Sunday, February 15, 2004

பரிகசிப்பு - கவிதை


கேட்டுக்கேட்டு
பார்த்துப் பார்த்து
பழகிப் பழகி
ஒவ்வொன்றாகப் பதித்துக்கொண்டு
சுயம்பு உருவாகிறது
மனதுள், பிம்பமாய்.
சில நிகழ்ந்த கணங்களில்
அணிச்சையாக
தானே வரைந்துகொள்கிறது
ஓர் அருவ ஓவியம், உள்ளுக்குள்.

எதிர்பாராமல் இடறி
கையுதறும் நேரம்
பதறாமல், எதிராளி
சிரித்த நொடியில்,
பொருந்தாத ஓவியப் பிம்பத்தை
கேள்விகளில்லாமல் நெட்டித்தள்ளி
பெரிய பரிகசிப்போடு
உள்வந்தமரும்
இன்னொரு ஓவியம்
தன்னை நிஜமென அறிவித்து.

No comments: