Sunday, June 12, 2011

பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி கண்ணில் நீர்வரப் பிரி

சேரன்மகாதேவி நான் சிறு வயதில் வளர்ந்த நாடு. காலார நடந்தால் ஊரை முழுக்கச் சுற்றிவர நான்கு மணி நேரம் ஆகும். கொழுந்தனா மலைக்கு அடிவாரத்தில் ஆடு மேய்ப்பார்கள். சன் பேப்பர் மில்லில் வேலை பார்த்துவிட்டு ஆற்றில் குளித்துவிட்டு நடந்தே வீடு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும், பஞ்சாயத்து ஸ்கூலும் உண்டு. நான் 6 வயதில் அங்கே இருந்தபோது சித்ரா மெட்ரிகுலேஷன் என்ற ஒரே ஒரு மெட்ரிக் ஸ்கூல் இருந்தது. இப்போது 2 அல்லது 3 இருக்கலாம்.

முன்பு ஒரு டூரிங் தியேட்டர் கூனியூர் நாட்டில் இருந்தது. கூனியூர் என்பது சேரன்மகாதேவி நாட்டுக்குப் பக்கத்து நாடு. ஒரே ஒரு சௌகரியம், கூனியூர் நாட்டுக்குப் போகவோ, கூனியூர் நாட்டு மக்கள் சேர்மாதேவி நாட்டுக்கு வரவோ விசா தேவையில்லை. யூ டோண்ட் பிலீவ் இட், பாஸ்போர்ட்டும் தேவையில்லை யூ நோ. இன்னொரு அதிர்ச்சி, இரண்டு நாட்டுக்கும் நடந்தே போய்விடலாம். கூனியூர் நாட்டுக்குப் பக்கத்து நாடு வீரவநல்லூர் நாடு. Funny countries, isn't it?

கூனியூர் நாட்டுக்கு இப்படி நம்ம நாட்டுப் பணமெல்லாம் போகுதே என்று யோசித்தவர்கள் சேர்மாதேவியிலேயே தியேட்டர் கட்டிவிட்டார்கள். என் அப்பா சேர்மாதேவியில் பெரிய பிஸினஸ் மேனாக இருந்தவர். பிள்ளையார் கோவில் பின்புறத்தில் நின்றுகொண்டு சுண்டலும் சுக்கு வெண்ணீரும் விற்பார்.

வேத பாடசாலை உண்டு. யச்சு பாகவதர் தனியாக வேதம் பாடுவார். இந்நேரம் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். முட்டை ஊதி வைக்க வைத்தீஸ்வரன் கோவிலும் உண்டு.

எனது கோரிக்கை எல்லாம் இந்த பெரிய நாட்டை நிர்வாக வசதி கருதி இரண்டாகப் பிரிக்கவேண்டும் யுவர் ஹானர்!

சோர்ஸ்: http://thatstamil.oneindia.in/news/2011/06/11/bifurcate-tirunelveli-district-says-sarath-kumar-aid0090.html

No comments: