tag:blogger.com,1999:blog-6037404.post8030162871657840559..comments2023-08-20T13:37:04.479+05:30Comments on நிழல்கள்: வலைக்கும்மிHaranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6037404.post-48964149519155739742008-02-12T11:18:00.000+05:302008-02-12T11:18:00.000+05:30அதிகம் அறியப்படாத தீவிர வாசகர்கள் வலைப்பதிவுகளில்எ...அதிகம் அறியப்படாத தீவிர வாசகர்கள் வலைப்பதிவுகளில்<BR/>எழுதுகிறார்கள் உ-ம் டி.சே.தமிழன்,<BR/>வளர்மதி.வேறு சிலர் திரைப்படங்களை, நூல்களை விரிவாக அலசி எழுதுகிறார்கள்<BR/>உ-ம் மதி கந்தசாமி.சன்னாசி போன்றவர்கள் அபூர்வமாக எழுதினாலும் அதில் புதிய பார்வை,<BR/>தனித்துவம் தென்படும். இதை எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்<BR/>போன்றவர்களிடம் பார்க்க முடியாது.<BR/>இன்னும் சிலர் நிகழ்கால போக்குகளை அலசுவதை<BR/>சிறப்பாக செய்கிறார்கள் உ-ம் பத்ரி,<BR/>வெங்கட். இப்படி வலைப்பதிவர்களில்<BR/>பல்வேறு ரசனைகள், சிந்தனைப் போக்குகள் வெளிப்படுகின்றன.<BR/>சுஜாதாவைத் தாண்டி இவர்கள்<BR/>எங்கோ சென்றுவிட்டார்கள்.<BR/>ஹரன் பிரசன்ன சுஜாதாவில்<BR/>நின்று கொண்டிருந்தால் யார்<BR/>என்ன செய்ய முடியும். சுஜாதாவால்<BR/>ஜமாலன் ஹே ராமிற்கு எழுதிய<BR/>விமர்சனம் போல் ஒன்றை என்றுமே<BR/>எழுத முடிந்ததில்லை. இது ஏன் என்று யோசித்து பார்த்துண்டா.<BR/>ஈழத்தமிழர்களின் வலைப்பதிவுகள்<BR/>காட்டும் உலகங்களை, அனுபவங்களை<BR/>தமிழ்நாட்டு சிற்றிதழ்,பெரிதழ்களில்<BR/>காண முடியாது. உள்ளடக்கத்தில்<BR/>வலைப்பதிவுகள் போக வேண்டிய<BR/>தூரம் அதிகம். இது 70 ஆண்டுகால<BR/>பாரம்பரியம் உள்ள சிறுபத்திரிகைகளுக்கும் பொருந்தும்.<BR/>வலைப்பதிவுகள் தமிழில் இன்றைக்கு எதையெல்லாம் எழுத முடியும் என்பதை காட்டுகின்றன. 4/5 ஆண்டுகளில் இது சாத்தியமாயிருக்கிறது,<BR/>எந்த ஒரு சிறு பத்திரிகை/ஜாம்பவான்<BR/>ஆதரவில்லாமல்.சுஜாதா வலைப்பதிவுகளை எதிர்கொள்ள முடியாமல் வெறுப்பினை எழுதியவர்தான்.<BR/>ஆனாலும் இன்னும் சிலர் தமிழில்<BR/>எழுத்தாளர்கள் என்றால் கனி மொழியில் ஆரம்பித்து, இறையன்பில்<BR/>முடிக்கிறார்கள். இவர்களால் சக<BR/>வலைப்பதிவாளர்களில் உள்ள படிப்பாளிகளை/எழுத்தாளர்களை<BR/>அடையாளம் காண முடியாமல்<BR/>தடுப்பது எது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-43805414663104831292008-01-27T05:04:00.000+05:302008-01-27T05:04:00.000+05:30ஜமாலன், உங்கள் கருத்துக்கு நன்றி. கொஞ்சம் முயன்று ...ஜமாலன், உங்கள் கருத்துக்கு நன்றி. கொஞ்சம் முயன்று எழுத நினைக்கும் யார்க்கும் வலைப்பதிவுலகம் சார்ந்த ஏமாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்பதே என் கணிப்பு. அதை மீறி அதிலிருக்கும் நல்ல விஷயங்களை, நாளைய நம்பிக்கைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.<BR/><BR/>நன்றி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-77323163205443252912008-01-27T02:05:00.000+05:302008-01-27T02:05:00.000+05:30வலைப்பதிவுலம் எதேச்சையாக எட்டு மாதங்களுக்கு முன்பு...