Sunday, November 1, 2009

உள்ளேயிருந்து ஒரு குரல் - கவிதை

உள்ளேயிருந்து ஒரு குரல்

எங்கோ
கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல்
தேடி அருகில் செல்லச் செல்ல
மாறிக்கொண்டே இருந்தது அதன் இடம்
மாயாவி விளையாட்டில்
உடல் சோர்ந்தபோது
மிக அருகில் கேட்கிறது அக்குரல்
என் தலைக்குள்ளிருந்து
கூவும் குயிலொன்றுக்கு
இசை பாடுகிறது
தெருப்பறவை
பதறிக் கண்விழித்த நேரத்தில்
மினுங்கிக் கொண்டிருந்த
மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தோடு
அறையெங்கும் அமைதி.
எங்கிருந்தோ என்னைத் தொடர்கிறது
பிறக்காத குழந்தையின் அழுகுரல்.

2 comments:

உயிரோடை said...

மிக‌ ந‌ல்ல‌ க‌விதை.

மணிகண்டன் said...

எனக்கு புரியலையே பிரசன்னா.