Saturday, November 29, 2003

நேற்றைய இரவு
---ஹரன்பிரசன்னா

வழுக்கும் வரப்பில்
கால்குத்தி நிறுத்திய
கண்ணாடி வளையலின் ஒரு துண்டு
- கால்கள் பின்னியிருந்ததை
- வெம்மை பரிமாறப்பட்டதை
- வெற்றுடல்களின் போர்வையாய் இருள் இருந்ததை
நேற்றிரவுக்குள் தள்ளுமுன்
நினைத்தேன்-
கண்ணுள்ள பானைத்தலை
கந்தல் வெள்ளையாடை
வெக்கங்கெட்ட சோளக்காட்டு பொம்மை
கண்மூடியிருக்காது என.

No comments: