Monday, October 18, 2004

கண்ணாடி - கவிதை


எப்போதும் எதையாவது
பிரபலித்துக் கொண்டிருக்கிறது
சில நேரங்களில் தேவையானதை
பல நேரங்களில் தேவையற்றதை
அன்றொருநாள் உள்நுழைந்த குருவியொன்று
இரண்டே நொடிகளில் சட்டென தரைதட்டியது
இரத்தச் சிதறல்களுடன்
கண்ணாடியில்தான் பார்த்தேன்
பின்பொருசமயம்
தங்கை அவசர அவசரமாய்
என் நண்பனுக்கு முத்தம் கொடுத்துப் போனாள்
செய்வதறியாமல் சலனங்களின்றி நானும் கண்ணாடியும்
இன்னொரு சமயம்
போர்வை கசங்கும் என் முதல் வேகத்தில்
ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொண்டிருந்தபோது
கண்ணாடி பார்த்துக்கொண்டிருந்ததை
நான் பார்த்தேன் கொஞ்சம் லஜ்ஜையோடு
இந்தக் கண்ணாடி அலுப்புக்குரியது
கால நேரங்களின்றி கட்டுப்பாடின்றி
பிரதிபலித்து பிரதிபலித்து
நாம் பார்க்காத நேரங்களில்
கண்ணாடி பிரதிபலிப்பதில்லை என்ற
புனைவை ஏற்றி வைத்தேன்
குறைந்தபட்சம் என் சுவாரஸ்யத்திற்காகவேணும்

6 comments:

Anonymous said...

Kannadi patri ezuthaatha kavignar illai enru padiththa naabakam. Aanalum intha kannadi mosamillai. - Regards, PK Sivakumar

Anonymous said...

நன்றி சிவா.

அன்புடன்
பிரசன்னா

Anonymous said...

ôúýÉ¡, ( §ÅñΦÁý§È ô ±Éò¦¾¡¼í¸¢§Éý )

þ¨¼Â¢ø ¦º¡øÄôÀξø Á¢¸¿ýÈ¡¸ ¯ûÇÐ.

¬É¡ø ÁÉÓõ þÈó¾ ¸¡Ä ¿¢¸úÅ¢¨É ¿¢¸ú¸¡Äî º¢ó¾¨É¢ø ¸ñ½¡Ê¡¸ò ¦¾¡Æ¢üÀð¼¡ø ¾¡§É ¿¡õ ¦¾Ã¢Â¡Áø Ţθ¢ýÈ À¢¨Æ¸¨Çò ¾¢Õó¾ÓÊÔõ.

¬¨¸Â¡ø ¾í¸û À¢¨ÆÂ¡É Ò¨É¨Å §Åñ¼ôÀÎõ ºó¾÷ôÀí¸Ç¢ø ¾¡Ûõ ºÃ¢Â¡¸ô §ÀÏí¸û. ( ¿¨¸îͨÅ¡ö ±Ø¾¢ÂÐ )

¸ƒý

Anonymous said...

கஜன், உங்கள் கருத்துக்கு நன்றி. :-) --பிரசன்னா

Anonymous said...

GOOD HARAN PRASANNA...

REDUCE THE OBSERVATION. YOUR OBSERVATION CROSING THE LIMITS. I FEEL...

JAYAKUMAR-DOHA

Anonymous said...

fdfdff