வலைப்பதிவுலம் எதேச்சையாக எட்டு மாதங்களுக்கு முன்புதான் விபத்தாக எனத கணிப்பொறித் திரையில் வந்தது. ஆச்சர்யத்தடன் படித்தவுடன்... மறுநாளே சோதணையாக ஒரு பதிவை போட்டுப் பார்த்தேன். அது தொற்றிக் கொண்டுவிட்டது. போகட்டும் இந்த குறுகிய காலத்தில் அதன் ஆழ அகலங்களை முழுதாக வாசித்ததில்லை, இருப்பினும் உங்களது கருத்து எனது பதிவுலக அனுபவத்தில் உருவான உணர்வுகளை பிரதிபலிக்கிறது. ஆழமாக பதிவுலகை உள்வாங்கி மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் எழுதியுள்ளீர்கள். <BR/><BR/>பதிவுலகம் ஒரு மாற்று ஊடகமாக வருமா? என்பது இன்னும் எனக்குள் சந்தேகத்திற்குரிய ஒரு பிரச்சனையாகவே உள்ளது. காரணம் பதிவுலக எழுத்தை அச்சிற்கு கொண்டு செல்லும்போது வாசகர் பற்றிய புரிதலுடன் அதனை சீரமைக்க வேண்டிய சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனது பதிவுகளையும் உள்ளடக்கிய எனது கட்டுரைத் தொகுப்பை உருவாக்கும் பணியில் இந்த சிரமத்தை உணர்கிறேன். பதிவலகம் என்பது உடனடி மனவெழுச்சி சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. அச்சு என்பதற்கு இருக்கும் காலமும் வெளியும் சற்று பரந்தது. நிதானமானது. அறிவால் அசைப்போடப்படுவது. பதிவுலகம் உடனடித் தன்மை கொண்டதாக உள்ளது. உடனடியாக நாம் பெறும் பின்னோட்ட வசதியும் நமது கருத்தை உரசிப் பார்ப்பதற்கான வசதியும் இதில் உள்ள ஒரு வரப்பிரசாதம்தான். இதிலும் உள்ள சிக்கல் சிலவேளைகளில் பதிவெழுதும் எண்ணததையே சிதைத்து விடும் அபாயமும் உருவாகுகிறது. ஹிட் லி்ஸ்ட் என்கிற மனோபாவம் வளரவளர... எழுத்தும் நீர்த்து போகும் அபாயம் உருவாகுகிறது. அதனை நீங்கள் நன்றாகவே சுட்டியுள்ளீர்கள்.<BR/><BR/>அதேசமயம் பதிவுலகம் தரும் அலாதியான சுதந்திரம் என்பது சிந்தனை குறித்த உருவகத்தையே அடிப்படை புரிதலையே மாற்றி விடக்கூடியது. <BR/><BR/>அனானி முன்வைத்துள்ள பல கருத்துகளும் உங்களது பதிவின் தொடர்ச்சியாக இணைத்து வாசிக்கப்படவேண்டியவைதான். மற்றபடி குழு அரசியல், புகழ்போதை, அதிர்ச்சி மதிப்பு, என்பதெல்லாம் எல்லா இடங்களிலும் உள்ள குணாதிசியம்தான். தமிழில் அது அதிகம். எழுத்தையும் மொழியையும் அதிகார பீடங்களிலிருந்து அடித்து இறக்கிய ஒரு கலக அமைப்பாவே இதனை பார்க்கலாம் என்றாலும், இதில் சிக்கல்களும் இருக்கத்தான் செய்கிறது?<BR/><BR/>அன்புடன்<BR/>ஜமாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-50604149437460588192008-01-26T01:55:00.000+05:302008-01-26T01:55:00.000+05:30சிறு பத்திரிகை வாசகர் வட்டத்திற்கான அரிமுகம் என்கி...சிறு பத்திரிகை வாசகர் வட்டத்திற்கான அரிமுகம் என்கிர வகையில் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம். <BR/><BR/>ஆனாலும் அச்சு ஊடகம், இலக்கியத் தரத்தினோடான ஒப்பீடு அடிப்படையில் உங்கள் எதிர்பார்ப்புகளாகவே தோன்றுகிறது. அதை எதிர்பார்ப்பாக நீங்கள் முன் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக விமர்சனமாக்கிவிட்டீர்கள்.<BR/><BR/>யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்கிறபோது அது சாமான்யனுக்குமான தளமாகிறது. <BR/><BR/>எழுதுவதெல்லாம் இலக்கியமாயும், அச்சு வடிவத்திலும், மட்டுறுத்தலுக்குப் பின்னும் வெளிவரவேண்டும் என நினைப்பது ஒரூ புதிய களத்தை முற்றிலும் புரிந்து கொள்ளாத பார்வையாகவே படுகிறது.<BR/><BR/>மட்டுறுத்தல் என்பது எதற்கு? ஒரு ஆசிரியர் தன் வாசக வட்டத்திற்கேற்ப படைப்பை ஏற்கிறார், நிராகரிக்கிறார் திருத்துகிறார். இதை பதிவர்கள் தாங்களே செய்கிறார்கள்.<BR/><BR/>ஒரு பத்திரிகை ஒருவரின் படைப்பை நிராகரிக்க அந்த படைப்பின் தரம் மட்டும் காரணமல்ல (ஏற்றுக்கொள்ளவும் அப்படியே).<BR/><BR/>விகடன் ஆசிரியர் மட்டுறுத்தாத எழுத்தாளரெல்லாம் எழுத்தாளரா, என கேட்க ஆரம்பித்தால் எவரும் எழுதவே முடியாது.<BR/><BR/>இணைய எழுத்து அதன் எளிமைக்காகவே விரும்பப்படுகிறது. ஒரு ப்உத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து படிப்பது போல இதை படிக்க முடியாது. ஆழமான கருத்துக்களை இங்கே படித்துணர்வது கடினம். ஒரே ஒரு விண்டோவை திறந்து வைத்துக்கொண்டு படிப்பவர்கள் ரெம்ப குறைவு. டிஸ்ட்ராக்ஷனுக்கு மத்தியில், அலுவலுக்கு மத்தியில், சட்டென படித்து உனர்ந்து 'மன எழுச்சி' பெற பதிவுகல் உதவுகின்றன.<BR/><BR/>மன எழுச்சி எஸ் எம் எஸ் ஜோக்கிலிருந்தும் பெற இயலும் என்பது என் நம்பிக்கை. 1000 வார்த்தை கதைகளில் கிடைக்கும் இன்பம் ஒற்றை வரி ஜோக்கில் கிடைத்தால் தவறென முடியுமா?<BR/><BR/>பதிவுகளில் யார் வேணும்னா என்ன வேணும்னாலும் எழுதலாம் எனும் விதி மட்டுமே.. எழுதக் கூடத் தேவையில்லை.. பேசலாம், பாடலாம், படம் போடலாம்..<BR/><BR/>you tube படமெல்லாம் சிவாஜி மாதிரி இல்லையே என கவலைப் பட மாட்டீர்கள் என நம்புகிறேன்.<BR/><BR/>சிறு பத்திரிகை ஆசிரியரோ, வாசகரோ, இலக்கியவாதியோ, கம்யூட்டர் தெரிந்த பெட்டிக்கடை காரரோ அனைவரையும் எழுத ஊக்கப்படுத்தவேண்டும். <BR/><BR/>இவர் சொல்றதுதான் கருத்து இதுதான் எழுத்து என்கிற எல்லைகள் விரிவடைய வேண்டும். இப்படிப் பட்ட பக்கப் பார்வைகள் குறுகியவை.<BR/><BR/>எனக்குப் பிடித்ததுதான் சிறந்தது எனும் எண்ணம் நமக்கெல்லாருக்குமே உள்ளது. அது தவறானது என உணரூம்போது பார்வை இன்னும் பெரிதாகிறது.<BR/><BR/>உங்கள் விருப்பம் போல எழுதுங்கள். ஹரன் இப்படித்தான் எழுதுவார் என்கிற எல்லைகளை கடந்து பாருங்கள். You may rediscover yourself. Or just feel better about how you are now. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-85406716894467303192008-01-25T14:55:00.000+05:302008-01-25T14:55:00.000+05:30//சுஜாதாவின் முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அ...//சுஜாதாவின் முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள் நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத எழுத்துகளாகி விடுகிறது.//<BR/><BR/>ஹெஹெ.....Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-68497854680020121472008-01-23T00:17:00.000+05:302008-01-23T00:17:00.000+05:30இணையத்தில் தமிழை எழுதத் தெரிந்திருந்தால் போதும் என...இணையத்தில் தமிழை எழுதத் தெரிந்திருந்தால் போதும் என்கிற <BR/>குறைந்தபட்சத் தகுதியைக் கொண்ட வலைப்பதிவர்களின் எண்ணிக்கை <BR/>கூடிக் கொண்டேயிருக்கிறது.<BR/>பாரதியைக்கூட முழுமையாகப் படித்திராத ஒரு தலைமுறை <BR/>அதைப்பற்றிய எந்த மன உறுத்தல்களும் இல்லாமல்,தங்களது படைப்புகளை வலையுலகில் <BR/>பொழிந்து கொண்டிருக்கிறது.