாம்பு கொத்தி இறந்தவர்கள் அநேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை என்பது எப்போதும் தமிழ் இயக்கங்களுக்கும் ராணுவத்துக்கும்தானே ஒழிய, தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பெரிய அளவில் இல்லை. ஒருவித இறுக்கம் இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரிய பெரிய சண்டைகள் எல்லாமே இயக்கத்துக்கும் ராணுவத்துக்கும்தான் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி 3 மாத காலக்கட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுவிட்டோம். முல்லைத் தீவில் இருந்தோம். அரசு எச்சரிக்கை விட்டு சரணடையச் சொல்கிறது. இயக்கமோ எங்களை சரணடைய அனுமதிக்கவில்லை. மீறிச் சென்றால் இயக்கமே எங்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. மட்டகளப்பு, சண்டை நடக்கும் பகுதி, அதைத் தாண்டி அந்தப் பக்கத்தில் கேம்ப். நாங்கள் இங்கிருந்து கேம்புக்குச் செல்லவேண்டும். கேம்ப்பில் இருந்து சண்டை நடக்கும் பகுதிக்கு அரணாக பல தடைகளை இயக்கம் ஏற்படுத்தியிருந்தது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. அவர்களும் சரியாகப் பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இயக்கத்தின் வசம் ஆளே இல்லை என்னும் நிலையில் சிறுவர்களை பணிக்கு கட்டாயமாக அமர்த்தவேண்டியது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இயக்கத்தைச் சேர்ந்த பலர் போரில் ஈடுபட மனமில்லாமல் ராணுவத்திடம் சரண்டைந்துகொண்டிருந்தார்கள். நம் நண்பர் முல்லைத்தீவிலிருந்து தன் மனைவி, மூன்று குழந்தைகளிடமிருந்து இயக்கத்திடமிருந்து தப்பித்து கேம்ப் சொல்ல முடிவெடுத்தார். இடையில் சிறிய சாக்கடை போன்ற ஒன்றைக் கடக்கவேண்டியிருக்கும். அங்கே இருப்பதெல்லாம் மல மூத்திரம்தான். வேறு வழியில்லை, அதனைக் கடக்கவேண்டும். நண்பர் தன் இரு மகன்களைக் கூட்டிக்கொண்டு அதில் இறங்கிவிட்டார். அவருடன் பல தமிழர்கள் அப்படிக் கடந்தார்கள். ஆனால் பாதியில் இயக்கம் தப்பிக்க நினைத்தவர்களை வளைத்து, அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. நண்பரின் மனைவியும், மூன்றாவது கைக்குழந்தையும் (ஒன்றரை வருடம்) அந்தப் பக்கம் இயக்கத்தின் பக்கத்தில். எப்படியோ தப்பிய நமது நண்பரும் அவரது இரண்டு மகன்களும் இந்தப் பக்கம். ராணுவம் தப்பி வந்தவர்களையெல்லாம் வண்டி வைத்து கேம்புக்கு அழைத்துச் சென்றது. அங்கு, தப்பி வந்தவர்களிடம், இயக்கத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். தப்பி வந்தவர்களில் பலரது குடும்பம் அங்கேயே இருந்ததால், பலரும் தாங்களாகவே முன் வந்து இயக்கம் எப்படியெல்லாம் அரண் அமைத்திருக்கிறது, எந்த வழியில் சென்றால் பிடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில் ராணுவம் அப்பகுதியை நோக்கி முன்னேறியது. இயக்கம் தன் பிடியில் உள்ளவர்களை இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி, தான் தப்பிக்க நினைத்து ஓடியிருக்கிறது. அப்போது நடந்த கடும் சண்டையில் உயிரிழந்த பொது மக்கள் பலர். நண்பரின் மனைவி தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு, தான் தப்பிக்கவேண்டிய பகுதியில் சண்டை நடப்பதால், அதன் எதிர்வழியாகச் சென்று கேம்ப்புக்குப் போய்விடலாம் என நினைத்து, எதிர்ப்பக்கமாக ஓடியிருக்கிறார். வழியெங்கும் பொது மக்களின் பிணங்கள், தலைகள், கைகள், ரத்தம். அதற்குமேல் அந்த வழிச் செல்ல முடியாது எனக் கருதி, வேறு வழியின்றி, முதலில் நண்பர் தப்பித்த அதே வழியிலேயே சென்றிருக்கிறார். அதே முத்திர மலக் குளத்தின் வழிச் செல்லும்போது, தன் முதுகில் சுமத்திக்கொண்டு வந்த கைக்குழந்தை அந்த நீரில் விழுந்துவிட, இவருக்கும் மயக்கம் வர, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. யாரோ ஒரு பெண் கைக்குழந்தையைக் கைப்பற்றித் தூக்கி எதிர்ப்புறம் விட்டிருக்கிறார். அவரே இவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு இழுத்துவந்து அக்கரையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். விழித்துப் பார்த்தவருக்கு பெரிய ஆச்சரியம். எப்படியோ தப்பித்து குழந்தையுடன் கேம்ப் சென்றிருக்கிறார். நமது நண்பர் ஒரு கிறித்துவர். மரியாள்தான் தன் குழந்தையைக் காப்பாற்றியது என்றும், யேசுவே தன் மனுஷி ஜீவித்திருக்கக் காரணம் என்றும் கூறினார். இப்படி தப்பித்து வந்தவர்களுள், கேம்ப் பக்கம் ஓர் ஆணும் அவரது ஒன்றரை மாத சிசுவும் மாட்டிக்கொண்டு விட்டது. மனைவியோ இயக்கத்தின் பிடியில். பசிக்கு அழும் குழந்தைக்கு, ஒரு பெண்ணைப் பிடித்து பால் புகட்டச் சொன்னதாம் ராணுவம். அன்று சமைந்த பெண்கள் பற்றியெல்லாம் பல கதைகளைச் சொன்னார் நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்கிளப்பில் இருந்து கிளம்பும்போது, பெரிய குழி வெட்டி, அதனுள்ளே பாலிதீன் பையைப் போட்டு, மூன்று டிவி, கிரைண்டர் மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினெல்லாம் போட்டு, மூடி வைத்துவிட்டு வந்தாராம். எப்படியும் சில நாள்களில் திரும்பிவிடலாம் என்று நினைத்தாராம். ஆனால் இதுவரை அங்கே திரும்ப போகமுடியவில்லை. இன்னும் ராணுவத்தின் பிடியில் இருக்கும் அப்பகுதியில், கன்னி வெடிகள் பல இருப்பதால், அதனை நீக்கிய பின்பே மக்கள் வசம் ஒப்படைப்போம் என்று ராணுவம் கூறிவருகிறதாம். அழகான வீட்டைக் கட்டி இரண்டு ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார். இலங்கை மதிப்பில் 40 லட்ச ரூபாய் வீடு. அந்த வீட்டின் புகைப்படத்தைக் காட்டினார் நண்பர். இப்போது அந்த வீடு செல்லடித்து உருவமே இழந்துவிட்டிருக்கிறதாம். மேற்கூரைகள், விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் ராணுவத்தவர்களே கொண்டு சென்றுவிடுகிறார்களாம். அவரது பைக் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு வந்தாராம். அங்குள்ள பைக்களையெல்லாம் மக்களுக்கு மீண்டும் ஒப்படைப்பது என்று ஒரு கேம்ப் நடைபெற்றதாம். அதில் ஒன்றுக்கும் ஒப்பேறாத வண்டிகளை மட்டுமே மக்களுக்குத் தந்து, பெரிய கண் துடைப்பில் ஈடுபட்டார்களாம் ராணுவத்தவர்கள். இவரது நல்ல வண்டியை அவர்கள் தரவில்லையாம் இன்னும். இதே நிலைதான் இவரது நண்பரின் நல்ல வண்டிக்குமாம். இது போல பல வீடுகளின் பொருள்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி மூன்று மாத காலத்தில் பலசரக்குப் பொருள்களின் விலை தாறுமாறாக விற்கப்பட்டதாம். ஒரு கிலோ அரிசியின் விலை 12,000 இலங்கை ரூபாய். ஒரு கிலோ சர்க்கரையின் விலை 3,000 இலங்கை ரூபாய். கேம்பில் ராணுவம் அரிசியும் சர்க்கர
