பதிவு வகை: கவிதை
நீராம்பல்
கிளி தன் எஜமானனுக்காகக் கத்தியது
ஒரு நெல்லை அவன் தட்டவும்
ஒரு சீட்டை எடுத்தது
அவன் கட்டை விரலைத் தேய்க்கவும்
கூண்டுக்குள்ளே சென்றது
மரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்
பூனையைப் பற்றி அதற்குத் தெரியவில்லை
எல்லாரும் அதை வியந்தார்கள்,
அதுவும் கிளிக்குப் புரியவில்லை
அடுத்த நெல்லுக்காகக் கிளி காத்துக்கொண்டிருந்தது
கிளியின் கூண்டுக்கு வெளியே
எல்லையற்ற வானம்
கிளியறியாமல் கரைந்துகொண்டிருந்தது
Thursday, January 29, 2009
நீராம்பல் - கவிதை
Labels:
கவிதை
குதலைக் குறிப்புகள் - 1
போய்ச் சேர்ந்தான் ரங்கராஜன்,
வந்து சேர்ந்தான் ஹரன் பிரசன்னா
என்று தொடங்கலாம். ஏற்கெனவே கர்ச்சீஃப் போட்டு வைத்திருக்கிறார் என்பதால் சாரு நிவேதிதாவிற்குக் கோபம் வரலாம். அதனால் நானாகவே வந்து சேர்ந்தேன் என்று அடக்கத்தோடு சொல்லிவிட்டு குதலைக்குறிப்புகளைத் தொடங்குகிறேன்.
பத்தி எழுத்து என்பது சாதாரணமானதல்ல. யாரைப் பத்தியாவது எழுதவேண்டும். அதைப் படித்துவிட்டு, யாரைப் பத்தி எழுதினோமோ அவர்கள் பத்தி விரித்து ஆடவேண்டும். நாம் ஏதேனும் பதிலுக்குச் சொல்ல விஷயம் பத்திக்கிட்டு எரியவேண்டும். இப்படி பல பத்திகள் உள்ள ஒரு பத்தி எழுத்தை சுஜாதாவும், சாருவும், ஞாநியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். நான் அவர்கள் போலல்லாமல், தோன்றியதை எழுதப்போகிறேன். இதில் ஆழம் இருக்காது. வலிந்து திணிக்கப்படும் நகைச்சுவைகள் இருக்கலாம். பொருட்படுத்தக்க விஷயங்கள் விடப்பட்டு, பொருட்படுத்தத் தகாத விஷயங்களைப் பத்தி பேசலாம். டைரிக் குறிப்புகள் போல, நான் திருச்சிக்குப் போனேன், திருநெல்வேலிக்குப் போனேன் என்றிருக்கலாம். (நாளை திருச்சி போகிறேன்!) அதாவது வெறும் சுவாரஸ்யத்தை மையப்படுத்தி மட்டுமே இதை எழுதப்போகிறேன். இதில் இலக்கியத்தைத் தேடாமல் இருப்பது நல்லது. (சுவாரஸ்யம் இருந்தால் அது இலக்கியம் கிடையாதா என்கிற பழங்காலப் பின்னூட்டங்கள் தடைசெய்யப்படுகின்றன.) இவற்றையெல்லாம் உங்களுக்கல்ல, எனக்கே சொல்லிக்கொள்கிறேன் என்பதுதான் முக்கியம். வாரா வாரம் வரலாம் என்பதைவிட முக்கியமான செய்தி, எந்த வாரமும் வராமல் இருக்கலாம் என்பதுதான்.
முருகனிடத்திலிருந்து தொடங்குகிறேன். வேறு யார், எம்பெருமான் கடவுள் முருகன்தான். வடபழனி கோவிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் தூய்மையாக இருந்தது. சென்னையில் வடபழனி கோயிலும், கபாலீஸ்வரர் கோயிலும் ஓரளவிற்குத் தூய்மையாகப் பேணப்படுகின்றன. வடபழனி கோவிலுக்குள் நுழையுமிடத்தில் காலைக் கழுவிக்கொள்ள தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் கப்பல் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மழை பெய்து ஓய்ந்தபின்பு, தெருவில் ஓடும் செம்மண் நிற நீரில் கப்பல் விட்டிருக்கிறோம். சென்னையில் இப்போது மழை என்றாலே பேய் மழைதான் பெய்கிறது. நாம் கப்பல் விடாமலேயே பல வீடுகளின் பொருள்கள் தெருவில் மிதந்து வருகின்றன. வடபழனி கோவிலில் கப்பல் விடச் சம்மதிப்பார்களா எனத் தெரியவில்லை. கோவிலில் நல்ல கூட்டம். கடவுளைத் தரிசித்துவிட்டு, அங்குள்ள புத்தகக் கடையில் உள்ள புத்தகங்களைப் பார்த்தேன். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் 115 ரூபாய்க்கு கிடைத்தது. டிஸ்கவுண்ட் உண்டா என்று கேட்க நினைத்தேன். புத்தகம் விற்பவர் பாராவிற்கு உறவினராக இருந்தால், பிச்சைக்காரத்தனமா கேக்கறீங்களே என்று சொல்லக்கூடும் என்பதால், கேட்கவில்லை. புத்தகம் சில இடங்களில் மடிந்தும், லேசாகக் கிழிந்தும் இருந்ததால் வாங்கவில்லை. முதியோர்கள் அமரும் இடத்தில் அமர்ந்து, சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் சாப்பிட்டேன். கோயில்களில் இன்னும் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. முருகன் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
மயிலாப்பூர் திருவிழா இந்த மாதம் 22ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை நடந்தது. கிழக்கு பதிப்பகத்திலிருந்து ஸ்டால் போட்டிருந்தோம். மக்களுக்கு புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்க நேரமில்லை. நேரமிருந்தால் சென்று வர எளிமையான வழிகள் இல்லை. சென்று வர வாகனங்கள் இருப்பவர்களுக்கு சோம்பேறித்தனம். இப்படி பல விஷயங்களை பதிப்பகங்கள் மீற ஒரே வழி, அவர்களைச் சென்றடைவது. இது மயிலாப்பூர் திருவிழாவில் வெற்றிகரமாக நடந்தது. பலர் புத்தகம் வாங்கிச் சென்றார்கள். இப்படியெல்லாம் புத்தகம் வந்திருக்கிறதா என்று கேட்டுக்கொண்டார்கள் சிலர். கபாலீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர், பத்து பத்து ரூபாயாக எடுத்துக்கொடுத்தார். விபூதியும் குங்குமமும் ரூபாயில் ஒட்டியிருக்க, மங்களகரமாக விற்பனை நடந்தது. நிறைய கிளி ஜோசியக்காரர்கள். ஏகப்பட்ட பேர் ஜோசியம் பார்த்துச் செல்கிறார்கள். ‘பையனை நம்பி பொண்ணைக் கொடுக்கலாமா’ என்று கவலையோடு கேட்கிறார் ஒரு பெண்மணி. கிளி பரிகாரம் சொல்கிறது. ‘சாமிய கும்பிட்டுட்டு சீட்டு எடு’ என்றதும், அங்கிருக்கும் ஒரு சாமி படத்தை மூன்று முறை சுற்றிக் கும்பிட்டுவிட்டு சீட்டு எடுக்கிறது. கிளிக்காரர் (வீட்டுக்காரர் மாதிரி!) இரண்டு நிமிடம் கிளியை விட்டுவிட்டுச் சென்றார். அவர் வரும் வரை விடாமல் கத்திக்கொண்டிருந்தது கிளி. அவர் வந்ததும் அமைதியாகிவிட்டது. நிறைய பிச்சைக்காரர்கள். பிச்சைகள் விழுந்தவண்ணம் உள்ளன. தயங்கி தயங்கி ஒருவரிடம் சில்லறை கேட்டேன். ‘நல்லவேளை இப்பமே கேட்டீங்க, இல்லைன்னா சிண்டிகேட் பேங்கல வாங்கிட்டுப் போயிருப்பாங்க’ என்றார். தை அமாவாசை அன்று குளத்தில் பொரி தூவினார்கள். ஒரே நாளில் இத்தனை பொரிகளைச் சாப்பிட்டால் மீன்களுக்கு அஜீரணம் வருமா என்று தெரியவில்லை. அறிவியல் வலைப்பதிவில் யாரேனும் இதைப் பற்றி எழுதும்வரை காத்திருக்கவேண்டியதுதான்.
புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகங்கள் பற்றிய பட்டியல் குமுதம் இதழில் வந்துள்ளது. கிழக்கு பதிப்பகத்தின் ‘இந்தியப் பிரிவினை’ 8வது இடத்தில் உள்ளது என நினைக்கிறேன். முதலிடம் கோபிநாத்தின் ‘இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க ப்ளீஸ்.’ இவ்வளவு பணிவுடன் ஒருவர் சொல்லும்போது ஏன் வாங்கவேண்டும் என்பதால் நான் வாங்கவில்லை. இப்புத்தகம் புத்தகக் கண்காட்சியின் ஆறாம் நாளோ ஏழாம் நாளோதான் விற்பனைக்கு வந்தது என நினைக்கிறேன். அப்படி இருந்தால், அது அதிக அளவு விற்று முதல் இடத்தைப் பிடித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இப்பட்டியலில் ஆனந்தவிகடனின் ஒரு புத்தகம்கூட இல்லை என நினைக்கிறேன். இதுவும் நம்பும்படியாக இல்லை. குமுதத்தின் மூன்று புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இது இன்னும் நம்பும்படியாக இல்லை. எனக்குத் தெரிந்து, இந்தியப் பிரிவினை அல்லது ஆனந்த விகடனின் ஏதேனும் ஒரு புத்தகமே முதலிடத்தில் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன். இது ஒரு யூகம் மட்டுமே. இது தவறாகவும் இருக்கலாம். குமுதம் போன்ற இதழும் இப்படி யூகத்தில்தான் வெளியிடுகிறதா என்ன? 33 புத்தகங்களில் 3 புத்தகங்கள் முதல் பத்தில்; ஒரு வருடத்தில் மிகக்குறைந்த பதிவுகள் மட்டுமே எழுதிய லிவிங் ஸ்மைல் வித்யாவின் வலைப்பதிவு முதல் பத்தில் (அதிஷாவின் பதிவு இப்பட்டியலில் வந்திருப்பதை, அவர் சந்தனப் பொட்டு வைத்திருப்பதால், மன்னித்துவிடலாம்) என சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது குமுதம். ஆனாலும் அதிகம் விற்பனையான முதல் பத்து புத்தகங்களில் ‘இலங்கையில் சமாதானம் பேசுதல்’ புத்தகத்தைச் சேர்த்ததைத்தான் ஜீரணிக்கமுடியவில்லை. புத்தகத்தின் விலையையும், புத்தகத்தின் இலக்கியத் தன்மையையும் வைத்துப் பார்த்தால், இது சாத்தியமாகியிருக்காது என்றுதான் தோன்றுகிறது.
பத்தி எழுத முடிவு செய்துவிட்டேன், பத்திக்கு நல்ல பெயர் வேண்டும் என்று சில நண்பர்களிடம் கேட்டேன். கோணல் பக்கங்கள் போல, கற்றதும் பெற்றதும் போல கேட்சிங்காக இருக்கவேண்டும் என்றும் சொன்னேன். ஒரு நண்பர் ‘கோணல் பக்கங்களுக்குப் பதிலா பூணூல் பக்கங்கள்னு வைங்க. உங்களுக்கு சரியா வரும்’ என்றார். கிழக்கு பதிப்பகம் அதிரச் சிரித்தோம். ‘வலது கை பழக்கமுள்ளவனின் இடது கைக்குறிப்புகள்னு வைக்கலாம்’ என்று நான் சொன்னபோது, ‘தலைப்பை மட்டும்தான் படிப்பாங்க, மத்ததைப் படிக்க நேரமிருக்காது’ என்றார் ஒரு நண்பர். கடைசியாக நானே ஒரு முடிவுக்கு வந்தேன். குதலைக் குறிப்புகள். குதலை என்றால் மூன்று அர்த்தங்களை லிஃப்கோ தமிழ் அகராதியில் பார்த்தேன். 1. மழலைப் பேச்சு 2. மென்மையான பேச்சு 3. அறிவில்லாதவன். ‘இதெல்லாம் வெகுஜன மக்களுக்குப் புரியுமா’ என்று எஸ்.எம்.எஸ்ஸினார் தோழர். ‘இந்த வார்த்தையை நான் வெகுஜனப்படுத்துகிறேன்’ என்றேன். ‘குட் நைட்’ என்று பதில் வந்தது.
வந்து சேர்ந்தான் ஹரன் பிரசன்னா
என்று தொடங்கலாம். ஏற்கெனவே கர்ச்சீஃப் போட்டு வைத்திருக்கிறார் என்பதால் சாரு நிவேதிதாவிற்குக் கோபம் வரலாம். அதனால் நானாகவே வந்து சேர்ந்தேன் என்று அடக்கத்தோடு சொல்லிவிட்டு குதலைக்குறிப்புகளைத் தொடங்குகிறேன்.
பத்தி எழுத்து என்பது சாதாரணமானதல்ல. யாரைப் பத்தியாவது எழுதவேண்டும். அதைப் படித்துவிட்டு, யாரைப் பத்தி எழுதினோமோ அவர்கள் பத்தி விரித்து ஆடவேண்டும். நாம் ஏதேனும் பதிலுக்குச் சொல்ல விஷயம் பத்திக்கிட்டு எரியவேண்டும். இப்படி பல பத்திகள் உள்ள ஒரு பத்தி எழுத்தை சுஜாதாவும், சாருவும், ஞாநியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். நான் அவர்கள் போலல்லாமல், தோன்றியதை எழுதப்போகிறேன். இதில் ஆழம் இருக்காது. வலிந்து திணிக்கப்படும் நகைச்சுவைகள் இருக்கலாம். பொருட்படுத்தக்க விஷயங்கள் விடப்பட்டு, பொருட்படுத்தத் தகாத விஷயங்களைப் பத்தி பேசலாம். டைரிக் குறிப்புகள் போல, நான் திருச்சிக்குப் போனேன், திருநெல்வேலிக்குப் போனேன் என்றிருக்கலாம். (நாளை திருச்சி போகிறேன்!) அதாவது வெறும் சுவாரஸ்யத்தை மையப்படுத்தி மட்டுமே இதை எழுதப்போகிறேன். இதில் இலக்கியத்தைத் தேடாமல் இருப்பது நல்லது. (சுவாரஸ்யம் இருந்தால் அது இலக்கியம் கிடையாதா என்கிற பழங்காலப் பின்னூட்டங்கள் தடைசெய்யப்படுகின்றன.) இவற்றையெல்லாம் உங்களுக்கல்ல, எனக்கே சொல்லிக்கொள்கிறேன் என்பதுதான் முக்கியம். வாரா வாரம் வரலாம் என்பதைவிட முக்கியமான செய்தி, எந்த வாரமும் வராமல் இருக்கலாம் என்பதுதான்.
முருகனிடத்திலிருந்து தொடங்குகிறேன். வேறு யார், எம்பெருமான் கடவுள் முருகன்தான். வடபழனி கோவிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் தூய்மையாக இருந்தது. சென்னையில் வடபழனி கோயிலும், கபாலீஸ்வரர் கோயிலும் ஓரளவிற்குத் தூய்மையாகப் பேணப்படுகின்றன. வடபழனி கோவிலுக்குள் நுழையுமிடத்தில் காலைக் கழுவிக்கொள்ள தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் கப்பல் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மழை பெய்து ஓய்ந்தபின்பு, தெருவில் ஓடும் செம்மண் நிற நீரில் கப்பல் விட்டிருக்கிறோம். சென்னையில் இப்போது மழை என்றாலே பேய் மழைதான் பெய்கிறது. நாம் கப்பல் விடாமலேயே பல வீடுகளின் பொருள்கள் தெருவில் மிதந்து வருகின்றன. வடபழனி கோவிலில் கப்பல் விடச் சம்மதிப்பார்களா எனத் தெரியவில்லை. கோவிலில் நல்ல கூட்டம். கடவுளைத் தரிசித்துவிட்டு, அங்குள்ள புத்தகக் கடையில் உள்ள புத்தகங்களைப் பார்த்தேன். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் 115 ரூபாய்க்கு கிடைத்தது. டிஸ்கவுண்ட் உண்டா என்று கேட்க நினைத்தேன். புத்தகம் விற்பவர் பாராவிற்கு உறவினராக இருந்தால், பிச்சைக்காரத்தனமா கேக்கறீங்களே என்று சொல்லக்கூடும் என்பதால், கேட்கவில்லை. புத்தகம் சில இடங்களில் மடிந்தும், லேசாகக் கிழிந்தும் இருந்ததால் வாங்கவில்லை. முதியோர்கள் அமரும் இடத்தில் அமர்ந்து, சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் சாப்பிட்டேன். கோயில்களில் இன்னும் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. முருகன் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.
மயிலாப்பூர் திருவிழா இந்த மாதம் 22ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை நடந்தது. கிழக்கு பதிப்பகத்திலிருந்து ஸ்டால் போட்டிருந்தோம். மக்களுக்கு புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்க நேரமில்லை. நேரமிருந்தால் சென்று வர எளிமையான வழிகள் இல்லை. சென்று வர வாகனங்கள் இருப்பவர்களுக்கு சோம்பேறித்தனம். இப்படி பல விஷயங்களை பதிப்பகங்கள் மீற ஒரே வழி, அவர்களைச் சென்றடைவது. இது மயிலாப்பூர் திருவிழாவில் வெற்றிகரமாக நடந்தது. பலர் புத்தகம் வாங்கிச் சென்றார்கள். இப்படியெல்லாம் புத்தகம் வந்திருக்கிறதா என்று கேட்டுக்கொண்டார்கள் சிலர். கபாலீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர், பத்து பத்து ரூபாயாக எடுத்துக்கொடுத்தார். விபூதியும் குங்குமமும் ரூபாயில் ஒட்டியிருக்க, மங்களகரமாக விற்பனை நடந்தது. நிறைய கிளி ஜோசியக்காரர்கள். ஏகப்பட்ட பேர் ஜோசியம் பார்த்துச் செல்கிறார்கள். ‘பையனை நம்பி பொண்ணைக் கொடுக்கலாமா’ என்று கவலையோடு கேட்கிறார் ஒரு பெண்மணி. கிளி பரிகாரம் சொல்கிறது. ‘சாமிய கும்பிட்டுட்டு சீட்டு எடு’ என்றதும், அங்கிருக்கும் ஒரு சாமி படத்தை மூன்று முறை சுற்றிக் கும்பிட்டுவிட்டு சீட்டு எடுக்கிறது. கிளிக்காரர் (வீட்டுக்காரர் மாதிரி!) இரண்டு நிமிடம் கிளியை விட்டுவிட்டுச் சென்றார். அவர் வரும் வரை விடாமல் கத்திக்கொண்டிருந்தது கிளி. அவர் வந்ததும் அமைதியாகிவிட்டது. நிறைய பிச்சைக்காரர்கள். பிச்சைகள் விழுந்தவண்ணம் உள்ளன. தயங்கி தயங்கி ஒருவரிடம் சில்லறை கேட்டேன். ‘நல்லவேளை இப்பமே கேட்டீங்க, இல்லைன்னா சிண்டிகேட் பேங்கல வாங்கிட்டுப் போயிருப்பாங்க’ என்றார். தை அமாவாசை அன்று குளத்தில் பொரி தூவினார்கள். ஒரே நாளில் இத்தனை பொரிகளைச் சாப்பிட்டால் மீன்களுக்கு அஜீரணம் வருமா என்று தெரியவில்லை. அறிவியல் வலைப்பதிவில் யாரேனும் இதைப் பற்றி எழுதும்வரை காத்திருக்கவேண்டியதுதான்.
புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகங்கள் பற்றிய பட்டியல் குமுதம் இதழில் வந்துள்ளது. கிழக்கு பதிப்பகத்தின் ‘இந்தியப் பிரிவினை’ 8வது இடத்தில் உள்ளது என நினைக்கிறேன். முதலிடம் கோபிநாத்தின் ‘இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க ப்ளீஸ்.’ இவ்வளவு பணிவுடன் ஒருவர் சொல்லும்போது ஏன் வாங்கவேண்டும் என்பதால் நான் வாங்கவில்லை. இப்புத்தகம் புத்தகக் கண்காட்சியின் ஆறாம் நாளோ ஏழாம் நாளோதான் விற்பனைக்கு வந்தது என நினைக்கிறேன். அப்படி இருந்தால், அது அதிக அளவு விற்று முதல் இடத்தைப் பிடித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இப்பட்டியலில் ஆனந்தவிகடனின் ஒரு புத்தகம்கூட இல்லை என நினைக்கிறேன். இதுவும் நம்பும்படியாக இல்லை. குமுதத்தின் மூன்று புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இது இன்னும் நம்பும்படியாக இல்லை. எனக்குத் தெரிந்து, இந்தியப் பிரிவினை அல்லது ஆனந்த விகடனின் ஏதேனும் ஒரு புத்தகமே முதலிடத்தில் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன். இது ஒரு யூகம் மட்டுமே. இது தவறாகவும் இருக்கலாம். குமுதம் போன்ற இதழும் இப்படி யூகத்தில்தான் வெளியிடுகிறதா என்ன? 33 புத்தகங்களில் 3 புத்தகங்கள் முதல் பத்தில்; ஒரு வருடத்தில் மிகக்குறைந்த பதிவுகள் மட்டுமே எழுதிய லிவிங் ஸ்மைல் வித்யாவின் வலைப்பதிவு முதல் பத்தில் (அதிஷாவின் பதிவு இப்பட்டியலில் வந்திருப்பதை, அவர் சந்தனப் பொட்டு வைத்திருப்பதால், மன்னித்துவிடலாம்) என சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது குமுதம். ஆனாலும் அதிகம் விற்பனையான முதல் பத்து புத்தகங்களில் ‘இலங்கையில் சமாதானம் பேசுதல்’ புத்தகத்தைச் சேர்த்ததைத்தான் ஜீரணிக்கமுடியவில்லை. புத்தகத்தின் விலையையும், புத்தகத்தின் இலக்கியத் தன்மையையும் வைத்துப் பார்த்தால், இது சாத்தியமாகியிருக்காது என்றுதான் தோன்றுகிறது.
பத்தி எழுத முடிவு செய்துவிட்டேன், பத்திக்கு நல்ல பெயர் வேண்டும் என்று சில நண்பர்களிடம் கேட்டேன். கோணல் பக்கங்கள் போல, கற்றதும் பெற்றதும் போல கேட்சிங்காக இருக்கவேண்டும் என்றும் சொன்னேன். ஒரு நண்பர் ‘கோணல் பக்கங்களுக்குப் பதிலா பூணூல் பக்கங்கள்னு வைங்க. உங்களுக்கு சரியா வரும்’ என்றார். கிழக்கு பதிப்பகம் அதிரச் சிரித்தோம். ‘வலது கை பழக்கமுள்ளவனின் இடது கைக்குறிப்புகள்னு வைக்கலாம்’ என்று நான் சொன்னபோது, ‘தலைப்பை மட்டும்தான் படிப்பாங்க, மத்ததைப் படிக்க நேரமிருக்காது’ என்றார் ஒரு நண்பர். கடைசியாக நானே ஒரு முடிவுக்கு வந்தேன். குதலைக் குறிப்புகள். குதலை என்றால் மூன்று அர்த்தங்களை லிஃப்கோ தமிழ் அகராதியில் பார்த்தேன். 1. மழலைப் பேச்சு 2. மென்மையான பேச்சு 3. அறிவில்லாதவன். ‘இதெல்லாம் வெகுஜன மக்களுக்குப் புரியுமா’ என்று எஸ்.எம்.எஸ்ஸினார் தோழர். ‘இந்த வார்த்தையை நான் வெகுஜனப்படுத்துகிறேன்’ என்றேன். ‘குட் நைட்’ என்று பதில் வந்தது.
Labels:
குதலைக் குறிப்புகள்
Monday, January 19, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (இறுதி நாள்)
பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று மிக நல்ல கூட்டம் இருந்தது. நல்ல விற்பனையும் இருந்தது. இரவு 8.30க்கு முடியும் புத்தகக் கண்காட்சியை 9.30 வரை நீட்டித்தார்கள்.
கிழக்கு அரங்கில் பில் போட்டுக்கொண்டிருக்கும்போது ஞாநி வந்தார். புக் வேணுமா சார் என்றதும், ‘தினமும் உங்களைப் பார்த்தா உங்க ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதுவீங்கன்னு தெரியாம போயிடுச்சு. இன்னைக்கு பார்த்துட்டேன். எழுதிடுங்க’ என்றார். ‘சார், நீங்க வேற சார்’ என்றேன். ‘ரெண்டு நாள் வராம விட்டுட்டேன்’ என்றார் ஞாநி. இரவு புத்தகக் கண்காட்சி முடிந்து கிளம்பும்போது மீண்டும், ’பார்த்துட்டேன், மறந்துடாதீங்க’ என்றார். :-)
கவிஞர் மதுமிதா வந்திருந்தார். கவிதைகளோடு வரவில்லை என்பது மிகப்பெரிய ஆசுவாசம். வாழ்க அவரது நல்லுள்ளம். இரண்டு நாள்களுக்கு முன்பு கவிஞர் நிர்மலா வந்திருந்தார். அவரும் கவிதைகளோடு வரவில்லை என்பது கவனத்திற்குரியது.
வார்த்தை இதழில் ‘எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது’ என்ற தொடரை எழுதும் வ.ஸ்ரீநிவாசன் வந்திருந்தார். பெரியார் புத்தகத்தைப் பார்த்துவிட்டு ‘ராஜாஜி புத்தகம் இருக்கிறதா’ என்று கேட்டார். அவரிடம் ராஜாஜி எழுதிய கடிதங்களின் தகவல்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் இருக்கின்றன என்றறிகிறேன்.
நிறைய வாசகர்கள் திடீரென்று சில பெயர்களைச் சொல்லி அப்புத்தகங்கள் இருக்கிறதா எனக் கேட்டார்கள். முக்கியமாகக் கேட்கப்பட்டவை. பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மார்கோ போலோ, உலகப் போர், இலங்கை பற்றிய புத்தகம், ராஜிவ் காந்தி, அம்பேத்கர் போன்றவை. முன்பொருதடவை இப்படி வசந்தகுமாரிடம் ‘நிறைய பேர் காடு புத்தகம் கேக்கறாங்க, ஏன் ரீபிரிண்ட் போடலை’ என்று கேட்டதற்கு:
‘எத்தனை பேர் கேட்டிருப்பாங்க?’
‘ஒரு இருபது முப்பது பேர் கேட்டிருப்பாங்க.’
‘ஆயிரம் காப்பி அடிச்சிட்டு மீதி 970ஐ என்ன பண்றது?’
தோழர் செல்லரித்துப்போன, பழுப்பேறிய புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தார். மிகவும் பத்திரமாக யாரும் எடுக்கமுடியாத இடத்தில் வைத்துவிட்டு, ‘பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘இதை புத்தகக் கண்காட்சி வளாகத்தோட நடுவில வெச்சாலும் ஒருத்தனும் எடுக்கமாட்டான்’ என்றேன்.
