Thursday, February 12, 2004

பெயர் சூட்டிக்கொள்ளும் பறவை - கவிதை

வானத்தில் சுழன்றடிக்கிறது
பெயர் தெரியாத பறவையொன்று

மற்றவையோடு
அதிக வித்தியாசங்களில்லை
அமர்ந்திருத்தலில்
தலைசாய்த்தலில்
இமைத்தலில்
ஓயாமல் இறக்கைகள் அடித்தலில்
வானம் அளத்தலில்
பெண்துணைத்தேடலில்

புதுச்சட்டைச் சகிதம்
தேர் காணப் போகும்போது
"சொத்"தெனப் பொதுப்பதிவு செய்து
பெயர் சூட்டிக்கொள்கிறது
"எச்சமிட்ட பறவை".

2 comments:

Anonymous said...

Good.

Kumar -Muscat

ny said...

wow!!!

plz keep on writin !!