<BR/>திரட்டிகள் பொத்தாம் பொதுவில் எல்லாப் படைப்புகளையும் <BR/>குப்பையைக் கொட்டுவது போல் கொட்டாமல்<BR/>தரம் பிரித்து வெளியிட்டால் வாசிப்பவர்கள் பயன்பெறுவர்.<BR/>நல்ல எழுத்துக்களை காலம் பொக்கிஷப் படுத்தும்.<BR/>எண்ணிக்கையில் கூடிக்கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள்<BR/>வளர்ச்சியல்ல. வீக்கமே.<BR/>மற்றபடி நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தி, உலகின் எந்த மூலையிலிருந்தாலும்<BR/>நல்ல எழுத்துக்களை வாசிக்கவும், படைக்கவும் வலையுலகம் அளிக்கும் வசதி அளவில் சொல்லமுடியாததே.பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-22468464777039119082008-01-21T16:23:00.000+05:302008-01-21T16:23:00.000+05:30ஜ்யோவ்ராம், நீங்கள் சொல்வது உண்மை. சிறுபத்திரிகைகள...ஜ்யோவ்ராம், நீங்கள் சொல்வது உண்மை. சிறுபத்திரிகைகளிலும் தனிமனிதத் தாக்குதல் உண்டு. குறைந்தபட்சம் அச்சுப் பத்திரிகைகளில் யார் தாக்குகிறார்கள் என்பது தெரியும். அதுமட்டுமின்றி, மட்டுறுத்தல் இருப்பதால் நாகரீகமற்ற கொச்சை மொழிகள் அச்சில் அரங்கேறுவதில்லை.<BR/><BR/>உடனடி மறுமொழியே வலைப்பதிவுகளை உயிருடன் வைத்திருக்கிறது. இதிலும் நீங்கள் சொல்வது உண்மையே.<BR/><BR/>நன்றி, பிரசன்னாஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-61529967678547281562008-01-21T15:21:00.000+05:302008-01-21T15:21:00.000+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களுடன் எனக்கு உடன...நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களுடன் எனக்கு உடன்பாடுண்டு. குறிப்பாக, யாருடைய மட்டுறுத்தலோ / நிராகரித்தலோ இல்லாததால் எழுதுபவை எல்லாமே சிறந்ததாகத் தோன்றும் ஒரு மாயை. <BR/><BR/>ஆனால் விவாதங்களைப் பற்றி நீங்கள் சொல்வது (தனிமனிதத் தாக்குதல் etc) சிறு பத்திரிகைகளுக்கும் பொருந்தும் தானே.<BR/><BR/>எல்லா வித ஊடகங்களிலும் சீரியஸான விஷயங்கள், வெகு ஜனங்களுக்கானவை என்பது இருக்கவே செய்யும் (சினிமா, அச்சு ஊடகம்...). அதேதான் வலைப் பதிவுகளிலும் இருக்கிறது.<BR/><BR/>இன்னொன்று, மனவெழுச்சியான எழுத்து என்று எதைச் சொல்கிறீர்கள். எவ்விதமான எழுத்தும் மனவெழுச்சி இன்றி சாத்தியமா என்ன. நீங்கள் நீளமாக எழுதிப் பழக்கப் பட்டவர்களை மனவெழுச்சி சார்ந்த எழுத்தாளர்களாய்ப் பார்க்கிறீர்களோ என்று தோன்றுகிறது.<BR/><BR/>சிறு பத்திரிகைகளில் எழுதாமலே ஒரு தளத்திற்கு மேலேயே வலைப் பதிவுகளில் எழுதுபவர்கள் உண்டு (எனக்குத் தெரிந்து அய்யனார், ரோசா வசந்த்). ஆனால் எல்லாவற்றையும் எழுத்தாக்கிப் பார்க்கும் அபாயம் இவர்களிடமும் உண்டு.<BR/><BR/>வலைப் பதிவுகளின் ஒரு முக்கியமான விஷயமாக எனக்குத் தோன்றுவது feed back. இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சாத்தியமில்லாததாகவே இருந்தது அச்சு ஊடகப் பத்திரிகைகளில். இன்னொன்று, ஒருவருடைய எல்லா எழுத்துகளையும் ஒரே இடத்தில் வாசிக்க முடிவது.<BR/><BR/>சிறு பத்திரிகைகளில் இயங்கிக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் சிலர் (வளர்மதி, ஜமாலன், சுகுணா திவாகர் போன்றவர்கள்) இப்போது வலைப் பதிவுகளிலும் தொடர்ந்து இயங்குகிறார்கள். இன்னமும் அது வளர வேண்டும் என்பதே என் அவா.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com