இப்படி பல நண்பர்களின் சந்திப்பினூடாக பதிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. சென்ற புத்தகக் கண்காட்சியைவிட ஒரு லட்சம் வாசகர்கள் அதிகம் வந்தார்கள் என்ற பேட்டியை காந்தி கண்ணதாசன் கொடுத்துக்கொண்டிருக்க, எனது ஒட்டுமொத்த அப்சர்வேஷன் இங்கே.
நான் குழந்தைகளுக்களுக்கான சில புத்தகங்களை வாங்கினேன். எளிய ஆங்கிலத்தில் மகாபாரதம், ராமாயணம், பஞ்ச தந்திரக் கதைகள் வாங்கினேன். நாவல் டைமில் மலிவு விலையில் வெளிவந்த ‘கோணல் பக்கங்கள் பாகம் 1’ பத்து ரூபாய்க்கு வாங்கினேன். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் காலியாகிவிட்டன. அதனால் வாங்கமுடியவில்லை. பாரதிய வித்யா பவனில், ‘தமிழ் வழியாக சமிஸ்கிருதம்’ படிக்கும் புத்தகங்களை வாங்கச் சென்றேன். ‘முதல் ரெண்டு பாகம் இல்லை, மூணாம் பாகத்துலேர்ந்து வாங்கிக்கிறேளா’ என்றார்கள்.
பின்குறிப்பு 1: வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கியதால் பல பதிப்பாளர்களுக்கு நாமம் விழுந்துவிட்டதாக சிலர் பேசிக்கொண்டார்கள். இந்த சைவ சூழ்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பின்குறிப்பு 2: ஒவ்வொரு நாளும் எதாவது எழுதவேண்டும் என்கிற தொல்லை இன்றோடு ஒழிந்தது என்பதை எண்ணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சும்மா இருப்பதே சுகம் என்றவனே உலகின் தலைசிறந்த ஞானி. :-)
சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று மிக நல்ல கூட்டம் இருந்தது. நல்ல விற்பனையும் இருந்தது. இரவு 8.30க்கு முடியும் புத்தகக் கண்காட்சியை 9.30 வரை நீட்டித்தார்கள்.
கிழக்கு அரங்கில் பில் போட்டுக்கொண்டிருக்கும்போது ஞாநி வந்தார். புக் வேணுமா சார் என்றதும், ‘தினமும் உங்களைப் பார்த்தா உங்க ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதுவீங்கன்னு தெரியாம போயிடுச்சு. இன்னைக்கு பார்த்துட்டேன். எழுதிடுங்க’ என்றார். ‘சார், நீங்க வேற சார்’ என்றேன். ‘ரெண்டு நாள் வராம விட்டுட்டேன்’ என்றார் ஞாநி. இரவு புத்தகக் கண்காட்சி முடிந்து கிளம்பும்போது மீண்டும், ’பார்த்துட்டேன், மறந்துடாதீங்க’ என்றார். :-)
கவிஞர் மதுமிதா வந்திருந்தார். கவிதைகளோடு வரவில்லை என்பது மிகப்பெரிய ஆசுவாசம். வாழ்க அவரது நல்லுள்ளம். இரண்டு நாள்களுக்கு முன்பு கவிஞர் நிர்மலா வந்திருந்தார். அவரும் கவிதைகளோடு வரவில்லை என்பது கவனத்திற்குரியது.
வார்த்தை இதழில் ‘எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது’ என்ற தொடரை எழுதும் வ.ஸ்ரீநிவாசன் வந்திருந்தார். பெரியார் புத்தகத்தைப் பார்த்துவிட்டு ‘ராஜாஜி புத்தகம் இருக்கிறதா’ என்று கேட்டார். அவரிடம் ராஜாஜி எழுதிய கடிதங்களின் தகவல்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் இருக்கின்றன என்றறிகிறேன்.
நிறைய வாசகர்கள் திடீரென்று சில பெயர்களைச் சொல்லி அப்புத்தகங்கள் இருக்கிறதா எனக் கேட்டார்கள். முக்கியமாகக் கேட்கப்பட்டவை. பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மார்கோ போலோ, உலகப் போர், இலங்கை பற்றிய புத்தகம், ராஜிவ் காந்தி, அம்பேத்கர் போன்றவை. முன்பொருதடவை இப்படி வசந்தகுமாரிடம் ‘நிறைய பேர் காடு புத்தகம் கேக்கறாங்க, ஏன் ரீபிரிண்ட் போடலை’ என்று கேட்டதற்கு:
‘எத்தனை பேர் கேட்டிருப்பாங்க?’
‘ஒரு இருபது முப்பது பேர் கேட்டிருப்பாங்க.’
‘ஆயிரம் காப்பி அடிச்சிட்டு மீதி 970ஐ என்ன பண்றது?’
தோழர் செல்லரித்துப்போன, பழுப்பேறிய புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தார். மிகவும் பத்திரமாக யாரும் எடுக்கமுடியாத இடத்தில் வைத்துவிட்டு, ‘பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘இதை புத்தகக் கண்காட்சி வளாகத்தோட நடுவில வெச்சாலும் ஒருத்தனும் எடுக்கமாட்டான்’ என்றேன்.
இப்படி பல நண்பர்களின் சந்திப்பினூடாக பதிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. சென்ற புத்தகக் கண்காட்சியைவிட ஒரு லட்சம் வாசகர்கள் அதிகம் வந்தார்கள் என்ற பேட்டியை காந்தி கண்ணதாசன் கொடுத்துக்கொண்டிருக்க, எனது ஒட்டுமொத்த அப்சர்வேஷன் இங்கே.
* சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிச்சயம் மந்தம். கூட்டத்திலும் சரி, விற்பனையிலும் சரி, சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.
* புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான பேருந்து வசதி இல்லை என்பது மிகப்பெரிய குறை. இதை நீக்காதவரை இந்த இடம் இதுபோன்ற பிரச்சினைகளையே தந்துகொண்டிருக்கும்.
* அரங்க உள்கட்ட அமைப்பைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பபாஸி மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது, மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது. உள்ளே வரும் எந்த ஒரு வாசகரும் இதை உணரமுடியும். நிறைய கூட்டம் வந்தாலும் நடப்பதற்கு ஏற்ற, அகலமான நடைபாதை, சிவப்புக் கம்பளங்கள் விரித்த பாதை, எல்லாமே சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றன.
* புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள்ளே உணவு அரங்கங்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும்.
* சென்ற ஆண்டுவரை மல்டிமீடியா வரிசை எனத் தனியாகக் கொடுத்திருந்தார்கள். அது இந்தமுறை இல்லை. அடுத்தமுறை மல்டிமீடியா அரங்க வரிசையைத் தனியாக வைக்கவேண்டும்.
* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் மிகக்குறைவு. சன், ஜெயா, கலைஞர் எனப் பல்வேறு சானல்கள் இருக்கும் நிலையில், அவர்களுடன் பேசி, குறைந்த விலையில் விளம்பரங்களைப் பெற்று, அவற்றில் ஒளிபரப்பாதவரை, கூட்டம் இப்படி குறைந்துகொண்டுதான் போகும்.
* புத்தகக் கண்காட்சிக்கென்று ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள செய்யவேண்டிய விஷயங்களைத் தொடர்ந்து செய்யவேண்டும். திறப்புவிழாவிற்கு மக்களை ஈர்க்கும் ஒரு தலைவரை அழைப்பதில் தொடங்கி, தொடர்ந்து ஊடகங்களில் புத்தகக் கண்காட்சி பற்றி செய்திகள் வரவைப்பதுவரை பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும். அப்போதுதான் பத்து நாளும் மக்கள் மனதில் புத்தகக் கண்காட்சி பற்றிய நினைவு வந்துகொண்டே இருக்கும்.
* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது கழிப்பறைகளின் வசதி கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் அவை சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இதை பபாஸி கவனத்தில் கொள்ளவேண்டும்.
* எல்லா நாளும் சரியாகக் கிடைத்துக்கொண்டிருந்த குடிநீர், இறுதிநாள் காலைமுதல் கிடைக்கவில்லை. ஒருநாள்தானே என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. கடுமையான தாகம். குடிநீர் வாங்க, பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியில் செல்லவும் முடியாது. இதுபோன்ற குறைகளையும் பபாஸி களையவேண்டும்.
* வாகனங்களை நிறுத்துமிடம் சரியாக, சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு வரை இருந்த குழப்பங்கள் அறவே தவிர்க்கப்பட்டிருந்தன.
* விளம்பரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், பபாஸியின் செயல்பாடு பாராட்டத்தக்கதாகவே உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இருக்கும் சில குறைகளும் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
* கடைசியாக ஒன்று. தொடக்க நாளில் மழை பெய்வதைத் தடுக்க பபாஸி முயலவேண்டும்.
நான் குழந்தைகளுக்களுக்கான சில புத்தகங்களை வாங்கினேன். எளிய ஆங்கிலத்தில் மகாபாரதம், ராமாயணம், பஞ்ச தந்திரக் கதைகள் வாங்கினேன். நாவல் டைமில் மலிவு விலையில் வெளிவந்த ‘கோணல் பக்கங்கள் பாகம் 1’ பத்து ரூபாய்க்கு வாங்கினேன். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் காலியாகிவிட்டன. அதனால் வாங்கமுடியவில்லை. பாரதிய வித்யா பவனில், ‘தமிழ் வழியாக சமிஸ்கிருதம்’ படிக்கும் புத்தகங்களை வாங்கச் சென்றேன். ‘முதல் ரெண்டு பாகம் இல்லை, மூணாம் பாகத்துலேர்ந்து வாங்கிக்கிறேளா’ என்றார்கள்.
பின்குறிப்பு 1: வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கியதால் பல பதிப்பாளர்களுக்கு நாமம் விழுந்துவிட்டதாக சிலர் பேசிக்கொண்டார்கள். இந்த சைவ சூழ்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பின்குறிப்பு 2: ஒவ்வொரு நாளும் எதாவது எழுதவேண்டும் என்கிற தொல்லை இன்றோடு ஒழிந்தது என்பதை எண்ணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சும்மா இருப்பதே சுகம் என்றவனே உலகின் தலைசிறந்த ஞானி. :-)
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Sunday, January 18, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 10)
பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
இன்று நல்ல கூட்டம் இருந்தது. தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த கூட்டம், மதியம் இரண்டு மணிக்கு மேல் சூடு பிடித்தது. இன்றும் கூட்டம் இல்லாமல் போய், புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது என்கிற வரியை எழுத முடியாமலேயே போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி இல்லாமல் சரியான கூட்டம். அதிலும் சுற்றிப் பார்க்கும் ஆவலுள்ள கூட்டம் இல்லாமல், புத்தகம் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.
முதல் இரண்டு வரிசைகளுக்குள் நுழையவே முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் மக்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்தார்கள். இத்த பத்து நாள்களில் இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இதைவிட பதினோராம் நாள் (புத்தகக் கண்காட்சியின் கடைசி ஞாயிறு) இன்னும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
மனுஷ்யபுத்திரனிடம் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான கருத்தே அவரிடமும் இருந்தது. சென்ற முறையைவிட இந்தமுறை கூட்டம் குறைவு என்பதுதான் அவரும் சொன்னது. அதற்கான காரணங்கள் பற்றி சில கருத்துகளைச் சொன்னார். அவை எல்லாமே நான் ஏற்கெனவே சொன்னவையே. சில பதிப்பாளர்கள் மனம் உடைந்து போகும் அளவு பேசுகிறார்கள் என்றார். அதுவும் உண்மையானதே.
சுரேஷ் கண்ணன் வந்திருந்தார். ‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். ‘உங்க பகடி சகிக்கலை, செயற்கையா இருக்கு’ என்று அதற்கு அர்த்தம். ‘தினமும் எதாவது எழுதணும், ஜஸ்ட் பத்து நிமிஷத்துல எழுதுறேன், அப்படித்தான் இருக்கும்’ என்றேன்.
ரஜினி ராம்கி தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கிருபா தன் மனைவியுடன் வந்திருந்தார்.
நிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.
யுவன் சந்திரசேகரனிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவரது நாவல் அல்லது குறுங்கதைகள் (நீங்களுமா?!) தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். உயிர்மை அரங்கில் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன்.
லக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.
நான் விஜய பாரதம் ஸ்டாலில் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம்! ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.
பின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.
சுகுமாரன் விஷயத்தைப் பற்றி சுகா எழுதியிருக்கும் ஒரு சிறு பதிவு இங்கே.
இன்று நல்ல கூட்டம் இருந்தது. தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த கூட்டம், மதியம் இரண்டு மணிக்கு மேல் சூடு பிடித்தது. இன்றும் கூட்டம் இல்லாமல் போய், புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது என்கிற வரியை எழுத முடியாமலேயே போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி இல்லாமல் சரியான கூட்டம். அதிலும் சுற்றிப் பார்க்கும் ஆவலுள்ள கூட்டம் இல்லாமல், புத்தகம் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.
முதல் இரண்டு வரிசைகளுக்குள் நுழையவே முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் மக்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்தார்கள். இத்த பத்து நாள்களில் இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இதைவிட பதினோராம் நாள் (புத்தகக் கண்காட்சியின் கடைசி ஞாயிறு) இன்னும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
மனுஷ்யபுத்திரனிடம் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான கருத்தே அவரிடமும் இருந்தது. சென்ற முறையைவிட இந்தமுறை கூட்டம் குறைவு என்பதுதான் அவரும் சொன்னது. அதற்கான காரணங்கள் பற்றி சில கருத்துகளைச் சொன்னார். அவை எல்லாமே நான் ஏற்கெனவே சொன்னவையே. சில பதிப்பாளர்கள் மனம் உடைந்து போகும் அளவு பேசுகிறார்கள் என்றார். அதுவும் உண்மையானதே.
சுரேஷ் கண்ணன் வந்திருந்தார். ‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். ‘உங்க பகடி சகிக்கலை, செயற்கையா இருக்கு’ என்று அதற்கு அர்த்தம். ‘தினமும் எதாவது எழுதணும், ஜஸ்ட் பத்து நிமிஷத்துல எழுதுறேன், அப்படித்தான் இருக்கும்’ என்றேன்.
ரஜினி ராம்கி தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கிருபா தன் மனைவியுடன் வந்திருந்தார்.
நிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.
யுவன் சந்திரசேகரனிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவரது நாவல் அல்லது குறுங்கதைகள் (நீங்களுமா?!) தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். உயிர்மை அரங்கில் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன்.
லக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.
நான் விஜய பாரதம் ஸ்டாலில் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம்! ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.
பின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.
சுகுமாரன் விஷயத்தைப் பற்றி சுகா எழுதியிருக்கும் ஒரு சிறு பதிவு இங்கே.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Saturday, January 17, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 09)
பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
ஒன்பது நாள்களில் விற்காத விற்பனையை இந்த இரண்டு நாள்களில் எதிர்பார்க்கும் பதிப்பாளர்களின் வினோத எண்ணத்தை நினைத்தபடியே இப்பதிவை எழுதுகிறேன். 20 பந்துகளில் 44 ரன்கள் எடுக்கவேண்டியிருக்கும்போது, வெங்கடபதி ராஜு திடீரென்று சிக்ஸராக அடித்து இந்தியா ஜெயித்துவிடும் என்று நினைத்துக்கொண்டு சீரியஸாக கிரிக்கெட் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கிரிக்கெட்டைப் போலவே புத்தகக் கண்காட்சியும் யாராலும் கணிக்கமுடியாத விளையாட்டாகிவிட்டது. காணும் பொங்கலன்று புத்தகங்களைக் காணக்கூட மக்கள் வரவில்லை. எல்லோரும் கடற்கரையிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் தஞ்சமடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
வழக்கம்போல உணவு அரங்குகளில் கூட்டத்துக்குக் குறைவில்லை. அந்த வழியில் நடக்கவே முடியவில்லை. இயற்கைப் பழங்கள் ஒரு தட்டு 15 ரூபாய். இந்தப் புத்தகக் கண்காட்சியின் சாதனை விற்பனை இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதனை ஏதோ ஒன்றில் வந்தால் சரிதான்.
நியூ ஹொரைசன் மீடியாவின் ‘நலம் வெளியீடு’ அரங்கில் நல்ல கூட்டம் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த எளிய தமிழ்ப் புத்தகங்களின் தேவையை இவை உணர்த்துகின்றன. உடல்நலம் சார்ந்த, தீவிர இலக்கிய நடையில் எழுதப்பட்ட புத்தகங்கள் உள்ளன. சாளரம் வெளியிட்ட குழந்தைகள் பற்றிய புத்தகம், அடையாளம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.
கிழக்கு அரங்கிற்கு கவி (சன் பண்பலையில் ’சின்னதம்பி பெரியதம்பி’ நிகழ்ச்சியில் பெரிய தம்பியாகக் குரல் கொடுப்பவர்) கடை மூடும் நேரத்தில் வ்ந்தார். பண்பலையில் வரும் நிகழ்ச்சிகளில் நான் கேட்டவற்றில் எனக்குப் பிடித்த ஒரே நிகழ்ச்சி இது மட்டுமே. பெரிய தம்பி திருநெல்வேலிகாரராக இருக்கவேண்டும் என நினைத்திருந்தேன். அவர் மயிலாடுதுறைக்காரராம். மயிலாடுதுறையிலிருந்து கேள்வி கேட்டே பிரபலமானவர் தொடங்கி, இப்படி நெல்லை மொழியில் பேசி பிரபலமானவர் வரை பலர் இருக்கிறார்கள் போல. :-) இன்று கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ‘யாரும் போகாதீங்க’ன்னு சொல்லணும் என்றார். ’என்ன வேணும்னா சொல்லுங்க’ என்று சொன்னேன்.
சாதத் ஹஸன் மண்ட்டோவின் படைப்புகள் புத்தகத்தை புரட்டியபோது கண்ணில் பட்டது.
பிழை:
வயிற்றை மிகச் சுத்தமாகக் கிழித்துக்கொண்டு அந்தக் கத்தி சரியான நேர்க்கோட்டில் அவனின் தொப்புளுக்குக் கீழ் இறங்கியது.
அதில் அவனின் பைஜாமா நாடாவும் வெட்டப்பட்டது.
கத்தியைப் பிடித்திருந்தவனிடமிருந்து, அந்த வார்த்தைகள் வருத்ததோடு வெளியேறியது. “ச்சே... ச்சே... நான் தவறு செய்துவிட்டேன்.”
இப்புத்தகம் நல்ல வாசிப்பனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். ‘சஞ்சாரம்’ இதழில் வெளியாகியிருந்த சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களைப் படித்தபின்புதான் இந்த நூலை வாங்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஏற்கெனவே இப்புத்தகம் நிழல் வெளியீடாக வெளிவந்து, பதிப்பில் இல்லாமல் இருந்தது. இப்போது புலம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களும் புத்தகமாக வெளிவந்துள்ளது.
நர்மதா பதிப்பகத்தில் ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ புத்தகம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஆசிஃப் மீரான் சிலாகித்த புத்தகம் இது. நெல்லை வட்டார மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என நினைக்கிறேன். இன்று நேரமிருந்தால், புரட்டிப் பார்த்து வாங்கவேண்டும். நெல்லை கண்ணன் எழுதியது.
சுகுமாரன் வந்திருந்தார். சுகாவிற்கு நடந்த கதை என்ன என்று கேட்டார். சொன்னேன். இருவரும் சேர்ந்து சிரித்தோம். கவிதைப் புத்தகத்தைப் போன்ற, குறைந்த செலவிலான கையெறிகுண்டு வேறொன்று இருக்கவேமுடியாது.
இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. இரண்டு நாள்களில் நல்ல கூட்டம் வரும் என்று வழக்கம்போல நம்புகிறோம். நாளையும் வழக்கம்போல எழுதவேண்டிய நிலை வந்துவிடக்கூடாது.
பின்குறிப்பு 1: பத்ரி ‘ஆஞ்சநேயர் வடை’ கொண்டு வந்துகொடுத்தார். சில நாள்களுக்கு முன்பு அனுமன் ஜெயந்தி வந்தபோது, பல கோவில்களில் இதை பிரசாதமாகக் கொடுத்தார்கள். வடை என்றால் வடையல்ல, தட்டை போல இருக்கும். கடிக்கும்போது படபடவென சத்தம் கேட்கும். உடைவது பல்லா தட்டையா என்பதைக் கண்டறிய சில நொடிகள் எடுக்கும். ‘இதை சாப்பிட்டதாலதான் ஆஞ்சநேயர் வாய் வீங்கிட்டோ’ என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வடை நன்றாக இருந்தது. எல்லாம் வல்ல தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன்... சே... எல்லாம் வல்ல ஆஞ்சநேயர் பதிப்பாளர்களைக் காக்கட்டும்!
பின்குறிப்பு 2: இன்றும் தோழர் வந்திருந்தார். சில ஆங்கிலப் புத்தகங்களை கையில் வைத்திருந்தார். பழைய புத்தகக் கடையில் வாங்கியவையா அல்லது அங்கு விற்பதற்கா எனத் தெரியவில்லை. நானும் இன்று சில ஆங்கிலப் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘நேரம் ஓட்டலாம்’ என்றிருக்கிறேன்.
பின்குறிப்பு 3: சுரேஷ் கண்ணன் ஃபோன் செய்து ‘என்னென்ன சிற்றிதழ்கள் கிடைக்கின்றன’ என்று கேட்டார். இவர் திருந்த வாய்ப்பில்லை போலிருக்கிறது.
ஒன்பது நாள்களில் விற்காத விற்பனையை இந்த இரண்டு நாள்களில் எதிர்பார்க்கும் பதிப்பாளர்களின் வினோத எண்ணத்தை நினைத்தபடியே இப்பதிவை எழுதுகிறேன். 20 பந்துகளில் 44 ரன்கள் எடுக்கவேண்டியிருக்கும்போது, வெங்கடபதி ராஜு திடீரென்று சிக்ஸராக அடித்து இந்தியா ஜெயித்துவிடும் என்று நினைத்துக்கொண்டு சீரியஸாக கிரிக்கெட் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கிரிக்கெட்டைப் போலவே புத்தகக் கண்காட்சியும் யாராலும் கணிக்கமுடியாத விளையாட்டாகிவிட்டது. காணும் பொங்கலன்று புத்தகங்களைக் காணக்கூட மக்கள் வரவில்லை. எல்லோரும் கடற்கரையிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் தஞ்சமடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
வழக்கம்போல உணவு அரங்குகளில் கூட்டத்துக்குக் குறைவில்லை. அந்த வழியில் நடக்கவே முடியவில்லை. இயற்கைப் பழங்கள் ஒரு தட்டு 15 ரூபாய். இந்தப் புத்தகக் கண்காட்சியின் சாதனை விற்பனை இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதனை ஏதோ ஒன்றில் வந்தால் சரிதான்.
நியூ ஹொரைசன் மீடியாவின் ‘நலம் வெளியீடு’ அரங்கில் நல்ல கூட்டம் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த எளிய தமிழ்ப் புத்தகங்களின் தேவையை இவை உணர்த்துகின்றன. உடல்நலம் சார்ந்த, தீவிர இலக்கிய நடையில் எழுதப்பட்ட புத்தகங்கள் உள்ளன. சாளரம் வெளியிட்ட குழந்தைகள் பற்றிய புத்தகம், அடையாளம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.
கிழக்கு அரங்கிற்கு கவி (சன் பண்பலையில் ’சின்னதம்பி பெரியதம்பி’ நிகழ்ச்சியில் பெரிய தம்பியாகக் குரல் கொடுப்பவர்) கடை மூடும் நேரத்தில் வ்ந்தார். பண்பலையில் வரும் நிகழ்ச்சிகளில் நான் கேட்டவற்றில் எனக்குப் பிடித்த ஒரே நிகழ்ச்சி இது மட்டுமே. பெரிய தம்பி திருநெல்வேலிகாரராக இருக்கவேண்டும் என நினைத்திருந்தேன். அவர் மயிலாடுதுறைக்காரராம். மயிலாடுதுறையிலிருந்து கேள்வி கேட்டே பிரபலமானவர் தொடங்கி, இப்படி நெல்லை மொழியில் பேசி பிரபலமானவர் வரை பலர் இருக்கிறார்கள் போல. :-) இன்று கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ‘யாரும் போகாதீங்க’ன்னு சொல்லணும் என்றார். ’என்ன வேணும்னா சொல்லுங்க’ என்று சொன்னேன்.
சாதத் ஹஸன் மண்ட்டோவின் படைப்புகள் புத்தகத்தை புரட்டியபோது கண்ணில் பட்டது.
பிழை:
வயிற்றை மிகச் சுத்தமாகக் கிழித்துக்கொண்டு அந்தக் கத்தி சரியான நேர்க்கோட்டில் அவனின் தொப்புளுக்குக் கீழ் இறங்கியது.
அதில் அவனின் பைஜாமா நாடாவும் வெட்டப்பட்டது.
கத்தியைப் பிடித்திருந்தவனிடமிருந்து, அந்த வார்த்தைகள் வருத்ததோடு வெளியேறியது. “ச்சே... ச்சே... நான் தவறு செய்துவிட்டேன்.”
இப்புத்தகம் நல்ல வாசிப்பனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். ‘சஞ்சாரம்’ இதழில் வெளியாகியிருந்த சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களைப் படித்தபின்புதான் இந்த நூலை வாங்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஏற்கெனவே இப்புத்தகம் நிழல் வெளியீடாக வெளிவந்து, பதிப்பில் இல்லாமல் இருந்தது. இப்போது புலம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களும் புத்தகமாக வெளிவந்துள்ளது.
நர்மதா பதிப்பகத்தில் ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ புத்தகம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஆசிஃப் மீரான் சிலாகித்த புத்தகம் இது. நெல்லை வட்டார மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என நினைக்கிறேன். இன்று நேரமிருந்தால், புரட்டிப் பார்த்து வாங்கவேண்டும். நெல்லை கண்ணன் எழுதியது.
சுகுமாரன் வந்திருந்தார். சுகாவிற்கு நடந்த கதை என்ன என்று கேட்டார். சொன்னேன். இருவரும் சேர்ந்து சிரித்தோம். கவிதைப் புத்தகத்தைப் போன்ற, குறைந்த செலவிலான கையெறிகுண்டு வேறொன்று இருக்கவேமுடியாது.
இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. இரண்டு நாள்களில் நல்ல கூட்டம் வரும் என்று வழக்கம்போல நம்புகிறோம். நாளையும் வழக்கம்போல எழுதவேண்டிய நிலை வந்துவிடக்கூடாது.
பின்குறிப்பு 1: பத்ரி ‘ஆஞ்சநேயர் வடை’ கொண்டு வந்துகொடுத்தார். சில நாள்களுக்கு முன்பு அனுமன் ஜெயந்தி வந்தபோது, பல கோவில்களில் இதை பிரசாதமாகக் கொடுத்தார்கள். வடை என்றால் வடையல்ல, தட்டை போல இருக்கும். கடிக்கும்போது படபடவென சத்தம் கேட்கும். உடைவது பல்லா தட்டையா என்பதைக் கண்டறிய சில நொடிகள் எடுக்கும். ‘இதை சாப்பிட்டதாலதான் ஆஞ்சநேயர் வாய் வீங்கிட்டோ’ என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வடை நன்றாக இருந்தது. எல்லாம் வல்ல தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன்... சே... எல்லாம் வல்ல ஆஞ்சநேயர் பதிப்பாளர்களைக் காக்கட்டும்!
பின்குறிப்பு 2: இன்றும் தோழர் வந்திருந்தார். சில ஆங்கிலப் புத்தகங்களை கையில் வைத்திருந்தார். பழைய புத்தகக் கடையில் வாங்கியவையா அல்லது அங்கு விற்பதற்கா எனத் தெரியவில்லை. நானும் இன்று சில ஆங்கிலப் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘நேரம் ஓட்டலாம்’ என்றிருக்கிறேன்.
பின்குறிப்பு 3: சுரேஷ் கண்ணன் ஃபோன் செய்து ‘என்னென்ன சிற்றிதழ்கள் கிடைக்கின்றன’ என்று கேட்டார். இவர் திருந்த வாய்ப்பில்லை போலிருக்கிறது.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009
Friday, January 16, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08)
பதிவுவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
நேற்றுமுந்தினம் போலவே நேற்றும் கூட்டம் இருந்தது. விடுமுறைக்கான கடும் கூட்டம் இன்னும் வரவில்லை. சென்ற ஞாயிறன்று இருந்த கூட்டத்தைப்போல் இதுவரை கூட்டம் வரவில்லை. இன்னும் மீதமிருக்கும் மூன்று நாள்களில் ஏதேனும் ஒருநாளில் அந்த அதிகபட்ச கூட்டத்தை புத்தகக் கண்காட்சி காணும் என்று நினைக்கிறேன். அது பெரும்பாலும் வரும் ஞாயிறாக இருக்கலாம்.
நேற்று காலையில் மந்தமாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நான்கு மணிக்குப் பின்பு பரபரப்பாகியது. மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். இந்த முறை சொதப்பியது, புத்தகக் கண்காட்சி அரங்கித்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் உணவு அரங்குகள். அங்கு மக்கள் தேங்கிவிடுகிறார்கள். அவர்கள் மற்ற பதிப்பகத்திற்குள் செல்லுவதில்லை. அல்லது அங்கேயே கண்ணில் படும் அரங்குக்குள் மட்டுமே சென்றுவிட்டு மற்ற அரங்குகளைப் பார்க்காமல் போயிவிடுகிறார்கள். இந்த உணவு அரங்குகளை அடுத்தமுறை கண்காட்சி அரங்குக்குள் வைக்காமல் தனியே வெளியே வைக்கவேண்டும். குறைந்தபட்சம், அங்கு நடக்கமுடியாமல் அவதிப்படும் வாசகர்களுக்காவது நன்மையை உண்டாக்கும். என்னென்ன உணவு விடுதிகள் இருக்கின்றன? வடை, பஜ்ஜி, போண்டா விற்கும் உணவகம், ஐஸ்கிரீம் விற்கும் உணவகம், காஃபி, தேநீர்க் கடை, பழங்கள் விற்கும் உணவு அரங்கு, பழச்சாறு கடை, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு விற்கும் கடை – இத்தனையையும் மீறி ஒரு வாசகன் ஒரு புத்தகத்தைக் கண்டடையவேண்டும். மனதில் உறுதி வேண்டும்.
புனித வியாழன். தோழர் வ்ந்திருந்தார். உடனே சென்று கைகுலுக்கிப் பேசலாம் என்றால், தீவிரமாக கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவர் கை வலித்து ஓய்ந்ததும், மெல்ல அருகில் சென்று ‘ஸ்டாலினியப் படுகொலைகள்’ புத்தகம் எங்கே கிடைக்கும் என்றேன். ‘தமிழினில போட்டிருக்காங்க. பின் தொடரும் நிழலின் குரல்ன்ற பேர்ல வந்திருக்கு’ என்றார்.
நிறையப் பேர் பாராவைத் தேடினார்கள். மாயவலியில் அவர் இருப்பதைச் சொன்னேன்.
இன்று தினமலரில் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும் அரங்கு என்று இரண்டு அரங்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று, உயிர்மை பதிப்பக அரங்கு. மற்றொன்று, மணிமேகலைப் பிரசுரம். மனுஷ்யபுத்திரன் இதற்கெல்லாம் மனமுடைந்துவிடுபவர் அல்ல என்பது என் திண்ணம்.
நேற்று சில பதிப்பகங்களைப் பார்வையிட்டேன். புலம் என்கிற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பவர் நண்பர் லோகநாதன். காலச்சுவடில் இருந்தவர். நல்ல உழைப்பாளி. புத்தகம் பதிப்பிக்கும் துறையில் பல நுணுக்கங்கள் அறிந்தவர். அட்டையில் ஒரு சில இடங்கள் மட்டும் மேடாக இருப்பது, சில இடங்கள் மின்னும் நிறத்தில் இருப்பது என்பன போன்ற சில நுணுக்கங்களில் (இவை ஏற்கெனவே வந்தவைதான் என்றாலும்) புத்தகம் வந்தால் அவற்றின் நோக்குத்தரம் எவ்வளவு உயர்வாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தியவர்.
நேற்று கண்ணில் பட்ட, கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்.
அஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் - அடையாளம்
மஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் - அடையாளம்
இலங்கையில் சமாதானம் பேசுதல் - அடையாளம்
புத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி
நண்பர் விஜய மகேந்திரன் வ்ந்திருந்தார். தோழமை பதிபக்கத்தின் வெளியீடாக வரவிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் எனது ஒரு சிறுகதையும் இடம்பெறுகிறது. அப்புத்தகத்தை வாங்க நாற்பது, ஐம்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னேன். கடும் அதிர்ச்சியுடன் சிரித்தார். தமிழினி மணி, ’புத்தகச் சந்தைக்கு இத்தனை பெரிய இக்கட்டு வருமென்று நினைக்கவில்லை’ என்றார்!
பின்குறிப்பு: இதை இப்போது புத்தகக் கண்காட்சியில் இருந்து உள்ளிடுகிறேன். ஓர் அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘முக்கிய அறிவிப்பு. வாசகர் ஒருவர் தங்கள் புத்தகங்களோடு சேர்த்து பில்புக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்கள் புத்தகங்களை வாசகர்கள் சரி பார்த்து, பில் புக் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ தொடர்ந்து பில் போட்டுக்கொண்டே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்பதுதான் இதன் நீதி என்க.
நேற்றுமுந்தினம் போலவே நேற்றும் கூட்டம் இருந்தது. விடுமுறைக்கான கடும் கூட்டம் இன்னும் வரவில்லை. சென்ற ஞாயிறன்று இருந்த கூட்டத்தைப்போல் இதுவரை கூட்டம் வரவில்லை. இன்னும் மீதமிருக்கும் மூன்று நாள்களில் ஏதேனும் ஒருநாளில் அந்த அதிகபட்ச கூட்டத்தை புத்தகக் கண்காட்சி காணும் என்று நினைக்கிறேன். அது பெரும்பாலும் வரும் ஞாயிறாக இருக்கலாம்.
நேற்று காலையில் மந்தமாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நான்கு மணிக்குப் பின்பு பரபரப்பாகியது. மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். இந்த முறை சொதப்பியது, புத்தகக் கண்காட்சி அரங்கித்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் உணவு அரங்குகள். அங்கு மக்கள் தேங்கிவிடுகிறார்கள். அவர்கள் மற்ற பதிப்பகத்திற்குள் செல்லுவதில்லை. அல்லது அங்கேயே கண்ணில் படும் அரங்குக்குள் மட்டுமே சென்றுவிட்டு மற்ற அரங்குகளைப் பார்க்காமல் போயிவிடுகிறார்கள். இந்த உணவு அரங்குகளை அடுத்தமுறை கண்காட்சி அரங்குக்குள் வைக்காமல் தனியே வெளியே வைக்கவேண்டும். குறைந்தபட்சம், அங்கு நடக்கமுடியாமல் அவதிப்படும் வாசகர்களுக்காவது நன்மையை உண்டாக்கும். என்னென்ன உணவு விடுதிகள் இருக்கின்றன? வடை, பஜ்ஜி, போண்டா விற்கும் உணவகம், ஐஸ்கிரீம் விற்கும் உணவகம், காஃபி, தேநீர்க் கடை, பழங்கள் விற்கும் உணவு அரங்கு, பழச்சாறு கடை, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு விற்கும் கடை – இத்தனையையும் மீறி ஒரு வாசகன் ஒரு புத்தகத்தைக் கண்டடையவேண்டும். மனதில் உறுதி வேண்டும்.
புனித வியாழன். தோழர் வ்ந்திருந்தார். உடனே சென்று கைகுலுக்கிப் பேசலாம் என்றால், தீவிரமாக கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவர் கை வலித்து ஓய்ந்ததும், மெல்ல அருகில் சென்று ‘ஸ்டாலினியப் படுகொலைகள்’ புத்தகம் எங்கே கிடைக்கும் என்றேன். ‘தமிழினில போட்டிருக்காங்க. பின் தொடரும் நிழலின் குரல்ன்ற பேர்ல வந்திருக்கு’ என்றார்.
நிறையப் பேர் பாராவைத் தேடினார்கள். மாயவலியில் அவர் இருப்பதைச் சொன்னேன்.
இன்று தினமலரில் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும் அரங்கு என்று இரண்டு அரங்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று, உயிர்மை பதிப்பக அரங்கு. மற்றொன்று, மணிமேகலைப் பிரசுரம். மனுஷ்யபுத்திரன் இதற்கெல்லாம் மனமுடைந்துவிடுபவர் அல்ல என்பது என் திண்ணம்.
நேற்று சில பதிப்பகங்களைப் பார்வையிட்டேன். புலம் என்கிற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பவர் நண்பர் லோகநாதன். காலச்சுவடில் இருந்தவர். நல்ல உழைப்பாளி. புத்தகம் பதிப்பிக்கும் துறையில் பல நுணுக்கங்கள் அறிந்தவர். அட்டையில் ஒரு சில இடங்கள் மட்டும் மேடாக இருப்பது, சில இடங்கள் மின்னும் நிறத்தில் இருப்பது என்பன போன்ற சில நுணுக்கங்களில் (இவை ஏற்கெனவே வந்தவைதான் என்றாலும்) புத்தகம் வந்தால் அவற்றின் நோக்குத்தரம் எவ்வளவு உயர்வாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தியவர்.
நேற்று கண்ணில் பட்ட, கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்.
அஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் - அடையாளம்
மஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் - அடையாளம்
இலங்கையில் சமாதானம் பேசுதல் - அடையாளம்
புத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி
நண்பர் விஜய மகேந்திரன் வ்ந்திருந்தார். தோழமை பதிபக்கத்தின் வெளியீடாக வரவிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் எனது ஒரு சிறுகதையும் இடம்பெறுகிறது. அப்புத்தகத்தை வாங்க நாற்பது, ஐம்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னேன். கடும் அதிர்ச்சியுடன் சிரித்தார். தமிழினி மணி, ’புத்தகச் சந்தைக்கு இத்தனை பெரிய இக்கட்டு வருமென்று நினைக்கவில்லை’ என்றார்!
பின்குறிப்பு: இதை இப்போது புத்தகக் கண்காட்சியில் இருந்து உள்ளிடுகிறேன். ஓர் அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘முக்கிய அறிவிப்பு. வாசகர் ஒருவர் தங்கள் புத்தகங்களோடு சேர்த்து பில்புக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்கள் புத்தகங்களை வாசகர்கள் சரி பார்த்து, பில் புக் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ தொடர்ந்து பில் போட்டுக்கொண்டே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்பதுதான் இதன் நீதி என்க.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Thursday, January 15, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07)
பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
பொங்கலன்று கூட்டம் குவியும் என்கிற நம்பிக்கையும் மெல்ல கரைந்தது. கூட்டம் சுமாராகவே இருந்தது. பெரும்பாலான பதிப்பாளர்கள் கடந்தமுறை நடந்த விற்பனையில் பாதியாவது தாண்டுமா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு பதிப்பக நண்பர் புத்தகக் கண்காட்சி வைத்த இடம் சரியில்லை என்று சொன்னார். என்று இங்கு வைக்கத் தொடங்கினார்களோ அப்போதிருந்தே விற்பனை இல்லை என்றும் இந்தமுறை கடுமையான விற்பனைச் சரிவு என்றும் அவர் சொன்னார். இன்னொரு பதிப்பகத் தோழர் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியே இது என்றார். எப்படி இருந்தாலும், கூட்டம் குறைவாக இருந்தது என்பதுதான் விஷயம். மாலை நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் கூட்டம் வரத் தொடங்கியது.
நேற்று நான் சில தமிழ் பதிப்பக அரங்குகளைச் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்களைப் பார்த்தேன். சில புத்தகங்களைக் குறித்து வைத்துக்கொண்டேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றின் பட்டியல்.
வாங்கியவை:
பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை - அலைகள்
காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள்
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை
ஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை
உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி
எனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு
பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு
குறித்து வைத்துக்கொண்டவை:
உறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு
உலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு
மும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை
மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா
உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை
அங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு
சாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு
சிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு
தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து
இன்று நேரமிருந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு மேலும் சில புத்தகங்களை உள்ளிடுகிறேன்.
புத்தகக் கண்காட்சி நிறைவடையும் தருவாயில் திடீரென்று ஒலிபெருக்கியில் ‘ஃபயர் சர்வீஸ் உடனே வரவும்’ என்று நான்கைந்து முறை பதட்டத்துடன் அறிவித்தார்கள். அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் பதட்டமடைந்து வெளிவாயிலுக்கு ஓட, சிறிய பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்பு காந்தி கண்ணதாசன் ஒலிபெருக்கியில் ‘சிறு சார்ட் சர்க்யூட் மட்டுமே என்றும் அதனால் பதட்டப்பட ஒன்றுமில்லை’ என்று அறிவித்தபின்பே கூட்டம் அமைதியானது. தேவையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சிறிய சார்ட் சர்க்யூட்டுக்கு முதலில் இப்படி மைக்கில் அலறாமல் இருந்தால் இந்த சிறிய பதட்டத்தையும் தவிர்த்திருக்கமுடியும். இதை காந்தி கண்ணதாசனும் ஒலிபெருக்கியில் சொன்னார்.
இன்றைய புத்தகக் கண்காட்சியில் இப்போது இருக்கிறேன். அங்கிருந்தபடியே இப்பதிவை உள்ளிடுகிறேன். கூட்டம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பதிப்பாளர்களை இன்று எப்படி காப்பாற்றுகிறது என்று பார்க்கலாம்.
பொங்கலன்று கூட்டம் குவியும் என்கிற நம்பிக்கையும் மெல்ல கரைந்தது. கூட்டம் சுமாராகவே இருந்தது. பெரும்பாலான பதிப்பாளர்கள் கடந்தமுறை நடந்த விற்பனையில் பாதியாவது தாண்டுமா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு பதிப்பக நண்பர் புத்தகக் கண்காட்சி வைத்த இடம் சரியில்லை என்று சொன்னார். என்று இங்கு வைக்கத் தொடங்கினார்களோ அப்போதிருந்தே விற்பனை இல்லை என்றும் இந்தமுறை கடுமையான விற்பனைச் சரிவு என்றும் அவர் சொன்னார். இன்னொரு பதிப்பகத் தோழர் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியே இது என்றார். எப்படி இருந்தாலும், கூட்டம் குறைவாக இருந்தது என்பதுதான் விஷயம். மாலை நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் கூட்டம் வரத் தொடங்கியது.
நேற்று நான் சில தமிழ் பதிப்பக அரங்குகளைச் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்களைப் பார்த்தேன். சில புத்தகங்களைக் குறித்து வைத்துக்கொண்டேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றின் பட்டியல்.
வாங்கியவை:
பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை - அலைகள்
காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள்
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை
ஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை
உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி
எனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு
பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு
குறித்து வைத்துக்கொண்டவை:
உறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு
உலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு
மும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை
மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா
உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை
அங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு
சாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு
சிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு
தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து
இன்று நேரமிருந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு மேலும் சில புத்தகங்களை உள்ளிடுகிறேன்.
புத்தகக் கண்காட்சி நிறைவடையும் தருவாயில் திடீரென்று ஒலிபெருக்கியில் ‘ஃபயர் சர்வீஸ் உடனே வரவும்’ என்று நான்கைந்து முறை பதட்டத்துடன் அறிவித்தார்கள். அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் பதட்டமடைந்து வெளிவாயிலுக்கு ஓட, சிறிய பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்பு காந்தி கண்ணதாசன் ஒலிபெருக்கியில் ‘சிறு சார்ட் சர்க்யூட் மட்டுமே என்றும் அதனால் பதட்டப்பட ஒன்றுமில்லை’ என்று அறிவித்தபின்பே கூட்டம் அமைதியானது. தேவையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சிறிய சார்ட் சர்க்யூட்டுக்கு முதலில் இப்படி மைக்கில் அலறாமல் இருந்தால் இந்த சிறிய பதட்டத்தையும் தவிர்த்திருக்கமுடியும். இதை காந்தி கண்ணதாசனும் ஒலிபெருக்கியில் சொன்னார்.
இன்றைய புத்தகக் கண்காட்சியில் இப்போது இருக்கிறேன். அங்கிருந்தபடியே இப்பதிவை உள்ளிடுகிறேன். கூட்டம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பதிப்பாளர்களை இன்று எப்படி காப்பாற்றுகிறது என்று பார்க்கலாம்.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Wednesday, January 14, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 06)
வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
ஒவ்வொரு நாளும் ஒரே செய்தியை மாற்றி மாற்றி எழுதும் டைரிக் குறிப்பு போல, இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகள் வருகின்றன என்பதை நானே உணர முடிகிறது. சென்ற வருடமும் இப்படித்தான் நிகழ்ந்தது. இதைத் தவிர்க்கமுடியாது. அதனால் என் டைரிக்குறிப்பைத் தொடந்து படிக்கவும்.
நேற்று முழுநாள். ஒரு முழுநாளுக்கான கூட்டம் சிறிதும் கிடையாது. அதிலும் முதல் மூன்று மணி நேரங்களில் கூட்டமே இல்லை என்று சொல்லலாம். ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வந்திருந்தார்கள். ப்ராடிஜி அரங்குக்கு வந்தவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஆளுக்கு 100 ரூபாய் வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லோருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்கும் பழரசம், உணவு வகைகளை வாங்கி உண்ணவே விருப்பம். குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட என்ன புத்தகங்கள் முக்கியம் என்பதுதான் என் எண்ணமும். ப்ராடிஜியின் அரங்கிற்கான எதிர் அரங்கு இஸ்கான் அரங்கு. அங்கு பள்ளி மாணவர்கள் சென்றவுடன், அங்கிருந்த காவியுடை மனிதர், எல்லாப் பிள்ளைகளையும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ராடிஜி அரங்கில் இருந்த பத்ரி ‘இந்த ஹிந்துத்துவா...’ என்று என்னவோ சொல்ல ஆரம்பித்தார். நானும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா சொல்ல ஆரம்பித்ததால் அவர் என்ன சொல்ல வந்தார் என்று காதில் விழவில்லை. :-) கிழக்கு பதிப்ப்கத்தின் வரிசையில் விஜயபாரதம் அரங்கும், கிழக்கு பதிப்பகத்துக்கு அடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கும், எதிரே நித்யானந்த திவ்ய பீடமும் (இன்னொரு பக்கம் பாரதி புத்தகாலயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை) ப்ராடிஜிக்கு எதிரே இஸ்கானும் அமைந்ததெல்லாம் இயற்கையாக அமைந்ததுதான். அதனை எல்லாம் அவன் செயல் என்றும் சொல்லலாம்.
தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார். அந்த நண்பர் வருடா வருடம் இன்னும் அதிகப் பணத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
தேசிகன் வந்திருந்தார். சத்யஜித் ரேயின் இரண்டு புத்தகங்களை வாங்கினார். நியூ ஹொரைசன் எல்லா விஷயங்களையும் யூ.எஸ். ஸ்டைலில் செய்வதால், வாங்கிய புத்தகம் பிடிக்கவில்லை என்றால் திரும்பக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளும் யூ.எஸ். ஸ்டைலையும் அறிவிக்க ஆலோசனை வழங்கினார். தமிழவன், கோணங்கி நிலையையெல்லாம் நினைத்துப் பார்த்தேன். திகிலாகத்தான் இருந்தது.
மீண்டும் தோழர். எத்தனை தடவை தோழரைப் பற்றி எழுதுவேன் என நினைக்கக்கூடாது. தோழர் செய்திக்கு மேல் செய்தியைத் தந்துகொண்டிருக்கிறார். புத்தக கண்காட்சியின் வளாகத்திற்கு வெளியே நடைபாதையிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து தலைகாணி சைஸில் இருக்கும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். எல்லாம் சேர்ந்து ஐநூறு ரூபாய்தான் என்றார். அதை பழைய புத்தகக் கடையில் விற்றது அதை வாங்கிய இன்னொரு தோழராக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இந்தத் தோழர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அன்னார் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை.’
இன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க நூலகங்களில் அலைந்தது, சிறுவர் மலர் படிக்க அதிகாலையிலேயே தினமலர் நாளிதழ் வாங்கும் நண்பன் வீட்டுக்குச் சென்று காத்திருப்பது போன்ற விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பின்பு ராணி காமிக்ஸ். ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கும் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். இல்லையென்றால், வீட்டில் காமிக்ஸிற்கும் ஒட்டுமொத்த தடை விழுந்துவிடும். காமிக்ஸில் தொடங்கி, அம்புலிமாமா, பாலமித்ரா வழியாக, விஜயசேகரனின் வீர சாகஸங்கள் போன்ற புத்தகங்கள் வழியாக ஒருவர் சிறந்த புத்தகங்களை அடைய முடியும். சிறுவர்களுக்கான, மகிழ்ச்சியைத் தவிர வேறு எவ்வித நோக்கமுமற்ற இந்தப் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல அடித்தளம் கொடுப்பவை.
’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். படிக்கவேண்டும். இடையில் வராமல் இருந்த உன்னதம் இப்போது மாத இதழாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து வரும் என்று நம்புவோம். ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதையும் வாங்கவேண்டும். நீண்டநாள் வாங்க நினைத்த புத்தகம் இது. சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பையும் வாங்க நினைத்திருக்கிறேன். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.
இன்றாவது என்னைக் கவரும், என் ரசனைக்குட்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தரமுடியுமா என்று பார்க்கிறேன்.
ஒவ்வொரு நாளும் ஒரே செய்தியை மாற்றி மாற்றி எழுதும் டைரிக் குறிப்பு போல, இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகள் வருகின்றன என்பதை நானே உணர முடிகிறது. சென்ற வருடமும் இப்படித்தான் நிகழ்ந்தது. இதைத் தவிர்க்கமுடியாது. அதனால் என் டைரிக்குறிப்பைத் தொடந்து படிக்கவும்.
நேற்று முழுநாள். ஒரு முழுநாளுக்கான கூட்டம் சிறிதும் கிடையாது. அதிலும் முதல் மூன்று மணி நேரங்களில் கூட்டமே இல்லை என்று சொல்லலாம். ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வந்திருந்தார்கள். ப்ராடிஜி அரங்குக்கு வந்தவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஆளுக்கு 100 ரூபாய் வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லோருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்கும் பழரசம், உணவு வகைகளை வாங்கி உண்ணவே விருப்பம். குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட என்ன புத்தகங்கள் முக்கியம் என்பதுதான் என் எண்ணமும். ப்ராடிஜியின் அரங்கிற்கான எதிர் அரங்கு இஸ்கான் அரங்கு. அங்கு பள்ளி மாணவர்கள் சென்றவுடன், அங்கிருந்த காவியுடை மனிதர், எல்லாப் பிள்ளைகளையும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ராடிஜி அரங்கில் இருந்த பத்ரி ‘இந்த ஹிந்துத்துவா...’ என்று என்னவோ சொல்ல ஆரம்பித்தார். நானும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா சொல்ல ஆரம்பித்ததால் அவர் என்ன சொல்ல வந்தார் என்று காதில் விழவில்லை. :-) கிழக்கு பதிப்ப்கத்தின் வரிசையில் விஜயபாரதம் அரங்கும், கிழக்கு பதிப்பகத்துக்கு அடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கும், எதிரே நித்யானந்த திவ்ய பீடமும் (இன்னொரு பக்கம் பாரதி புத்தகாலயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை) ப்ராடிஜிக்கு எதிரே இஸ்கானும் அமைந்ததெல்லாம் இயற்கையாக அமைந்ததுதான். அதனை எல்லாம் அவன் செயல் என்றும் சொல்லலாம்.
தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார். அந்த நண்பர் வருடா வருடம் இன்னும் அதிகப் பணத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
தேசிகன் வந்திருந்தார். சத்யஜித் ரேயின் இரண்டு புத்தகங்களை வாங்கினார். நியூ ஹொரைசன் எல்லா விஷயங்களையும் யூ.எஸ். ஸ்டைலில் செய்வதால், வாங்கிய புத்தகம் பிடிக்கவில்லை என்றால் திரும்பக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளும் யூ.எஸ். ஸ்டைலையும் அறிவிக்க ஆலோசனை வழங்கினார். தமிழவன், கோணங்கி நிலையையெல்லாம் நினைத்துப் பார்த்தேன். திகிலாகத்தான் இருந்தது.
மீண்டும் தோழர். எத்தனை தடவை தோழரைப் பற்றி எழுதுவேன் என நினைக்கக்கூடாது. தோழர் செய்திக்கு மேல் செய்தியைத் தந்துகொண்டிருக்கிறார். புத்தக கண்காட்சியின் வளாகத்திற்கு வெளியே நடைபாதையிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து தலைகாணி சைஸில் இருக்கும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். எல்லாம் சேர்ந்து ஐநூறு ரூபாய்தான் என்றார். அதை பழைய புத்தகக் கடையில் விற்றது அதை வாங்கிய இன்னொரு தோழராக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இந்தத் தோழர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அன்னார் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை.’
இன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க நூலகங்களில் அலைந்தது, சிறுவர் மலர் படிக்க அதிகாலையிலேயே தினமலர் நாளிதழ் வாங்கும் நண்பன் வீட்டுக்குச் சென்று காத்திருப்பது போன்ற விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பின்பு ராணி காமிக்ஸ். ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கும் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். இல்லையென்றால், வீட்டில் காமிக்ஸிற்கும் ஒட்டுமொத்த தடை விழுந்துவிடும். காமிக்ஸில் தொடங்கி, அம்புலிமாமா, பாலமித்ரா வழியாக, விஜயசேகரனின் வீர சாகஸங்கள் போன்ற புத்தகங்கள் வழியாக ஒருவர் சிறந்த புத்தகங்களை அடைய முடியும். சிறுவர்களுக்கான, மகிழ்ச்சியைத் தவிர வேறு எவ்வித நோக்கமுமற்ற இந்தப் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல அடித்தளம் கொடுப்பவை.
’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். படிக்கவேண்டும். இடையில் வராமல் இருந்த உன்னதம் இப்போது மாத இதழாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து வரும் என்று நம்புவோம். ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதையும் வாங்கவேண்டும். நீண்டநாள் வாங்க நினைத்த புத்தகம் இது. சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பையும் வாங்க நினைத்திருக்கிறேன். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.
இன்றாவது என்னைக் கவரும், என் ரசனைக்குட்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தரமுடியுமா என்று பார்க்கிறேன்.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Tuesday, January 13, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)
பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)
நான்கு நாள்கள் கடுமையான வேலை செய்து களைத்துப்போனால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வது போன்ற நாளாக அமைந்தது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாள். எங்கு பார்த்தாலும் வெட்ட வெளி. :-) ’கூட்டம் குறைவாக இருப்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது, ஏனென்றால் நின்று படித்து வாங்குகிறார்கள்’ என்று ஒரு பதிப்பாளர் சொன்னார் என்று ஞாநி என்னிடம் கூறினார். சிரித்தேன். :P பல பதிப்பாளர்கள் அரங்கில் இல்லாமல் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருட்ந்தார்கள். நான் கிழக்கு கடையில் இருந்தேன். காலச்சுவடு, எனி இண்டியன், தோழமை வெளியீடு, உயிர்மை அரங்குகளைப் பார்வையிட்டேன்.
இன்று முதல் வரும் எல்லா நாள்களும் முழு வேலை நாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது பபாஸி. பல பதிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். சில பதிப்பாளர்கள் முழுநாளும் சும்மா இருக்கணுமா என்றார்கள்.
சென்ற ஆண்டு விளம்பரங்களை ஒப்பிடும்போது, பபாஸியின் இந்த ஆண்டு விளம்பரங்கள் குறைவாகவே இருக்கின்றன. சென்ற ஆண்டில் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரத் தட்டி முளைத்திருந்தது. சன் டிவியில் விளம்பரங்கள் வந்தன. இப்போது அதெல்லாம் காணாமல் போய்விட்டது. Cost cutting வேலையாக இருக்கலாம். சன் பண்பலையில் விளம்பரங்களைக் கேட்டேன். அது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல.
தமிழக அரசின் குடும்ப விழாவான சங்கமத்திற்கு ஊடகங்கள் அடிக்கும் மஸ்கா அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். அதில் ஒரு சிறு பங்காவது ஊடகங்கள் புத்தகக் கண்காட்சியில் உள்ள அரங்குகளுக்குக் கொடுத்திருக்கலாம். ஒரு பத்திரிகைகூட உருப்படியாக புத்தகக் கண்காட்சி பற்றிய கவரேஜ் வெளியிடவில்லை. இங்கிருக்கும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் கவரேஜ் என்பது விளம்பரம் என்றாகிவிட்டது. அரைப்பக்கம் விளம்பரம் கொடுத்தால் அரைப்பக்கம் எழுதுவார்கள். அப்படியானால் பத்திரிகைகள் பதிப்பாளர்களைப் பற்றி, அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் பற்றி, அங்கு வரும் வாசகர்களின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி, அங்கு செய்யப்படவேண்டிய மேம்பாடுகள் பற்றி எப்போதுதான் எழுதுவார்கள்? அப்துல்கலாம் வந்து திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ. (அவர் பேசும்போது கவிதை மாதிரி ஒன்றை சொல்லி, அதை எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள் என்று ஆசிரியராகிவிடுவார். 60 வயது கிழமெல்லாம் குழந்தைகளாகி கருமமே கண்ணாக அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அவர் வராததால் அந்த சிறந்த நகைச்சுவைக் காட்சியைக் காணமுடியாமல் போய்விட்டது!) கருணாநிதி திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ, ஒரு கட்டுரை. இவ்வளவுதான் பத்திரிகைகள் அறிந்த விஷயம். அதை மீறி ஒரு விவாதப்பூர்வமான ஒரு கட்டுரையையோ, புத்தகக் கண்காட்சியின் தேவை, சிறப்புகளைப் பற்றியோ எழுதுவதில்லை. கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ புத்தகக் கண்காட்சியைக் குத்தகைக்கு எடுத்தாலொழிய அரசின் கவனம் இப்பக்கம் திரும்பும் என்று தோன்றவில்லை.
கிழக்கு அரங்கில் மாயவலை புத்தகம் விற்பனைக்கு வெளிவந்தது. பாரா இப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அது கை நழுவிக் காலில் விழுந்துதான் அவருக்கு அடிபட்டது என்கிற செய்தியெல்லாம் இப்போது வெளியே கசியத் தொடங்கியிருக்கிறது.
இன்று முதல் வரும் ஆறு நாள்களும் ஆகும் விற்பனையைப் பொருத்தே ஓர் அரங்கின் ஒட்டுமொத்த விற்பனை வெற்றியா தோல்வியா என்பது தெரியும். ஆறு நாள்களில் நான்கு நாள்களாவது நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். சென்னையில் வீட்டுக்குள் அடைந்துகொண்டிருக்கும் மக்களைப் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டு வருவது எப்படி? முதலில் எங்கிருந்தும் புத்தகக் கண்காட்சிக்கு வர பேருந்துகள் தேவை. புத்தகக் கண்காட்சி முடிந்து வீட்டுக்குச் செல்ல, பேருந்தை நம்பி ஒரு பதிப்பாளரோ வாசகரோ வந்தால் பெரும் கஷ்டம்தான். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். சங்கமம் குடும்ப விழாவிற்கு ஒரு கோடி தரும் முதல்வர், புத்தகக் கண்காட்சிக்கென சில பேருந்துகளை இயக்குவது பற்றி சிந்திக்கலாம். பபாஸியிலிருந்து இக்கோரிக்கை பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இதிலென்ன பெரிய நஷ்டமோ, கஷ்டமோ அரசுக்கு இருந்துவிடமுடியும் என்பது புலப்படவில்லை. பெண்கள் வீட்டுக்குச் செல்ல படும் பாட்டை பார்க்க பாவமாக இருக்கிறது.
இயக்குநர் சுகா வந்திருந்தார். சுகுமாரனைத் தேடி கவிதையைக் கண்டடைந்தார். அந்தக் கொடுமையை அவரே எழுதுவார். கவிஞர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். உங்களால் மறுக்கமுடியாத வகையில், லட்டு என்று சொல்லி, எப்போது வேண்டுமானாலும் ‘வெடிகுண்டு’ ஒன்றைக் கையில் திணிப்பார்கள்.
நான்கு நாள்கள் கடுமையான வேலை செய்து களைத்துப்போனால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வது போன்ற நாளாக அமைந்தது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாள். எங்கு பார்த்தாலும் வெட்ட வெளி. :-) ’கூட்டம் குறைவாக இருப்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது, ஏனென்றால் நின்று படித்து வாங்குகிறார்கள்’ என்று ஒரு பதிப்பாளர் சொன்னார் என்று ஞாநி என்னிடம் கூறினார். சிரித்தேன். :P பல பதிப்பாளர்கள் அரங்கில் இல்லாமல் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருட்ந்தார்கள். நான் கிழக்கு கடையில் இருந்தேன். காலச்சுவடு, எனி இண்டியன், தோழமை வெளியீடு, உயிர்மை அரங்குகளைப் பார்வையிட்டேன்.
இன்று முதல் வரும் எல்லா நாள்களும் முழு வேலை நாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது பபாஸி. பல பதிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். சில பதிப்பாளர்கள் முழுநாளும் சும்மா இருக்கணுமா என்றார்கள்.
சென்ற ஆண்டு விளம்பரங்களை ஒப்பிடும்போது, பபாஸியின் இந்த ஆண்டு விளம்பரங்கள் குறைவாகவே இருக்கின்றன. சென்ற ஆண்டில் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரத் தட்டி முளைத்திருந்தது. சன் டிவியில் விளம்பரங்கள் வந்தன. இப்போது அதெல்லாம் காணாமல் போய்விட்டது. Cost cutting வேலையாக இருக்கலாம். சன் பண்பலையில் விளம்பரங்களைக் கேட்டேன். அது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல.
தமிழக அரசின் குடும்ப விழாவான சங்கமத்திற்கு ஊடகங்கள் அடிக்கும் மஸ்கா அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். அதில் ஒரு சிறு பங்காவது ஊடகங்கள் புத்தகக் கண்காட்சியில் உள்ள அரங்குகளுக்குக் கொடுத்திருக்கலாம். ஒரு பத்திரிகைகூட உருப்படியாக புத்தகக் கண்காட்சி பற்றிய கவரேஜ் வெளியிடவில்லை. இங்கிருக்கும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் கவரேஜ் என்பது விளம்பரம் என்றாகிவிட்டது. அரைப்பக்கம் விளம்பரம் கொடுத்தால் அரைப்பக்கம் எழுதுவார்கள். அப்படியானால் பத்திரிகைகள் பதிப்பாளர்களைப் பற்றி, அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் பற்றி, அங்கு வரும் வாசகர்களின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி, அங்கு செய்யப்படவேண்டிய மேம்பாடுகள் பற்றி எப்போதுதான் எழுதுவார்கள்? அப்துல்கலாம் வந்து திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ. (அவர் பேசும்போது கவிதை மாதிரி ஒன்றை சொல்லி, அதை எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள் என்று ஆசிரியராகிவிடுவார். 60 வயது கிழமெல்லாம் குழந்தைகளாகி கருமமே கண்ணாக அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அவர் வராததால் அந்த சிறந்த நகைச்சுவைக் காட்சியைக் காணமுடியாமல் போய்விட்டது!) கருணாநிதி திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ, ஒரு கட்டுரை. இவ்வளவுதான் பத்திரிகைகள் அறிந்த விஷயம். அதை மீறி ஒரு விவாதப்பூர்வமான ஒரு கட்டுரையையோ, புத்தகக் கண்காட்சியின் தேவை, சிறப்புகளைப் பற்றியோ எழுதுவதில்லை. கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ புத்தகக் கண்காட்சியைக் குத்தகைக்கு எடுத்தாலொழிய அரசின் கவனம் இப்பக்கம் திரும்பும் என்று தோன்றவில்லை.
கிழக்கு அரங்கில் மாயவலை புத்தகம் விற்பனைக்கு வெளிவந்தது. பாரா இப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அது கை நழுவிக் காலில் விழுந்துதான் அவருக்கு அடிபட்டது என்கிற செய்தியெல்லாம் இப்போது வெளியே கசியத் தொடங்கியிருக்கிறது.
இன்று முதல் வரும் ஆறு நாள்களும் ஆகும் விற்பனையைப் பொருத்தே ஓர் அரங்கின் ஒட்டுமொத்த விற்பனை வெற்றியா தோல்வியா என்பது தெரியும். ஆறு நாள்களில் நான்கு நாள்களாவது நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். சென்னையில் வீட்டுக்குள் அடைந்துகொண்டிருக்கும் மக்களைப் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டு வருவது எப்படி? முதலில் எங்கிருந்தும் புத்தகக் கண்காட்சிக்கு வர பேருந்துகள் தேவை. புத்தகக் கண்காட்சி முடிந்து வீட்டுக்குச் செல்ல, பேருந்தை நம்பி ஒரு பதிப்பாளரோ வாசகரோ வந்தால் பெரும் கஷ்டம்தான். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். சங்கமம் குடும்ப விழாவிற்கு ஒரு கோடி தரும் முதல்வர், புத்தகக் கண்காட்சிக்கென சில பேருந்துகளை இயக்குவது பற்றி சிந்திக்கலாம். பபாஸியிலிருந்து இக்கோரிக்கை பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இதிலென்ன பெரிய நஷ்டமோ, கஷ்டமோ அரசுக்கு இருந்துவிடமுடியும் என்பது புலப்படவில்லை. பெண்கள் வீட்டுக்குச் செல்ல படும் பாட்டை பார்க்க பாவமாக இருக்கிறது.
இயக்குநர் சுகா வந்திருந்தார். சுகுமாரனைத் தேடி கவிதையைக் கண்டடைந்தார். அந்தக் கொடுமையை அவரே எழுதுவார். கவிஞர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். உங்களால் மறுக்கமுடியாத வகையில், லட்டு என்று சொல்லி, எப்போது வேண்டுமானாலும் ‘வெடிகுண்டு’ ஒன்றைக் கையில் திணிப்பார்கள்.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Monday, January 12, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 04)
வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009
எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் வந்ததா என்றுதான் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில், சென்ற வருட புத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று வந்த கூட்டத்தைவிட இன்று குறைவு என்றுதான் நினைக்கிறேன். அதுவும் மாலை வரை கூட்டம் மிகவும் குறைவு. சென்ற ஞாயிறன்று உள்ளே நுழையும்போதே கொஞ்சம் பேர் அங்கே இருந்தார்கள். இந்த ஞாயிறன்று அப்படியெல்லாம் கூட்டம் இல்லை. ஆனால் பபாஸி ‘வெளியே கூட்டம் அதிகம் இருப்பதால் 10.45க்கெல்லாம் வாசகர்களை உள்ளே அனுமதித்துவிட்டோம்’ என்று சொல்லி பதிப்பாளர்களைக் கலகலப்பாக்கினார்கள்.
மொத்தம் ஐந்து நுழைவாயில்களில் ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் 500 டிக்கட்டுகள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதுதான் திட்டம். இத்திட்டம் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே கூட்டம் இருக்கிறது. நடுவில் அமைந்திருக்கும் வரிசைகளில் கூட்டம் அதிகம் வருவதே இல்லை. பல பதிப்பாளர்களும் இதைச் சொல்வதைக் காணமுடிந்தது. புத்தகக் கண்காட்சியின் விற்பனை, எந்த வரிசையில் புத்தகக் கடை கிடைக்கிறது என்பதைப் பொருத்ததே என்பதை உடைக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பபாஸியும் பதிப்பாளர்களும் சேர்ந்து யோசிக்கவேண்டும். உடனடியான ஒரே தீர்வு, சரியாக சுழற்சி முறையில் டிக்கட்டுகள் வழங்கப்படுகிறதா என்பதை ஆராய்தல், அதை அவ்வப்போதே ஒலிபெருக்கியில் ‘இப்போது இந்த நுழைவாயிலில் டிக்கட்டுகள் வழங்குகிறோம்’ என அறிவித்தல் என்பவைதான்.
நேற்று ஞாயிறு என்பதால், ஒப்பீட்டளவில் விற்பனை எந்த ஒரு அரங்கிற்கும் அதிகம் இருக்கும் என்பதால், எந்த அரங்கையும் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்க்கவேண்டும். எந்த எந்த பதிப்பகத்தில் என்ன என்ன புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன என்ற பட்டியலை, நேரமிருந்தால் உள்ளிடுகிறேன். இந்த முறை நான் புத்தகங்கள் அதிகம் வாங்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சென்ற முறை சாகித்ய அகாடமியில் அள்ளிய புத்தகங்கள் அப்படியே அலமாரியில் இருக்கின்றன. இவை போக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நிறைய புத்தகங்களை படிக்க நினைத்திருக்கிறேன். இவை எல்லாம் முடிந்தால்தான் அடுத்த புத்தகங்கள் வாங்குவதைப் பற்றி யோசிக்கமுடியும்.
சில எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்கமுடிந்தது. லக்கிலுக்கும் உண்மைத் தமிழனும் ஒன்றாக வந்து பீதியைக் கிளப்பினார்கள். கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த புத்தக விமர்சனத்தை, அப்புத்தகத்தின் பக்கங்களைவிட அதிகமாக எழுத முடிவு செய்திருப்பதாக உண்மைத் தமிழன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். இத்திட்டம் இப்படி ஒரு பயங்கரமான விளைவை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன். :-)
நாகராஜன் வந்திருந்தார். கேமராவில் அவ்வப்போது பேசிக்கொள்ளும் வகையிலான ஒரு மொபலை வைத்திருந்தார். அதைச் சுமந்துகொண்டுவரும் வேலைக்காரர் இன்று விடுமுறை என்பதால் அவரே சுமந்துகொண்டு வந்திருந்தார். தோழர் தலையை தடவி நான் அப்போதுதான் ஒரு தேனீர் குடித்திருந்தேன். நாகராஜன் வந்து உடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று சொல்லவும், தோழர் வாங்கிக்கொடுத்தார். தேநீர் குடித்த சூடு அடங்குவதற்குள்ளாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். தோழர்கள் எப்போதுமே இப்படித்தான், சூடாக எதையாவது கொடுத்து, உடனே அதை குளிர்வித்துவிடுவார்கள் என்ற அசரிரீ ஒலித்ததை நாகராஜனும் தோழரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் விற்கும் நண்பர், தன் அப்பாவும் கம்யூனிஸ்ட்டுதான் என்றார். வருத்தத்துடன் சொன்னாரா சந்தோஷமாகச் சொன்னாரா என்று தெரியவில்லை.
கிழக்கு பதிப்பகத்தின் தீவிர வாசகர்கள் பலரை நேற்று காணமுடிந்தது. கிழக்கு பதிப்பகத்தில் அவுட் ஆஃப் ஸ்டாக்காகியிருக்கும் புத்தகங்கள் உட்பட எல்லாப் புத்தகங்களும் தன்னிடம் உண்டு என்று சொன்னார். இன்னொருவர் மாதா மாதம் எங்களுக்கு என்ன என்ன புத்தகங்கள் வருகின்றன என்று ஏன் தெரிவிப்பதில்லை என்றார். அவரைப் பிடித்து 575758ல் போட்டுவிட்டேன். அடுத்த கிழக்கு மொட்டைமாடிக்கு அவர் வருவாரா என்று பார்கக்வேண்டும். உடல் ஊனமுற்ற ஒருவர், கிழக்கு என்ன என்ன செய்யவேண்டும் என ஏகப்பட்ட டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார். நிறைய பேர், ஏன் இன்னும் மார்கோ போலோ பற்றி புத்தகங்கள் வரவில்லை என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். வித்தியாசமான உலகம். யார் ரசனை எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே ஒரு பெரிய சவால். ஒரு கலை அது. ஒருவர் பாராவின் எழுத்துகளைப் பற்றி இப்படிச் சொன்னார். ‘அப்படியே தத்ரூபமா இருக்கும், எப்படி வந்தாங்க, எப்படி குண்டு வெச்சாங்க, எங்க ரூம் எடுத்தாங்க, எங்க எங்க போனாங்க, எல்லாம் இருக்கும்’ என்றார். இன்னொரு வாசகர் சோம.வள்ளியப்பனைவிட சிறந்த எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். சில வாசகர்கள் 2009ல் கிழக்கு வெளியிட்டிருக்கும் புது புத்தகங்களை மட்டும் கேட்டு, அவற்றை வாங்கிச் சென்றார்கள். மாயவலை புத்தகங்களை நிறையப் பேர் கேட்டார்கள். இப்படிப் பல விஷயங்கள். முழுக்க முழுக்க கிழக்கு அரங்கிலேயே இருந்ததால் இவற்றை எல்லாம் பார்க்கமுடிந்தது.
இன்றும் நாளையும் வேலை நாள்கள் என்பதால் மதியம் 2.00 மணிக்குத்தான் தொடங்கும். அவை போக மீதி எல்லாமே முழு நாள்கள். மீண்டும் பெட்ரோல் பிரச்சினையும் மழை மிரட்டலும் வராமல் இருந்து, எல்லா நுழைவாயில்களிலும் சரியான அளவில் கூட்டம் செலுத்தப்பட்டால், எல்லாப் பதிப்பாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கலாம்.
இவைபோக, ’கொடுத்த வைத்த’ அரங்குகளைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்த ஸ்டால் ஒரு பிரைம் ஸ்டால். ஒரு புத்தகம் கூட அங்கே கிடையாது. இரண்டு சுவர்களிலும் பெரிய பெரிய பேனர்கள். முதல் நாள் பேனர்களும் அங்கே இல்லை. சரி, மெல்ல வருவார்கள் என்று நினைத்தேன். மெல்ல மெல்ல கூட வரவில்லை. பிரைம் ஸ்டால்களெல்லாம் புத்தகங்களை அடுக்கும் வழி தெரியாமல், முழி பிதுங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் புண்ணியம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். கிழக்கு அரங்கிலிருந்து வெளியே செல்வதற்கு, அந்த அரங்கைக் குறுக்குப் பாதையாகப் பயன்படுத்திக்கொண்டால், கொஞ்சம் நடை மிச்சமாகிறது. அந்தப் புண்ணியம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு.
பின்குறிப்பு: ’விபத்து காலம் முதல் விறுவிறுவென்று நடப்பதுவரை’ என்ற புத்தகம் 19ம்தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்படும். ஆசிரியர் யார் என்பது சஸ்பென்ஸ்.
எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் வந்ததா என்றுதான் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில், சென்ற வருட புத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று வந்த கூட்டத்தைவிட இன்று குறைவு என்றுதான் நினைக்கிறேன். அதுவும் மாலை வரை கூட்டம் மிகவும் குறைவு. சென்ற ஞாயிறன்று உள்ளே நுழையும்போதே கொஞ்சம் பேர் அங்கே இருந்தார்கள். இந்த ஞாயிறன்று அப்படியெல்லாம் கூட்டம் இல்லை. ஆனால் பபாஸி ‘வெளியே கூட்டம் அதிகம் இருப்பதால் 10.45க்கெல்லாம் வாசகர்களை உள்ளே அனுமதித்துவிட்டோம்’ என்று சொல்லி பதிப்பாளர்களைக் கலகலப்பாக்கினார்கள்.
மொத்தம் ஐந்து நுழைவாயில்களில் ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் 500 டிக்கட்டுகள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதுதான் திட்டம். இத்திட்டம் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே கூட்டம் இருக்கிறது. நடுவில் அமைந்திருக்கும் வரிசைகளில் கூட்டம் அதிகம் வருவதே இல்லை. பல பதிப்பாளர்களும் இதைச் சொல்வதைக் காணமுடிந்தது. புத்தகக் கண்காட்சியின் விற்பனை, எந்த வரிசையில் புத்தகக் கடை கிடைக்கிறது என்பதைப் பொருத்ததே என்பதை உடைக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பபாஸியும் பதிப்பாளர்களும் சேர்ந்து யோசிக்கவேண்டும். உடனடியான ஒரே தீர்வு, சரியாக சுழற்சி முறையில் டிக்கட்டுகள் வழங்கப்படுகிறதா என்பதை ஆராய்தல், அதை அவ்வப்போதே ஒலிபெருக்கியில் ‘இப்போது இந்த நுழைவாயிலில் டிக்கட்டுகள் வழங்குகிறோம்’ என அறிவித்தல் என்பவைதான்.
நேற்று ஞாயிறு என்பதால், ஒப்பீட்டளவில் விற்பனை எந்த ஒரு அரங்கிற்கும் அதிகம் இருக்கும் என்பதால், எந்த அரங்கையும் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்க்கவேண்டும். எந்த எந்த பதிப்பகத்தில் என்ன என்ன புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன என்ற பட்டியலை, நேரமிருந்தால் உள்ளிடுகிறேன். இந்த முறை நான் புத்தகங்கள் அதிகம் வாங்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சென்ற முறை சாகித்ய அகாடமியில் அள்ளிய புத்தகங்கள் அப்படியே அலமாரியில் இருக்கின்றன. இவை போக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நிறைய புத்தகங்களை படிக்க நினைத்திருக்கிறேன். இவை எல்லாம் முடிந்தால்தான் அடுத்த புத்தகங்கள் வாங்குவதைப் பற்றி யோசிக்கமுடியும்.
சில எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்கமுடிந்தது. லக்கிலுக்கும் உண்மைத் தமிழனும் ஒன்றாக வந்து பீதியைக் கிளப்பினார்கள். கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த புத்தக விமர்சனத்தை, அப்புத்தகத்தின் பக்கங்களைவிட அதிகமாக எழுத முடிவு செய்திருப்பதாக உண்மைத் தமிழன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். இத்திட்டம் இப்படி ஒரு பயங்கரமான விளைவை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன். :-)
நாகராஜன் வந்திருந்தார். கேமராவில் அவ்வப்போது பேசிக்கொள்ளும் வகையிலான ஒரு மொபலை வைத்திருந்தார். அதைச் சுமந்துகொண்டுவரும் வேலைக்காரர் இன்று விடுமுறை என்பதால் அவரே சுமந்துகொண்டு வந்திருந்தார். தோழர் தலையை தடவி நான் அப்போதுதான் ஒரு தேனீர் குடித்திருந்தேன். நாகராஜன் வந்து உடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று சொல்லவும், தோழர் வாங்கிக்கொடுத்தார். தேநீர் குடித்த சூடு அடங்குவதற்குள்ளாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். தோழர்கள் எப்போதுமே இப்படித்தான், சூடாக எதையாவது கொடுத்து, உடனே அதை குளிர்வித்துவிடுவார்கள் என்ற அசரிரீ ஒலித்ததை நாகராஜனும் தோழரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் விற்கும் நண்பர், தன் அப்பாவும் கம்யூனிஸ்ட்டுதான் என்றார். வருத்தத்துடன் சொன்னாரா சந்தோஷமாகச் சொன்னாரா என்று தெரியவில்லை.
கிழக்கு பதிப்பகத்தின் தீவிர வாசகர்கள் பலரை நேற்று காணமுடிந்தது. கிழக்கு பதிப்பகத்தில் அவுட் ஆஃப் ஸ்டாக்காகியிருக்கும் புத்தகங்கள் உட்பட எல்லாப் புத்தகங்களும் தன்னிடம் உண்டு என்று சொன்னார். இன்னொருவர் மாதா மாதம் எங்களுக்கு என்ன என்ன புத்தகங்கள் வருகின்றன என்று ஏன் தெரிவிப்பதில்லை என்றார். அவரைப் பிடித்து 575758ல் போட்டுவிட்டேன். அடுத்த கிழக்கு மொட்டைமாடிக்கு அவர் வருவாரா என்று பார்கக்வேண்டும். உடல் ஊனமுற்ற ஒருவர், கிழக்கு என்ன என்ன செய்யவேண்டும் என ஏகப்பட்ட டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார். நிறைய பேர், ஏன் இன்னும் மார்கோ போலோ பற்றி புத்தகங்கள் வரவில்லை என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். வித்தியாசமான உலகம். யார் ரசனை எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே ஒரு பெரிய சவால். ஒரு கலை அது. ஒருவர் பாராவின் எழுத்துகளைப் பற்றி இப்படிச் சொன்னார். ‘அப்படியே தத்ரூபமா இருக்கும், எப்படி வந்தாங்க, எப்படி குண்டு வெச்சாங்க, எங்க ரூம் எடுத்தாங்க, எங்க எங்க போனாங்க, எல்லாம் இருக்கும்’ என்றார். இன்னொரு வாசகர் சோம.வள்ளியப்பனைவிட சிறந்த எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். சில வாசகர்கள் 2009ல் கிழக்கு வெளியிட்டிருக்கும் புது புத்தகங்களை மட்டும் கேட்டு, அவற்றை வாங்கிச் சென்றார்கள். மாயவலை புத்தகங்களை நிறையப் பேர் கேட்டார்கள். இப்படிப் பல விஷயங்கள். முழுக்க முழுக்க கிழக்கு அரங்கிலேயே இருந்ததால் இவற்றை எல்லாம் பார்க்கமுடிந்தது.
இன்றும் நாளையும் வேலை நாள்கள் என்பதால் மதியம் 2.00 மணிக்குத்தான் தொடங்கும். அவை போக மீதி எல்லாமே முழு நாள்கள். மீண்டும் பெட்ரோல் பிரச்சினையும் மழை மிரட்டலும் வராமல் இருந்து, எல்லா நுழைவாயில்களிலும் சரியான அளவில் கூட்டம் செலுத்தப்பட்டால், எல்லாப் பதிப்பாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கலாம்.
இவைபோக, ’கொடுத்த வைத்த’ அரங்குகளைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்த ஸ்டால் ஒரு பிரைம் ஸ்டால். ஒரு புத்தகம் கூட அங்கே கிடையாது. இரண்டு சுவர்களிலும் பெரிய பெரிய பேனர்கள். முதல் நாள் பேனர்களும் அங்கே இல்லை. சரி, மெல்ல வருவார்கள் என்று நினைத்தேன். மெல்ல மெல்ல கூட வரவில்லை. பிரைம் ஸ்டால்களெல்லாம் புத்தகங்களை அடுக்கும் வழி தெரியாமல், முழி பிதுங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் புண்ணியம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். கிழக்கு அரங்கிலிருந்து வெளியே செல்வதற்கு, அந்த அரங்கைக் குறுக்குப் பாதையாகப் பயன்படுத்திக்கொண்டால், கொஞ்சம் நடை மிச்சமாகிறது. அந்தப் புண்ணியம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு.
பின்குறிப்பு: ’விபத்து காலம் முதல் விறுவிறுவென்று நடப்பதுவரை’ என்ற புத்தகம் 19ம்தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்படும். ஆசிரியர் யார் என்பது சஸ்பென்ஸ்.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Sunday, January 11, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 3)
பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி
இது சனிக்கிழமைதானா என்கிற அளவிலான குறைவான கூட்டத்தோடு தொடங்கியது நான்காம் நாள். சென்ற வருட சனிக்கிழமைகளில் கூட்டம் நன்றாக இருந்தது. இப்போது பெட்ரோல் பிரச்சினை என்பதால் நிறைய பேரைக் காணவில்லை. முதல் வரிசையிலும் கடைசி வரிசையிலும் மட்டும் சில தலைகள் தென்பட்டன. மற்ற வரிசைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கிழக்கு பதிப்பகத்தில் நிறைய புதிய புத்தகங்கள் நேற்று வந்தன. ஞாநியின் ஓ பக்கங்களும், இந்தியப் பிரிவினையும் என் ரசனையின் அடிப்படையில் எனக்கு முக்கியமானவை. படித்துப் பார்க்கவேண்டும். இவைபோக பல புதிய புத்தகங்கள் வ்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்கள் வருவதற்கும் கூட்டம் வரத்தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. மாலை மூன்றரை வாக்கில் தொடங்கிய பரபரப்பு இரவு வரை நீடித்தது. கண்காட்சிக்கு வரும் வாசகர்களை ஐந்து நுழைவாயில் வழியாகவும் அனுப்புவதால், ஒரு வரிசையில் திடீரென்று கூட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. இரண்டு நுழைவாசல்களை வைத்துக்கொண்டு, ஒரு நாள் ஒரு பக்கம் வழியாக, மற்றொரு நாள் இன்னொரு பக்கம் வழியாக என்று வைத்திருந்த நடைமுறையைவிட இப்போதுள்ள நடைமுறையே சிறப்பானது. எல்லா வரிசைகளிலும் கூட்டம் பிரிந்து போக வாய்ப்புள்ளது. அதேபோல், முன்பு ஒரு வரிசையில் நுழைந்தால் அவர் எல்லா புத்தகக் கடையையும் கண்டிப்பாகப் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வரமுடியும். அவசரத்துக்குக் கூட வெளியில் ஓடமுடியாது! ஒரு வரிசையில் இருந்து இன்னொரு வரிசைக்கு குறுக்காகக் கூடச் செல்லமுடியாது. கடைசி ஸ்டாலில் இருக்கும் ஒருவர், முதல் வரிசையில் உள்ள முதல் ஸ்டாலுக்குச் செல்லவேண்டுமானால், ‘கோவிந்தா கோவிந்தா’ சொல்லிக்கொண்டே அபிரதக்ஷணம் செய்தால் மட்டுமே இது சாத்தியம். இவையெல்லாம் இப்போதில்லை. பெரிய நிம்மதி.
கேண்டீனில் என்ன என்ன வந்திருக்கிறது என்று பார்க்க இன்னும் நேரம் வாய்க்கவில்லை. ஆனால் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே போண்டா, பழம், ஐஸ்கிரீம், குளிர்பானம் என பல கடைகள் முளைத்திருக்கின்றன. சென்ற வருடம், கண்காட்சியில் கிடைமட்டமாகக் கடைசி வரிசையை உருவாக்கியிருந்தார்கள். அவற்றிலெல்லாம் கூட்டமே இருக்காது. இந்தமுறை, இந்தக் கிடைமட்ட வரிசைக்கு எதிரே வரிசையாக உணவுக் கடைகள். எப்போதும் உணவுக்கடைகளில் கூட்டம் இருக்கிறது. அக்கூட்டம் அந்தக் கடைகளுக்கும் செல்கிறது போல. அந்தக் கிடைமட்ட வரிசையிலும் நல்ல கூட்டம். விகடனின் பிரைம் ஸ்டாலின் கூட்டத்தைவிட பெரும்கூட்டம் அந்தக் கிடைமட்ட வரிசையில் இருந்த கடையில் அதிகம் இருந்ததைப் பார்ககமுடிந்தது.
இன்னும் எல்லா புத்தகக் கடைகளுக்குள்ளும் நுழைந்து, என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க நேரமில்லை. திங்கள் கிழமை இதைச் செய்யவேண்டும். அவசர அப்டேட்டாக இவற்றைச் சொல்லலாம். அம்பேத்கரின் அனைத்து எழுத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு (37 பாகங்கள்) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. மொத்தமாக 1500 ரூபாய் மட்டுமே. இதை வாங்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. நிச்சயம் வாங்கவேண்டிய விஷயம் இது.
எனி இந்தியன் நான்கு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஈழ இலக்கியம் ஒரு பார்வை’ வெளி வந்திருக்கிறது. திண்ணையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளின் மேம்பட்ட வடிவம் இவை. இதுபோக, ஜெயமோகனின் என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன எனத் தெரியவில்லை. உயிர்மையில் விளம்பரங்கள் வந்திருந்தன. இன்னும் உயிர்மை அரங்கிற்குள் செல்லவில்லை. சென்றால் தெரியும்.
காலச்சுவடு ஸ்டாலில் விளம்பரத்திற்கென்று ஒரு மானிட்டர் வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 100 கருத்தரங்கில் ஒளிபரப்பபட்ட அதே விளம்பரங்கள்தான். மிக நன்றாக இருக்கிறது. இதேபோல் NHM ஸ்டாலில் செய்யவேண்டும். சிறந்த, செலவுகுறைவான விளம்பர உத்தி இதை. இதைச் செய்யவேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முயன்றோம். முடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை செய்யவேண்டும்.
கீழைக்காற்று அரங்கம் சென்றமுறை இருந்த இடத்திலேயே இந்தமுறையும் இருக்கிறது. கீழைக்காற்று, பாரதி புத்தகாலயம் போன்ற அரங்குகள், ஒரு தனிப்பட்ட டேஸ்ட்டில் அமைபவை. இதனால் பல புத்தகங்களை இந்த அரங்குகளில் வாங்கமுடியும் என்பதால் இவை முக்கியமான ஸ்டால்கள். நான் ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாதமி, பாரதி புத்தகாலயம் – இவற்றில்தான் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இந்த முறை என்ன என்ன புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு, என்ன என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என ஒரு பட்டியல் தயாரிக்கவேண்டும்.
அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘என் தேசம் – என் வாழ்க்கை’ அத்வானியின் புத்தகம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் இருந்து சில பக்கங்கள் துக்ளக் இதழில் வெளிவருகின்றன. புத்தகத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்று இன்னும் பார்க்கவில்லை. அல்லயன்ஸ் இன்னும் புராண காலத்தில் இருந்து மீளவில்லை என்றாலும், மகாபாரதம் பேசுகிறது புத்தகத்தை சிறப்பாகவே வடிவமைத்திருந்தார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படி வடிவமைத்திருப்பார்களா எனப் பார்க்கவேண்டும்.
தமிழினியில் காவல்கோட்டம் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனந்தவிகடனில் இந்த வருடத்தின் சிறந்த நாவலாக இதை அறிவித்திருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த 10 நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நாவலைப் படித்து, அதை வருடத்தின் சிறந்த நாவலாக அறிவித்த அந்த ‘உலகின் வேகமான வாசகரை’த் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.
இலங்கைத் தமிழர் வரலாறு என்றொரு புத்தகம் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. வாங்கியிருக்கிறேன். சரணம் சொல்லிவிட்டுப் படித்துவிட்டு, யுத்தம் செய்யவேண்டியதுதான் பாக்கி.
நேற்று ’அடியாள்’ வந்திருந்தார். ஜோதி நரசிம்மன். நிஜமாகவே புன்னகைத்தார். ‘மிரட்டிட்டீங்களே என்னை’ என்றேன். இன்னும் அதிகமாக சிரித்தார். ஒரு தோழர் சற்று முன்பு (வேறு வழியின்றி) சொல்லிவிட்டுச் சென்றிருந்தார், ‘முரண்பட விஷயங்கள் இருப்பதுதான சுவாரஸ்யம்’ என்று.
இது சனிக்கிழமைதானா என்கிற அளவிலான குறைவான கூட்டத்தோடு தொடங்கியது நான்காம் நாள். சென்ற வருட சனிக்கிழமைகளில் கூட்டம் நன்றாக இருந்தது. இப்போது பெட்ரோல் பிரச்சினை என்பதால் நிறைய பேரைக் காணவில்லை. முதல் வரிசையிலும் கடைசி வரிசையிலும் மட்டும் சில தலைகள் தென்பட்டன. மற்ற வரிசைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கிழக்கு பதிப்பகத்தில் நிறைய புதிய புத்தகங்கள் நேற்று வந்தன. ஞாநியின் ஓ பக்கங்களும், இந்தியப் பிரிவினையும் என் ரசனையின் அடிப்படையில் எனக்கு முக்கியமானவை. படித்துப் பார்க்கவேண்டும். இவைபோக பல புதிய புத்தகங்கள் வ்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்கள் வருவதற்கும் கூட்டம் வரத்தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. மாலை மூன்றரை வாக்கில் தொடங்கிய பரபரப்பு இரவு வரை நீடித்தது. கண்காட்சிக்கு வரும் வாசகர்களை ஐந்து நுழைவாயில் வழியாகவும் அனுப்புவதால், ஒரு வரிசையில் திடீரென்று கூட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. இரண்டு நுழைவாசல்களை வைத்துக்கொண்டு, ஒரு நாள் ஒரு பக்கம் வழியாக, மற்றொரு நாள் இன்னொரு பக்கம் வழியாக என்று வைத்திருந்த நடைமுறையைவிட இப்போதுள்ள நடைமுறையே சிறப்பானது. எல்லா வரிசைகளிலும் கூட்டம் பிரிந்து போக வாய்ப்புள்ளது. அதேபோல், முன்பு ஒரு வரிசையில் நுழைந்தால் அவர் எல்லா புத்தகக் கடையையும் கண்டிப்பாகப் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வரமுடியும். அவசரத்துக்குக் கூட வெளியில் ஓடமுடியாது! ஒரு வரிசையில் இருந்து இன்னொரு வரிசைக்கு குறுக்காகக் கூடச் செல்லமுடியாது. கடைசி ஸ்டாலில் இருக்கும் ஒருவர், முதல் வரிசையில் உள்ள முதல் ஸ்டாலுக்குச் செல்லவேண்டுமானால், ‘கோவிந்தா கோவிந்தா’ சொல்லிக்கொண்டே அபிரதக்ஷணம் செய்தால் மட்டுமே இது சாத்தியம். இவையெல்லாம் இப்போதில்லை. பெரிய நிம்மதி.
கேண்டீனில் என்ன என்ன வந்திருக்கிறது என்று பார்க்க இன்னும் நேரம் வாய்க்கவில்லை. ஆனால் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே போண்டா, பழம், ஐஸ்கிரீம், குளிர்பானம் என பல கடைகள் முளைத்திருக்கின்றன. சென்ற வருடம், கண்காட்சியில் கிடைமட்டமாகக் கடைசி வரிசையை உருவாக்கியிருந்தார்கள். அவற்றிலெல்லாம் கூட்டமே இருக்காது. இந்தமுறை, இந்தக் கிடைமட்ட வரிசைக்கு எதிரே வரிசையாக உணவுக் கடைகள். எப்போதும் உணவுக்கடைகளில் கூட்டம் இருக்கிறது. அக்கூட்டம் அந்தக் கடைகளுக்கும் செல்கிறது போல. அந்தக் கிடைமட்ட வரிசையிலும் நல்ல கூட்டம். விகடனின் பிரைம் ஸ்டாலின் கூட்டத்தைவிட பெரும்கூட்டம் அந்தக் கிடைமட்ட வரிசையில் இருந்த கடையில் அதிகம் இருந்ததைப் பார்ககமுடிந்தது.
இன்னும் எல்லா புத்தகக் கடைகளுக்குள்ளும் நுழைந்து, என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க நேரமில்லை. திங்கள் கிழமை இதைச் செய்யவேண்டும். அவசர அப்டேட்டாக இவற்றைச் சொல்லலாம். அம்பேத்கரின் அனைத்து எழுத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு (37 பாகங்கள்) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. மொத்தமாக 1500 ரூபாய் மட்டுமே. இதை வாங்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. நிச்சயம் வாங்கவேண்டிய விஷயம் இது.
எனி இந்தியன் நான்கு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஈழ இலக்கியம் ஒரு பார்வை’ வெளி வந்திருக்கிறது. திண்ணையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளின் மேம்பட்ட வடிவம் இவை. இதுபோக, ஜெயமோகனின் என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன எனத் தெரியவில்லை. உயிர்மையில் விளம்பரங்கள் வந்திருந்தன. இன்னும் உயிர்மை அரங்கிற்குள் செல்லவில்லை. சென்றால் தெரியும்.
காலச்சுவடு ஸ்டாலில் விளம்பரத்திற்கென்று ஒரு மானிட்டர் வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 100 கருத்தரங்கில் ஒளிபரப்பபட்ட அதே விளம்பரங்கள்தான். மிக நன்றாக இருக்கிறது. இதேபோல் NHM ஸ்டாலில் செய்யவேண்டும். சிறந்த, செலவுகுறைவான விளம்பர உத்தி இதை. இதைச் செய்யவேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முயன்றோம். முடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை செய்யவேண்டும்.
கீழைக்காற்று அரங்கம் சென்றமுறை இருந்த இடத்திலேயே இந்தமுறையும் இருக்கிறது. கீழைக்காற்று, பாரதி புத்தகாலயம் போன்ற அரங்குகள், ஒரு தனிப்பட்ட டேஸ்ட்டில் அமைபவை. இதனால் பல புத்தகங்களை இந்த அரங்குகளில் வாங்கமுடியும் என்பதால் இவை முக்கியமான ஸ்டால்கள். நான் ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாதமி, பாரதி புத்தகாலயம் – இவற்றில்தான் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இந்த முறை என்ன என்ன புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு, என்ன என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என ஒரு பட்டியல் தயாரிக்கவேண்டும்.
அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘என் தேசம் – என் வாழ்க்கை’ அத்வானியின் புத்தகம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் இருந்து சில பக்கங்கள் துக்ளக் இதழில் வெளிவருகின்றன. புத்தகத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்று இன்னும் பார்க்கவில்லை. அல்லயன்ஸ் இன்னும் புராண காலத்தில் இருந்து மீளவில்லை என்றாலும், மகாபாரதம் பேசுகிறது புத்தகத்தை சிறப்பாகவே வடிவமைத்திருந்தார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படி வடிவமைத்திருப்பார்களா எனப் பார்க்கவேண்டும்.
தமிழினியில் காவல்கோட்டம் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனந்தவிகடனில் இந்த வருடத்தின் சிறந்த நாவலாக இதை அறிவித்திருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த 10 நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நாவலைப் படித்து, அதை வருடத்தின் சிறந்த நாவலாக அறிவித்த அந்த ‘உலகின் வேகமான வாசகரை’த் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.
இலங்கைத் தமிழர் வரலாறு என்றொரு புத்தகம் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. வாங்கியிருக்கிறேன். சரணம் சொல்லிவிட்டுப் படித்துவிட்டு, யுத்தம் செய்யவேண்டியதுதான் பாக்கி.
நேற்று ’அடியாள்’ வந்திருந்தார். ஜோதி நரசிம்மன். நிஜமாகவே புன்னகைத்தார். ‘மிரட்டிட்டீங்களே என்னை’ என்றேன். இன்னும் அதிகமாக சிரித்தார். ஒரு தோழர் சற்று முன்பு (வேறு வழியின்றி) சொல்லிவிட்டுச் சென்றிருந்தார், ‘முரண்பட விஷயங்கள் இருப்பதுதான சுவாரஸ்யம்’ என்று.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Saturday, January 10, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02)
ஒரு பதிப்பாளர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். என்ன காரணமென்றால், கருப்பும் வெள்ளையுமான உருவங்களற்ற கோடுகளில் உருவங்கள் நெளிய, காவல்துறை அதிகாரி சொல்கிறார், ‘புலி வாழ்க!’ என்னும் புத்தகத்தை வெளியிட்டதற்காகவும் அதை மறைத்துவைத்து சமையல் புத்தகங்களோடு விற்றதற்காகவும் என்று. பின்பு பதிப்பாளரின் பேட்டி. அதே கருப்பு வெள்ளை உருவங்கள் நெளிய கோடுகளில் பேசுகிறார். ‘நான் சமையல் புத்தகம் விக்கிறவங்க. புளிகளோட நன்மைகள்னு ஒரு டாக்டர் எழுதின புத்தகம் அது. சரி, புது கோணமா இருக்கேன்னு போட்டேன். பாவிப்பய அட்டை போட்ட டிசைனர் தமிழ்ல கோட் அடிச்சவன் போல இருக்கு. புளி வாழ்கன்னு போடறதுக்கு புலி வாழ்கன்னு போட்டான்...’ இன்னும் அவர் என்னவோ சொல்ல வருவதற்குள் தூக்கம் கலைந்து எழுந்தேன். என்ன ஒரு கொடுங்கனவு!
நிஜத்திற்கு வருவோம். நேற்று சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஊரெங்கும் எல்லா இடங்களிலும் வண்டிகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளில் போலிஸ் பாதுகாப்புடன் பெட்ரொல் வழங்கப்பட்டது. ஆயில் அரசியலெல்லாம் இல்லை. லாரி ஸ்டிரைக்! பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள்? பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு! குளோபல் வார்மிங், உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வந்தால் மட்டுமே சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது. இன்று ஒருநாள் இந்நிலை நீடித்தால் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.
கூட்டம் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கேண்டீனிலும் கூட்டமே இல்லை. சாப்பிட ஐட்டங்களும் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். :-) அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் நான் ஏன் அத்தனை பரபரப்பாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை! புகைப்படங்கள் எடுக்கக்கூட கை ஒழியவில்லை. அதனால் இன்று புகைப்படங்களுக்கு விடுமுறை. ஆனால் கேமரா கவிஞர் சேதுபதி அருணாசலம் (அவராகவே எல்லாரிடமும் இப்படி எழுதும்படிச் சொல்கிறார்) பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடுவார். அனுப்பினால் வலையேற்றி வைக்கிறேன். புகைப்படங்களின் காப்பிரைட் எனக்குத்தான். :-)
அருண் வைத்தியநாதன் வந்திருந்தார். நிறைய நேரம் இருந்தார். பேச நேரமில்லை என்பதால் ஒரு ஹலோ, ஒரு எப்படி இருக்கீங்க. இயக்குநர் சுகா வந்தார். அதே ஒரு ஹலோ மட்டுமே. ஜெயஸ்ரீ சென்னை வந்திருப்பதாக கருடன் சொல்லியது. புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை போல. நிறைய சமையல் புத்தகங்கள் கடை பரப்பியிருப்பதை ஜெயஸ்ரீ மனதில் வைத்து, அப்பதிப்பாளர்கள் உய்யச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். இதற்கு முடியும் அல்லது முடியாது மட்டும் பதில் எழுதினால் உசிதம். நாற்பது பக்கங்களுக்கு :கொட்டாவி: எழுதக்கூடாது. ஜெயமோகனே கொஞ்சம் மிரண்டு போயிருப்பதாக அறிந்தேன்.
இனி கிழக்கு. ஒரு வழியாக நேற்று மாலையில் கிழக்கு ஸ்டால் முழு அந்தஸ்து பெற்றது. இன்றும் இன்னும் மேம்படும். ஸ்டால் வரைபடங்கள், குலுக்கல் ப்ரிண்ட் அவுட்டுகள், புதிய வண்ண கேட்டலாக் என முழுமை பெற்றதும்தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்தது. இங்கே புத்துணர்ச்சி என்பது உயிர் என்று பொருள்கொள்ளப்படவேண்டியது. இனி வரவேண்டியவை சில முக்கியமான புத்தகங்கள். அவை இன்று வரும். இந்தியப் பிரிவினை புத்தகத்தைப் பலர் கேட்டுவிட்டுச் சென்றார்கள். மாயவலைக்கு முன்பணம் அனுப்பியிருந்தவர் அன்பாக மிரட்டினார். எல்லாம் இன்று (நாளைக்குள்!) வந்துவிடும்.
பின்பு ஞாநியின் அறிந்தும் அறியாமலும் கிழக்கு ஸ்டாலில் கிடைக்கும். விற்பனை உரிமை NHM உடையது. அது பற்றியும் ஞாநி பற்றியும் மீதி சில வரிகள். ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அனைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுடியவில்லை. :-)
அவர் கையெழுத்துப் போடுவதைக் கண்ட மணி (தமிழினி டிசைனர்) கொதித்தெழாமல் அமைதியாக, ‘போன தடவை கையெழுத்து கேட்டா கடுமையா திட்டினீங்க, இப்ப மட்டும் எப்படி போடறீங்க’ என்றார். ஞாநி, ‘சொல்லியிருக்கேன். திட்டியிருக்கேன். ஆனா இப்ப நான் கையெழுத்து போடுறது என் புத்தகத்துக்கு மட்டும்தான். இதுலயும் நம்பிக்கையெல்லாம் இல்லை. வெறும் வியாபாரியாக மட்டும், அதுவும் மேக்ஸிமம் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான்’ என்றார். மணியை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.
குமுதம் வெளியிட்டிருக்கும் ஓ பக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அமீர் வெளியிட்டார் என நினைக்கிறேன். ஞாநியுடன் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாத கருத்துகள் இருந்தாலும், அவர் கருத்தை அவர் சொல்கிறார் என்கிற அதே சுதந்திரத்துடன், மற்றவர் கருத்தினையும் அதே சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து அணுகுகிறார் என்கிற பொருள்பட அமீர் பேசினார் என்றறிகிறேன். அமீரின் கருத்துகளில் எனக்கு நிறைய உடன்படாதவை உண்டென்றாலும், இதில் நிச்சயம் உடன்படுகிறேன். ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஞாநியிடம், ஒட்டுமொத்த ஹிந்துத்துவாவாதிகள் மீதுள்ள ஒட்டுமொத்த கோபம், பிராமணர்களில் அடித்தட்டு ஏழைகள் பற்றி அவர் பேசாதது என்பது போன்ற கருத்துவேறுபாடுகள் எனக்கு உண்டென்றாலும், அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்? :))))
பின்குறிப்பு: அவசியமற்ற பின்குறிப்பு என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நான் எழுதுவது மொத்தமுமே அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள். நம்மைப் நாமே புரிந்துகொள்வோமா அடிப்படையில், அவசியமற்ற-வை விட்டுவிட்டு, வெறும் பின்குறிப்பு என்றே போட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று புத்தகக் கண்காட்சி முழுவதும் ஒரு பெரிய வதந்தி, விடுதலைப் புலிகள் புத்தகம் எழுதிய மருதன், கைலாய யாத்திரையும் கைநிறையப் புண்ணியமும் என்கிற புத்தகம் எழுதப்போகிறார் என்று. நாம்தான் கெட்டுப்போய்விட்டோம் என்றாலும், கண்ணெதிரே ஒரு தோழர் சீரழிவதை எப்படிப் பொறுத்துகொள்ளமுடியும் என்று, அவரைப் புத்தகக் கண்காட்சி முழுக்க தேடினேன். நான்காவது வரியில், மூன்றாவது வலது திருப்பத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அங்கிருந்து வெளியே தெரியும் வானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். தோழர்கள் சீனாவை இங்கேயிருந்தே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று தெரியும். கைலாய மலையையும் அப்படிப் பார்த்துப் புத்தகம் எழுதப்போகிறாரா என்றெல்லாம் தோன்றியது. அருகில் ஓர் உடன்பிறப்பும் நின்றிருந்தார். படபடப்புடன் அவரிடம் கேட்டேன்.
‘என்ன தோழர், கைலாய மலையும் கைநிறையப் புண்ணியமும்னு எழுதப்போறீங்களா? பயங்கர ஷாக்கிங்கா இருக்கு.’
உடன்பிறப்பு சொன்னார், ‘பாத்தியா தோழா. ஒரு ஹிந்துத்துவவாதியே அலர்றார் பார்’ என்றார். அவரை முறைத்தேன் அவர் தொடர்ந்தார்.
‘இப்ப என்ன விடுதலைப்புலிகள் புத்தகத்துக்கு பேலன்ஸிங்கா எழுதணும். அவ்ளோதானே? அடிமைப்பூனைகள்னு ஒரு புத்தகம் எழுதிடு’ என்றார் ரொம்ப சீரியஸாக. அவர் நிச்சயம் ஓர் உடன்பிறப்பாகத்தான் இருக்கமுடியும்.
நிஜத்திற்கு வருவோம். நேற்று சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஊரெங்கும் எல்லா இடங்களிலும் வண்டிகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளில் போலிஸ் பாதுகாப்புடன் பெட்ரொல் வழங்கப்பட்டது. ஆயில் அரசியலெல்லாம் இல்லை. லாரி ஸ்டிரைக்! பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள்? பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு! குளோபல் வார்மிங், உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வந்தால் மட்டுமே சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது. இன்று ஒருநாள் இந்நிலை நீடித்தால் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.
கூட்டம் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கேண்டீனிலும் கூட்டமே இல்லை. சாப்பிட ஐட்டங்களும் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். :-) அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் நான் ஏன் அத்தனை பரபரப்பாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை! புகைப்படங்கள் எடுக்கக்கூட கை ஒழியவில்லை. அதனால் இன்று புகைப்படங்களுக்கு விடுமுறை. ஆனால் கேமரா கவிஞர் சேதுபதி அருணாசலம் (அவராகவே எல்லாரிடமும் இப்படி எழுதும்படிச் சொல்கிறார்) பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடுவார். அனுப்பினால் வலையேற்றி வைக்கிறேன். புகைப்படங்களின் காப்பிரைட் எனக்குத்தான். :-)
அருண் வைத்தியநாதன் வந்திருந்தார். நிறைய நேரம் இருந்தார். பேச நேரமில்லை என்பதால் ஒரு ஹலோ, ஒரு எப்படி இருக்கீங்க. இயக்குநர் சுகா வந்தார். அதே ஒரு ஹலோ மட்டுமே. ஜெயஸ்ரீ சென்னை வந்திருப்பதாக கருடன் சொல்லியது. புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை போல. நிறைய சமையல் புத்தகங்கள் கடை பரப்பியிருப்பதை ஜெயஸ்ரீ மனதில் வைத்து, அப்பதிப்பாளர்கள் உய்யச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். இதற்கு முடியும் அல்லது முடியாது மட்டும் பதில் எழுதினால் உசிதம். நாற்பது பக்கங்களுக்கு :கொட்டாவி: எழுதக்கூடாது. ஜெயமோகனே கொஞ்சம் மிரண்டு போயிருப்பதாக அறிந்தேன்.
இனி கிழக்கு. ஒரு வழியாக நேற்று மாலையில் கிழக்கு ஸ்டால் முழு அந்தஸ்து பெற்றது. இன்றும் இன்னும் மேம்படும். ஸ்டால் வரைபடங்கள், குலுக்கல் ப்ரிண்ட் அவுட்டுகள், புதிய வண்ண கேட்டலாக் என முழுமை பெற்றதும்தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்தது. இங்கே புத்துணர்ச்சி என்பது உயிர் என்று பொருள்கொள்ளப்படவேண்டியது. இனி வரவேண்டியவை சில முக்கியமான புத்தகங்கள். அவை இன்று வரும். இந்தியப் பிரிவினை புத்தகத்தைப் பலர் கேட்டுவிட்டுச் சென்றார்கள். மாயவலைக்கு முன்பணம் அனுப்பியிருந்தவர் அன்பாக மிரட்டினார். எல்லாம் இன்று (நாளைக்குள்!) வந்துவிடும்.
பின்பு ஞாநியின் அறிந்தும் அறியாமலும் கிழக்கு ஸ்டாலில் கிடைக்கும். விற்பனை உரிமை NHM உடையது. அது பற்றியும் ஞாநி பற்றியும் மீதி சில வரிகள். ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அனைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுடியவில்லை. :-)
அவர் கையெழுத்துப் போடுவதைக் கண்ட மணி (தமிழினி டிசைனர்) கொதித்தெழாமல் அமைதியாக, ‘போன தடவை கையெழுத்து கேட்டா கடுமையா திட்டினீங்க, இப்ப மட்டும் எப்படி போடறீங்க’ என்றார். ஞாநி, ‘சொல்லியிருக்கேன். திட்டியிருக்கேன். ஆனா இப்ப நான் கையெழுத்து போடுறது என் புத்தகத்துக்கு மட்டும்தான். இதுலயும் நம்பிக்கையெல்லாம் இல்லை. வெறும் வியாபாரியாக மட்டும், அதுவும் மேக்ஸிமம் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான்’ என்றார். மணியை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.
குமுதம் வெளியிட்டிருக்கும் ஓ பக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அமீர் வெளியிட்டார் என நினைக்கிறேன். ஞாநியுடன் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாத கருத்துகள் இருந்தாலும், அவர் கருத்தை அவர் சொல்கிறார் என்கிற அதே சுதந்திரத்துடன், மற்றவர் கருத்தினையும் அதே சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து அணுகுகிறார் என்கிற பொருள்பட அமீர் பேசினார் என்றறிகிறேன். அமீரின் கருத்துகளில் எனக்கு நிறைய உடன்படாதவை உண்டென்றாலும், இதில் நிச்சயம் உடன்படுகிறேன். ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஞாநியிடம், ஒட்டுமொத்த ஹிந்துத்துவாவாதிகள் மீதுள்ள ஒட்டுமொத்த கோபம், பிராமணர்களில் அடித்தட்டு ஏழைகள் பற்றி அவர் பேசாதது என்பது போன்ற கருத்துவேறுபாடுகள் எனக்கு உண்டென்றாலும், அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்? :))))
பின்குறிப்பு: அவசியமற்ற பின்குறிப்பு என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நான் எழுதுவது மொத்தமுமே அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள். நம்மைப் நாமே புரிந்துகொள்வோமா அடிப்படையில், அவசியமற்ற-வை விட்டுவிட்டு, வெறும் பின்குறிப்பு என்றே போட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று புத்தகக் கண்காட்சி முழுவதும் ஒரு பெரிய வதந்தி, விடுதலைப் புலிகள் புத்தகம் எழுதிய மருதன், கைலாய யாத்திரையும் கைநிறையப் புண்ணியமும் என்கிற புத்தகம் எழுதப்போகிறார் என்று. நாம்தான் கெட்டுப்போய்விட்டோம் என்றாலும், கண்ணெதிரே ஒரு தோழர் சீரழிவதை எப்படிப் பொறுத்துகொள்ளமுடியும் என்று, அவரைப் புத்தகக் கண்காட்சி முழுக்க தேடினேன். நான்காவது வரியில், மூன்றாவது வலது திருப்பத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அங்கிருந்து வெளியே தெரியும் வானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். தோழர்கள் சீனாவை இங்கேயிருந்தே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று தெரியும். கைலாய மலையையும் அப்படிப் பார்த்துப் புத்தகம் எழுதப்போகிறாரா என்றெல்லாம் தோன்றியது. அருகில் ஓர் உடன்பிறப்பும் நின்றிருந்தார். படபடப்புடன் அவரிடம் கேட்டேன்.
‘என்ன தோழர், கைலாய மலையும் கைநிறையப் புண்ணியமும்னு எழுதப்போறீங்களா? பயங்கர ஷாக்கிங்கா இருக்கு.’
உடன்பிறப்பு சொன்னார், ‘பாத்தியா தோழா. ஒரு ஹிந்துத்துவவாதியே அலர்றார் பார்’ என்றார். அவரை முறைத்தேன் அவர் தொடர்ந்தார்.
‘இப்ப என்ன விடுதலைப்புலிகள் புத்தகத்துக்கு பேலன்ஸிங்கா எழுதணும். அவ்ளோதானே? அடிமைப்பூனைகள்னு ஒரு புத்தகம் எழுதிடு’ என்றார் ரொம்ப சீரியஸாக. அவர் நிச்சயம் ஓர் உடன்பிறப்பாகத்தான் இருக்கமுடியும்.
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Friday, January 9, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01
மழை வர வாய்ப்புண்டு என்று ரமணன் ஊடகங்களில் அறிவித்ததால் நிச்சயம் மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்த பதிப்பாளர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. சொட்டு மழைகூட இல்லை. சென்ற புத்தகக் கண்காட்சியன்று கொட்டிய மழை போலல்லாமல் நேற்று கொஞ்சம் மழை குறைவாகவே இருந்ததால், தரை நடக்க முடியாத அளவு மோசமான நிலையில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல். சென்ற முறை போலல்லாமல் கழிப்பிட வசதிகளைக் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் முன்னேற்றியிருக்கிறார்கள். சென்ற முறை தண்ணீர் லாரி வந்து தண்ணீரை பெரிய டேங்கர்களில் ஏற்றிவிட்டுச் செல்லும். இந்தமுறை அங்கேயே போர் போட்டுவிட்டதால், தண்ணீர் பிரச்சினை இல்லை.
இன்னும் உணவு அரங்கம் முற்றிலும் தயாராகவில்லை. எல்லா பதிப்பாளர்களும் அடுக்கி வைத்து விற்பனைக்குத் ஆயத்தமாகியிருக்கிறார்கள். தொடக்கவிழா ஆறு மணிக்குத் தொடங்கியது என்றாலும் பல வாசகர்கள் மதியம் முதலே உள்ளே வரத் தொடங்கியிருந்தார்கள். சில சில்லறை விற்பனைகளும் நிறைய பதிப்பகங்களில் நடந்தன. தொடக்க நாளன்று நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
எதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். நல்லி குப்புசாமி செட்டியாரும், பொறிகிழி பெறும் எழுத்தாளர்களும் மேடையில் இருந்தார்கள். யார் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை, விற்பனை அரங்கிற்குள்ளே சென்றுவிட்டேன். திறப்புவிழாவிற்கு கிழக்கு எடிடோரியல் குழு வந்திருந்தது. பாரா தலையில் குல்லோவாடு வினோதமாக வந்திருந்தார். வழக்கம்போல ‘மாவா என் பின்னால் வா’வோடு மல்லுக்காட்டிக்கொண்டிருந்தார். முகில் எதையோ தீவிரவாக யோசித்துக்கொண்டிருந்தார். உடன்பிறப்பும் தோழரும் என்னவோ சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு புகைப்படம் எடுத்துவைத்தேன்.
நிறைய வருடங்களுக்குப் பின்பு க்ரியா பதிப்பகம் ஒரு அரங்கு அமைத்திருக்கிறது. அசத்தலான அரங்குதான். புத்தகங்கள் வெகு குறைவு என்பதால் அழகு வருவது எளிமையானது என்பது ஒருபுறமிருக்க, கொஞ்சம் யோசனையோடு சில செயல்கள் செய்து வைத்திருந்தார்கள். அங்கேயே குடௌன் வைத்துக்கொண்டது. எல்லா பதிப்பாளர்கள் திணறும் விஷயம், புத்தகங்களின் ஸ்டாக் எங்கே வைத்துக்கொள்வது என்பது. க்ரியா பதிப்பகம் ஒரு சிறிய அறை போன்ற வடிவமைப்பை உருவாக்கி, அதனுள்ளே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும், இது ஆச்சரியமான விஷயம்தான்.
கிழக்கு பதிப்பகத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று மட்டும். ஒரு நண்பர் அடியாள் புத்தகம் வாங்கினார். அவரிடம் சென்று, ‘இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குகிறீர்கள், எங்கே இதைப் பற்றிப் படித்தீர்கள்’ என்றேன். ‘என் தொழிலே இதுதான்’ என்றதும் கொஞ்சம் பயந்தேன். அவர் தொடர்ந்து, ‘புத்தகம் படிக்கிறதுதான் என்னோட தொழில்’ என்று சொல்லி என் பயத்தைப் போக்கினார். ‘கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தகங்களை வெளியிடுகிறது’ என்றெல்லாம் பாராட்டிய அவர், ‘எம்.எஸ். புத்தகத்துல... குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, சொல்றேன்... அந்தம்மாவுக்கு நடந்தது 2வது கல்யாணம். அது பத்தி வரவே இல்லை. அது எவ்வளவு முக்கியமான விஷயம்? அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க?’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்!
சில எழுத்தாளர்களையும் இன்று காணமுடிந்தது. சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன். சென்ற முறை எனி இந்தியனுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களையும் படம் பிடித்தேன். இம்முறையும் புகைப்படம் எடுப்பது போரடிக்கிறது என்பதால், எழுத்தாளர்களைப் படம் பிடிக்கப்போவதில்லை. (சில விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு!) பொதுவான புகைப்படங்களை எடுக்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.
(எடிட்டோரியல் (அன்பான!) மிரட்டல் குழுவும், தொப்பியுடன் அதன் தலைவரும். இடது ஓரத்தில் இருப்பவர் NHMன் விற்பனை பொது மேலாளர். அவர் நீங்கலாக!)
க்ரியாவின் ஸ்டாக் ரூம்!
கல்யாண வீடு போல அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அரங்கின் முகப்பு
என் வாழ்க்கை என் தேசம் அல்லயன்ஸ்!
இன்னும் உணவு அரங்கம் முற்றிலும் தயாராகவில்லை. எல்லா பதிப்பாளர்களும் அடுக்கி வைத்து விற்பனைக்குத் ஆயத்தமாகியிருக்கிறார்கள். தொடக்கவிழா ஆறு மணிக்குத் தொடங்கியது என்றாலும் பல வாசகர்கள் மதியம் முதலே உள்ளே வரத் தொடங்கியிருந்தார்கள். சில சில்லறை விற்பனைகளும் நிறைய பதிப்பகங்களில் நடந்தன. தொடக்க நாளன்று நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
எதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். நல்லி குப்புசாமி செட்டியாரும், பொறிகிழி பெறும் எழுத்தாளர்களும் மேடையில் இருந்தார்கள். யார் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை, விற்பனை அரங்கிற்குள்ளே சென்றுவிட்டேன். திறப்புவிழாவிற்கு கிழக்கு எடிடோரியல் குழு வந்திருந்தது. பாரா தலையில் குல்லோவாடு வினோதமாக வந்திருந்தார். வழக்கம்போல ‘மாவா என் பின்னால் வா’வோடு மல்லுக்காட்டிக்கொண்டிருந்தார். முகில் எதையோ தீவிரவாக யோசித்துக்கொண்டிருந்தார். உடன்பிறப்பும் தோழரும் என்னவோ சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு புகைப்படம் எடுத்துவைத்தேன்.
நிறைய வருடங்களுக்குப் பின்பு க்ரியா பதிப்பகம் ஒரு அரங்கு அமைத்திருக்கிறது. அசத்தலான அரங்குதான். புத்தகங்கள் வெகு குறைவு என்பதால் அழகு வருவது எளிமையானது என்பது ஒருபுறமிருக்க, கொஞ்சம் யோசனையோடு சில செயல்கள் செய்து வைத்திருந்தார்கள். அங்கேயே குடௌன் வைத்துக்கொண்டது. எல்லா பதிப்பாளர்கள் திணறும் விஷயம், புத்தகங்களின் ஸ்டாக் எங்கே வைத்துக்கொள்வது என்பது. க்ரியா பதிப்பகம் ஒரு சிறிய அறை போன்ற வடிவமைப்பை உருவாக்கி, அதனுள்ளே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும், இது ஆச்சரியமான விஷயம்தான்.
கிழக்கு பதிப்பகத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று மட்டும். ஒரு நண்பர் அடியாள் புத்தகம் வாங்கினார். அவரிடம் சென்று, ‘இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குகிறீர்கள், எங்கே இதைப் பற்றிப் படித்தீர்கள்’ என்றேன். ‘என் தொழிலே இதுதான்’ என்றதும் கொஞ்சம் பயந்தேன். அவர் தொடர்ந்து, ‘புத்தகம் படிக்கிறதுதான் என்னோட தொழில்’ என்று சொல்லி என் பயத்தைப் போக்கினார். ‘கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தகங்களை வெளியிடுகிறது’ என்றெல்லாம் பாராட்டிய அவர், ‘எம்.எஸ். புத்தகத்துல... குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, சொல்றேன்... அந்தம்மாவுக்கு நடந்தது 2வது கல்யாணம். அது பத்தி வரவே இல்லை. அது எவ்வளவு முக்கியமான விஷயம்? அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க?’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்!
சில எழுத்தாளர்களையும் இன்று காணமுடிந்தது. சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன். சென்ற முறை எனி இந்தியனுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களையும் படம் பிடித்தேன். இம்முறையும் புகைப்படம் எடுப்பது போரடிக்கிறது என்பதால், எழுத்தாளர்களைப் படம் பிடிக்கப்போவதில்லை. (சில விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு!) பொதுவான புகைப்படங்களை எடுக்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
![]() |
| From day1_cbf2009 |
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Thursday, January 8, 2009
கண்காட்சிக்குள் பெய்த மாமழை (சென்னை புத்தகக் கண்காட்சி 2009 தொடக்க முன் தினம்)
புத்தகக் கண்காட்சியின் தொடக்க ஆர்வத்தை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டது திடீர் மழை. முன் தினம் வரை மழையின் அறிகுறியே இல்லாமல் இருக்க, நேற்று திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மழையின் காரணமாகப் பல வேலைகள் தடைப்பட்டன. பல பதிப்பாளர்கள் கடையில் எதையுமே அடுக்கவில்லை. இத்தனை சாகவாசமாய் பதிப்பாளர்கள் நடந்துகொள்ளும் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். இதில் மின்சாரத் தடை வேறு. அதனால் இரவு ஆறு மணி வரையில் அதிக வேலைகளைச் செய்யமுடியவில்லை. கண்காட்சியின் வளாகத்திற்குள் நீர் கொட்டவில்லை என்றாலும், முதல் வரிசைகளில் மட்டும் நீர் கொட்டியது. அதுவும் நடைபாதைகளில் மட்டுமே கொட்டியது என்பதால், பல பதிப்பாளர்களின் உள்ளரங்கம் தப்பித்துக்கொண்டது.

பொத்துக்கொண்டு ஊற்றும் மழை நீர்.
வெளி அரங்க வேலைகள் பாதி முடிந்திருந்த நிலையில், அங்கே உள்ள வேலைகளையும் இம்மழை புரட்டிப் போட்டது. சாமியாவின் மேல் நிறையத் தண்ணீர் தேங்கி நிற்க, கர்ப்பிணிப் பெண்ணின் பெருத்த வயிறு போல, கீழ் நோக்கி வளைந்து நின்றது சாமியானா. புத்தகக் கண்காட்சிக்கு வரும் இடங்களில் அமைக்கப்பட இருக்கும் விளம்பரத் தட்டிகள் இன்றுதான் அமைக்கப்படும் என்பதால், இன்று தொடக்க நாளாக இருந்தாலும், நாளையே புத்தகக் கண்காட்சி அதன் நிறத்தை அடையும் என நினைக்கிறேன்.

நீர் சேர்ந்து குழிந்த சாமியானா!
சென்ற முறை முதல் நாள் மதியமே சாப்பிட ஏதேனும் அங்கே கிடைத்தது. இந்த முறை நேற்று சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றால் சரியான மழை வேறு. ஆனால் அரங்கினுள்ளே டீப்பாயில் டீயும், காப்பியும் கிடைத்தது. அந்த மழைக்கு, அதுவும் சரியான வேலை இருக்கும்போது, சூடாக டீ குடிப்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. (ஆனாலும் மழையில் நனைந்துகொண்டு நாங்கள் சாப்பிடப்போய்விட்டு வந்தோம். வைகுண்ட ஏகாதசி அன்று, ஒரு நல்ல அசைவ உணவகத்தில் சைவச் சாப்பாடு சோறும் காய்கறியுமாக உள்ளே சென்றது. அஹம் பிரம்மாஸ்மி என்பதால் இதெல்லாம் பாவமாகாது என்றே நினைக்கிறேன்.)
இன்று முழுவதும் பதிப்பாளர்களின் அரங்குகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டுவிடும். பெரிய அரங்குகளை எடுத்திருக்கும் பதிப்பகங்கள் இன்றைக்குள் புத்தகங்களை அடுக்கிவிட்டாலும், உள்ளரங்க வேலைப்பாடுகள் எல்லாம் முடிந்து ஆயத்தமாக நாளை ஆகிவிடும் என்று தோன்றுகிறது. கலைஞன் பதிப்பகம் தனது அரங்கை பொருட்காட்சியின் அரங்குபோல, இரண்டு மண்டபத் தூண்கள் எல்லாம் வைத்து வடிவமைத்துள்ளது. சீதை பதிப்பகம் 'ரூபாய் 1000க்கு வாங்கினால் இன்னொரு 1000 ரூபாய்க்கான புத்தகங்கள் இலவசம்' என்று அறிவித்திருக்கிறார்கள். பெரிய அளவில் பேனர் வைத்து அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! புகைப்படங்களை நாளைமுதல் உள்ளிடுகிறேன். தீம்தரிகிட அரங்கு வழக்கம்போல எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன். பானைகளின் நடுவே தரையில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்த ஞாநியை நேற்று சந்தித்துப் பேசினேன். இந்த முறை எனது வலைப்பதிவில் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.
இன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர் கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற முறை கருணாநிதி வரும் நிமிடம் வரையில் வெளி அரங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கருணாநிதி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசப்போகும் நிலையில், யாரேனும் ஒருவர் வந்து, 'ஐயா கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க, ரெண்டு நட்டு டைட் பண்ணனும்' என்று சொல்வார்கள் என்றெல்லாம் கடுமையாக கற்பனை செய்து வைத்திருந்தேன். மழையின் புண்ணியத்தில் கருணாநிதி தப்பித்தார். இந்தமுறை அப்துல் கலாம் எப்படித் தப்பிக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் வெளி அரங்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. மழையின் காரணமாக அந்த வேலை மெல்லவே நடக்கிறது.
சென்ற முறை பபாஸியின் சார்பாக ஏகப்பட்ட இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த முறை அவை இனிதான் முளைக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக பபாஸியின் சார்பில் இந்த முறை விளம்பரங்கள் குறைவு என்று தோன்றுகிறது. நாளை, நாளை மறுநாளைக்குள் இந்த விளம்பர நிலவரங்கள் தெரிந்துவிடும்.
இனி NHM புராணம். கிழக்கு பதிப்பகத்தின் அரங்குகள் பாதி ஆயத்தமான நிலையில், இன்றிரவுக்குள் கிட்டத்தட்ட ஆயத்தமாகிவிடும். நாளை முழுவதுமாக ஆயத்தமாகிவிடும். வரம் வெளியீடுகளில் இந்துமத ஆன்மிக புத்தகங்கள் கிடைக்கும்! நலம் வெளியீடு அரங்கில் உடல்நலம் தொடர்பான புத்தகங்களும், பவிஷ் க்ராஃபிக்ஸ் அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ராடிஜியின் புத்தகங்கள் புக் ஷாப்பர்ஸ் அரங்கில் கிடைக்கும். எந்த எந்த அரங்கு எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட அரங்க வடிவமைப்பு, அரங்க எண்களைத் தனியே உள்ளிடுகிறேன்.
ப்ராடிஜியின் அரங்கில் மாணவர்களுக்கான வினாடி வினா - எழுத்துத் தேர்வு நடத்தலாம் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. இது சாத்தியமாகுமா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும். கிழக்கு அரங்கில் இணைய இணைப்பு கோரியிருக்கிறோம். எப்படியும் கண்காட்சி முடியும் நாளுக்குள் இணைய இணைப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. இருந்தால், அங்கிருந்தே பதிவு உள்ளிடமுடியுமா என்று பார்க்கிறேன். விடுமுறை நாள்களில் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் விடப்போவதில்லை.
NHMன் புத்தகங்கள் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்ல ஓர் எண்ணை அறிவித்திருக்கிறோம். அந்த எண் 9941137700. இதை நீங்கள் தொடர்புகொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லலாம். கருத்து மட்டுமின்றி, உங்கள் புத்தகத் தேவை, நீங்கள் இருக்குமிடங்களில் எங்கே NHMன் புத்தகங்கள் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு வைக்கலாம். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களுக்கான பதிலைத் தருவோம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? அலுவலகத்தை அழைத்தபோது, அலுவலக எண் பிஸியாகவே இருந்தது என்கிற பிரச்சினைகள் எழாது. என்னையோ அல்லது மார்க்கெட் நண்பர்களையோ அழைத்தபோது, அவர்கள் மொபைல் எண் கவரேஜில் இல்லை அல்லது சிவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்கிற பிரச்சினைகள் வராது. நீங்கள் உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் அழைப்பவரின் செலவு குறையும். புத்தகம் பற்றி கருத்துச் சொல்ல நினைப்பவர்கள், ஆனால் அதைத் தெளிவாக எழுத முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். புத்தகம் பற்றிய விமர்சனம் இருந்தால், அதை நேரில் சொல்லத் தயக்கப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். (எனது கவிதைகளே சிறந்தது என்றோ, அதைவிட எனது கதைகளே சிறந்தவை என்றோ, அதைவிட எனது கட்டுரைகளே சிறந்தவை என்றோ என் ரசிகர்கள் யாரும் சொல்லவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்.) இப்படி சில எண்ணத்தோடு இந்த எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
கிழக்கு அரங்கில் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று நபர்களுக்குக் குலுக்கல் முறையில் புத்தகங்கள் பரிசு அளிக்கலாம் என்றிருக்கிறோம். முதல் பரிசு 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், இரண்டாம் பரிசு 200 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், மூன்றாம் பரிசு 100 மதிப்புள்ள புத்தகங்கள்.
மேலதிக விவரங்களை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
பின்குறிப்பு: 'வைகுண்ட ஏகாதசி' அன்று மழை வரும் வாய்ப்புண்டு என்று இந்து அறிவியல் (!) சொல்கிறதாம். அதனால் அந்த நாளில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது நம் தவறே அன்றி, தொடக்க நாளில் மழை வரவைத்தது கடவுளின் தவறில்லை என்று ஒரு வியாக்யானத்தை நேற்று நான் கேள்விப்பட்டேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பகிர்தலுக்காக மட்டும் இங்கே. :-)

வெளி அரங்க வேலைகள் பாதி முடிந்திருந்த நிலையில், அங்கே உள்ள வேலைகளையும் இம்மழை புரட்டிப் போட்டது. சாமியாவின் மேல் நிறையத் தண்ணீர் தேங்கி நிற்க, கர்ப்பிணிப் பெண்ணின் பெருத்த வயிறு போல, கீழ் நோக்கி வளைந்து நின்றது சாமியானா. புத்தகக் கண்காட்சிக்கு வரும் இடங்களில் அமைக்கப்பட இருக்கும் விளம்பரத் தட்டிகள் இன்றுதான் அமைக்கப்படும் என்பதால், இன்று தொடக்க நாளாக இருந்தாலும், நாளையே புத்தகக் கண்காட்சி அதன் நிறத்தை அடையும் என நினைக்கிறேன்.

சென்ற முறை முதல் நாள் மதியமே சாப்பிட ஏதேனும் அங்கே கிடைத்தது. இந்த முறை நேற்று சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றால் சரியான மழை வேறு. ஆனால் அரங்கினுள்ளே டீப்பாயில் டீயும், காப்பியும் கிடைத்தது. அந்த மழைக்கு, அதுவும் சரியான வேலை இருக்கும்போது, சூடாக டீ குடிப்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. (ஆனாலும் மழையில் நனைந்துகொண்டு நாங்கள் சாப்பிடப்போய்விட்டு வந்தோம். வைகுண்ட ஏகாதசி அன்று, ஒரு நல்ல அசைவ உணவகத்தில் சைவச் சாப்பாடு சோறும் காய்கறியுமாக உள்ளே சென்றது. அஹம் பிரம்மாஸ்மி என்பதால் இதெல்லாம் பாவமாகாது என்றே நினைக்கிறேன்.)
இன்று முழுவதும் பதிப்பாளர்களின் அரங்குகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டுவிடும். பெரிய அரங்குகளை எடுத்திருக்கும் பதிப்பகங்கள் இன்றைக்குள் புத்தகங்களை அடுக்கிவிட்டாலும், உள்ளரங்க வேலைப்பாடுகள் எல்லாம் முடிந்து ஆயத்தமாக நாளை ஆகிவிடும் என்று தோன்றுகிறது. கலைஞன் பதிப்பகம் தனது அரங்கை பொருட்காட்சியின் அரங்குபோல, இரண்டு மண்டபத் தூண்கள் எல்லாம் வைத்து வடிவமைத்துள்ளது. சீதை பதிப்பகம் 'ரூபாய் 1000க்கு வாங்கினால் இன்னொரு 1000 ரூபாய்க்கான புத்தகங்கள் இலவசம்' என்று அறிவித்திருக்கிறார்கள். பெரிய அளவில் பேனர் வைத்து அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! புகைப்படங்களை நாளைமுதல் உள்ளிடுகிறேன். தீம்தரிகிட அரங்கு வழக்கம்போல எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன். பானைகளின் நடுவே தரையில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்த ஞாநியை நேற்று சந்தித்துப் பேசினேன். இந்த முறை எனது வலைப்பதிவில் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.
இன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர் கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற முறை கருணாநிதி வரும் நிமிடம் வரையில் வெளி அரங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கருணாநிதி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசப்போகும் நிலையில், யாரேனும் ஒருவர் வந்து, 'ஐயா கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க, ரெண்டு நட்டு டைட் பண்ணனும்' என்று சொல்வார்கள் என்றெல்லாம் கடுமையாக கற்பனை செய்து வைத்திருந்தேன். மழையின் புண்ணியத்தில் கருணாநிதி தப்பித்தார். இந்தமுறை அப்துல் கலாம் எப்படித் தப்பிக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் வெளி அரங்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. மழையின் காரணமாக அந்த வேலை மெல்லவே நடக்கிறது.
சென்ற முறை பபாஸியின் சார்பாக ஏகப்பட்ட இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த முறை அவை இனிதான் முளைக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக பபாஸியின் சார்பில் இந்த முறை விளம்பரங்கள் குறைவு என்று தோன்றுகிறது. நாளை, நாளை மறுநாளைக்குள் இந்த விளம்பர நிலவரங்கள் தெரிந்துவிடும்.
இனி NHM புராணம். கிழக்கு பதிப்பகத்தின் அரங்குகள் பாதி ஆயத்தமான நிலையில், இன்றிரவுக்குள் கிட்டத்தட்ட ஆயத்தமாகிவிடும். நாளை முழுவதுமாக ஆயத்தமாகிவிடும். வரம் வெளியீடுகளில் இந்துமத ஆன்மிக புத்தகங்கள் கிடைக்கும்! நலம் வெளியீடு அரங்கில் உடல்நலம் தொடர்பான புத்தகங்களும், பவிஷ் க்ராஃபிக்ஸ் அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ராடிஜியின் புத்தகங்கள் புக் ஷாப்பர்ஸ் அரங்கில் கிடைக்கும். எந்த எந்த அரங்கு எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட அரங்க வடிவமைப்பு, அரங்க எண்களைத் தனியே உள்ளிடுகிறேன்.
ப்ராடிஜியின் அரங்கில் மாணவர்களுக்கான வினாடி வினா - எழுத்துத் தேர்வு நடத்தலாம் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. இது சாத்தியமாகுமா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும். கிழக்கு அரங்கில் இணைய இணைப்பு கோரியிருக்கிறோம். எப்படியும் கண்காட்சி முடியும் நாளுக்குள் இணைய இணைப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. இருந்தால், அங்கிருந்தே பதிவு உள்ளிடமுடியுமா என்று பார்க்கிறேன். விடுமுறை நாள்களில் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் விடப்போவதில்லை.
NHMன் புத்தகங்கள் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்ல ஓர் எண்ணை அறிவித்திருக்கிறோம். அந்த எண் 9941137700. இதை நீங்கள் தொடர்புகொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லலாம். கருத்து மட்டுமின்றி, உங்கள் புத்தகத் தேவை, நீங்கள் இருக்குமிடங்களில் எங்கே NHMன் புத்தகங்கள் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு வைக்கலாம். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களுக்கான பதிலைத் தருவோம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? அலுவலகத்தை அழைத்தபோது, அலுவலக எண் பிஸியாகவே இருந்தது என்கிற பிரச்சினைகள் எழாது. என்னையோ அல்லது மார்க்கெட் நண்பர்களையோ அழைத்தபோது, அவர்கள் மொபைல் எண் கவரேஜில் இல்லை அல்லது சிவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்கிற பிரச்சினைகள் வராது. நீங்கள் உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் அழைப்பவரின் செலவு குறையும். புத்தகம் பற்றி கருத்துச் சொல்ல நினைப்பவர்கள், ஆனால் அதைத் தெளிவாக எழுத முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். புத்தகம் பற்றிய விமர்சனம் இருந்தால், அதை நேரில் சொல்லத் தயக்கப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். (எனது கவிதைகளே சிறந்தது என்றோ, அதைவிட எனது கதைகளே சிறந்தவை என்றோ, அதைவிட எனது கட்டுரைகளே சிறந்தவை என்றோ என் ரசிகர்கள் யாரும் சொல்லவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்.) இப்படி சில எண்ணத்தோடு இந்த எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
கிழக்கு அரங்கில் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று நபர்களுக்குக் குலுக்கல் முறையில் புத்தகங்கள் பரிசு அளிக்கலாம் என்றிருக்கிறோம். முதல் பரிசு 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், இரண்டாம் பரிசு 200 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், மூன்றாம் பரிசு 100 மதிப்புள்ள புத்தகங்கள்.
மேலதிக விவரங்களை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
பின்குறிப்பு: 'வைகுண்ட ஏகாதசி' அன்று மழை வரும் வாய்ப்புண்டு என்று இந்து அறிவியல் (!) சொல்கிறதாம். அதனால் அந்த நாளில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது நம் தவறே அன்றி, தொடக்க நாளில் மழை வரவைத்தது கடவுளின் தவறில்லை என்று ஒரு வியாக்யானத்தை நேற்று நான் கேள்விப்பட்டேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பகிர்தலுக்காக மட்டும் இங்கே. :-)
Labels:
சென்னை புத்தகக் கண்காட்சி 2009,
பொது
Tuesday, January 6, 2009
கம்பிகளின் வழியே கசியும் வானம் (மாலனின் ’என் ஜன்னலுக்கு வெளியே’ புத்தக வெளியீடு)

என் ஜன்னலுக்கு வெளியே நூலை ஜென்ராம் வெளியிட, சிங்கப்பூர் ’ஒலி’ பண்பலையின்
மாலனின் பல்வேறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான ‘என் ஜன்னலுக்கு வெளியே’ நூலை வெளியிட்டுப் பேசிய ஜென்ராம், தான் அரசியல் மற்றும் சமூகம் வகைகளில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளை மட்டுமே வாசித்ததாகவும், அதைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகவும் தெரிவித்தார். அடிப்படையில் ஒரு புத்தகத்தை விமர்சிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்ட ஜென்ராம், என் ஜன்னலுக்கு வெளியே புத்தகத்தில் உள்ள பல்வேறு கட்டுரைகளைப் பற்றிய தன் கருத்துகளைச் சொன்னார். தான் எழுதிய கட்டுரைகளில் எப்படி மாலனின் கட்டுரைகள் எப்படி ஒன்றுபடுகிறது அல்லது வேறுபடுகிறது என்பதை ஒப்பிட்டுப் பேசிய அவர், மாற்றுக் கருத்தை முன்வைக்க இன்று ஓர் எழுத்தாளர் இருப்பதே மகிழ்ச்சியான விஷயம் என்றார். சேது சமுத்திரம் பற்றிய மாலனின் கட்டுரை ஒரு வித்தியாசமான கோணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார். மாலனோடு ஒத்துப்போகமுடியாத கருத்துகளையும் சொன்ன ஜென்ராம், விவாதத்தின் மூலம் எதையும் நிறுவிவிடமுடியாது என்றும் அதற்கு உதாரணமாக அசோகமித்திரனின் ‘ரிக்ஷா ரிஷ்கா’ கதையைக் குறிப்பிட்டார்.
மாலன் ஏற்புரை வழங்கினார். சிங்கப்பூர் தமிழ்முரசுவில் தான் எப்படி எழுத நேர்ந்தது என்பதைச் சொல்லிய மாலன், சொல்லாத சொல் கட்டுரைத் தொகுப்பில் தொடக்கத்தில் இருக்கும் அறிமுகக் குறிப்பின் பின்னணி, அவை இக்கட்டுரைகளில் இல்லாததன் பின்னணி என்பதையெல்லாம் விவரித்தார். ஜென்ராம் பேசும்போது, சேது சமுத்திரத் திட்டக் கட்டுரையின் மூலம் தனக்கு ஒரு ஹிந்துத்துவ முத்திரை விழுந்துவிடும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த மாலன், இது போன்ற முத்திரைகளைப் பல்லாண்டு காலமாகத் தான் எதிர்கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் தனக்கு எருமைத்தோல் வந்துவிட்டதாகவும் சொன்னார். தான் ஜனகணமன நாவல் எழுதியபோது ஆர்.எஸ்.எஸ். ஆள் என முத்திரை குத்தப்பட்டதாகவும், அப்போது எழுதிய வேறொரு படைப்பை முன்வைத்து நக்ஸல் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் ஒருவர் எப்படி இந்த இரண்டுமாகவும் இருக்கமுடியும் என்று தனக்கு விளங்கவில்லை என்றும் சொன்னார். சமீபத்திய வரலாறான பாரதியின் வரலாற்றைக் கூட நம்மால் இன்னும் சரியாகப் பதிவு செய்யமுடியவில்லை என்றும், மேடைக்கு மேடை மேம்போக்காக, பாரதி யானையால் மிதிபட்டு இறந்தார் என்றும் பேசுகிறார்கள் என்றும் சொன்ன மாலன், இதன் மூலம் பத்தி எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தைச் சொன்னார். இன்னும் சிறிது நேரம் தொடர்ந்த மாலனின் பேச்சை அடுத்து கலந்துரையாடல் தொடங்கியது.
முதல் கேள்வியே அவரது இலக்கிய முகம் சார்ந்ததாக அமைய, அதற்குப் பதில் சொன்ன மாலன் தான் என்னதான் எழுதினாலும் தான் அடிப்படையில் ஒரு வாசகனே என்று சொன்னார். வலைப்பூக்களின் தொடக்க காலத்தில் அதை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான மாலன் தற்போது வலைப்பூக்களைப் பற்றிய ஒரு அவநம்பிக்கை கொண்டிருப்பதாகத் தோன்றுகிறதே என்று நான் கேட்டபோது, தனக்கு இன்னும் வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும், தனது நம்பிக்கையின்மை வலைப்பதிவுகளின் திரட்டி மீதானது மட்டுமே என்றும் குறிப்பிட்டார். சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கேள்விக்கு, அது சுற்றுப் புறச் சூழல் சார்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்றால், அத்திட்டம் தேவையில்லை என்றும், அது செலவு ரீதியாகக் கட்டுப்படி ஆகாது என்றால் அதனால் பயனில்லை என்றும், அது ஹிந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றால் அந்த நம்பிக்கையை ஏன் நிராகரிக்கவேண்டும் என்றும் மூன்று கோணங்களில் பேசினார். ராமன் இருந்தாரா இல்லையா என்றால் கண்ணகி இருந்தாரா இல்லையா என்று தான் எதிர்க்கேள்வி கேட்க விரும்புவதாகவும், கண்ணகிக்கு சிலை வைத்தல் ஒரு நம்பிக்கை என்றால், ராமர் பாலமும் அத்தகைய ஒரு நம்பிக்கையாக ஏன் இருக்கக்கூடாது என்றும் கேட்டார் மாலன். சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதே என்ற கருத்தைச் சொன்ன லக்கிலுக்கின் ஆதாரத்தை மாலன் மறுத்து, முதலில் பண உதவி செய்வதாக இருந்த வங்கி, இத்திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதில்லை என்று பின்வாங்கிவிட்டதை மாலன் குறிப்பிட்டார். பவளப் பாறைகள் 30 கி.மீ. வரை உள்ளதாகவும், அதில் மிகச் சில மீட்டர்களில் உள்ள பவளப் பாறைகள் மட்டுமே அழிய நேரிடும் என்றும் அதனால் பெரிய சுற்றுப் புறச் சூழல் அச்சுறுத்தல் இல்லை லக்கிலுக் சொன்னார். இதனால் மீன்வளம் குறையும் என்று தான் நம்பவில்லை என்றார் லக்கிலுக். மாலன், சுற்றுப்புறச் சூழலா, ஒரு திட்டமா என்றால் தனக்கு சுற்றுப்புறச் சூழலே முக்கியம் என்றார்.

சன் நியூஸில் இருந்தவரை கருணாநிதியை விமர்சித்து எழுதியதில்லை என்றும் ஆனால் சன் நியூஸிலிருந்து விலகியவுடன் கருணாநிதிக்கு எதிரான கட்டுரைகள் (மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவை) எழுதியது பற்றிய மாலன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்வியை நான் கேட்டேன். தான் சன் நியூஸில் இருக்கும்போதே கருணாநிதியைப் பற்றி எழுதியிருப்பதாகவும், தான் எழுதிய கட்டுரைகளைப் பார்த்துவிட்டு அன்றே கருணாநிதி தனது அதிருப்தியைச் சொல்லியிருப்பதாகவும் சொன்னார் மாலன். ஒரு விழாவில் ஸ்டாலின் பேசும்போது, ‘நம்மை விமர்சித்து எழுதும் மாலன்’ என்றுதான் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், சன் நியூஸிலிருந்து விலகியபின்பு அவர் எழுதிய ‘இலவச வண்ணத் தொலைக்காட்சி சரியா’ என்பது பற்றிய கட்டுரை என்றும், மாறன் சகோதரர்கள் பற்றியது அல்ல என்றும் சொன்னார். ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தான் செயல்பட்டதாகவும், அப்போதும் தனது கருத்துகள் தன்னுடனே இருந்ததாகவும் விவரித்தார் மாலன். (என்னால் இக்கருத்தை ஏற்கமுடியவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது, அந்நிறுவனத்தின் கருத்தை ஏற்பதும், ஓர் எழுத்தாளனின் அந்தரங்கக் குரலும் வெவ்வேறானது. குறைந்தபட்சம், அந்நிறுவனத்துக்கு எதிரான கருத்துகள் இருந்து, அதைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளையோ, அந்நிறுவனத்தின் அரசியல் சார்ந்த கருத்துகளையோ ஏற்பது என்பது முற்றிலும் வேறானது. இங்கேதான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு எக்ஸுக்கும், மாலன், ஞாநி போன்ற எழுத்தாளர்களுக்கும் பெரிய வேறுபாடு வருவது. மேலும் இதைப் பற்றி விவரிக்கவேண்டுமானால், மாலன் எழுதிய கட்டுரைகளை முழுவதும் வாசித்தபின்பே முடியும்.)
பதிப்பக உலகத்தில் அந்நாளைய, இன்றைய, எதிர்காலம் பற்றிய கேள்வி வந்தது. அந்நாளில் அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகம் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், அதனால் அசோகமித்திரனிடமே கேட்டதாகவும், மாடிக்கு மாலனை அழைத்துச் சென்ற அசோகமித்திரன், அங்கே ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பித்து, ‘எத்தனை வேணும்’ என்று கேட்டதாகவும் குறிப்பிட்ட மாலன், இன்று அந்நிலை மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டார். மௌனியின் முதல் சிறுகதைப் புத்தகம் வர அவர் எவ்வளவு பாடுபடவேண்டியிருந்தது என்று சொன்ன அவர், இன்று பெரும்பாலான பதிப்பகங்கள் ‘நூலக ஆர்டரை’ நம்பி இல்லை என்றார். புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் பற்றி நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைய புத்தகக் கண்காட்சிகளில் முன்பு போல் சமையல் புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களும் அதிகம் விற்பதில்லை என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். கிழக்கு, தமிழினி போன்ற பதிப்பகங்களினால், நாவல் சிறுகதை கவிதை என்பதை மீறி இப்போது பல வகைப்பாடுகளில் புத்தகங்கள் கிடைப்பதைப் பற்றிச் சிலாகித்தார். இங்கே சில கருத்துக்களைச் சொல்லி, மாலனின் சந்தோஷத்தைக் கெடுத்து ஒரு குரூர சந்தோஷத்தை நான் அடையவேண்டியிருக்கிறது. :)
மாலன் அசோகமித்திரனின் வீட்டில் பார்த்த ‘வாழ்விலே ஒருமுறை’ என்பதைப் போன்ற இலக்கியப் புத்தகங்களின் நிலை இன்றும் அப்படியே உள்ளது என்பதுதான் உண்மை. கொஞ்சம் முன்னேறி இருக்கலாம். ஆனால் அன்று அசோகமித்திரன் வீட்டில் இருந்த நிலையே அந்நியமானது என்கிற அளவிற்கு இலக்கியப் புத்தகங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துவிடவில்லை. அன்று இலக்கியப் புத்தகத்தையும், இன்று வெகுஜன புத்தகத்தையும் மனதில் வைத்து மாலன் எடை போடுகிறாரோ என்றும் தோன்றுகிறது. ‘இன்னும் பத்து வயதில் என் அக்காவை விட பெரியவனாகிவிடுவேன்’ என்கிற ஒரு சிறுவனின் நம்பிக்கைக்குச் சமமானதுதான், புத்தகக் கண்காட்சியில் விற்கும் இலக்கியப் புத்தகங்களின் விற்பனையும். இலக்கியப் புத்தகங்களின் விற்பனை எந்த வேகத்தில் அதிகரிக்கிறதோ, அதைவிட அதிகமான வேகத்தில் ஜோதிட, சமையல் புத்தகங்களின் விற்பனையும் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக இலக்கியப் புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது என்பதில் மட்டுமே நாம் மகிழ்ச்சி கொள்ளமுடியும். அதேபோல், பதிப்பகம் மற்றும் நூலக ஆர்டர் சார்ந்தது. கிழக்கு, ஆனந்தவிகடன் மற்றும் சில பெரிய எழுத்தாளர்களைக் கையில் வைத்திருக்கும் ஒரு சில பதிப்பகங்கள் இன்றைய நிலையில் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆர்டரை நம்பியே இருக்கின்றன. இதை எப்படி விளக்கலாம் என்றால், பெரிய பதிப்பகங்கள், நூலக ஆர்டர் நம்பி இல்லை என்றாலும் கூட, நூலக ஆர்டரை ஒதுக்குவதில்லை; அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கின்றன. அப்படியானால், மற்ற சிறிய பதிப்பகங்களின் நிலையை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். அதனால் நூலக ஆர்டர் விஷயத்தில் இன்னும் பல விஷயங்களை நாம் நிச்சயம் செய்யவேண்டியிருக்கிறது. காலச்சுவடு இதழில் கண்ணன் சொன்னதுபோல, ‘எடைக்கு எடை போடுவதைவிடக் கொடுமையாக புத்தகங்கள் நூலகத்தில் வாங்கப்படுவதைப்’ பற்றி நிச்சயம் யோசிக்கவேண்டும்.
அடுத்து வாரிசு அரசியல் பற்றிய கேள்வியைக் கேட்டார் லக்கிலுக். ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதிலும் வாரிசு அரசியல் இருக்கும்போது, மக்கள் அதை அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக ஊடகங்கள் மட்டுமே அலட்டிக்கொள்கின்றன என்றும், மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பின்னரே ஒரு வாரிசு கூட அரசியலில் நிலைக்கமுடியும் என்றும், யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரம் எனப் பார்க்கலாமா என்றும் கேட்டார். லக்கிலுக். இதற்கு ஜென்ராம், மாலன் இருவருமே பதிலளித்தனர். ஜென்ராம், உட்கட்சி விவகாரம் என்றாலும், அதை பார்த்து கருத்துச் சொல்ல விமர்சிக்க தனக்கு உரிமை இருக்கிறது என்றும், ஓர் உட்கட்சி முடிவிலேயே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவரின் கட்சியை அடிப்படையாகவைத்தே தான் அவரைத் தேர்ந்தெடுப்பதால், உட்கட்சி விவகாரம் பற்றிய விமர்சனம் தேவையாகிறது என்றார். மாலன், உட்கட்சிகளில் நடக்கும் வன்முறை விமர்சனத்துக்குரியது என்றால் அவர்களின் அரசியலும் விமர்சனத்துக்குரியது என்றார். ஜென்ராம், ஜெயலலிதாவோ கருணாநிதியோ உட்கட்சியைக் கூட்டி முடிவெடுக்கிறார்கள் என்றால் அது, அவர்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் காதலால் அல்ல, மாறாக, அரசியல் சட்டத்தின் தேவையைக் கருதி மட்டுமே என்று விளக்கினார். மக்கள் மன்றம் என்பதே போலியானது என்றும், மக்கள் மன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், ஜெயலலிதா ஊழலற்றவர் என்று தொடங்கி, மோடி வரையில், நாளை அத்வானி வென்றால் அவர் வரையில் அவரவருக்கு வேண்டிய வகையில் இதை ஏற்கவேண்டியிருக்கும் என்றும், இது சரியானது அல்ல என்பதால் மக்கள் மன்றம் போலியானது என்றும் நான் சொன்னேன். மக்கள் மன்றம் போலியானது என்றால் ஜனநாயகமே போலியானதா என்பது போன்ற கேள்வியை லக்கிலுக் கேட்க முனைந்தார். ஆனால் அதற்குள் வேறு வேறு கேள்விகளில் இக்கேள்வி சிதைந்து போனது.
உண்மையில் மக்கள் மன்றம் என்கிற கருத்துவாக்கம் போலியானது என்றே நான் நம்புகிறேன். மக்கள் மன்றம் என்கிற கருத்துருவாக்கம் உள்ளீடற்றது. அங்கே எளிய சமன்பாடுகள் மூலம் நிறுவப்பட்ட நிரலி சிந்திப்பது இல்லை. ரத்தமும் சதையுமுமான மக்கள் சிந்திக்கிறார்கள். இதைக் கொஞ்சம் யதார்த்தமாக்கினால் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை என்று சொல்லிவிடலாம். இந்திய மக்கள் மன்றம் என்பது, அறிவாளிகளாலும், சிந்தனையாளர்களாலும் நிரம்பியது என்று நான் நம்பவில்லை. கட்சி அடிப்படையிலும், தனிநபர் அரசியல் அடிப்படையிலுமே இன்றைய மக்கள் மன்றம் பெரும்பாலும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது. அதனால்தான் பெரும் ஊழலில் சிக்கித் தவித்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சிக்கு வருவதும், பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஓர் அரசியல்வாதி டெபாசிட் இழப்பதும் நடக்கின்றன. நாம் மக்கள் மன்றம் என்கிற கருத்தை ஒற்றைப் பரிமாணத்தோடு ஏற்க முனைந்தோமானால், இவற்றை எல்லாமே ஏற்கவேண்டியிருக்கும். இது சாத்தியமற்றது. அதனால் மக்கள் மன்றம் என்கிற கருத்தை முன்வைக்கும் அரசியல்வாதிகள் எல்லாமே, தங்களுக்கு வேறு பதில் இல்லாத நிலையில் இதைக் கையில் எடுக்கிறார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். வாரிசு அரசியல் விமர்சனத்தைத் தகர்க்க கருணாநிதியும், ஊழல் குற்றச்சாட்டைத் தகர்க்க ஜெயலலிதாவும் இந்த மக்கள் மன்றம் என்கிற கருத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தின் மீது வைத்திருக்கும் ‘நம்பிக்கை’ நாம் அறிந்ததே! மக்கள் மன்றத்தின் வழியாக ஜனநாயகத்தை நாம் அடைந்தோமானால், ஜனநாயகத்தை நான் ஏற்கிறேன். மக்கள் மன்றம் வலுவில்லாதபோது, அதன் வழியாக உருவாகும் ஜனநாயகம் எப்படி வலுவானதாக இருக்கும் என்றால், இருக்கும் மோசமான வழிகளில் தீமைகள் குறைந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவதுபோல, (இங்கே ஜெயலலிதாவும் கருணாநிதியின் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) மக்கள்மன்ற ஜனநாயகத்தைவிடச் சிறந்த மாற்று ஒன்று இன்று நம்மிடம் இல்லையாததலால் அதை ஏற்கவேண்டியிருக்கிறது என்று கொள்ளலாம்.

ஸ்டாலின் திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் அவரை வாரிசு அரசியலின் வெளிப்பாடு என்று இன்று சொல்லமாட்டேன். ஆனால், மாலன் எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் சொன்னதுபோல, வாரிசு அரசியல் என்பது வாரிசுகள் அரசியலுக்குள் வருவதில் இல்லை, மாறாக, அவர்கள் எப்படி அரசியலுக்குள் வருகிறார்கள் என்பதில் இருக்கிறது. வாரிசு அரசியலை முன்வைத்து ஒருவர் வந்தாலும், அவர் தாக்குப் பிடிப்பது அவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பு, திறமை போன்றவற்றால்தானே என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதுவும் ஏற்கமுடியாததே. வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கும்போது, மற்றவர்களின் தலைமைப்பண்பைப் பற்றியும் திறமையைப் பற்றியும் அறியமுடியாமல் போய்விடுகிறது. இதை மாலன் தெளிவாகச் சொன்னார். அதனால் ஸ்டாலின் இன்று வாரிசு அரசியலுக்காகக் கேள்வி கேட்கப்படமுடியாதவர்; ஆனால் அதுவே கனிமொழிக்கோ, தயாநிதி மாறனுக்கோ எப்படி பொருந்தும் என்று யோசிக்கலாம். அதேபோல், வாரிசு அரசியலுக்கு கருணாநிதியை மட்டுமே குறை சொல்வதும் சரியல்ல. காங்கிரஸ், பாமக, தேமுதிக, சமக என யாருக்குமே வாரிசு அரசியல் பற்றிக் குறை சொல்லத் தகுதி இல்லை என்பதே உண்மை.
இந்த வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளோடு நேற்றைய மொட்டைமாடிக் கூட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று ஒரு ஐம்பது பேர் கலந்துகொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் திங்கள் கிழமை வேலை நாள், விளம்பரங்கள் இல்லை, அப்படியும் ஐம்பது பேர். மெல்ல மெல்ல எப்படியும் நூறு பேர் வருவார்கள் என்கிற இலக்கை மொட்டைமாடிக் கூட்டம் அடைந்துவிட்டால், பல்வேறு விஷயங்களைச் சோதித்துப் பார்த்து, பத்ரியையும் பாராவையும் சோதிக்கலாம். அது விரைவில் நடக்கும் என்றே தோன்றுகிறது!
பின்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சியில் ரொம்ப பிசியாக இருப்பதால் பதிவு கொஞ்சம் சிறியதாகிவிட்டது.
Labels:
கூட்டம்,
புத்தகப் பார்வை,
பொது
Sunday, January 4, 2009
பொது நூலகத்துறை – அகமும் புறமும்
காலச்சுவடு ஜனவரி 2009 இதழில் கண்ணன் பொது நூலகத்துறையில் நிலவும் அக்கறையின்மையைக் குறிப்பிட்டு ஒரு பத்தி எழுதியுள்ளார். கனிமொழி காலச்சுவடு விவகாரம் வெடிக்கவில்லை என்றால் இந்தப் பத்தி சாத்தியமாயிருக்குமா என்பது ’கண்ணனுக்கே’ வெளிச்சம். எது எப்படி இருந்தாலும், கண்ணன் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானவை. ஆயிரம் புத்தகங்கள் நூலகத்துறைக்கு எடுக்கிறோம் என்கிற அறிவிப்பெல்லாம் வந்துவிடுகிறது. வாக்கு வாங்க மக்களை ஏமாற்றுவதுபோல பதிப்பாளர்களையும் இந்த அரசு ஏமாற்ற நினைக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த அரசு என்பது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்றாலும், எந்த அரசு ஆண்டாலும் இக்கதியே நிலவுகிறது. ஜெயலலிதாவிற்கு பொது நூலகத்துறை என்று ஒன்று இருக்கிறது என்பது தெரியும் என்று நம்பியே தொடர்ந்து எழுதுகிறேன்!
