Saturday, January 19, 2008

நதியின் பக்கங்கள் - கவிதை

நீண்ட நாள்களுக்குப் பின்
புரட்டியபோது
அடையாளம் தெரியாமல்
சிதைவுற்றிருந்தது
பழம்புத்தகத்தின் பக்கங்களில்
தடங்கள்
எண்களை இணைத்து
சித்திரம் கூட்டுதல் போல
கோடுகளை ரொப்ப
புதிய தடங்கள்
காற்றெங்கும்
தீராத ஒலிகளை நிரப்பி
என் காலடி மண்ணை
அரித்துக்கொண்டோடுகிறது நதி

3 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பிடிச்சுருக்கு கவிதை.

உங்கள் தமிழினி கட்டுரை படித்தேன். சில கருத்துகளோடு முரண் இருந்தாலும், நிறைய விஷயங்களோடு ஒத்துப் போக முடிந்தது. விரிவாகவும் / ஆழமாகவும் இருந்தது.

ஹரன்பிரசன்னா said...

ஜ்யோவ்ராம் சுந்தர், நன்றி.

Anonymous said...

kathai sari than etho solla varenka nangalum purisinga mutiyuthu, katturai ok current affair other wise document but why kavithai u too haran i can't unterstand the poems