ஒவ்வொரு ஆண்டும் பொது நூலகத்துறைக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்கென ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் எந்தப் புத்தகங்களை நூலகங்களுக்குத் தேர்வு செய்வது என்று முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். முதலில் 600 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 2007 முதல் 1000 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மிக எளிமையானதாகவும், தேவையானதாகவும் தோன்றும் இத்திட்டத்தை இந்த அரசுகள் எப்படி வைத்திருக்கின்றன என்று பார்க்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பதிப்பாளர்கள் புத்தகங்களை தேர்வுக்கு வேண்டி சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவிப்பு வரும். வருடத்தில் பத்து நாள்கள் மட்டும் விழித்திருந்தால் போதும் என நினைக்கும் பபாஸி இதைப் பற்றி செய்தி எல்லாம் எல்லா பதிப்பாளர்களுக்கும் அனுப்பாது. பதிப்பாளர்தான் கவனமாக இருந்து இதைத் தெரிந்துகொண்டு, புத்தகங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு புத்தகத்தைப் பதிவு செய்ய 50 ரூபாய் டிடி எடுக்கவேண்டும். ஒரு புத்தகத்தின் இரண்டு படிகளையும் தரவேண்டும். பரிசீலனைக்குப் பின்னர் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
320 பக்கங்கள் வரைக்குமான புத்தகங்கள் ஆயிரமும், அதற்கு மேல் பக்கங்கள் உள்ள புத்தகங்களை ஒரு குத்துமதிப்பாகவும் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு புத்தகத்திற்கு என்ன விலை கொடுப்பது என்பதை அரசே தீர்மானிக்கும். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலை இது. 16 பக்கங்கள் கொண்ட ஒரு டெமி சைஸ் புத்தகத்திற்கு ரூபாய் 3.90 என நினைக்கிறேன். இதில் என்ன கொடுமை என்றால், பதிப்பாளர் எந்த விதமான தாளை அச்சுக்குப் பயன்படுத்தி இருக்கிறார், எந்த விதமான அட்டையை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நல்ல தாளில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும், நியூஸ் ரீலில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும் ஒரே விலை 3.90தான். இதனால் சில பதிப்பாளர்கள் நூலக ஆர்டர் கிடைத்ததும் அச்சிடும் புத்தகங்களை சாதாரண தாளில் அச்சடித்து செலவைக் குறைத்துக்கொள்கிறார்கள்.
பொதுவாக, ஒரு பதிப்பாளர் எந்த நூலை சமர்ப்பிக்கிறாரோ அதே நூலின் தரத்தில் நூலகத்திற்கான புத்தகங்களின் தரத்தையும் வைத்திருக்கவேண்டும். ஆனால் இப்படி நிகழ்கிறதா என்று நூலகத்துறை சோதனை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. பத்தாண்டுகளாக ஒரே விலையை வைத்திருக்கும் அரசு, அதில் என்ன செய்து செலவைக் குறைக்கலாம் என பதிப்பாளர்கள்.
நூல்களை சமர்ப்பித்துவிட்டால், உடனே நூலகத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்துவிடாது. 2007ல் வந்த புத்தகங்களை 2008 பிப்ரவரியில் தேர்வுக்குச் சமர்ப்பித்தார்கள் பதிப்பாளர்கள். இதுவரை புத்தகங்களின் தேர்வு வெளியிடப்படவில்லை! இதுவாவது பரவாயில்லை. 2006ல் வெளியான புத்தகங்களின் தேர்வு 2008ன் பாதியில்தான் வெளியானது. இதுபோக, 2004 அல்லது 2005ல் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அடுத்த வருடம் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்களாம். இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நடக்கும்.
இந்தக் கூத்து முடிந்தால் அடுத்த கூத்து தொடங்கும். ஆயிரம் புத்தகங்களை அரசு தேர்ந்தெடுக்கும். அதை எல்லா நூலகங்களுக்கும் (தமிழகம் முழுவதும் 30 நூலகங்களுக்கு அனுப்பச் சொல்லுவார்கள்) அனுப்ப ஒரு மாத கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்படும். எல்லா பதிப்பாளர்களும் ஒரே நேரத்தில் அச்சுக்கூடங்களை நெருக்க, ஒரு மாதத்துக்குள் அனுப்ப முடியுமா முடியாதா என்ற நெருக்குதலில்தான் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த கால அவகாசத்தை மூன்று மாத காலம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே. ஒரு நூலகத்திற்கு நான்கு புத்தகங்கள் (ஒவ்வொரு புத்தகமும் அதிகபட்சமாக 40 பிரதிகள்) கொண்ட ஒரு பார்சலை அனுப்ப கிட்டத்தட்ட 400 ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி 30 நூலகங்களுக்கு அனுப்பவேண்டும். இந்தச் செலவை அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்பது யாருக்குமே தெரியாது. இதுபோக வண்டிச் செலவு, பேக்கிங் செலவு என பல உண்டு. இவை எல்லாமே அந்த 3.90ல் அடங்கவேண்டும்.
அடுத்த கூத்து தொடங்கும். புத்தகம் கிடைத்ததும் பணம் கிடைக்காது. நினைத்த நேரத்தில் நூலகங்கள் பணம் அனுப்பும். ஏன் அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது. கேட்டால் அனுப்புவோம் என்பார்கள். இப்படியாக 2007ல் பதிப்பாளர் அச்சடித்த புத்தகங்கள், 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்டு (இது விரைவு என்று பொருள்!) 2010ல் பணம் வந்துவிடும்.
திடீரென்று ஒரு நூலகர் பதிப்பாளரை அழைப்பார். அவர் அனுப்பியதில் சில பிரதிகள் இல்லை என்றும் உடனே அனுப்பவும் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிடுவார். பதிப்பாளர் சிரமேற்கொண்டு இதை அனுப்பிவைக்கவேண்டும். அப்படி மிஸ்ஸாக சான்ஸே இல்லையே என்று பதிப்பாளர் யோசித்தால், அவர் புத்தகம் அனுப்பாத வரை பணம் வராது.
இதெல்லாம் நடைமுறை கஷ்டங்கள் என்றால், அரசு அமைக்கும் குழு எப்படி புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர். குழு புத்தகத்தைப் படித்து அதைத் தேர்வு செய்யவேண்டும் என்பது விதி. குழு உறுப்பினர்கள் இந்த விதியையாவது படித்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் முன்னட்டையைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதுதான் நடைமுறை என்கிறார்கள். அட்டைப்படத்தில் ஏதேனும் கடவுளின் படமோ, மத சம்பந்தமான படமோ இருந்துவிட்டால் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அறிவுஜீவிகளின் வழியே நூலகத்திற்கான அறிவுக்கண்கள் திறக்கவேண்டும்!
நூலகம் என்பதையும் அதன் வழியே நிகழவேண்டிய அறிவுப் புரட்சியையும் பற்றிக் கொஞ்சமாவது உணர்ந்தவர்கள் இருந்தால், நூலகத்திற்கான புத்தகத் தேர்வு பற்றி சிந்திப்பார்கள். எல்லாவற்றையும் வாக்கு அரசியலாகவும், சிபாரிசு அரசியலாகவும் நினைக்கும் இந்த அரசுகள் நூலகத்துறையையும் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன. ஒரு பதிப்பாளர் அவரது புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, பணம் கொடுக்கவேண்டி வந்ததாகச் சொன்னார். உண்மையா பொய்யா எனத் தெரியாது.
பாரதியின் எழுத்துகளைத் தேடி, அதைக் காலவரிசையாகத் தொகுப்பதையே தன் வாழ்நாள் கடமையாக நினைத்துச் செயல்படும் சீனி விசுவநாதனின் புத்தகம், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பாகம் 6 என நினைக்கிறேன், அரசால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தக் கிழவர் பேருந்தைப் பிடித்து, அலையாய் அலைந்து, மனு கொடுத்து....
மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ’நிமிர வைக்கும் நெல்லை’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் நூலகத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர் அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்தார். ஏன் தன் புத்தகம் தேர்வு செய்யப்படவில்லை என்று காரணம் கேட்டும், எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதன் விளக்கம் கேட்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு என்ன ஆனது என்பது தெரியாது. ஆனால் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ‘நிமிர வைக்கும் நெல்லை’ புத்தகத்திற்கு நூலக ஆர்டர் கிடைத்தது. அப்போது அரசு சார்பில் வாய்மொழியாக ‘இப்படி ஏன் தன் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைக்கவில்லை என்று கேட்டுவரும் பதிப்பாளர்களின் புத்தகங்க்ளுக்கு ஆர்டர் கொடுத்து பிரச்சினையைத் தீர்த்துவிடுங்கள்’ என்று சொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.
இந்தப் புண்ணியத்தில், பாரதியின் காலவரிசைப்படுத்தபட்ட புத்தகத்திற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்தது! (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என்றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம்!)
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு விருது வழங்கப்படும். தமிழினியின் வெளியீடாக வந்த ‘தேவதேவன் கவிதைகள்’ புத்தகத்திற்கு விருது கிடைத்தது. அப்புத்தகம் நூலகத்துறையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்தப் புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது என்றாவது பார்த்தால் நல்லது! மீண்டும் அலைச்சல், மனு. பின்னர் நூலக ஆர்டர். இப்படி இருக்கிறது நூலகத்துறையின் செயல்பாடு.
சில புத்தகங்களின் முதல் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது. இரண்டாம் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நூலக வாசகர்களின் கொடுமையை நினைத்துப் பாருங்கள்.
பதிப்பாளர்கள் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்க அறிவுறுத்தி, வாசகர்களிடையே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை அதிகமாக அருளுரை வழங்கலாம். ஆனால் நூலகத்துறைக்குப் புத்தகங்களை எடுப்பது என்பது, பதிப்பாளர்களுக்கு போடப்படும் பிச்சை அல்ல. அது அரசின் கடமை. இதில் ஜனநாயகத்தன்மை என்பது எள்ளளவும் இல்லை என்பது அதைவிடப் பெரிய மோசடி. எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்கிற விவரங்கள் பதிப்பக வாரியாக பொதுவில் வெளியிடப்படவேண்டும். எந்த எந்த புத்தகங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற குறிப்பு தயாராக இருக்கவேண்டும். ஏதேனும் பதிப்பாளர் அதை அறிய விரும்பினால், அதுகுறித்து மேல் வழக்கு நடத்த விரும்பினால் அதற்கான வழி தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பதிப்பகமும் எத்தனை புத்தகங்கள் ஆர்டர் பெறுகின்றன, அவை எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன என்பது பொதுவில் வைக்கப்பட்டுவிட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதுவரை இது நிகழவில்லை. ஒரு பதிப்பாளருக்கு இந்த விவரம் வேண்டுமென்றால் தகவலறியும் உரிமைச்சட்டத்தில்தான் இதைத் தெரிந்துகொள்ளமுடியும். கவிதைப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை என்று லதா ராமகிருஷ்ணன் வார்த்தை இதழில் எழுதினார். அவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இது தெரிந்திருக்காது. அதனால் எந்தப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை பொதுவிலேயே வெளியிட அரசு ஆவன செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களுக்கான தொகை, அப்புத்தகத்தின் தரத்தின் அடிப்படையில் அமையவேண்டும். என்ன தாள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்ன அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் புத்தகத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதேபோல் ஒட்டுமொத்த புத்தகங்களையும் பதிப்பாளர்கள் தங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் சமர்ப்பிக்க வழி செய்யப்படவேண்டும். அங்கிருந்து மற்ற நூலகங்களுக்குப் புத்தகங்களை அனுப்புவதை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு என்பது பணம் கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிடும் அமைப்பு இல்லை என்பதை உணரவேண்டும்.
ஒரு வருடத்திற்கான புத்தகங்களைத் தேர்வுக்குச் சமர்ப்பித்ததும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் அறிவிக்கப்படவேண்டும். ஒரு வருடத்தில் தோராயமாக 10,000 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படலாம். உதவிக்குழு ஒன்று அமைத்து இதில் 3000 புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, அவற்றில் இருந்து தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை மேல்மட்டக்குழு தேர்ந்தெடுக்கலாம். (இப்போதும் இப்படித்தான் இருக்கிறது, ஆனால் நடப்பதில்லை!) தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிப்பாளருக்குப் பணம் அனுப்ப உத்தரவிடவேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்தச் சொல்லி அரசு உத்தரவிடவேண்டும்.
எப்போது ஆர்டர் வரும், எப்போது பணம் வரும் என்று பதிப்பாளர்களைப் பிச்சைக்காரர்களைப் போல் அரசு வைத்திருப்பது மோசமானது. நூலகமும், புத்தகமும் நாட்டிற்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த அரசு இப்படி மெத்தனமாக நடந்துகொள்ளாது.
நம்மை ஆளும் கழக அரசுகளுக்கு தற்போது வரும் தமிழ்ப்புத்தகங்கள் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் இன்னும் அண்ணாவிடமிருந்தும், கல்கியிடமிருந்தும், மு.வரதராசனாரிடமிருந்தும், இவை நீங்கலாக நெடுநல்வாடை, பதினென்கீழ்கணக்கு நூல்களின் பிடியில் இருந்து வெளிவந்தபாடில்லை. தனியார் நூலகம் தொடங்க விரும்பும் ஒருவருக்கு அரசு பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல் பார்த்தேன். அவை புத்தகங்களின் பட்டியல் அல்ல. அரசியலின் பட்டியல். எல்லாம் சங்ககால நூல்கள், கண்ணதாசனின் நூல்கள், கல்கியின் நூல்கள், அண்ணாவின் நூல்கள், நெஞ்சுக்கு நீதியின்றி சில நூல்கள். 1970ஐத் தாண்டவில்லையே என நினைத்தால், சரியாகத் தாண்டியிருக்கிறார்கள். வைரமுத்துவின் நூல்கள், கொடுமையிலும் கொடுமையாக பா.விஜய்யின் நூல்கள். எங்கே போனார்கள் மற்றக் கவிஞர்கள்? எங்கே போயின மற்ற நூல்கள்? பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி? சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம்!’
ஒவ்வொரு ஆண்டும் பொது நூலகத்துறைக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்கென ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் எந்தப் புத்தகங்களை நூலகங்களுக்குத் தேர்வு செய்வது என்று முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். முதலில் 600 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 2007 முதல் 1000 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மிக எளிமையானதாகவும், தேவையானதாகவும் தோன்றும் இத்திட்டத்தை இந்த அரசுகள் எப்படி வைத்திருக்கின்றன என்று பார்க்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பதிப்பாளர்கள் புத்தகங்களை தேர்வுக்கு வேண்டி சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவிப்பு வரும். வருடத்தில் பத்து நாள்கள் மட்டும் விழித்திருந்தால் போதும் என நினைக்கும் பபாஸி இதைப் பற்றி செய்தி எல்லாம் எல்லா பதிப்பாளர்களுக்கும் அனுப்பாது. பதிப்பாளர்தான் கவனமாக இருந்து இதைத் தெரிந்துகொண்டு, புத்தகங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு புத்தகத்தைப் பதிவு செய்ய 50 ரூபாய் டிடி எடுக்கவேண்டும். ஒரு புத்தகத்தின் இரண்டு படிகளையும் தரவேண்டும். பரிசீலனைக்குப் பின்னர் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
320 பக்கங்கள் வரைக்குமான புத்தகங்கள் ஆயிரமும், அதற்கு மேல் பக்கங்கள் உள்ள புத்தகங்களை ஒரு குத்துமதிப்பாகவும் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு புத்தகத்திற்கு என்ன விலை கொடுப்பது என்பதை அரசே தீர்மானிக்கும். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலை இது. 16 பக்கங்கள் கொண்ட ஒரு டெமி சைஸ் புத்தகத்திற்கு ரூபாய் 3.90 என நினைக்கிறேன். இதில் என்ன கொடுமை என்றால், பதிப்பாளர் எந்த விதமான தாளை அச்சுக்குப் பயன்படுத்தி இருக்கிறார், எந்த விதமான அட்டையை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நல்ல தாளில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும், நியூஸ் ரீலில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும் ஒரே விலை 3.90தான். இதனால் சில பதிப்பாளர்கள் நூலக ஆர்டர் கிடைத்ததும் அச்சிடும் புத்தகங்களை சாதாரண தாளில் அச்சடித்து செலவைக் குறைத்துக்கொள்கிறார்கள்.
பொதுவாக, ஒரு பதிப்பாளர் எந்த நூலை சமர்ப்பிக்கிறாரோ அதே நூலின் தரத்தில் நூலகத்திற்கான புத்தகங்களின் தரத்தையும் வைத்திருக்கவேண்டும். ஆனால் இப்படி நிகழ்கிறதா என்று நூலகத்துறை சோதனை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. பத்தாண்டுகளாக ஒரே விலையை வைத்திருக்கும் அரசு, அதில் என்ன செய்து செலவைக் குறைக்கலாம் என பதிப்பாளர்கள்.
நூல்களை சமர்ப்பித்துவிட்டால், உடனே நூலகத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்துவிடாது. 2007ல் வந்த புத்தகங்களை 2008 பிப்ரவரியில் தேர்வுக்குச் சமர்ப்பித்தார்கள் பதிப்பாளர்கள். இதுவரை புத்தகங்களின் தேர்வு வெளியிடப்படவில்லை! இதுவாவது பரவாயில்லை. 2006ல் வெளியான புத்தகங்களின் தேர்வு 2008ன் பாதியில்தான் வெளியானது. இதுபோக, 2004 அல்லது 2005ல் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அடுத்த வருடம் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்களாம். இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நடக்கும்.
இந்தக் கூத்து முடிந்தால் அடுத்த கூத்து தொடங்கும். ஆயிரம் புத்தகங்களை அரசு தேர்ந்தெடுக்கும். அதை எல்லா நூலகங்களுக்கும் (தமிழகம் முழுவதும் 30 நூலகங்களுக்கு அனுப்பச் சொல்லுவார்கள்) அனுப்ப ஒரு மாத கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்படும். எல்லா பதிப்பாளர்களும் ஒரே நேரத்தில் அச்சுக்கூடங்களை நெருக்க, ஒரு மாதத்துக்குள் அனுப்ப முடியுமா முடியாதா என்ற நெருக்குதலில்தான் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த கால அவகாசத்தை மூன்று மாத காலம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே. ஒரு நூலகத்திற்கு நான்கு புத்தகங்கள் (ஒவ்வொரு புத்தகமும் அதிகபட்சமாக 40 பிரதிகள்) கொண்ட ஒரு பார்சலை அனுப்ப கிட்டத்தட்ட 400 ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி 30 நூலகங்களுக்கு அனுப்பவேண்டும். இந்தச் செலவை அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்பது யாருக்குமே தெரியாது. இதுபோக வண்டிச் செலவு, பேக்கிங் செலவு என பல உண்டு. இவை எல்லாமே அந்த 3.90ல் அடங்கவேண்டும்.
அடுத்த கூத்து தொடங்கும். புத்தகம் கிடைத்ததும் பணம் கிடைக்காது. நினைத்த நேரத்தில் நூலகங்கள் பணம் அனுப்பும். ஏன் அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது. கேட்டால் அனுப்புவோம் என்பார்கள். இப்படியாக 2007ல் பதிப்பாளர் அச்சடித்த புத்தகங்கள், 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்டு (இது விரைவு என்று பொருள்!) 2010ல் பணம் வந்துவிடும்.
திடீரென்று ஒரு நூலகர் பதிப்பாளரை அழைப்பார். அவர் அனுப்பியதில் சில பிரதிகள் இல்லை என்றும் உடனே அனுப்பவும் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிடுவார். பதிப்பாளர் சிரமேற்கொண்டு இதை அனுப்பிவைக்கவேண்டும். அப்படி மிஸ்ஸாக சான்ஸே இல்லையே என்று பதிப்பாளர் யோசித்தால், அவர் புத்தகம் அனுப்பாத வரை பணம் வராது.
இதெல்லாம் நடைமுறை கஷ்டங்கள் என்றால், அரசு அமைக்கும் குழு எப்படி புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர். குழு புத்தகத்தைப் படித்து அதைத் தேர்வு செய்யவேண்டும் என்பது விதி. குழு உறுப்பினர்கள் இந்த விதியையாவது படித்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் முன்னட்டையைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதுதான் நடைமுறை என்கிறார்கள். அட்டைப்படத்தில் ஏதேனும் கடவுளின் படமோ, மத சம்பந்தமான படமோ இருந்துவிட்டால் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அறிவுஜீவிகளின் வழியே நூலகத்திற்கான அறிவுக்கண்கள் திறக்கவேண்டும்!
நூலகம் என்பதையும் அதன் வழியே நிகழவேண்டிய அறிவுப் புரட்சியையும் பற்றிக் கொஞ்சமாவது உணர்ந்தவர்கள் இருந்தால், நூலகத்திற்கான புத்தகத் தேர்வு பற்றி சிந்திப்பார்கள். எல்லாவற்றையும் வாக்கு அரசியலாகவும், சிபாரிசு அரசியலாகவும் நினைக்கும் இந்த அரசுகள் நூலகத்துறையையும் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன. ஒரு பதிப்பாளர் அவரது புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, பணம் கொடுக்கவேண்டி வந்ததாகச் சொன்னார். உண்மையா பொய்யா எனத் தெரியாது.
பாரதியின் எழுத்துகளைத் தேடி, அதைக் காலவரிசையாகத் தொகுப்பதையே தன் வாழ்நாள் கடமையாக நினைத்துச் செயல்படும் சீனி விசுவநாதனின் புத்தகம், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பாகம் 6 என நினைக்கிறேன், அரசால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தக் கிழவர் பேருந்தைப் பிடித்து, அலையாய் அலைந்து, மனு கொடுத்து....
மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ’நிமிர வைக்கும் நெல்லை’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் நூலகத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர் அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்தார். ஏன் தன் புத்தகம் தேர்வு செய்யப்படவில்லை என்று காரணம் கேட்டும், எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதன் விளக்கம் கேட்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு என்ன ஆனது என்பது தெரியாது. ஆனால் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ‘நிமிர வைக்கும் நெல்லை’ புத்தகத்திற்கு நூலக ஆர்டர் கிடைத்தது. அப்போது அரசு சார்பில் வாய்மொழியாக ‘இப்படி ஏன் தன் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைக்கவில்லை என்று கேட்டுவரும் பதிப்பாளர்களின் புத்தகங்க்ளுக்கு ஆர்டர் கொடுத்து பிரச்சினையைத் தீர்த்துவிடுங்கள்’ என்று சொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.
இந்தப் புண்ணியத்தில், பாரதியின் காலவரிசைப்படுத்தபட்ட புத்தகத்திற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்தது! (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என்றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம்!)
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு விருது வழங்கப்படும். தமிழினியின் வெளியீடாக வந்த ‘தேவதேவன் கவிதைகள்’ புத்தகத்திற்கு விருது கிடைத்தது. அப்புத்தகம் நூலகத்துறையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்தப் புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது என்றாவது பார்த்தால் நல்லது! மீண்டும் அலைச்சல், மனு. பின்னர் நூலக ஆர்டர். இப்படி இருக்கிறது நூலகத்துறையின் செயல்பாடு.
சில புத்தகங்களின் முதல் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது. இரண்டாம் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நூலக வாசகர்களின் கொடுமையை நினைத்துப் பாருங்கள்.
பதிப்பாளர்கள் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்க அறிவுறுத்தி, வாசகர்களிடையே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை அதிகமாக அருளுரை வழங்கலாம். ஆனால் நூலகத்துறைக்குப் புத்தகங்களை எடுப்பது என்பது, பதிப்பாளர்களுக்கு போடப்படும் பிச்சை அல்ல. அது அரசின் கடமை. இதில் ஜனநாயகத்தன்மை என்பது எள்ளளவும் இல்லை என்பது அதைவிடப் பெரிய மோசடி. எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்கிற விவரங்கள் பதிப்பக வாரியாக பொதுவில் வெளியிடப்படவேண்டும். எந்த எந்த புத்தகங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற குறிப்பு தயாராக இருக்கவேண்டும். ஏதேனும் பதிப்பாளர் அதை அறிய விரும்பினால், அதுகுறித்து மேல் வழக்கு நடத்த விரும்பினால் அதற்கான வழி தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பதிப்பகமும் எத்தனை புத்தகங்கள் ஆர்டர் பெறுகின்றன, அவை எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன என்பது பொதுவில் வைக்கப்பட்டுவிட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதுவரை இது நிகழவில்லை. ஒரு பதிப்பாளருக்கு இந்த விவரம் வேண்டுமென்றால் தகவலறியும் உரிமைச்சட்டத்தில்தான் இதைத் தெரிந்துகொள்ளமுடியும். கவிதைப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை என்று லதா ராமகிருஷ்ணன் வார்த்தை இதழில் எழுதினார். அவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இது தெரிந்திருக்காது. அதனால் எந்தப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை பொதுவிலேயே வெளியிட அரசு ஆவன செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களுக்கான தொகை, அப்புத்தகத்தின் தரத்தின் அடிப்படையில் அமையவேண்டும். என்ன தாள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்ன அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் புத்தகத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதேபோல் ஒட்டுமொத்த புத்தகங்களையும் பதிப்பாளர்கள் தங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் சமர்ப்பிக்க வழி செய்யப்படவேண்டும். அங்கிருந்து மற்ற நூலகங்களுக்குப் புத்தகங்களை அனுப்புவதை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு என்பது பணம் கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிடும் அமைப்பு இல்லை என்பதை உணரவேண்டும்.
ஒரு வருடத்திற்கான புத்தகங்களைத் தேர்வுக்குச் சமர்ப்பித்ததும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் அறிவிக்கப்படவேண்டும். ஒரு வருடத்தில் தோராயமாக 10,000 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படலாம். உதவிக்குழு ஒன்று அமைத்து இதில் 3000 புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, அவற்றில் இருந்து தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை மேல்மட்டக்குழு தேர்ந்தெடுக்கலாம். (இப்போதும் இப்படித்தான் இருக்கிறது, ஆனால் நடப்பதில்லை!) தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிப்பாளருக்குப் பணம் அனுப்ப உத்தரவிடவேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்தச் சொல்லி அரசு உத்தரவிடவேண்டும்.
எப்போது ஆர்டர் வரும், எப்போது பணம் வரும் என்று பதிப்பாளர்களைப் பிச்சைக்காரர்களைப் போல் அரசு வைத்திருப்பது மோசமானது. நூலகமும், புத்தகமும் நாட்டிற்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த அரசு இப்படி மெத்தனமாக நடந்துகொள்ளாது.
நம்மை ஆளும் கழக அரசுகளுக்கு தற்போது வரும் தமிழ்ப்புத்தகங்கள் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் இன்னும் அண்ணாவிடமிருந்தும், கல்கியிடமிருந்தும், மு.வரதராசனாரிடமிருந்தும், இவை நீங்கலாக நெடுநல்வாடை, பதினென்கீழ்கணக்கு நூல்களின் பிடியில் இருந்து வெளிவந்தபாடில்லை. தனியார் நூலகம் தொடங்க விரும்பும் ஒருவருக்கு அரசு பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல் பார்த்தேன். அவை புத்தகங்களின் பட்டியல் அல்ல. அரசியலின் பட்டியல். எல்லாம் சங்ககால நூல்கள், கண்ணதாசனின் நூல்கள், கல்கியின் நூல்கள், அண்ணாவின் நூல்கள், நெஞ்சுக்கு நீதியின்றி சில நூல்கள். 1970ஐத் தாண்டவில்லையே என நினைத்தால், சரியாகத் தாண்டியிருக்கிறார்கள். வைரமுத்துவின் நூல்கள், கொடுமையிலும் கொடுமையாக பா.விஜய்யின் நூல்கள். எங்கே போனார்கள் மற்றக் கவிஞர்கள்? எங்கே போயின மற்ற நூல்கள்? பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி? சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம்!’
Subscribe to:
Posts (Atom)
























